Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயசானாலும் உன் 'லைனும்... லெங்த்’தும்... வாவ் நெஹ்ரா! நெகிழும் நெட்டிசன்ஸ் #Nehra #AshishNehra

Featured Replies

வயசானாலும் உன் 'லைனும்... லெங்த்’தும்... வாவ் நெஹ்ரா! நெகிழும் நெட்டிசன்ஸ் #Nehra #AshishNehra

தான் செய்யும் தொழிலை நேசிப்பவன், தன் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அவற்றுக்காக தரத் துணிவான் எனச் சில பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படி  தனது நாடி, தசை, நாளம், புத்தி எல்லாவற்றிலும் தனது தொழிலை நேசித்த, அதில் வெற்றியடைய முயற்சித்து கொண்டே இருக்கும் ஒரு மகத்தான கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா.

Nehra, நெஹ்ரா

அவரை  கிண்டல் செய்யலாம், கேலி பண்ணலாம் ஆனால் புறக்கணிக்கவே முடியாது. ரசிகர்களிடம் எப்போதும் பெரிய வரவேற்பும் இருந்தது இல்லை, ரசிகர் பட்டாளமும் இல்லை,  விளம்பர வருவாயும் கிடையாது, ஆனாலும் கிரிக்கெட்டை நேசித்த, அணியை நேசித்த, தேசத்தை நேசித்த பிளேயர்  நெஹ்ரா. அதனால் தான் அசாருதீன் கேப்டன்சியிலும் ஆட முடிகிறது, தன்னை விட பத்து வயது குறைந்த கோஹ்லியின் தலைமையின் கீழும் விளையாட முடிகிறது. இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளராக இருப்பது எப்போதுமே சாபம் தான். குறைந்த ரிஸ்க் கொண்ட பேட்டிங் மற்றும் சுழற்பந்துக்கு மத்தியில் வேகப்பந்தை தேர்ந்தெடுத்து இளம் வயதிலேயே கேரியரை வடிவமைத்தவர் ஆஷிஷ் நெஹ்ரா. 

டெல்லியில் இருந்து இடது கை வேகப்பந்து வீச்சாளராக புறப்பட்ட நெஹ்ராவுக்கு தெரிந்ததெல்லாம் கிரிக்கெட் ....கிரிக்கெட்.... கிரிக்கெட். சக்திமானோ, ஷாருக்கானோ, கேண்டி கிரஷ்ஷோ எதுவும் அவரது கவனத்தை திசை திருப்பியதே இல்லை. காயமோ, ஃபார்ம் அவுட்டோ எப்படியாவது அணியில் இடம் பிடிக்கவேண்டும் என்ற வெறி அவருக்கு எப்போதுமே உண்டு. 1999 அசாருதீன் தலைமையின் கீழ் கொழும்பு டெஸ்ட் போட்டியில்  வாழக்கையைத் தொடங்கியவர் ஆஷிஷ் நெஹ்ரா. அவருக்கு பின் ஜாகீர்கான் முதன் ஸ்ரீசாந்த் வரை  எத்தனையோ வீரர்கள் வந்தார்கள்... சாதித்தார்கள்.. ஓய்வு பெற்றார்கள் அல்லது காணாமல் போனார்கள். ஆனால் நெஹ்ரா மட்டும் தான் பீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்து வந்து கொண்டே இருக்கிறார்.

நெஹ்ரா, ஆஷிஷ் நெஹ்ரா,

இந்திய அணியில் அதிக முறை கம்பேக் ஆனது நெஹ்ராவாகத் தான் இருக்க முடியும். இது சமீப வருடங்களில்  மட்டுமல்ல, அவரது கேரியர் துவங்கிய காலத்தில் இருந்து இதுதான் நடந்திருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில்  ஒரே ஒரு விக்கெட் மட்டும் எடுத்த போது தேர்வுக்குழு நெஹ்ரா பெயரை தூக்கி  எறிந்தது.  உள்ளூர் போட்டிகளில் கடினமாக உழைத்து, பெயர் வாங்கி மீண்டும் இரண்டு ஆண்டுகள் கழித்து இரண்டாவது டெஸ்ட் போட்டியே விளையாடினார். இந்த  முறை மிகக்கவனமாக ஆடினார். டெஸ்ட் போட்டிகளில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவரது ஆட்டம் இல்லை, ஆனால் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் தவிர்க்க முடியாத பவுலராக உயர்ந்தார். 

நடுவில் சில காலம் கடைசி கட்ட ஓவர்களில்  மோசமாக வீசியதற்காக ரசிகர்கள் கலாய்த்ததால், இப்போதைய போட்டிகளில் எப்போதெல்லாம் நெஹ்ராவிடம் கேப்டன் கடைசி ஓவரை கொடுக்கிறாரோ அப்போதெல்லாம் ரசிகர்களிடம் ஒரு பதற்றம் தொற்றிக் கொள்கிறது, ‘முடிஞ்ச்சு மச்சி’ என தலையில்  கை வைத்து, ஓவரை வீசுவதற்கு முன்னரே மீம்ஸ் போட்டு கலாய்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் டெத் ஓவர்  வீசுவதில் வல்லவராக இருந்த காரணத்தில் தான் 2001 -2005 கால கட்டத்தில் இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளில் கங்குலியின் பிரதான ஆயுதமாக இருந்தார்.

நெஹ்ராவின் முதல் 50 ஒருநாள் போட்டிகளில் வெறும் ஏழு போட்டிகளில் மட்டும் தான் ஓவருக்கு ஆறு ரன்கள் வீதம்  விட்டுக் கொடுத்தார். 30 போட்டிகளில் நாற்பது  ரன்களுக்கும் குறைவாகவே விட்டுத்தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2003 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா,  அந்த அணியை சுருட்டி வீசியது. தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில், பத்து ஓவர்கள் வீசி இரண்டு மெய்டன் வீசி வெறும் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆர்ப்பரித்தார். அந்தப் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தவர்களால் கூட என்றைக்குமே நெஹ்ராவின் அந்த கொண்டாட்டத்தை மறக்க முடியாது. நெஹ்ராவின் கிடுக்கிப்பிடியில் நெக்குருகிப் போய் உலகக்கோப்பையில் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது இங்கிலாந்து. அதே தொடரில் சூப்பர் 8 சுற்றில் இலங்கை அணியின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியை விமானத்தில் ஏற்றினார். 

Nehra, நெஹ்ரா

அதன் பின்னர் நெஹ்ராவின் பந்துவீச்சை எல்லா எதிராணிகளும் ஆய்வு செய்தன. நெஹ்ரா மாடு மாதிரி  உழைப்பார் ஆனால் அப்டேட்டாக இருக்க மாட்டார், இதை பயன்படுத்தினார்கள் எதிரணி பேட்ஸ்மென்கள். நெஹ்ராவின்  நேர்த்தியான பந்துகளில் ரிஸ்க் எடுத்து  ஷாட் ஆடி பவுண்டரிகளை விளாசினார்கள். தனது ஓவரில் ரன்கள் செல்வதை அறிந்து ஆத்திரப்பட்ட நெஹ்ரா மேலும் மேலும் வேகத்தை கூட்ட முயற்சி செய்ய, அவரது துல்லியம் குறைந்தது. இதைப்  பயன்படுத்திச் சாத்தி எடுத்தார்கள். நெஹ்ரா கோட்டாவுக்கு ஐம்பது ரன்களை நிச்சயம் ஒதுக்கிவிடலாம் என்ற அளவுக்கு அவரது நிலை பவுலிங் மோசமானது. இருந்தபோதும் அவ்வப்போது விக்கெட் வேட்டை நடத்தும் பவுலராக இருந்ததால் அணியில் நீடித்தார். 2005 ஆகஸ்டில் இலங்கைக்கு எதிராக கொழும்புவில்  நடந்த ஒருநாள் போட்டியில் மீண்டும் ஆறு விக்கெட்டுகளை  அள்ளி ஆர்ப்பரித்தார். 

அந்த மேட்ச்சுக்கு பிறகு மீண்டும் தன்னம்பிக்கையுடன் நேர்த்தியாக பந்து வீச  தொடங்க, ஒருநாள் திடீரென அடிவயிற்றில் கடும் வலி ஏற்பட்டு முடங்கினார். குடலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த இடைவெளியில் முனாஃப், இஷாந்த், ஸ்ரீசாந்த் என பவுலர்கள் அணிக்குள் வந்தார்கள். கங்குலி, டிராவிட், கும்ப்ளே என சீனியர்கள் ஒதுங்கினார்கள்;  இந்தியா ஒருநாள் உலகக்கோப்பையில் கோட்டை விட்டது;  அதே சமயம் தோனி தலைமையில் இந்தியா டி20 உலகக்கோப்பையை ஜெயித்தது;  தோனி எல்லா பார்மெட்டுக்கும் கேப்டன் ஆகியிருந்தார்;  ஐ.பி.எல் போட்டிகள் அறிமுகமானது என ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டும் மாறிப்போனது. டி20 உலகக்கோப்பை வெற்றியும், ஐ.பி.எல்லும் பல புதிய கிரிக்கெட் ரசிகர்களை உருவாக்கின. இந்தக் களேபரத்தில் யாருக்கும் நெஹ்ராவை பற்றி யோசிக்கவே இல்லை. இப்படியொரு காலகட்டத்தில் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆட, நெஹ்ராவின் மீது சிறு கவனம் வந்தது.

நெஹ்ரா

சச்சின் மற்றும் தோனியின் ஆலோசனை அடிப்படையில் நெஹ்ரா மீண்டும் அணிக்குள் வந்தார். நான்கு ஆண்டு கால நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு வேப்பந்து வீச்சாளர் அணிக்குள் வருவது அசாத்தியமானது. தனது வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பித்தார் நெஹ்ரா. அதன் பயனாக 2011 உலகக்கோப்பையிலும் இடம் பெற்றார். அதில்  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டியில் கடைசி ஓவரில் மிக மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்த இந்தியா நம்பமுடியாத வகையில் தோற்றது. ரசிகர்கள் வசைபாடித் தாளித்தார்கள். அவரது கேரியர் அவ்வளவு  தான் என எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க  திடீரென பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அவருக்கு வாய்ப்புத் தந்தார் தோனி.

பத்து ஓவர் வீசி 33 ரன் மட்டும் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்து களங்கத்தை  துடைத்தார் நெஹ்ரா. ஆவலுடன் இறுதிப்போட்டியை நோக்கியிருக்கும் போது பயிற்சி விளையாட்டின்போது கை விரல் முறிய,  வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் துக்கத்தோடு கண்ணீர் சிந்தினார். அந்த பாகிஸ்தான் மேட்ச்  தான் அவருக்கு கடைசி ஒருநாள் போட்டியாக அமையும் என்பது அப்போது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காயம் காரணமாக உலகக்கோப்பைக்கு பிறகு விளையாட முடியவில்லை, காயம் குணமாகி எல்லாம் சரியான போது இந்திய அணி மீண்டும் ஒரு டிரான்ஸ்பர்மேஷனில் இருக்க, இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

நெஹ்ரா

வயசாச்சே... ஒதுங்கலாமே என பலர் இலவச அட்வைஸ்  தர, அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் உள்ளூர் போட்டிகளில் கடுமையாக உழைத்தார். 2014 ஐ.பி.எல் சீஸனில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை 2 கோடிக்கு  ஏலத்தில் எடுத்தது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வைரல் ஆனார். அந்த சீஸனில் 22 விக்கெட்டுகள் கைப்பற்றியது மற்றுமின்றி  தான் ஏன் சிறந்த பவுலர் என்பதை மீண்டும் ஜென் Z தலைமுறைக்கு புரிய வைத்தார். கிரிக்கெட் மீதான நெஹ்ராவின் அர்ப்பணிப்பை உணர்ந்த தோனி, அவரை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டார். தோனியின் ஆலோசனை படி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியவுக்கு எதிரான டி 20 தொடரில் மீண்டும்  இவரைச் சேர்ந்தது பி.சி.சி.ஐ.

ஐந்து வருடத்துக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க  ’யாரு சாமி இவரு’ என ரசிகர்கள் அதிர்ந்தார்கள். ஆஸ்திரேலிய தொடர், ஆசிய கோப்பை, உலககோப்பை  என எல்லாவற்றிலும் கட்டுக்கோப்பாக பந்துவீசி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார் நெஹ்ரா. கடந்த ஆண்டு ஐந்தரை கோடிக்கு சன்ரைஸர் ஹைதராபாத் இவரை 5.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. 

ஐ.பி.எல்லில் மீண்டும் காயம் ஆனாலும் வழக்கம் போல மீண்டு வந்தார். இதோ இங்கிலாந்து தொடரில் கெத்து காண்பிக்கிறார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியது உட்பட இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மூன்று விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்திருக்கிறார். அன்று கலாய்த்துத்  தள்ளிய அதே வாய்களும், விரல்களும் இன்று ’வாவ்’ போடுகின்றன. நெஹ்ரா மிகச்சிறந்த பவுலரா, இல்லையா  என்ற விவாதத்தையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டுப்பார்த்தால் அவரின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. செய்நன்றி மறக்காதவர், விமர்சனங்களைக் கண்டு துவளாதவர் என்று இவரின் பாஸிட்டிவ் பக்கங்கள் பலருக்கும் பாடம்!  சிறு தோல்வியில் முடங்கி விடும் நாம் நமது தொழிலில்,வேலையில் அர்ப்பணிப்போடு நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம். 

வா வா வர்லாம் வா நெஹ்ரா! 

http://www.vikatan.com/news/sports/79268-ashish-nehra-the-come-back-king.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.