Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாறு படைத்த அறவழி போராட்டம்

Featured Replies

வர­லாறு படைத்த அற­வழி போராட்டம்

article-image-3-73b7b43e1f615beb62c266eb2b2e1d280531ac3b.jpg

 

தமி­ழக அர­சியல் களம் முன் எப்­போதும் இல்­லாத ஒரு சூழலை கடந்த வாரம் எதிர்­கொண்­டது. உலக வர­லாற்றில் சாத­னை­யாக பதிவு செய்யும் அள­விற்கு தலை­மை­யே­யில்­லாத தன்­னெ­ழுச்சிப் போராட்டம் நடை­பெற்­றது. அர­சியல் நோக்­கர்கள் மற்றும் எதிர்­கால அர­சி­ய­லுக்­கான கொள்கை வகுப்­பா­ளர்­க­ள் ஆகியோருக்கு ஆகச்­சி­றந்த உதா­ர­ண­மா­கவும் இந்த அற­வழி போராட்டம் அமைந்­தது.

ஜன­நா­ய­கத்தில் மக்­களின் உரிமை காக்­கப்­ப­ட­வேண்டும் என்­றாலோ அல்­லது உரிமை மீட்­டெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்­றாலோ போராட்டம் நடத்­து­வது என்­பது அடிப்­ப­டை­யான நோக்­க­மாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டாலும் போராட்­டத்தின் எந்த வடி­வ­மாக இருந்­தாலும் அதற்கு ஒரு தலைமை இருக்கும். அது அவ­சி­யமும் கூட. ஆனால், தலை­மை­யே­யில்­லாமல் தமி­ழ­கத்தை சேர்ந்த இளைய தலை­மு­றை­யினர் நவீன தொழில்­நுட்ப வளர்ச்­சியை ஆயு­த­மாகக் கொண்டு தன்­னெ­ழுச்­சி­யாக ஒரு போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருக்­கி­றார்கள். அதுவும் அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் மையப்­பொ­ருளை முன்­வைத்து இதனை தொடங்­கி­னார்கள். ஜல்­லிக்­கட்டு என்று ஒரு பிரி­வி­னரும் ஏறு தழு­வுதல் என்று வர­லாறு தெரிந்­த­வர்­களும் இதனை குறிப்­பிட்­டாலும் இதனை நடத்­தி­ட­வேண்டி அற­வ­ழி­யி­லான போராட்­டத்தை தொடங்­கி­னார்கள்.

நூற்­றுக்­க­ணக்­கி­லான மாண­வர்­களை மூல ஆதா­ர­மாகக் கொண்ட மதுரை அலங்­கா­நல்­லூரில் விதைக்­கப்­பட்ட இந்த போராட்டம் மாணவ மற்றும் இளைய சமு­தா­யத்தின் ஒரு­மித்த குரலால் உல­கமே திரும்பி பார்க்கும் வண்ணம் இலட்­சக்­க­ணக்­கா­ன­வர்­களை பங்­கு­பெற செய்து இந்த போராட்­டத்தை வளர்த்­தெ­டுத்து வென்­றது.

ஜல்­லிக்­கட்டு மீதான தடையை அகற்ற­வேண்டும். ஜல்­லிக்­கட்டு மீதான தடை நிரந்­த­ர­மாக நீக்­கப்­ப­ட­வேண்டும். ஆண்டு­தோறும் ஜல்­லிக்­கட்டு எந்த தடையும் இல்­லாமல் வழக்­க­மான கொண்­டாட்ட மன­நி­லையில் நடை­பெ­ற­வேண்டும் என்று ஒவ்­வொ­ரு­வரும் தங்­களின் குரலை ஒரே புள்­ளி­யாக எதி­ரொ­லித்­தனர். இந்த போராட்­டத்தின் தொடக்கம், வளர்ச்சி, நீட்சி, முடிவு ஆகி­ய­வற்றை அனைத்தும் சரித்­திரம் சாத­னை­யுடன் பதிவு செய்து கொண்­டி­ருக்­கி­றது.

போராட்­டத்தின் போது போராட்­டக்­கா­ரர்கள் காட்­டிய சுயக்­கட்­டுப்­பாடு, கலந்­து­கொள்ள வந்­த­வர்­களை திறந்த மன­துடன் வர­வேற்ற பாங்கு, தங்­களின் போராட்­டத்தின் நோக்­கத்­தினை போராட்­டத்தில் பங்­கு­பற்­றிய அனைத்து தரப்­பி­ன­ருக்கும் விளக்­கிய பண்பு, நோக்­கத்தை சித­ற­டிக்­க­வி­டாமல் முன்­னெ­டுத்துச் சென்ற மாண்பு, போராட்­டக்­கா­லத்தின் போது ஏற்­படும் நடை­முறை சிக்­கல்­களை களை­வ­தற்­கான தெளி­வான திட்­ட­மிடல், அதனை செயல்­ப­டுத்­திய விதம் என பல­அம்­சங்­களை உல­கமே வியந்து பார்த்து ஆச்­ச­ரி­யத்தில் மூழ்­கி­யது.

போராட்ட களத்தில் அரசு இயந்­திரம் இடை­யூறு ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக திடீ­ரென்று சில மணித்­து­ளிகள் மின்­த­டையை ஏற்­ப­டுத்­திய போது தங்­க­ளு­டைய கைகளில் வைத்­தி­ருந்த கைத்தொலைபேசியினை உட­ன­டி­யாக ஒளி வெள்­ளத்­திற்­காக பயன்­ப­டுத்­திய மதி­நுட்பம், இந்த போராட்­டத்தை நேர­லை­யாக ஒளிப்­ப­ரப்­பிய தொலை­க்காட்­சி­களில் செய்­தி­யா­ளர்­களின் வினாக்­க­ளுக்கு கருத்­து­களை பகிர்ந்­து­கொள்ளும் போது இப்­போ­ராட்­டத்தின் பின்­ன­ணியில் செயற்­பட்ட சில தன்­னார்வ தொண்டு நிறு­வ­னங்­களின் உண்மை முகத்தைப் பற்­றியும் அவர்­களின் வணிக நோக்­கி­லான செயற்­பா­டு­களைப் பற்­றியும் விழிப்­பு­ணர்வு ஏற்­படும் வகையில் பரப்­புரை செய்த நேர்த்தி என இந்த போராட்­டத்தின் போது ஏற்­பட்ட பல நேர்­ம­றை­யான விட­யங்­களை அர­சி­யல்­வா­திகள் உற்று நோக்கி அதனை பின்­பற்ற இய­லா­விட்­டாலும் இப்­ப­டியும் ஒரு போராட்­டத்தை வடி­வ­மைத்து முன்­னெ­டுக்­கலாம் என்ற எண்­ணத்தை ஏற்­ப­டுத்­தி­னாலே இந்த போராட்டம் வெற்றி தான்.

இந்த போராட்­டத்தின் மைய­வி­சையைப் புரிந்து மாநில அரசு மற்றும் மத்­திய அரசு சில சட்ட சிக்­கல்கள் இருந்­தாலும் நீதி­மன்­றத்தை சமா­தா­னப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை அர­சியல் நெருக்­க­டியின் கார­ண­மாக எடுத்­தது. அதன் ஒரு பிரி­வா­கத்தான் அவ­சர சட்­டத்தை இயற்றி அதற்கு சட்ட ரீதி­யி­லான அங்­கீ­கா­ரத்­திற்­காக தமி­ழக சட்­ட­ப்பே­ர­வையின் சிறப்பு கூட்­டத்தை கூட்டி, நிறை­வேற்றி, தங்­களை மக்கள் தெரிவு செய்­த­தற்­கான அர­சியல் ரீதி­யி­லான கட­மையை நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றார்கள்.

இந்த போராட்­டத்­தின்­போது தமி­ழ­கத்தில் மதுரை அலங்­க­ாநல்லூர், சென்னை மெரீனா ஆகிய இரண்டு இடங்­களைத் தவிர சுமார் 460க்கும் மேற்­பட்ட இடங்­களில் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். அத்­துடன், தமி­ழ­கத்தில் மட்டும் மொத்தம் 35 இலட்­சத்­திற்கும் மேற்­பட்­ட­வர்கள் இதில் நேர­டி­யாக களத்தில் ஈடு­பட்டு போரா­டினர். இவ்­வ­ளவு அதி­க­மான இடத்தில் இவ்­வ­ளவு அதி­க­மான மக்கள் நேர­டி­யாக போராட்­டத்தில் பங்­கு­பற்­றி­யது இது தான் முதல் முறை என்­பது சான்­றுடன் பதி­வா­கி­யி­ருக்­கி­றது. தமி­ழகம் மட்­டு­மல்­லாமல், இந்­தி­யாவின் வேறு பகு­தி­க­ளிலும் மெட்ரோ நக­ரத்­திலும் உலகில் உள்ள 60க்கும் மேற்­பட்ட நாடு­களில் 125க்கும் மேற்­பட்ட இடங்­களில் தமி­ழர்கள் ஒருங்­கி­ணைந்து ஜல்­லிக்­கட்­டுக்கு ஆத­ர­வாக போரா­டி­யதும் பதி­வா­கி­யி­ருக்­கி­றது. ஜல்­லிக்­கட்டு என்ற தமி­ழர்­களின் கலா­சார அடை­யா­ளத்­திற்­காக உலக தமி­ழர்கள் ஒன்­றி­ணைந்து குரல் கொடுத்த விதம், கடந்த சில ஆண்­டு­க­ளுக்கு முன் அறி­வார்ந்த தமிழ் சான்­றோர்­களால் முன்­வைக்­கப்­பட்ட இன அர­சியல் என்ற கொள்­கைக்கு இந்த போராட்­டமும் தன்­னெ­ழுச்­சியும் அச்­சா­ணி­யாக அமைந்­தது என்­பது மறுக்க முடி­யாத உண்மை.

                   

     (3ஆம் பக்கம் பார்க்க)

ஜல்­லிக்­கட்டு என்ற சாதா­ரண ஒரு காளை­யி­னத்­து­ட­னான விளை­யாட்டு போட்­டிக்கு ஏனிந்­த­ள­விற்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கி­றார்கள் என்­கி­றார்கள் தமி­ழர்­களின் ஒரு பிரி­வினர். இதே தன்­னெ­ழுச்­சியை இதை­விட முக்­கி­ய­மான வாழ்­வா­தார பிரச்­சி­னைக்­காக ஒருங்­கி­ணைத்­தி­ருக்­கலாம் என்ற எண்­ணத்­தையும் முன்­வைக்­கி­றார்கள். ஆனால், தொடக்­கப்­புள்ளி என்ற ஒன்று நன்­றாக அமைந்தால் தான் அது ஒரு தனி பாணி­யாக உரு­வெ­டுத்து போராட்ட வடி­வ­மாக அமையும். அந்த வகையில் இந்த போராட்டம் ஜன­நா­ய­கத்தில் புதி­தாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இதற்­கா­கவே உலக மக்கள் தமி­ழர்­களை ஆரா­திக்­கி­றார்கள்.

அத்­துடன், இந்த போராட்­டக்­க­ளத்­திலும் சில தவ­றுகள் நடை­பெற்­றன என்று இதில் குறை கூறு­வோரும் இருக்­கத்தான் செய்­கி­றார்கள். அவர்கள் இளைய தலை­மு­றை­யினர் தலை­மை­யில்லா தன்­னெ­ழுச்­சியை தாங்­கிக்­கொள்ள முடி­யா­த­வர்கள் என்று வகைப்­ப­டுத்­தலாம். இவர்கள் எப்­போதும் குறை­களின் பக்­கமே கவ­னத்தை செலுத்தி வரு­ப­வர்கள் என்று ஒதுக்­கி­வி­டலாம். இவர்­களால் ஒரு புதிய எழுச்­சியை உரு­வாக்­க­மு­டி­யாது. உரு­வா­னாலும் அதனை ஏற்­றுக்­கொள்ளும் பக்­கு­வத்தைப் பெறா­த­வர்கள். இருந்­தாலும் இளைய தலை­மு­றை­யினர் இவர்­க­ளுக்­கா­கவும் போரா­டி­யதை மன­தார வர­வேற்போம்.

இன்னும் சிலர் இந்த போராட்டம் இந்­த­ள­விற்கு வெற்றிப் பெற்­ற­தற்கு காரணம் காளை என்­பது சிவ­பெ­ரு­மானின் அம்சம் என்றும் அதனால் தான் தமி­ழர்கள் ஓர­ணியில் திரள முடிந்­தது என்றும் இதற்கு மத அடை­யா­ளத்தைப் பூசி தங்­க­ளது கருத்தை பதிவு செய்­தி­ருக்­கி­றார்கள். ஆனால், போராட்ட காலக்­கட்­டத்தில் மத பாலின வேறு­பாடு ஏதும் எடுபடவில்லை என்பதும் இந்த போராட்டத்திற்கு சமூகத்தில் அங்கம் வகிக்கும் குடும்பம் என்கிற அமைப்பின் முழு ஆதரவு இருந்தது என்பதும் தான் ஒப்புக்கொள்ளப்படவேண்டிய உண்மை.

பீட்டா என்ற அமைப்பை தடைசெய்யவேண்டும் என்ற கோரிக்கையும் இதில் பிரதானமாக அமைந்திருக்கிறது. இவர்களை கொள்கை ரீதியாக தமிழர்கள் எதிர்க்கவில்லை. ஆனால், ஒரு இனத்தின் பாரம்பரிய கலாசாரத்தின் வீரியத்தை உணர்ந்துகொள்ளமாட்டோம். எங்களுக்கு பொதுவிலான சட்டமே பெரிது என்ற எண்ணப்போக்கைத்தான் எதிர்க்கிறோம். ஆனால், தமிழர்களுக்கு சட்டமும் வேண்டும். கலாசார அடையாளமும் வேண்டும் என்ற நிலைப்பாட்டை பீட்டா புரிந்துகொண்டால் அவர்களாகவே முன்வந்து ஜல்லிக்கட்டிற்கு எதிராக வழக்கை திரும்ப பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் உணரும் ஒரு தருணமும் வரும். வரவழைப்போம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-29#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.