Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓ.பி.எஸ்.,க்கு எதிராக உள்ளடி செய்த மந்திரிகள்! அலங்காநல்லூரில் அம்பலமான சதி

Featured Replies

ஓ.பி.எஸ்.,க்கு எதிராக உள்ளடி செய்த மந்திரிகள்!
அலங்காநல்லூரில் அம்பலமான சதி
 
 
 

முதல்வருக்கு எதிராக, அமைச்சர்கள் செயல்படுவது, அ.தி.மு.க.,விலும், அரசியல் வட்டாரத்திலும், பெரும் பரபரப்பை உள்ளது.

 

Tamil_News_large_1699338_318_219.jpg

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, முதல்வ ராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஏற்கனவே, இரு முறை, முதல்வர் பதவியில் இருந்து, ஜெ., விலக நேரிட்ட போது, முதல்வ ராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதன் பின் மீண்டும், ஜெ., பதவியேற்கும் சூழல் ஏற்பட்ட போது, முதல்வர் பதவியை துறந்து, தன் விசுவாசத்தை நிரூபித்தார். எனவே, ஜெ., மறைவுக்கு பின், மீண்டும் அவர் முதல்வ ரானது, மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்த வில்லை.
 

மக்கள் ஆதரவு


எளிமையானவர், அனைத்து தரப்பினரும் எளிதில் அணுக முடியும் என்பதால், அவருக்கு மக்களிடம் ஆதரவு அதிகரித்தது. ஆனால், அவர் முதல்வராவதை, சசிகலாவின் சொந்தங்கள் விரும்பவில்லை.

ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச் செயலராகி உள்ள சசிகலாவையே, முதல்வ ராக்க வேண்டும் என, அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக, முதல்வர் பதவியேற்பை, .

சசிகலா தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளார்அதே போல, ஜெ., மறைந்ததும், அமைச்சர் களில் சிலர், முதல்வராக முயற்சித்தனர்; அவர்களது முயற்சி கைகூடவில்லை.

இதன் காரணமாக, அவர்களும், பன்னீர் மீது காழ்ப்பு ணர்ச்சியில் உள்ளனர்.இதன் காரணமாகவே, சில அமைச்சர்கள், சசிகலா முதல்வராக வேண்டும் என, குரல் கொடுத்து வருகின்றனர்.

லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரை, தன் லெட்டர்பேடில், 'தமிழக முதல்வராக, சசிகலா வர வேண்டும்' என, அறிக்கை விடுத்தார். இப்படி, முதல்வர் பதவியில் இருந்து, பன்னீர்செல்வத்தை இறக்க மேற்கொண்ட முயற்சிகள், அவருக்கு ஆதரவை அதிகரிக்க உதவியுள்ளன.

இச்சூழ்நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தில், முதல்வர் மற்றும் பிரதமருக்கு எதிராக, கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தை, தங்களுக்கு சாதகமாக்கி, முதல்வர் பதவியில் இருந்து, பன்னீர்செல்வத்தை இறக்க, சசிகலா குடும்பத்தினர் முயற்சித்தனர். அதை பிரதமர் உதவியுடன், பன்னீர்செல்வம் முறியடித்தார். மத்திய அரசு உதவியுடன், அவசர சட்டம் கொண்டு வந்து, ஜல்லிக்கட்டு நடக்க நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், மதுரை, அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு போட்டியை, துவக்கி வைக்கசென்றார்.

கூடுதல் புகழ்


அவர் போட்டியை துவக்கி வைத்தால், அவரது செல்வாக்கு அதிகரித்து விடும் என்பதால், போட்டி நடைபெறாமல் இருக்க, அவரது கட்சியினரே, மேலிடத்து உத்தரவில், போராட்டக்காரர்களுடன் இணைந்து, எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த, இரு அமைச்சர்கள், இதற்கு

 

பின்புலமாக இருந்ததாக கூறப்படுகிறது.இது, அ.தி.மு.க., விலும், அரசியல் வட்டாரத்திலும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்ப்பு காரணமாக, போட்டியை நடத்த முடியாமல், முதல்வர் பன்னீர்செல்வம் ஏமாற்றத்துடன், சென்னை திரும்பினார். ஆனாலும், தன் ஏமாற்றத்தை காண்பித்துக் கொள்ளாமல், 'மக்கள் விரும்பும் நாளில், அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடத்தப் படும்' என அறிவித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இதன் காரணமாக, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வைத்தால் கிடைக்கும் புகழை விட, கூடுதல் புகழ் முதல்வரை வந்தடைந்தது. முதல்வர் பதவியில் இருந்து, பன்னீர் செல்வத்தை இறக்க, கட்சியினர் பல்வேறு முயற்சிகள் எடுக்க, அவை அனைத்தும், அவருக்கு புகழ் சேர்த்து வருவது, முதல்வர் பதவிக்கு வர துடிப்பவர்களிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.தன் மென்மையான போக்கால், உறுதியான நடவடிக்கையால், முதல்வர் பதவியில், திடமாக அமரத் துவங்கி உள்ளார் பன்னீர்செல்வம்.

- நமது நிருபர் -

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.