Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அ.தி.மு.க.,வில், நியமன பொதுச் செயலரான சசிகலாவுக்கு, புதிய நிர்வாகிகளை நியமிக்க அதிகாரமில்லை என்ற, திடீர் சர்ச்சை வெடித்துள்ளது.

Featured Replies

gallerye_000343726_1703683.jpg

அ.தி.மு.க.,வில், நியமன பொதுச் செயலரான சசிகலாவுக்கு, புதிய நிர்வாகிகளை நியமிக்க அதிகாரமில்லை என்ற, திடீர் சர்ச்சை வெடித்துள்ளது.

 

Tamil_News_large_1703683_318_219.jpg

கோஷ்டிகளை சமாளிக்க, ஒரே நாளில், 23 பேருக்கு பதவிகளை வாரி வழங்கியதற்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சசிகலா வருகைக்கு பின், கட்சியில், காங்., கலாசாரம் தலைதுாக்குவதாகவும், தொண்டர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தமிழக காங்கிரசில், கோஷ்டிகளை சமாளிக்க வும், சரிக்கட்டவும், ஏராளமான பதவிகள் வழங்கப்படுவது உண்டு. அதே போல், ஆளும், அ.தி.மு.க.,வில், 23 பேருக்கு, திடீரென கட்சி பதவிகளை வாரி வழங்கியுள்ளார், அக்கட்சி பொதுச் செயலர் சசிகலா.தன் தலைமையை பிடிக்காமல், ஒதுங்கியிருந்த வர்களை தேடிப் பிடித்து, கட்சி பதவிகளில் அமர்த்தி, தன் ஆதரவு வட்டத்தை விரிவுபடுத்த முயன்றுள்ளார். அதற்கு, தொண்டர்கள் மத்தியில், கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அ.தி.மு.க.,வில், கட்சிப் பொறுப்பு என்பது, மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த பொறுப்புக்கு வர, ஒவ்வொரு தொண்டரும் கடினமாக உழைப்பது வழக்கம். அவர்களின் உழைப்பு வீண் போகாது என்பதை, மறைந்த ஜெயலலிதா உணர்த்தி வந்தார்.

அதன் காரணமாக, மாவட்ட செயலர்களின் எதிர்ப்பையும் மீறி, ஜெயலலிதாவால் பதவிக்கு வர முடிந்தவர்கள், இந்த கட்சியில் ஏராளம். அதே போல், கட்சியினரின் புகாருக்கும், பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கும் ஆளான நிர்வாகிகளை, துாக்கி அடிப்பதிலும், ஜெ., தயவு தாட்சண்யம் காட்டியதே இல்லை.
அவரது மறைவுக்கு பின், கட்சியில் அசாதாரண சூழல் காணப்படுகிறது. புதிதாக தலைமை ஏற்றுள்ள சசிகலாவுக்கு, தொண்டர்களிடத்தில் எதிர்ப்பு நிலவுகிறது. அந்த எதிர்ப்புணர்வு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் கள், எம்.எம்.ஏ.,க்கள் என, வேகமாக பரவ துவங்கி உள்ளது.

அதன் வெளிப்பாடாக தான், முன்னாள் அமைச் சர், கே.பி.முனுசாமி பகிரங்க போர்க் கொடி துாக்கினார்.அவரது கருத்துக்கு ஆதரவாக, இப்போது பல இடங்களில், போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.

அதே நேரத்தில், ஜெ.,யின் அண்ணன் மகள் தீபாவுக்கும், தொண்டர்களின் ஆதரவு பெருகி வருகிறது. அவரை சந்திக்கவும், அரசியலுக்கு அழைக்கவும், நேரில் வரும் கூட்டம் குறைவதாக தெரியவில்லை.

இந்நிலையில், அதிருப்தியாளர்களை சரிக்கட்ட, கட்சி பதவிகளை வாரி வழங்க துவங்கி உள்ளார் சசிகலா. அனைத்துஜாதியினருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 23 பேருக்கு, நேற்று புதிய பதவிகளை வழங்கி உள்ளார்.கட்சியில் தன்னை நிலைநிறுத்தவும், ஆதரவாளர்களை தக்க வைக்கவும், அனைத்து ஜாதியினரையும், அரவணைத்து செல்வதாக காட்டவும், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இது, கட்சியில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அ.தி.மு.க., சட்ட விதி, 20; துணை விதி இரண்டு; திருத்தப்பட்ட விதி, 43ன்படி, பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டவர் மட்டுமே, நிர்வாகி களை மாற்ற முடியும்; புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய முடியும்.ஆனால், சசிகலா பொதுச் செயலராக தேர்வு செய்யப்படவில்லை. அவர், நியமனம் செய்யப்பட்டு உள்ளார். நியமனம் செய்யப்பட்டவர்,

புதிய நிர்வாகிகளை நியமிக்க இயலாது. அ.தி. மு.க., சட்ட விதிகளின்படி, பொதுச் செயலராக தேர்வு செய்யப்படுபவர், ஐந்து ஆண்டுகள், கட்சியில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அந்தத் தகுதி, சசிகலாவிற்கு, மார்ச் மாதம் தான் வருகிறது. எனவே, புதிய நிர்வாகி கள் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என, அ.தி.மு.க., வட்டாரம் கூறுகிறது.
 

ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர்கள்


ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டிருந்த, செங்கோட்டையன், ரமணா, சோமசுந்தரம், நயினார் நாகேந்திரன், கருப்பசாமி பாண்டியன், புத்திசந்திரன் போன்றவர்களுக்கு, சசிகலா பதவி வழங்கியுள்ளார்.திருவள்ளூர் மாவட்டத் தில், நரசிம்மன், ரமணா என, இருவர் அமைப்பு செயலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏற்கனவே,

 

முன்னாள் எம்.எல்.ஏ., மைதிலி திருநாவுக்கரசு, அமைப்பு செயலராக உள்ள நிலையில், புதிதாக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், அமைப்பு செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தற்போது, அ.தி.மு.க.,வில், 50 மாவட்ட செயலர்கள் உள்ளனர். சில மாவட்டங்களை பிரித்து, அதிருப்தியில் உள்ளவர்களை, புதிய மாவட்ட செயலர்களாக நியமிக்கவும், சசிகலா திட்டமிட்டு உள்ளார். எனவே, நிர்வாகிகள் மாற்றம் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
 

யார் யாருக்கு பதவி


அமைப்பு செயலர்களாக, முன்னாள் அமைச்சர் கள் செங்கோட்டையன், கோகுல இந்திரா, ரமணா, சோமசுந்தரம், புத்திசந்திரன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், எம்.எல்.ஏ., நரசிம்மன், முன்னாள் எம்.பி.,க்கள் நிறைகுளத் தான், அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாமலை, உமாதேவன், கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணைச் செயல ராக, முருகுமாறன், மீனவர் அணி செயலராக, அமைச்சர் ஜெயக்குமார், இணை செயலர்க ளாக, நீலாங்கரை முனுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன், முன்னாள் அமைச்சர் ஜெயபால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கொள்கை பரப்பு துணைச் செயலராக, முன் னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன்; இலக்கிய அணி இணை செயலர்களாக, முன் னாள் அமைச்சர் வைகைச்செல்வன், தலைமை பேச்சாளர் சமரசம்; ஜெ., பேரவை துணைச் செயலராக, முன்னாள் எம்.எல்.ஏ., செல்வம் நியமிக்கப்பட்டு உள்ளனர்.எம்.ஜி.ஆர்., இளைஞர் அணிச் செயலர் பொறுப்பில் இருந்த அலெக்சாண்டர், விடுவிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர் சிவபதி நியமிக்கப்பட்டு உள்ளார். மீனவர் அணி செயலராக இருந்த நீலாங்கரை முனுசாமி, இணை செயலராக்கப்பட்டு உள்ளார்.

அ.தி.மு.க., அமைப்பு செயலர்கள் எண்ணிக்கை மட்டும், 30யை தாண்டி உள்ளது. அனைவருக் கும் பதவி வழங்க வேண்டும் என்பதால், இதுவரை இல்லாத அளவிற்கு, அமைப்பு செயலர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1703683

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.