Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ. இல்லாத சட்டசபை! - ஜாலி ஆளும்கட்சி... லாலி எதிர்க்கட்சி

Featured Replies

ஜெ. இல்லாத சட்டசபை! - ஜாலி ஆளும்கட்சி... லாலி எதிர்க்கட்சி

 

‘பயம்... பவ்யம்... பரபரப்பு...’ சட்டசபைக்குள் ஜெயலலிதா இருந்தால், அ.தி.மு.க-வினரிடம் இந்த மூன்றும் இருக்கும். இப்போது இந்த மூன்றில் ஒன்றுகூட இல்லை. முதல்வர் ஓ.பி.எஸ் பேசிக்கொண்டிருக்கும்போதே, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எழுந்து செல்வதும், சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதுமாகக் காட்சி தருகிறது சட்டசபை.

ஜெயலலிதா இருக்கும்போது, அவர் சட்டசபைக்குள் வந்தால், அ.தி.மு.க-வினர் மட்டும் எழுந்து நிற்பார்கள். ஆனால், இப்போது ஓ.பி.எஸ் உள்ளே வந்தால், தி.மு.க-வினரும் சேர்ந்து எழுந்து நிற்கிறார்கள். சபையில் ஜெயலலிதா அமரும்போது, சபாநாயகருக்கு மட்டும் வணக்கம் வைப்பார். ஆனால், ஓ.பி.எஸ்-ஸோ எதிர்க்கட்சியினருக்கும் ஒரு வணக்கத்தைப் போட்டு அவர்களது குட்புக்-கிலும் இணைந்து கொள்கிறார். ஓ.பி.எஸ்-ஸின் அணுகுமுறையைப் பார்த்த ஸ்டாலின், சபையிலேயே அதைப் புகழ்ந்தும் பேசினார். அதேபோல் காலையில் வரும் ஓ.பி.எஸ் சபை முடியும் வரை இருந்துவிட்டுத்தான் செல்கிறார். ஆனால், ஜெயலலிதா குறிப்பிட்ட நேரம் மட்டுமே சபையில் இருப்பார். முதல்வர் முழுநேரமும் இருப்பதால், இப்போது துறைச் செயலாளர்களும் முழுநேரமும் சபையில் இருக்கவேண்டியுள்ளது.

p2.jpg

ஜெயலலிதா பேசும்போது, ஆளுங்கட்சியினர் மேஜையைத் தட்டி அதிர வைப்பதற்கு இடைவெளி விடுவார். இப்போது மேஜைகள் மட்டுமில்லை, ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களின் கைகளும் ஓய்வெடுக்கின்றன!

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்ட சபையில் கேள்விகள் எழுப்பினால், ஜெயலலிதாவே பதில் சொல்லி அவர்களைத் திணறடித்துவிடுவார். ஆனால், இப்போது எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளித்த பின்பும் அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் சொல்கிறார்கள். ஜெயலலிதா அவையில் இல்லாதபோது அமைச்சர்கள் ரிலாக்ஸாக இருப்பார்கள்.

‘இனி ஜெயலலிதா அவைக்கே வர மாட்டார்’ என்கிறபோது எப்படி இருப்பார்கள் என சொல்லத் தேவையில்லை.

‘‘தமிழக அரசு வழங்கும் கலவை சாதத்தில் என்னென்ன சிறுதானியங்கள் சேர்க்கப்படுகின்றன?’’ என்று தி.மு.க உறுப்பினர் கீதாஜீவன் கேட்டபோது, பதில் அளிக்க எழுந்த அமைச்சர் சரோஜா, “மாண்புமிகு அமைச்சர் கேட்ட கேள்விக்கு...” என்று ஆரம்பித்ததும், அனைவரும் சிரித்துவிட்டார்கள். சுதாரித்துக்கொண்ட அமைச்சர், ‘‘உறுப்பினர் கேட்ட கேள்விக்கு’’ என்று திருத்திப்பேசினார். ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியெல்லாம் சரோஜாவால் பேசியிருக்க முடியாது. அதேபோல் சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்குப் பதில் உரைக்க முதல்வரை அழைத்தபோது, பழக்கதோஷத்தில் “மாண்புமிகு அம்மா” என்று அழைத்துவிட்டார்.

மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து ஸ்டாலின் கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானம்மீது பேசிய ஓ.பி.எஸ், “போராட்டக் களத்தில் கடைசிக் கட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்தனர். ‘தனித் தமிழ்நாடு வேண்டும்’ என்றும், ‘குடியரசு தினத்தை கறுப்பு தினமாக அறிவிக்க வேண்டும்’ என்றும் அவர்கள் முழக்கமிட்டார்கள். போராட்டக்களத்தில், ஒசாமா பின்லேடன் படத்தோடு ‘குடியரசு தினத்தை நிராகரிக்கிறோம்’ என்ற பதாகைகளை வைத்திருந்தார்கள். மேலும் சிலர், ‘ஓ.பி.எஸ் மரணம்’ என்றும் பதாகைகள் வைத்திருந்தார்கள்’’ என்று குறிப்பிட்டுப் பேசியவர் அதற்கான ஆதாரங்களாக சில போட்டோக்களையும் அவையில் காண்பித்தார். அ.தி.மு.க கூட்டணியில் உள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏ தமிம் அன்சாரி பேசியபோது, ‘‘மாணவர் புரட்சி, தை புரட்சியாகவே வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. ஆனால், சரியான தலைமை இல்லாத காரணத்தால், சில விரும்பத்தகாதச் சம்பவங்கள் நடைபெற்றன. ஒசாமா படம் ஒட்டிய வாகனம் மெரினா போராட்டக்களத்தில் எடுக்கப்பட்டது அல்ல. வேறொரு களத்தில் எடுக்கப்பட்ட படம். இது முதல்வருக்குத் தெரியுமா?’’ என்று கேள்வி எழுப்பியதும், ‘‘இதுகுறித்து விசாரித்து முழுமையான அறிக்கைத் தாக்கல் செய்கிறேன். ஆனால், ஒசாமா படத்தைக் காட்டியதால், நான் ஒரு சமூகத்தைக் குறிப்பிட்டுக் கருத்து கூறவில்லை என்பதை அவைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.’’ என்றார் ஓ.பி.எஸ்.!  

குன்னம் உறுப்பினர் ராமச்சந்திரன் பேசியபோது, “கழகத்தினை வழிநடத்திச் செல்லும் சின்னம்மாவை வணங்கிப் பேசுகிறேன்” என்றதும் அதிர்ந்தனர் தி.மு.க-வினர். துரைமுருகன் எழுந்து “சின்னம்மா என்றால் யார்?” என்றார். அ.தி.மு.க-வினர் கூச்சலிட்டதும், சபாநாயகர், “அவர்களது கட்சியின் பொதுச்செயலாளரை அவர்கள் கூறுகிறார்கள். இதில் தவறில்லை” என்றார். ராமச்சந்திரன் தொடங்கிவைத்த சின்னம்மா கோஷத்தை அடுத்துப் பேசிய பலரும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, “கழகத்தினை வழிநடத்திச் செல்லும் சின்னம்மாவை வணங்கிப் பேசுகிறேன்” என்று பேசி, சின்னம்மா பெயரையும் சட்டசபை பதிவேட்டில் பதிய வைத்துவிட்டார்கள்.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.