Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீது குவிகிறதா ட்ரம்பின் கவனம்?

Featured Replies

இலங்கை மீது குவி­கி­றதா ட்ரம்பின் கவனம்?

USSDonaldCookDDG75c-9d340902419fe286888e4ce2d0b57af783c263d3.jpg

 

அமெ­ரிக்­காவின் 45 ஆவது ஜனா­தி­ப­தி­யாக டொனால்ட் ட்ரம்ப், கடந்த 20ஆம் திகதி பத­வி­யேற்ற போது, அமெ­ரிக்க கடற்­ப­டையின் வழி­காட்டல் ஏவு­கணை நாச­காரி கப்­ப­லான யுஎஸ்எஸ் ஹொப்பர் கொழும்புத் துறை­மு­கத்தில் தரித்து நின்­றது.

டொனால்ட் ட்ரம்ப் பத­வி­யேற்பு நிகழ்வு முன்­கூட்­டியே திட்­ட­மி­டப்­பட்ட ஒன்று என்­பது போலவே, யுஎஸ்எஸ்.ஹொப்­பரின் இந்தப் பய­ணமும், முன்­கூட்­டியே திட்­ட­மி­டப்­பட்ட ஒன்று தான்.

அமெ­ரிக்­காவில் ஜனா­தி­பதி ஒருவர் பத­வி­யேற்­கின்ற போது, கொழும்புத் துறை­மு­கத்தில் அமெ­ரிக்க போர்க்­கப்பல் ஒன்று தரித்து நின்ற முதல் நிகழ்­வாக இது அமைந்­தி­ருந்­தது.

இலங்­கைக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் தற்­போது காணப்­படும் நெருக்­க­மான இரா­ணுவ ஒத்­து­ழைப்பின் வெளிப்­பா­டாக மட்டும் இதனை எடுத்துக் கொள்ள முடி­யாது.

இலங்கை மீதான அமெ­ரிக்­காவின் கரி­ச­னை­யையும் கூட இது வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

பசுபிக் பெருங்­க­டலில் உள்ள பேர்ள் துறை­மு­கத்தில் இருந்து, பேர்­சியன் வளை­குடா வரை , இந்­தோ-­ஆ­சி­ய-­ப­சுபிக் பிராந்­தி­யத்தில், கண்­கா­ணிப்பில் ஈடு­பட்டு வரு­கி­றது இந்த யுஎஸ்எஸ். ஹொப்பர் நாச­காரி.

இந்த நாச­காரி விமான எதிர்ப்பு ஏவு­க­ணைகள், தரை இலக்கைத் தாக்கும் குறூஸ் எனப்­படும் வழி­காட்டல் ஏவு­கணைத் தொகு­தி­களைக் கொண்­டது.

கடந்த ஆண்டு செப்டெம்­பரில், இந்த நாச­காரி ஒரு தடவை கொழும்­புக்கு அருகே வரை வந்து சென்­றி­ருந்­தது.

யுஎஸ்எஸ். ஹொப்­பரில் இருந்த மாலுமி ஒரு­வ­ருக்கு ஏற்­பட்ட திடீர் சுக­வீனம் கார­ண­மாக இலங்­கைக்கு அவ­சர கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, இந்த நாச­காரி கப்பல் இலங்கை கடல் எல்­லைக்குள் நுழைய அனு­ம­திக்­கப்­பட்­டது.

கரையில் இருந்து 3 கடல் மைல் தொலைவு வரை வந்த இந்த போர்க்­கப்­பலில் இருந்து இலங்கை கடற்­ப­டை­யி­னரால் சுக­வீ­ன­முற்ற அமெ­ரிக்க மாலுமி மீட்­கப்­பட்டு கொழும்பு தனியார் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

அதற்குப் பின்னர், கடந்த 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில், இந்தப் போர்க்­கப்பல் கொழும்பில் தரித்து நின்­றது.

இதன் போது, இலங்கை கடற்­ப­டையின் சிறப்பு கொமாண்டோ அணி­யான எஸ்­பிஎஸ் எனப்­படும் விசேட படகுப் படை­ய­ணியை சேர்ந்­த­வர்­க­ளுக்கு, யுஎஸ்எஸ் ஹொப்­பரில், அமெ­ரிக்க கடற்­ப­டை­யினர் பயிற்­சி­களை அளித்­தி­ருந்­தனர்.

கப்­பல்­களை கைப்­பற்றி கட்­டுப்­பாட்டில் கொண்டு வரு­வது எப்­படி என்­பது குறித்த பயிற்­சி­களை அமெ­ரிக்க படை­யினர் அளித்­தி­ருந்­தனர். அத்­துடன் இரு­நாட்டு கடற்­ப­டை­யி­னரும் கூட்­டாக இணைந்து பல்­வேறு நிகழ்­வு­க­ளிலும் பங்­கேற்­றனர்.

யுஎஸ்எஸ் சோமசெற் என்ற போர்க்­கப்பல் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்­துக்கு வந்து, சிறி­லங்கா கடற்­ப­டையின் மரைன் படை­யி­ன­ருடன், அமெ­ரிக்க மரைன் படை­யினர் கூட்டுப் பயிற்­சி­களை மேற்­கொண்ட சில வாரங்­களில் யுஎஸ்எஸ் ஹொப்பர் கொழும்பு வந்­தி­ருந்­தது.

இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பின்­னரே, அமெ­ரிக்கப் போர்க்­கப்­பல்­களின் வரு­கைகள் திடீ­ரென அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்­துக்குப் பின்னர் இலங்­கைக்குப் பயணம் மேற்­கொண்ட ஐந்­தா­வது அமெ­ரிக்கப் போர்க்­கப்பல் இது­வாகும்.

யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ், யுஎஸ்எஸ் நியூ ஓர்­லியன்ஸ், யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள், யுஎஸ்எஸ் ஹொப்பர் ஆகிய அமெ­ரிக்க போர்க்­கப்­பல்கள் கொழும்புத் துறை­மு­கத்­துக்கும், யுஎஸ்எஸ் சோமசெற் போர்க்­கப்பல், திரு­கோ­ண­மலை துறை­மு­கத்­துக்கும் கடந்த 10 மாதங்­களில் வந்து சென்­றி­ருக்­கின்­றன.

அண்­மையில் அமெ­ரிக்க கடற்­ப­டையின் பசுபிக் கட்­டளைத் தள­பதி அட்­மிரல் ஹரி பி ஹாரிஸ் இலங்­கைக்கு மேற்­கொண்­டி­ருந்த பய­ணத்தின் போது, இன்னும் அதி­க­மான அமெ­ரிக்கப் போர்க்­கப்­பல்கள் இலங்­கைக்கு வரும் என்று கூறி­யி­ருந்தார்.

அமெ­ரிக்கப் போர்க்­கப்­பல்கள் இலங்கைத் துறை­மு­கங்­களை தமது ஒரு வழக்­க­மான தரிப்­பி­ட­மாக மாற்றத் தொடங்­கி­யுள்­ளன என்­ப­தையே இந்தப் போர்க்­கப்­பல்­களின் வருகை எடுத்துக் காட்­டி­யி­ருக்­கி­றது.

ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், முன்­னொரு போதும் இல்­லா­த­ள­வுக்கு அமெ­ரிக்க- இலங்கை கடற்­ப­டை­க­ளுக்கு இடையில் ஒத்­து­ழைப்பும், உற­வு­களும் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன.

அதன் உச்­சக்­கட்டம் தான், அமெ­ரிக்­காவின் புதிய ஜனா­தி­ப­தி­யாக டொனால்ட் ட்ரம்ப் பத­வி­யேற்ற போது, அமெ­ரிக்கப் போர்க்­கப்பல் ஒன்று கொழும்பில் தரித்து நின்­றதைக் குறிப்­பி­டலாம். இது ஒன்றும் எதேச்­சை­யான நிகழ்வு அல்ல.

அமெ­ரிக்­காவின் நலன்­க­ளையும், அமெ­ரிக்­காவின் பாது­காப்­பையும் முதன்மை நோக்­க­மாக கொண்ட வெளி­வி­வ­காரக் கொள்­கையே கடைப்­பி­டிக்­கப்­படும் என்று, டொனால்ட் ட்ரம்ப் பத­வி­யேற்ற கடந்த 20ஆம் திகதி வெள்ளை மாளி­கையில் இருந்து வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில் கூறப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன், அமெ­ரிக்­காவின் இரா­ணுவ பலத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதில் கவனம் செலுத்­தப்­படும் என்றும் வெள்ளை மாளிகை அறி­விப்பில் கூறப்­பட்­டுள்­ளது.

1991இல் 500 போர்க்­கப்­பல்கள் இருந்த அமெ­ரிக்க கடற்­ப­டையில் தற்­போது 275 கப்­பல்கள் மாத்­திரம் இருப்­ப­தா­கவும், 1991இல் இருந்­ததை விட மூன்றில் ஒரு பங்­கினால் விமா­னப்­ப­டையின் பலம் குறைந்து விட்­ட­தா­கவும் வெள்ளை மாளிகை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது.

அமெ­ரிக்­காவின் படை­ப­லத்தைக் கட்­டி­யெ­ழுப்­புதல் மற்றும் அமெ­ரிக்க நலன்கள், அமெ­ரிக்­காவின் பாது­காப்பு ஆகி­ய­வற்­றுக்கே டொனால்ட் ட்ரம்ப் நிர்­வாகம் அடுத்த நான்கு ஆண்­டு­களில் கவனம் செலுத்தப் போகி­றது என்­பதை வெள்ளை மாளி­கையின் இந்த அறி­விப்பு உணர்த்­தி­யி­ருக்­கி­றது.

இந்த நிலையில் இந்­திய பெருங்­கடல் பிராந்­தி­யத்தில், கேந்­திர முக்­கி­யத்துவம் வாய்ந்த இலங்கை, அமெ­ரிக்­காவின் பாது­காப்புத் திட்­டத்தில் முக்­கி­ய­மான ஒரு அங்­க­மா­கவே இருக்கும் என்று எதிர்­பார்க்­கலாம்.

இலங்­கையில் ஆட்­சி­மாற்­றத்­துக்குப் பின்னர், அமெ­ரிக்க- இலங்கை கடற்­ப­டை­க­ளுக்கு இடை­யி­லான ஒத்­து­ழைப்பு வலுப்­பெற்­றி­ருக்­கின்ற போதிலும், இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான இரா­ணுவ ஒத்­து­ழைப்பு உயர்ந்த நிலையில் இருப்­ப­தாக கூற முடி­யாது.

மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டு­களால், இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்­கான பயிற்­சிகள், உத­விகள், போன்­ற­வற்றை அமெ­ரிக்கா சில ஆண்­டு­க­ளாக மட்­டுப்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கி­றது.

அமெ­ரிக்­காவில் ஏற்­பட்­டுள்ள ஆட்­சி­மாற்­ற­மா­னது, இந்த நிலைக்கு முடிவு கட்டும் வாய்ப்­புகள் இருக்­கின்­றன. அமெ­ரிக்க இரா­ணு­வத்­தி­னரின் பயிற்­சி­களைப் பெறு­வ­தற்கும், அமெ­ரிக்க இரா­ணு­வத்­தி­ன­ருடன் கூட்டுப் பயிற்­சி­களை மேற்­கொள்­வ­தற்­கு­மான வாய்ப்­புகள் இனிமேல் இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு கிடைக்கக் கூடும்.

             (10ஆம் பக்கம் பார்க்க)

மனித உரிமை விவ­கா­ரங்­களைச் சார்ந்து அழுத்­தங்­களை பிர­யோ­கிப்­ப­தற்­கான ஒரு கரு­வி­யாக இரா­ணு­வத்­தி­ன­ருக்­கான உத­விகள், பயிற்­சி­களை அமெ­ரிக்கா மட்­டுப்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கி­றது.

ஆனால், குடி­ய­ரசுக் கட்­சியின் ஆட்­சியில் இந்த நிலை மாற்­ற­ம­டையும் வாய்ப்­புகள் இருக்­கின்­றன.

அதே­வேளை, ட்ரம்ப் அர­சாங்கம் பத­வி­யேற்ற சில நாட்­க­ளி­லேயே, அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் உயர்­மட்ட அதி­காரி ஒருவர் கொழும்­புக்­கான பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்­ததும் கவ­னிக்­கத்­தக்க விட­ய­மாக உள்­ளது.

தெற்கு மத்­திய ஆசிய பிராந்­தி­யத்­துக்­கான பதில் முதன்மை பிரதி உதவி இரா­ஜாங்கச் செயலர் ஏஞ்­சலா அக்­கே­லரே, கடந்­த­வாரம் கொழும்பு வந்­தி­ருந்த அமெ­ரிக்க அதி­கா­ரி­யாவார்.

தெற்கு மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவி இரா­ஜாங்கச் செய­ல­ராக இருந்த நிஷா பிஸ்­வா­லுக்குப் பதி­லாக, ட்ரம்ப் அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்­ட­வரே ஏஞ்­சலா அக்­கேலர் என்று சில ஊட­கங்கள் செய்­தி­களை வெளி­யிட்­டி­ருந்­தன.

ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர் நிஷா பிஸ்வால் இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தில் இருந்து வெளி­யே­றி­யுள்ள நிலையில், அவ­ருக்குப் பதி­லாக யாருக்கும் நிரந்­தர நிய­மனம் இன்­னமும் வழங்­கப்­ப­ட­வில்லை.

ஏற்­க­னவே, முதன்மை பிரதி உதவி இரா­ஜாங்கச் செய­ல­ராக இருந்த வில்­லியம் ரொட் தான், தெற்கு மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான பதில் உதவிச் செய­ல­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

வில்­லியம் ரொட்டின் இடத்­துக்கு தற்­கா­லி­க­மாக, பதில் முதன்மை பிரதி உதவிச் செய­லரா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளவர் தான், ஏஞ்­சலா அக்­கேலர்.

தற்­போ­தைய நிலையில் தெற்கு மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரிவில், இரண்­டா­வது நிலையில் உள்ள அதி­காரி இவ­ராவார்.

அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தில், தெற்கு மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரிவு, ஆப்­கா­னிஸ்தான், பங்­க­ளாதேஸ், பூட்டான், இந்­தியா, கசாக்ஸ்தான், கிர்­கிஸ்தான், மாலை­தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜி­கிஸ்தான், துர்க்­மெ­னிஸ்தான், உஸ்­பெ­கிஸ்தான் ஆகிய 13 நாடுகள் இருக்­கின்­றன.

இந்த 13 நாடு­களில் ஏஞ்­சலா அக்­கேலர் இலங்கைக்குத் தான் முதல் பயணத்தை, அதுவும் பதவியேற்ற அடுத்தடுத்த நாட்களிலேயே மேற்கொண்டிருக்கிறார் என்றால், தற்போதைய அமெரிக்க நிர்வாகம் இலங்கைக்கு அளிக்கப்போகும் முக்கியத்துவம் எத்தகையதாக இருக்கும் என்பதை உணரலாம்.

வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் உள்ளிட்ட விடயங்களில் அமெரிக்கா என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், ஏஞ்சலா அக்கேலரின் இந்தப் பயணத்தின் கனதி அதிகமாகவே தெரிகிறது.

இவர் வொசிங்டனில் அளிக்கப் போகும் அறிக்கை, ட்ரம்ப் அரசின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கான திறவுகோலாக இருக்கும். இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் ஏற்படாது என்று ஏஞ்சலா அக்கேலர் கூறியிருக்கிறார்.

ஆனாலும் இராணுவ ஒத்துழைப்பு சார்ந்த விடயங்களில், அமெரிக்க நிலைப்பாடுகளில் மாற்றங்கள் நிகழ்வதற்கான சாத்தியங்களே அதிகமாக உள்ளன.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-29#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.