Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: அ.தி.மு.க.,வில் மீண்டும் பரபரப்பு

Featured Replies

நாளை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்:
அ.தி.மு.க.,வில் மீண்டும் பரபரப்பு
 
 
 

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நாளை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அ.தி.மு.க., வட்டாரத்தில், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tamil_News_large_170369020170203225931_318_219.jpg

சட்டசபை கூட்டத்தை முன்னிட்டு, ஜன., 27ல், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா நடத்தினார். அதில், 'அனை வரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்; மக்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்' என, அறிவுரை கூறினார்.

இக்கூட்டத்தில், முதல்வர் பதவியேற்கும்படி, தன்னை, எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்துவர் என, சசிகலா எதிர்பார்த்தார். ஆனால், யாரும்

கோரிக்கை வைக்கவில்லை. 'எந்த அவசியமும் இன்றி, கூட்டம் நடத்தப்படுகிறது' என, எம்.எல்.ஏ.,க் கள் அதிருப்தி அடைந்தனர். இச்சூழலில், நாளை பிற்பகல், 1:00 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை யில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், சசிகலா தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இக்கூட்டத்தில், தன் ஆதரவாளர்களை விட்டு, முதல்வராக சசிகலா வர வேண்டும் என வலி யுறுத்த, அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: முதல்வராக பன்னீர்செல்வம், சிறப்பாக செயல் படுகிறார். எனவே, சசிகலா தற்போதைக்கு, முதல்வராக வாய்ப்பில்லை.

எம்.எல்.ஏ.,க்களிடம், தொகுதியில் உள்ள நீண்ட கால பிரச்னைகள் குறித்த விபரங்களை, எடுத்து வரும் படி தெரிவித்துள்ளனர்.எனவே,மக்கள் பிரச்னைகள், தமிழக அரசு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப் படலாம். சசிகலா, முதல்வராக வேண்டும் என, அவரது ஆதரவாளர் கள் பேசவும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

 

கவர்னர் 'பிசி':

எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சசிகலாவை முதல்வராக தேர்வு செய்வர். அவர் அடுத்த வாரம் முதல்வராவார் என்ற தகவல் பரவி யுள்ளது. ஆனால், கவர்னர் வித்யாசாகர் ராவ், அடுத்த வாரம், சென்னை யில் இல்லை.

அவர், விழா ஒன்றில் பங்கேற்க, நாளை கோவை வருகிறார். விழா முடிந்து, ஊட்டி செல்கிறார். அங்கு தங்கி விட்டு, 7ம் தேதி, கோவை பாரதியார் பல்கலை விழாவில் பங்கேற்கிறார். பின், டில்லி புறப்பட்டு செல்கிறார்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1703690

  • தொடங்கியவர்

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் ஆகிறாரா சசிகலா?

 

 
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா | கோப்பு படம்
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா | கோப்பு படம்
 
 

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க ஒப்புதல் கடிதம் பெறுவதற்காகவே கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா கடந்த டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்றார். அப்போதே கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சி நடந்தது. அமைச்சர்கள் சிலரே அதற்கு அடித்தளம் இட்டனர். ஆனால், என்ன காரணத்தாலோ அதற்கான வேலைகள் அதோடு நின்றுபோனது. சட்டப் பேரவையில்கூட ஆளுங்கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலாவை கட்சி உறுப்பினர்கள் புகழ்ந்தார்களே தவிர, வேறு எதையும் வலியுறுத்தவில்லை. அதன்பின் அதிமுக இலக்கிய அணியினர் நடத்திய ஆலோ சனைக் கூட்டத்திலும் இதுதொடர் பாக எந்த தீர்மானமும் நிறை வேற்றப்படவில்லை.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை (நாளை) மாலை நடப்ப தாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத்தொட ரின்போது, முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நெருக்கடி ஏற்படும் சூழல் உருவானால், சக்தி அளிப்பதாக திமுகவின் துரைமுருகன் பேசியது, சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டி ருக்கிறது. அதிமுக தலைமையின் இந்த திடீர் நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊருக்குச் செல்ல இருந்த எம்எல்ஏக்களை சென்னையில் தங்கியிருக்குமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. ஊருக்குச் சென்றவர்களை உடனடியாக சென்னைக்கு வருமாறும் கூறப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்று, விரைவில் சசிகலா முதல்வராக பொறுப்பேற்கவே இந்த நடவடிக்கை என கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால், தொகுதிகளில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பான விவரங்கள் பெறவே தாங்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகிகளும் அழைக்கப் பட்டிருப்பதாகவும் எம்எல்ஏக்கள் கூறுகின்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/சென்னையில்-நாளை-அதிமுக-எம்எல்ஏக்கள்-கூட்டம்-முதல்வர்-ஆகிறாரா-சசிகலா/article9520789.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.