Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடுமாற்றம்

Featured Replies

gallerye_234602147_1703005.jpg

முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு, பொது மக்களிடமும், கட்சியின் அடிமட்ட தொண்டர் களிடமும் செல்வாக்கு அதிகரித்து வருவதால், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தடுமாற்றம் அடைந்துள்ளனர்.

 

Tamil_News_large_1703005_318_219.jpg

சசிகலாவா, பன்னீரா, எந்தப் பக்கம் சாய்ந்தால் ஆதாயம் என, ஆளாளுக்கு மனக்கணக்கு போடத் துவங்கி உள்ளனர். அதனால், இதுவரை பன்னீர்செல்வத்தை கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள் எல்லாம், அவரின் புகழ் பாடும் நிலை உருவாகி உள்ளது.ஜெ., மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வம், முதல்வராக பொறுப்பேற்றார்.

அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டார். அதற்கு, பன்னீர்செல்வம் முழு ஆதரவு கொடுத்தார். ஆனால், பொதுச் செயலரா னதுடன் விடாமல், முதல்வர் பதவிக்கு வரவும், சசிகலா முயன்றார். அதற்கு, அவரது குடும் பத்தினரும், கட்சியின் மூத்த நிர்வாகிகள்

சிலரும் துாபம் போட்டனர். இதனால், பன்னீர் செல்வத்திற்கு நெருக்கடி ஏற்பட்ட போது, அவருக்கு, மத்திய பா.ஜ., அரசு கை கொடுத்தது. இதையடுத்து,பன்னீர் செல்வம், முதல்வர் பணியை, சுறுசுறுப்பாக மேற்கொள்ள துவங்கினார்.

'வர்தா' புயலால், சென்னை உள்ளிட்ட மாவட்டங் கள் பாதிக்கப் பட்ட போது, அதற்கான நிவாரண நடவடிக் கையை துரிதப்படுத்தினார். அவரது நடவடிக்கை, மக்களைகவர்ந்தது.

இதன்பின், ஆந்திரா சென்று, அம்மாநில முதல் வரை சந்தித்து, சென்னை குடிநீர் பிரச்னையை தீர்க்க, நடவடிக்கை மேற்கொண்டார். விவசாயி களின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி, அவசர சட்டம் கொண்டு வந்தார்; மாணவர்களின் போராட்டத்தை அடக்கினார்.

இது போன்ற தொடர் செயல்பாடுகளால், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, கட்சியினரி டமும், மக்களிடமும் செல்வாக்கு அதிகரித்துள் ளது. செயல்படும் முதல்வர் என, பெயரும் எடுத்துள்ளார்.இதை பார்த்ததும், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் யோசிக்க துவங்கி விட்டனர். சசிகலா பக்கம் சாய்வதா, முதல்வர் பக்கம் செல்வதா என்ற தடுமாற்றத்தில், அவர்கள் அனைவரும் உள்ளனர். எந்தப் பக்கம்

 

சாய்ந்தால்,தங்களுக்கு ஆதாயம் என்றும், கணக்கு போட்டும் வருகின்றனர்.

இதன் காரணமாக, சசிகலாவை மட்டுமே புகழ்ந்தவர்கள், தற்போது முதல்வரையும் புகழ துவங்கி விட்டதை, சமீபத்திய சட்டசபை கூட்டத்தொடரில் காண முடிந்தது. அமைச்சர் கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பேசும் போது, ஜெ., மற்றும் சசிகலாவை புகழ்ந்ததோடு, முதல்வரையும் புகழ்ந்தனர்.மேலும் பல எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் முதல்வரை சந்தித்து, கோரிக்கை மனுக்களையும் அளித்தனர்.
 

இது குறித்து எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறியதாவது:


அ.தி.மு.க., பொதுச் செயல ராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதால், அவரை ஆதரித்தோம். அவருக்கு, பொதுமக்களிடம் எதிர்ப்பு அதிகமாக உள்ளது. அதே நேரத்தில், முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது.முதல்வர் பதவியில், அவர் சிறப்பாக செயல்படத் துவங்கி உள்ளார். அவரை நீக்கிவிட்டு, சசிகலா முதல்வரானால், மக்களின் கோபம் அதிகரிக்கும். எனவே, கட்சி யையும், ஆட்சியையும் காப்பாற்ற, பன்னீரே பதவியில் நீடிப்பது நல்லது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1703005

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.