Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு தேச மீனவர் போராட்டத்திற்கான சமாதான பேச்சுக்கள்.....

Featured Replies

இரு தேச மீனவர் போராட்டத்திற்கான சமாதான பேச்சுக்கள்.....

 

கடலும் அதனை சார்ந்து வாழும் மக்­களின் வாழ்வும் எப்­போதும் சஞ்சலம் மிக்­கவை. அலை­களின் ஓசை எந்­த­ளவு இரைச்சல் மிக்­க­தாக உள்­ளதோ அதே போன்­ற­தொரு பரபரப்­பான நிலை­யி­லேயே அந்த சமூ­கத்தின் வாழ்­வி­யலும் அமை­கின்­றது. இவ்­வா­றா­ன­தொரு பரபரப்­பான கடற்­றொ­ழி­லா­ளர்கள் வாழும் பகு­தி­யான நெடுந்­தீவில் மீனவர் பிரச்­சினை குறித்து ஆராயும் நோக்கில் சென்­றி­ருந்தோம். ஆழ்கட­லுடன் நெடுந்­தீவு மக்கள் கொண்­டுள்ள நெருக்­க­மான உறவு அர்த்தம் காட்ட முடி­யா­த­ள­விற்கு ஆழ­மா­னது. காலா­கா­ல­மாக கடல் அன்­னையை நம்பி வாழ்ந்த மக்கள் இன்று தமது வாழ்­வா­தா­ரத்­தையும் கடல் அன்­னை­யையும் பாது­காப்­ப­தற்­காக போரா­டு­கின்­றனர்.

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து நோக்­கினால் ஏனைய தீவு­களை விட தொலைவில் அமைந்­தி­ருக்கும் தீவு நெடுந்­தீ­வாகும். நிலப்­ப­ரப்­பி­லி­ருந்து 45 கிலோ­மீற்றர் தொலைவில் இந்த தீவு அமை­யப்­பெற்­றுள்­ளது. ஆனால் இந்­தி­யாவின் இரா­மேஸ்­வ­ரத்­தி­லி­ருந்து இதன் தூரம் 38 கிலோ­மீற்றர் மட்­டு­மே­யாகும். இந்த நெருக்கம் தான் பல பிரச்­சி­னை­க­ளுக்கும் கார­ண­மா­கி­யுள்­ளது.

நெடுந்­தீவு வடக்குத் தெற்­காக 6 கிலோ­மீற்றர் அக­லத்­தையும், கிழக்கு மேற்­காக 8 கிலோமீற்றர் நீளத்­தையும் கொண்ட ஒரு சரிந்த இணை­கர வடிவில் 30 கி.மீ. சுற்­ற­ள­வையும், 48 சதுர கிலோமீற்றர் பரப்­ப­ள­வையும் கொண்­டுள்­ள­தாக கணிக்­கப்­பட்­டுள்­ளது.

உள் நாட்டுப்போரின் போது இரா­ணுவம் நெடுந்­தீவை ஆக்­கி­ர­மித்ததைத் தொடர்ந்து பெரும்­பா­லான மக்கள் யாழ்.குடா­நாட்­டுக்கோ வெளிநா­டு­க­ளுக்கோ புலம்­பெ­யர்ந்து விட்­டார்கள். பொரு­ளா­தார வச­திகள் அரு­கிய தமிழ் மீனவ சமூ­கத்தை சார்ந்த 2500 இருந்து 3000 வரை­யி­லான மக்கள் தொகையே இங்கு வாழ்­கின்­றனர். கௌர­வ­மாக கடற்­றொழில் செய்த நெடுந்­தீவு மீன­வர்­களின் வாழ்­வா­தாரம் பல்­வேறு சவால்­களை எதிர்கொண்­டுள்­ளது. வயிற்­றுப்­ப­சிக்கு கூலித்தொழி­லுக்கு செல்ல வேண்­டிய நிலை மீன­வர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது.

தமக்­கு­ரிய வாழ்­வா­தார வளத்தை மற்­று­மொரு தரப்பு அடி­யோடு அள்ளிச்செல்­லு­கையில் நெடுந்­தீவு மீன­வர்கள் என்ன செய்ய முடியும்? பல ஆண்டு கால­மாக இலங்கை–இந்­திய மீனவர் பிரச்­சினை குறித்து பேசப்­ப­டு­கின்­றது. ஆனால் பாதிக்­கப்­படும் மீன­வர்கள் தொடர்ந்து அதே நிலையில் உள்­ளனர். அத்­து­மீறி மீன் பிடிப்­ப­வர்களும் தொடர்ந்து அவ்­வாறே செய்­கின்­றனர். இதனை தடுக்க இரு நாட்டு அர­சு­களும் நட­வ­டிக்கை எடுக்­காது பேச்சுவார்த்தை என இழுத்­த­டிப்பு செய்து மீனவர் வாழ்வில் நெருக்­க­டி­க­ளையே ஏற்­ப­டுத்­து­கின்­றனர். செபஸ்­தியன் பிள்ளை எனப்­படும் நெடுந்­தீவு மீனவர் உள்­ளிட்ட அந்த பகுதி மீன­வர்கள் தமது வாழ்நாள் அனு­ப­வங்­க­ளையும் துன்­பங்­க­ளையும் இவ்­வாறு பகிர்ந்து கொண்­டனர்.

செபஸ்­தியன் பிள்ளை  (54)- நெடுந்­தீவு மீனவர் 

கடல் தொழில் மட்­டுமே எமது வாழ்­வ­ாதாரம். எனக்கு நினை­வி­ருக்கும் காலம் தொட்டு இன்று வரையில் கட­லுக்கு செல்­வதும் மீன் பிடிப்­பதும் அதில் வரும் வரு­மா­னத்தைக்கொண்டு வாழ்­வ­து­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. ஆனால் அன்­றைய நிலைக்கும் இன்று மீன் பிடிப்­ப­தற்கும் இடையில் பாரிய வேறு­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. முன்பு தாரா­ள­மாக மீன்கள் பிடி­படும். ஆனால் இன்று அவ்­வாறு இல்லை. தொழிலை முன்­னெ­டுக்க தேவை­யான ஒத்­து­ழைப்­புகள் கிடை­ப்­ப­தில்லை. அர­சாங்­கத்தின் உத­விகள் கிடைப்­ப­தில்லை. அப்­படியே வழ­ங்­கப்­பட்­டாலும் அது அனை­வ­ருக்கும் கிடைப்­பதும் இல்லை.

ஐந்து மீனவர் சங்­கங்­களைச் சேர்ந்த நெடுந்­தீவில் சுமார் ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட மீன­வர்கள் அன்­றாடம் கட­லுக்கு செல்­கின்­றனர். பொது­வா­கவே அனைத்து காலங்களிலும் நன்­றாக மீன்கள் பிடிப்­படும். டிசம்பர் மாதம் காற்று கடு­மை­யாக காணப்­படும். நெடுந்­தீவை பொறுத்த வரையில் தீவை சுற்றி அனைத்து பகு­தி­களிலும் மீன் பிடிக்கு ஏற்ற சூழலே காணப்­ப­டு­கின்­றது.

இந்­திய மீன­வர்­களின் இழுவைப் படகு பிரச்­சினை பாரிய நெருக்­க­டி­களை எமக்கு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இலங்கை கடல் எல்­லைக்குள் இந்­திய மீன­வர்கள் தாரா­ள­மாக வந்து செல்­வார்கள். பொது­வாக நெடுந்­தீவு உள்­ளிட்ட இதனை அண்­டிய அனைத்து தீவு­களும் சிறி­யவை என்­ப­தால் கரை வரை வந்து அவர்கள் செல்­வார்கள். இவ்­வாறு வந்து செல்லும் போது கடல் மடி வரை அவர்­க­ளது வலைகள் சென்று மீன் குஞ்சு முதற்­கொண்டு இழுத்து செல்­வார்கள். வரு­டத்தில் 40 நாட்­களை தவிர ஏனைய அனைத்து காலங்களிலும் இந்­திய மீன­வர்கள் இங்கு வந்து மீன் பிடித்து செல்­வார்கள்.

இந்­திய மீன­வர்கள் வரும் போது நாங்கள் மீன் பிடிப்­பது கடி­ன­மான விட­ய­மா­கவே காணப்­படும். நாங்கள் சாதா­ரண வலைகள் மற்றும் பட­கு­களை கொண்டே மீன் பிடிக்­கின்றோம். ஆனால் இந்­திய மீன­வர்கள் பாரிய இழுவை பட­கு­களை பயன்­ப­டுத்­து­கின்­றனர். எமது வலை­களை அறுத்துக் கொண்டு இந்­திய இழுவை பட­குகள் செல்லும். இதனால் மீன் இனப்­பெ­ருக்­கத்­திற்­கான பாறைகள் அழிக்­கப்­பட்டு விடு­கின்­றன. இங்கு மீன்கள் குறை­வ­டை­வ­தற்கு இதுவே பிர­தான கார­ண­மாகும். பாறைகள் காணப்­படும் போது தான் பெரிய மீன்கள் வரும். இன்று பெரிய மீன்கள் பிடி­ப­டு­வதே இல்லை.

அவர்­களை கண்டால் நாங்கள் அந்த பகு­திக்கு செல்­வதே இல்லை. அவர்­க­ளிடம் சென்று பேச முடி­யாது. எமது பட­கு­களில் இருவர் மாத்­தி­ரமே இருப்­பார்கள். கடற்­ப­டை­யினர் எம்­முடன் பேசு­வ­தில்லை. எமது பிரச்­சி­னை­களை கடற்­ப­டை­யி­ன­ருடன் கூறு­வ­தற்கோ அல்­லது, இந்­திய மீன­வர்கள் வந்­துள்­ள­தாக தக­வல்களை கூறு­வ­தற்கோ வாய்ப்­புகள் கிடைப்­பதே இல்லை. ஓரிரு இந்­திய மீன­வர்­களை பிடிப்­பார்கள். ஏனை­ய­வர்­களை விட்டு விடு­வார்கள். பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வை காணும் நோக்­கத்தின் அடிப்­ப­டையில் செயற்­ப­டு­வ­தாக இல்லை. எமது சங்கம் யாழ்ப்­பாண மீனவ சங்­கத்­துடன் சேர்ந்து பேச்­சுக்­களில் கலந்து கொள்­கின்­றது. பேச்­சுக்கள் வரு­டக்­க­ணக்கில் காணப்­ப­டு­கின்­றனவே தவிர நிரந்­தர தீர்வை எட்­டு­வதாக இல்லை. பத்­தி­ரிகை செய்­தி­களை பார்த்து பேச்சுவார்த்­தையின் நிலை­மை­களை அறி­கின்­றறோமே தவிர, எம்­முடன் வட மாகாண அமைச்­சரோ அதி­கா­ரி­களோ பேசு­வ­தில்லை. எமது நெடுந்­தீவு கடல் பகு­தியில் அதனை அண்­டிய பகு­தி­யிலும் தான் அதி­க­மாக இந்­திய மீன­வர்கள் அத்­து­மீறி நுழைந்து மீன் பிடிக்­கின்­றனர். பாதிப்­புக்கள் எமக்கே அதிகம்.  

வாரத்­திற்கு மூன்று தட­வைகள் மாத்­தி­ரமே இந்­திய பட­கு­களின் அச்­சு­றுத்தல் கார­ண­மாக நாங்கள் கட­லுக்கு போகின்றோம். மீன் வளத்தை பாது­காக்க முடி­யா­துள்­ளது. எனவே சம்பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் எம்­முடன் நேர­டி­யாக பேச்சு நடத்தி தீர்வை நோக்கி செல்­வதே சிறந்த விட­ய­மாகும்.....

மரி­யாம்­பரம் (67) - நெடுந்­தீவு மீனவர்

எனக்கு தற்­போது 67 வய­தா­கின்­றது. இந்த கடலில் மீன் பிடிப்­பதே எனது தொழி­லாகும். இதனை தவிர எனக்கு வேறு எந்த தொழிலும் தெரி­யாது. ஆனால் எனது இந்த கடற்­றொழில் வாழ்வில் மிக அண்­மைக்­கா­ல­மாக நெடுந்­தீவு கடலில் வித்­தி­யா­ச­மான தன்­மையை உணர முடி­கின்­றது. மீன் வளம் மற்றும் கடல் சூழல் என்­பவை இன்று பாரி­ய­ளவில் மாற்றம் அடைந்­துள்­ளன. மீன் இனங்கள் கூட வேறு­பட்­டுள்­ளன.

உடைந்த படகில் கடந்த பல வரு­டங்­க­ளாக நான் பிடிக்­கின்றேன். மீன­வர்­களின் அடிப்­படை பிரச்­சி­னைகள் பல உள்­ளன. அவற்றை தீர்த்து வைக்­காது காலம் கடத்தி வரு­கின்­றனர். இறு­தியில் பாதிக்­கப்­ப­டு­வது எமது சந்­த­தி­யி­ன­ரே­யாகும். முன்பு மிகவும் நம்­பிக்­கை­யுடன் கட­லுக்கு செல்­லலாம். ஆனால் இன்று அவ்­வாறு இல்லை. சில நாட்­களில் மீன்­களே சிக்­கு­வ­தில்லை. சில சந்­தர்ப்­பங்­களில் பத்து, இரு­பது கிலோ என மீன்கள் பிடி­படும். சுமார் 50 வரு­டங்கள் இந்த கடலில் மீன் பிடிக்­கின்றேன். பிரச்­சி­னையின் போது இந்­திய மீன­வர்கள் இங்கு வந்து அதி­க­மாக மீன் பிடிப்­பார்கள். ஆனால் தற்­போது அந்த எண்­ணிக்­கையில் குறைவு காணப்­பட்­டாலும் கடல் அழிவு அதி­க­மா­கவே உள்­ளது. சட்­ட­வி­ரோ­த­மான முறையில் திருட்­டுத்­த­ன­மாக அவர்கள் மீன்­களை பிடித்து செல்­கின்­றனர். இதனை நிறுத்­து­வ­தற்கு யாரும் முயற்சி எடுப்­ப­தாக தெரியவில்லை.

அருள்­ஜீவன் - நெடுந்­தீவு மீனவர் சங்க தலைவர் 

யாழ்­.குடா நாட்டில் இருந்து பிரிக்­கப்­பட்ட தீவு பிர­தே­சமே நெடுந்­தீ­வாகும். இதனால் பல்­வேறு பின்­தங்­கிய நிலைகள் எமக்கு ஏற்­பட்­டுள்­ளன. கடற்­றொ­ழிலை நம்­பியே நெடுந்­தீவு மக்கள் வாழ்­கின்­றனர். எங்­க­ளு­டைய மீன­வர்கள் பல நெருக்­க­டி­களை எதிர் கொள்­கின்­றனர். மீன­வர்­களின் வாழ்­வா­தா­ரத்தின் மீது திணிக்­கப்­பட்ட மிகவும் மோச­மான நிலையே இழுவைப்படகு விட­ய­மாகும். இது மிகவும் அழி­வையே ஏற்­ப­டுத்­து­கின்­றது.

கச்­சத்­தீ­விற்கும் இந்­தி­யாவின் இரா­மேஸ்­வ­ரத்­திற்கும் அண்­மித்த கடல் பகு­தி­யி­லேயே நெடுந்­தீவு அமைந்­துள்­ளது. இந்­திய இழுவைப் பட­குகளின் அத்­து­மீ­றல்­க­ளினால் மிகவும் மோச­மான முறையில் பாதிக்­கப்­படும் பிர­தே­சமும் இதுவே ஆகும். இழுவைப் பட­குகள் எனப்­படும் போது அதனால் கடல் வளத்­திற்கு ஏற்­படக்கூடிய பாதிப்­புக்கள் மிகவும் மோச­மா­ன­வை­யாகும். இழுவைப்பட­குகள் செல்லும் கடல் பகு­தியில் காணப்­படும் கடல் மடி வரை­யி­லான வளங்கள் அழிக்­கப்­ப­டு­கின்­றன. எனவே தான் இழுவைப்படகு முறையை எதிர்த்து நாங்கள் குரல் கொடுக்­கின்றோம். எமது கடற்கரையில் இருந்து கண்­ணுக்கு எட்­டிய தூரம் வரை அதா­வது 200 மீற்றர் வரை இந்­திய இழுவைப்பட­குகள் வந்து மீன் பிடிக்கும். அவர்­களை வலு­வாக எதிர்கொண்டு தடுக்க முடி­யாது உள்­ளமை கவ­லை­ய­ளிக்­கின்­றது.

அர­சியல் கார­ணி­களும் இழுத்­த­டிப்­புக்­களும்  

நெடுந்­தீவு மீன­வர்கள் தெரி­விக்கும் கருத்­துக்­களும் அவர்­க­ளது எதிர்­பார்ப்­புகளும் வாழ்­வா­தா­ர நெருக்­க­டி­களை கொண்டு நோக்­கப்­பட வேண்­டுமே தவிர அர­சியல் விருப்பு வெறுப்­பு­களின் அடிப்­ப­டையில் கையா­ளப்­படக்கூடாது. நீண்ட காலப்போரின் பின்னர் இலங்­கையின் வடக்கு மற்றும் கிழக்கு கரை­யோர மக்கள் அச்சமின்றி கடலில் தொழில் செய்­கின்­றனர். குறிப்­பாக வடக்கு தீவக மக்­களின் வாழ்­வி­ய­லுடன் ஒன்­றித்து போன கடற்­றொ­ழிலை அந்த மக்­க­ளுக்­காக பாது­காத்து கொடுக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும்.

இலங்கை–இந்­திய மீனவர் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான இரு நாட்டு பேச்சு வார்த்­தைகள் கடந்த பல தசாப்­த­கா­ல­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்வாறு வெறு­மனே காலம் கடத்­தப்­ப­டு­கின்­றதே தவிர தீர்வை எட்­டி­ய­தாக இல்லை. ஒரு நாட்டின் கடல் எல்­லையை தாண்­டு­வது கடும் குற்றம் என்­பதை இரு தரப்பு மீன­வர்­களும் முதலில் உணர வேண்டும். இத­ன­டிப்­ப­டையில் இலங்கை கடல் எல்­லைக்குள் அத்­து­மீறி நுழைந்து மீன் பிடிக்கும் போது இந்­திய மீன­வர்கள் கைது செய்­யப்­ப­டு­கின்­றனர். ஆனால் கைதினை கண்­டித்து தமி­ழக மீன­வர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­ப­டு­கின்­றனர். இதனை எவ்­வாறு தெளிவு­ப­டுத்­து­வது என்­பதே சவா­லான விட­ய­மாகும்.

ஆனால் சட்­டத்தை மீறி நுழையும் மீன­வர்­களை கைது செய்யும் உரிமை இலங்­கைக்கு காணப்­ப­டு­கின்ற­மையை உணர வேண்டும். இவ்­வாறு கைது செய்­யப்­ப­டு­ப­வர்­களும் பட­கு­களும் இரு தரப்பு பேச்சுவார்த்­தை­களின் போது இணக்­கப்­பா­ட்டுடன் விடு­விக்­க­வும்­ப­டு­கின்­றன. மறு­ப­டியும் அதே குற்­றத்­திற்கு இந்­திய மீன­வர்கள் கைது செய்­யப்­ப­டு­கின்­றனர்.

கடந்த வாரத்தில் அர­சாங்கம் கடற்­றொழில் மற்றும் நீர்வாழ் உயி­ரின வளங்கள் சட்­டத்தில் திருத்தம் கொண்­டு­வந்­தது. அதா­வது இலங்கை கடற்­ப­ரப்­பினுள் இயந்­திர பட­கு­க­ளினால் கட்டி இழுக்­கப்­பட்ட பக்­குரு வலை­களைப் பயன்­ப­டுத்தி நிறை­வேற்­றப்­ப­டு­கின்ற மீன்­பிடி செயற்­பா­டு­க­ளுக்கு தடை­வி­திப்­ப­தற்கு தேவை­யான விதப்­பு­ரை­களை ஏற்­ப­டுத்தும் வகையில், 1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க கடற்­றொழில் மற்றும் நீர்வாழ் உயி­ரின வளங்கள் சட்­டத்தில் திருத்தம் செய்­வ­தற்கு தீர்­மானம் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த சட்டம் இந்­தி­யாவில் ஏற்­க­னவே நடை­முறையில் உள்­ளது. இழுவைப்பட­கு­களை பயன்­ப­டுத்­து­வது குற்றம் என இந்­திய அர­சாங்கம் சட்டம் விதித்­துள்ள நிலையில் இவ்­வாறு ஒரு தேச எல்­லையை மீறி மற்றும் சட்ட விரோ­த­மான இழுவை படகு பயன்படுத்துவது குற்றம் என பல்­வேறு சட்ட மீறல்­க­ளுடன் இலங்­கையில் கைது செய்­யப்­படும் தமி­ழக மீன­வர்­க­ளுக்கு எதி­ராக மத்­திய அரசோ தமி­ழக அரசோ எடுத்த நட­வ­டிக்கை என்ன ? இரு நாட்டு மீன­வர்­களும் ஏழ்­மை­யா­ன­வர்கள் என்றால் அவர்­களின் பிரச்­சி­னைகள் எவ்­வாறு தீர்க்­கப்­பட வேண்டும்? இவற்றை இரு தரப்புகளும் நியா­ய­மாக சிந்­திக்க வேண்டும். தமி­ழ­கத்தின் எதிர்ப்பை பெற்றுக் கொள்ள கூடாது என்­ப­தற்­காக இந்­திய மத்­திய அரசும் பூகோள அர­சியல் சார் நலன்­க­ளுக்­காக இலங்கை அரசும் மீனவர் பிரச்­சி­னையை நோக்­கினால் தீர்வு எப்போதும் ஏற்­படப்போவ­தில்லை.

வடக்கு மீன­வர்­களைப் பொறுத்த வரையில் பாரம்­ப­ரிய முறையில் சிறிய பட­குகள் மற்றும் வலை­களை கொண்டே மீன்­பி­டித்து வரு­கின்­றனர். ஆனால் இந்­திய மீன­வர்கள் அவ்­வாறு அல்ல, பாரிய இழுவைப்பட­கு­களை கொண்டு கடல் மடி வரையில் அனைத்­தையும் இழுத்து செல்­கின்­றனர். இதனை தடுப்­ப­தற்கு தமி­ழக அரசு நட­வ­டிக்கை எடுக்­காது இலங்­கைக்கு எதிர்ப்பை வெளியி­டு­வதில் பலனில்லை.

இலங்­கை­யுடன் சர்ச்­சை­களை தோற்­று­விக்கும் தமிழ மீன­வர்கள் ஆழ்­கடல் மீன் பிடி தொடர்பில் ஆர்­வமோ அனு­ப­வவோ அற்­ற­வர்கள். பல மாதங்கள் சர்­வ­தேச கடல் பரப்பில் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கும் அனு­ப­வம் அவர்­க­ளுக்கு கிடை­யாது. இலங்கை கடல் பரப்­பிற்குள் இந்­திய மீன­வர்கள் அத்­து­மீ­று­கின்­ற­மைக்கு இது மிக முக்­கி­ய­மான கார­ண­மாகும். ஆனால் இலங்கை மீனவர்களை பொதுவாக எடுத்துக் கொண்டால் 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்தே ஆழ்கடல் மீன் பிடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக தென்னிலங்கை மீனவர்கள் பல மாதங்களாக சர்வதேச கடலில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர்.

இவ்வாறு சர்வதேச கடலில் சென்று மீன் பிடிப்பதற்கு தமிழக மீனவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஆர்வம் காட்டினாலும் அதற்கான பயிற்சிகள் மற்றும் படகுகள் என பெருந்தொகையான முதலீட்டினை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி தொடர்பில் பயிற்சிகள் வழங்குவதற்காக தமிழக அரசு ஒரு முறை மத்திய அரசிடம் நிதி கோரிய நிலையில் இன்றும் பதிலளிப்பு இன்றி உள்ளது.

ஆகவே இரு தரப்பு மீனவர் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வை எட்ட வேண்டும் என்றால் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பரப்பிற்குள் வருவதை முற்றாக தடைசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும. மேலும் அவர்களுக்கு சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடிப்பதற்கு தேவையான பயிற்சிகளை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். அவ்வாறு அல்லாது வெறுமனே பேச்சுக்களை முன்னெடுப்பதால் எவ்விதமான பலனும் இல்லை. இரு நாட்டு அரசாங்கங்களும் இவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொண்டு செயற்பட்டால் நிச்சயம் குறுகிய காலத்திற்குள் நிரந்தர தீர்வை ஏற்படுத்த முடியும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-28#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.