Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதல்வர் ஒ.பி.எஸ்., ராஜினாமா

Featured Replies

முதல்வர் ஒ.பி.எஸ்., ராஜினாமா

 

சென்னை: முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார். போயஸ் கார்டனில் நடந்த கூட்டத்தில் ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் அவர் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க., சட்ட சபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து சசிகலா முதல்வராகிறார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1704844

  • தொடங்கியவர்

முதலமைச்சராகிறார் சசிகலா!

சசிகலா,ஓபிஎஸ்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள். கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சட்டமன்றக் குழு தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை முதல்வர் பன்னீர்செல்வம் முன் மொழிய, அனைத்து எம்.எல்.ஏக்களும் வழி மொழிந்தனர். அதேபோல், முதல்வர் பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை, சசிகலாவிடம் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சசிகலாவும் தற்போது அதிமுக அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வருகின்ற 9-ம் சசிகலா, தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

 

http://www.vikatan.com/news/tamilnadu/79837-sasikala-natarajan-likely-to-be-sworn-in-as-cm-of-tamil-nadu.art

  • தொடங்கியவர்
தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா: கவர்னருக்கு பன்னீர் செல்வம் கடிதம்

 

 

சென்னை: தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் பன்னீர் செல்வம் கவர்னருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
 


 

முதல்வர் பதவி ராஜினாமா

 


அதிமுக தலைமையகத்தில் இன்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக கட்சியின் பொது செயலாளர் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் அதை முன்மொழிந்தார். இதையடுத்து, சசிகலா விரைவில் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
 


 

 

gallerye_201851812_1704865.jpg

 

கவர்னருக்கு கடிதம்

 


இந்நிலையில், முதல்வர் பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து, அவர் தமிழக கவர்னராக பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
எனது தனிப்பட்ட காரணங்களுக்காக தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமாவை ஏற்று 6.12.2016 ம் தேதி என்னால் நியமிக்கப்பட்ட தமிழக அமைச்சரவையை கலைக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1704865

  • தொடங்கியவர்
ஒத்துழைப்புக்கு நன்றி: பிரதமர், கவர்னருக்கு பன்னீர் செல்வம் கடிதம்

 

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, தமிழக கவர்னர் வித்யாசாகர் ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்து பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்து தனிதனியாக கடிதங்கள் அனுப்பியுள்ளார்.
 

 

ஒத்துழைப்புக்கு நன்றி


அந்த கடிதங்களில், தனது ஆட்சி காலத்தில் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த பிறகு ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளது தற்போதைய தமிழக அரசியல் சூழலில் முக்கியதுவம் பெறுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1704922

  • தொடங்கியவர்
கலசம் வழங்கி பதவியை இழந்த ஓ.பி.எஸ்.,
தொடரும் தி.மலை கோவில் 'சென்டிமென்ட்'
 
 
 

திருவண்ணாமலை:அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கலசம் வழங்கிய, முதல்வர் பன்னீர்செல்வம், பதவியை இழந்துஉள்ளதால், 'சென்டிமென்ட்' தொடர்வதாக கூறப்படுகிறது.

 

Tamil_News_large_170564720170206231218_318_219.jpg

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு அரசியல்வாதிகள் வந்து சென்றால் பதவி பறிபோகும் என்பதால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இந்த கோவிலுக்கு வருவதை தவிர்த்து வந்தார்.

கடந்த, 2011 அ.தி.மு.க., ஆட்சியில், அமைச்சராக, 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி பதவியேற்ற முதல் ஆண்டு, அருணாச்சலேஸ்வரர் கோவில் தீபத்திற்கு வந்து சென்றார். மறு ஆண்டு தீபத் திருவிழா வருவதற்குள், அவர் அமைச்சர்

பதவியை இழந்து, நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் சிக்கி, சிறையிலும் அடைக்கப்பட்டார்.

இதேபோல், அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்து சென்ற முன்னாள் அமைச்சர்கள்ஆனந்தன், கோகுல இந்திரா ஆகியோரும், அமைச்சர் பதவியை இழந்தனர்.
 

முன்னாள் அமைச்சர்


இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, அ.தி.மு.க.,வின், முக்கூர் சுப்பிரமணியன், தான் அமைச்சராக இருந்த காலத்தில் அருணாச் சலேஸ்வரர் கோவிலுக்கு வருவதை தவிர்த்து வந் தார். இவர் தொடர்ந்து, மூன்றரை ஆண்டுகள் அமைச்சராக நீடித்தார்.
தி.மு.க., முன்னாள் அமைச் சர் பிச்சாண்டி, இந்த கோவிலுக்கு வருவதை வழக்க மாக கொண்டவர். அவர் தயவால், தி.மு.க.,வில் இணைந்த, எ.வ.வேலுவிடம்அரசியல் அதிகாரத்தை பறி கொடுத்து விட்டு, தற்போது டம்மியாக உள்ளார்.

 

 

அரசியல்வாதிகள் அச்சம்


இதையறிந்த, எ.வ.வேலு, அருணாச்சலேஸ் வரர் கோவிலுக்கு செல்வதை தவிர்த்து விட்டார்.
அருணாச்சலேஸ்வரர் கோவில், 'சென்டி மென்ட்' விஷயத்தில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தப்பவில்லை. அருணாச்சலேஸ் வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, சுவாமி, அம்மன் சன்னிதிக்கு கும்ப கலச நீர் எடுத்து செல்ல, வெள்ளி குடம் வாங்கி கொடுத்தார். நேற்று கும்பாபிஷேகம் நடந்த நிலையில், அதற்கு முன்பாகவே, தன் பதவியை சசிகலா விடம் பறிகொடுத்து விட்டார்.

அருணாச்சலேஸ்வரர் கோவில், 'சென்டி மென்ட்' தொடர்வதால், அரசியல்வாதிகள் இந்த கோவில் பக்கம் எட்டிப் பார்க்கவே அச்சப்படுகின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1705647

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.