Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

' ஆவணங்களைக் கொடுங்கள்' -சசிகலாவை அதிர வைத்த தேர்தல் ஆணையம்

Featured Replies

' ஆவணங்களைக் கொடுங்கள்'   -சசிகலாவை அதிர வைத்த தேர்தல் ஆணையம் 

சசிகலா

' தமிழக முதல்வர் நாற்காலியை நோக்கி சசிகலா நகர்ந்து கொண்டிருக்கிறார்' என வட இந்திய ஊடகங்கள் வரையில், விவாதங்களைத் தொடங்கியுள்ள சூழலில், ' அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் தேர்வு குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சசிகலாவுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கூடவே, ' இரட்டை இலை சின்னத்துக்கு யாராவது உரிமை கொண்டாடினால், ஏற்கக் கூடாது' எனவும் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள் சசிகலா எதிர்ப்பு அணியினர்.

சென்னை, வானகரத்தில் கூடிய அ.தி.மு.க பொதுக்குழுவில், பொதுச் செயலாளர் பதவிக்கு கட்சியின் நிர்வாகிகளால் முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. தற்காலிக பொதுச் செயலாளராக பதவியேற்றவர், ' பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் நிரந்தர பொதுச் செயலாளராக ஏற்றுக் கொள்ள வேண்டும்' என தேர்தல் ஆணையத்தை அணுகினர் அ.தி.மு.க நிர்வாகிகள். ஆணையத்தின் கெடுபிடியால், கார்டன் முயற்சிகள் எதுவும் ஈடேறவில்லை. ' அ.தி.மு.கவை உருவாக்கிய எம்.ஜி.ஆர், கட்சிக்கென சில விதிகளை வகுத்திருக்கிறார். அதன்படி ஐந்தாண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இல்லாதவர்கள், பொதுச் செயலாளர் ஆக முடியாது. 2011-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் சசிகலா. வரும் மார்ச் மாதத்துடன்தான் ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன. கட்சி உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டுத்தான் பொதுச் செயலாளரைத் தேர்வுசெய்ய முடியும். சசிகலாவை சட்டவிரோதமாக தேர்வு செய்துள்ளனர்' என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருந்தார் அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா. கடந்த வாரம், இதுதொடர்பான விசாரணையிலும் ஆஜராகிவிட்டு வந்தார். இந்நிலையில், ' பொதுச் செயலாளர் தேர்வு குறித்த ஆவணங்களை சமர்ப்பியுங்கள்' என சசிகலாவுக்கு உத்தரவிட்டுள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். 

சசிகலா புஷ்பா" அ.தி.மு.கவின் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிக்கு மட்டுமே, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரும் தகுதி இருக்கிறது. வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் ஆஜரான சசிகலா புஷ்பா, ' மகாராஷ்ட்ராவில் நடக்க உள்ள தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை சசிகலா பரிந்துரை செய்தால், ஆணையம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. சின்னத்துக்கு உரிமை கோருவது கிரிமினல் குற்றமாக கருதப்பட வேண்டும். ஏனென்றால், கட்சி விதிகளின்படி தேர்வு செய்யப்பட்டவராக சசிகலா இல்லை. 1996-ம் ஆண்டு திருநாவுக்கரசருக்கு எதிராக அ.தி.மு.க தொடர்ந்த வழக்கிலும், ' கட்சி உறுப்பினர்களால் முறைப்படி திருநாவுக்கரசர் தேர்வு செய்யப்படவில்லை' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு சசிகலாவுக்கும் பொருந்தும். கட்சி விதி 20(2), 40(3) ஆகியவற்றின் அடிப்படையில் சசிகலா தேர்வு செய்யப்படவில்லை. எனவே, முறையாக தேர்தலை அறிவித்து, வேட்புமனுத் தாக்கல் செய்து சசிகலா போட்டியிட வேண்டும்' என ஆணையத்தில் தெரிவித்தார். இதையொட்டியே, சசிகலாவிடம் ஆவணங்களைக் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம். ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் உள்பட தமிழ்நாட்டில் வரப் போகும் எந்தத் தேர்தலிலும், இரட்டை இலை சின்னத்தைக் கோர வேண்டும் என்றால், முறைப்படி தேர்வு செய்யப்பட்ட பொதுச் செயலாளர் கட்சியில் இருக்க வேண்டும். இரட்டை இலைக்குப் பரிந்துரை கடிதம் கொடுக்கும் தகுதி சசிகலாவுக்கு இல்லை" என அதிர வைக்கின்றனர் சசிகலா புஷ்பா ஆதரவாளர்கள். 

" அ.தி.மு.க சார்பில் ஆணையத்தை அணுகிய நிர்வாகிகள், ' சமாஜ்வாதி கட்சிக்குள் தந்தை-மகனுக்கு இடையே தகராறு வெடித்தபோது, விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது ஆணையம். அதைப்போலவே, ' அ.தி.மு.க நிர்வாகிகள் ஒன்றுகூடி தேர்வு செய்த சசிகலாவையும் ஏற்க வேண்டும்' எனக் கூறியுள்ளனர். இந்த சமரசத்துக்கு ஆணையத்தின் அதிகாரிகள் ஒப்புக் கொள்ளவில்லை. திருநாவுக்கரசர் வழக்கில் அ.தி.மு.க தரப்பில் இருந்து என்ன நியாயங்கள் சொல்லப்பட்டதோ, அவை அனைத்தும் சசிகலாவுக்கும் பொருந்துகிறது. ' ஐந்தாண்டுகள் கட்சியின் உறுப்பினராக இல்லாதவர், கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகிப்பதே சட்ட விரோதம்தான்' என நீதிமன்றத்துக்கு வழக்கை எடுத்துச் செல்லும் முடிவிலும் சசிகலா எதிர்ப்பாளர்கள் உள்ளனர். முறைப்படி தேர்தல் நடத்தினால், மாவட்டம்தோறும் அட்டைப் பெட்டிகளை வைத்து, அ.தி.மு.க உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், அனைவரும் சசிகலாவுக்கு வாக்களிப்பார்களா என்பது மிக முக்கியமான கேள்வி. அதனால்தான், தேர்தல் ஆணையத்தை சரிகட்டும் வேலையில் கட்சியின் டெல்லி சீனியர்கள் களமிறங்கினர். அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. டெல்லி லாபியை வலுப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கின்றனர் மன்னார்குடி உறவுகள்" என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 

தேர்தல் ஆணையத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் சசிகலா? 

http://www.vikatan.com/news/tamilnadu/79760-election-commission-demands-required-documents-from-sasikala.art

  • தொடங்கியவர்

தேர்தல் கமிஷன் அனுப்பிய நோட்டீசால் சசிகலா தரப்பு... 'ஷாக்!':அதிகாரத்தை பிடிக்கும் முயற்சியில் திடீர் பின்னடைவு:எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தின் பின்னணி பற்றி பரபரப்பு

 

அ.தி.மு.க., பொதுச்செயலர் நியமனம் தொடர்பாக விளக்கம் கேட்டு, தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் கடும்
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது, அதிகாரத்தை பிடிக்கும் சசிகலாவின் முயற்சிக்கு, திடீர் பின்னடைவாக கருதப்படுகிறது. அத்துடன் இன்று, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை நடத்துவதன் பின்னணி பற்றியும், பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா மறைந்ததும், முதல்வர் மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியில் சசிகலாவை அமர வைக்க, அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆனால், மத்திய அரசின் நெருக்கடியால், பன்னீர்செல்வம், மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். சசிகலா குடும்பத்தினர், கட்சி நிர்வாகத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
அவர்கள் ஆதரவுடன், அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார்.

அ.தி.மு.க., சட்ட விதிகளின் படி, கட்சி பொதுச்செயலரை, தொண்டர்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும். பொதுச்செயலர்பதவிக்கு போட்டியிடுபவர், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள், கட்சியில் உறுப்பினராகஇருந்திருக்க வேண்டும்.

தேர்வின்றி நியமனம்

சசிகலா, கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, ஜெயலலிதாவால் மீண்டும் சேர்க்கப்பட்டார். அவர்
கட்சி உறுப்பினராகி, ஐந்து ஆண்டுகளாகவில்லை. எனவே, அவர் பொதுச் செயலராக தேர்வு
செய்யப்படாமல் நியமனம்செய்யப்பட்டார்.'சசிகலா, முறைப்படி பொதுச்செயலராக தேர்வு செய்யப்படவில்லை. எனவே, அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். பொதுச்செயலரை புதிதாக தேர்வு செய்ய, கட்சி சட்ட விதிகளின் படி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்' என, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா, தேர்தல் கமிஷனில் மனு கொடுத்தார்.

அதையேற்ற தேர்தல் கமிஷன், விளக்கம் கேட்டு, சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் பொதுக்குழு தீர்மானங்களை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பும் படியும் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை, முதல்வர் கனவில் இருந்த சசிகலாவிற்கு, திடீர் பின்னடைவாக கருதப்படுகிறது.

ஏற்கனவே, தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல, சொத்து குவிப்பு வழக்கு இருக்கும் நிலையில், தேர்தல் கமிஷனும் நெருக்கடி கொடுப்பது, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

பின்னணி என்ன?

இந்நிலையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று பகல், 2:00 மணிக்கு, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் முடிந்த
தும், மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த, 27ம் தேதி தான், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. மீண்டும், 10 நாட்களுக்குள், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு,சசிகலா அழைப்பு விடுத்துள்ளதால், பல்வேறு யூகங்கள்
வெளியாகி உள்ளன.

இதுபற்றி, சசிகலா ஆதரவாளர்கள் கூறுகையில், 'சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டுமென, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்படும்; அதற்கான கையெழுத்து பெறப்படும்' என்றனர். ஆனால், கட்சியின் மற்றொரு தரப்பினர், 'அதற்கு வாய்ப்பில்லை' என்றனர்.

போர்க்கொடி

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:'முதல்வர் பதவியில் இருந்து விலக முடியாது' என்பதை,
பன்னீர்செல்வம் திட்டவட்டமாக, சசிகலா தரப்பிற்கு தெரியப்படுத்திவிட்டார். சசிகலா முதல்வரானால், பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்குவர்; கட்சியில் சிக்கல் ஏற்படும். சசிகலா, அதை விரும்பமாட்டார்.

கடந்த முறை நடந்த, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், 'தொகுதியில் தீர்க்கப்படாத முக்கிய பிரச்னைகளை தெரியப்படுத்துங்கள்; அவற்றை தீர்க்க வழி காண்போம்' என, சசிகலா கூறியிருந்தார். இது குறித்தும், ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம் குறித்தும், விவாதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள்தெரிவித்தனர்.

எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூறுகையில், 'கூட்டத்திற்கு வர அழைப்பு
விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், விவாதிக்கப்பட உள்ள விஷயம் பற்றிய விபரம் தெரியவில்லை' என்றனர்.

- நமது நிருபர் -

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1704361

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.