Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொசுங்கிய புரட்சிக் கனவு

Featured Replies

பொசுங்கிய புரட்சிக் கனவு

Page-01-image-65a12f598385b445a5a2615d63c2e2e91fec0e80.jpg

 

காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வு­களால் வவு­னி­யாவில் மேற்­கொள்­ளப்­பட்ட உண்­ணா­வி­ரதப் போராட்டம், நான்­கா­வது நாள், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­த­ன­வினால் முடித்து வைக்­கப்­பட்­டமை பல­ருக்கு நிம்­ம­தியைக் கொடுத்­தி­ருக்­கி­றது. சில­ருக்கு ஏமாற்­றத்தை அளித்­தி­ருக்­கி­றது.

சமூக ஊட­கங்­க­ளிலும், ஏனைய ஊட­கங்­க­ளிலும் பலரும் வெளி­யி­டு­கின்ற கருத்­துக்­களில், இருந்து ஏமாற்­றத்தின் தாக்­கத்தை உணர முடி­கி­றது. மேலும், பல­ரது மனோ­நி­லையை, ஆழ்­மன விருப்­பங்­களை புரிந்து கொள்ள முடி­கி­றது.

வவு­னி­யாவில் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் மேற்­கொண்ட போராட் டம், அர­சாங்­கத்­தினால் நிறுத்­தப்­பட்­ட­தற்குப் பின்னால் ஒரு அர­சியல் இருப்­ப­தாக இவர்கள் குற்­றம்­சாட்­டு­கின்­றனர். இளை­ஞர்­களின் பேரெ­ழுச்சி ஒன்றை தடுப்­ப­தற்­கான சதித்­திட்­டமே இது என்று வாதி­டு­கின்­றனர்.

தமது உற­வுகள் காணா­ம­லாக்­கப்­பட்­டதால் வீதி வீதி­யாக அலைந்து, முகாம்கள் முகாம்­க­ளாகத் தேடி, அலு­வ­லகம் அலு­வ­ல­க­மாக பதி­வு­களைச் செய்து, வாடிப்­போன உடலில் வெறும் உயிரை மட்டும் வைத்துக் கொண்டு திரி­ப­வர்கள், உண்­ணா­வி­ரதம் இருந்து உயிரை விட்டு விட வேண்டும் என்ற குரூர சிந்­த­னையே இவர்­களின் மத்­தியில் இருந்­தி­ருக்­கி­றது.

காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் விவ­கா­ரத்தை மாத்­தி­ர­மன்றி, பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் உண்­ணா­வி­ர­தத்தை வைத்தும், அர­சியல் நடத்த முனையும் கேவ­ல­மான நிலையில் இன்று தமி­ழரின் அர­சியல் இருக்­கி­றது.

காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பான விட­யத்தில் ஒரு தீர்வை எட்­டு­வது தான், அர­சாங்­கத்தை நோக்கி நடத்­தப்­பட்ட இந்தப் போராட்­டத்தின் முழு­மை­யான நோக்கம்.

காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் பெரும்­பா­லா­னோரின் நிலை என்ன என்­பது அவர்­களின் உற­வு­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். அது­பற்றி அவர்கள் அர­சாங்­கத்­திடம் இருந்து ஒரு தெளி­வான பதிலைப் பெறவே முனை­கி­றார்கள். அந்தச் சம்­ப­வத்­துக்­கான நீதியைப் பெறவே முயற்­சிக்­கி­றார்கள்.

காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் அனை­வ­ரையும் கொண்டு வந்து கண்­முன்னே நிறுத்தி விட்டுத் தான், உண்­ணா­வி­ர தப் போராட்­டத்தை நிறுத்த வேண்டும் என்றால், இலட்­சக்­க­ணக்­கானோர் உண்­ணா­வி­ரதம் இருந்து மடிந்­தாலும் கூட அது நடக்­காது.

நான்கு நாட்­க­ளாக உண்­ணா­வி­ரதம் இருந்­த­வர்­களின் உடல் நிலை மோச­ம­டை

யத் தொடங்­கிய நிலையில் தான், அர ­சாங்கம் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­த­னவை அனுப்பி, பேச்­சுக்­களை நடத்­தி­யது.

அந்தப் பேச்­சுக்­களில் ஒரு இணக்­கப்­பாடும் எட்­டப்­பட்­டது. வரும் 9ஆம் திகதி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையில், அலரி மாளி­கையில் உயர்­மட்டப் பேச்­சுக்­களை நடத்­து­வ­தென்று முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

அலரி மாளி­கையில் நடக்­க­வுள்ள இந்தப் பேச்­சுக்கள், காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைத் தரும் என்று நம்ப முடி­யாது. ஏனென்றால், இந்தப் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு பல கட்­டங்க ளைக் கடக்க வேண்டும். நல்ல முடி­வு­களை எடுக்க வேண்டும். அத்­த­கைய ஆற் றல் இந்த அர­ சாங்­கத்­துக்கு இல்லை.

எந்தப் பல­மான அர­சாங்­கமும் கூட, இந்த விட­யத்தில் முடி­வு­களை எடுப்­ப­தற்கு தயங்கும். எனவே, அலரி மாளிகைப் பேச்­சுக்­களில் எல்லா கோரிக்­கை­களும் நிறை­வேற்­றப்­பட்டு விடும் என்ற எதிர்­பார்ப்பில் சென்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

அர­சாங்கம் ஒரு கட்­டத்­துக்கு மேல் நக­ராது என்­பதை தெரிந்து கொண்டு தான், செல்ல வேண்­டி­யி­ருக்கும். ஆனால், இந்த விவ­கா­ரத்­துக்கு முடிந்­த­ள­வுக்கு தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய நிலைக்கு அர­சாங்­கத்தைக் கொண்டு செல்­வதே முக்­கி­ய­மா­னது.

எந்த போராட்­டத்­துக்கும் ஒரு இலக்கு இருப்­பது போலவே, அதனை முடித்து வைப்­ப­தற்­கான தரு­ணமும் இருக்­கி­றது. வவு­னியா போராட்டம் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சரை அனுப்பி, வாக்­கு­றுதி ஒன்றை அர­சாங்கம் அளித்த போது இடை­நி­றுத்­தப்­பட்­டதால், போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­களின் உயிர்கள் காப்­பாற்­றப்­பட்­டன. 

காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக, உயி­ரோடு இருப்­ப­வர்­க­ளையும் இழக்க முடி­யாது. அந்த இழப்பு ஒரு­போதும் போராட்­டத்தில் வெற்­றி­யா­கவும் அமை­யாது. முடிந்­த­ள­வுக்கு அவர்கள் காப்­பாற்­றப்­பட வேண்டும் என்­பதே முக்­கி­ய­மா­னது. அது தான் வவு­னியா போராட்­டத்தில் நடந்­தி­ருக்­கி­றது,

ஆனால், இந்தப் போராட்டம் இடை­ந­டுவில் நிறுத்­தப்­பட்­டதால், இளை­ஞர்­களின் எழுச்சி தடுக்­கப்­பட்டு விட்­ட­தாக சமூக ஊட­கங்­களில் பலரும் விமர்­சிக்­கின்­றனர்.

மெரீனா போராட்­டத்தின் பாதிப்பில் இருந்து பலரும் மீள­வில்லை என்­ப­தையே இத்­த­கைய விமர்­ச­னங்கள் காட்­டு­கின்­றன. ஜல்­லிக்­கட்­டுக்கு ஆத­ர­வாக சமூக ஊட­கங்­களின் ஊடாக தொடங்­கிய போராட்டம், மெரீனா கடற்­க­ரையை நிறைத்­தது மாத்­தி­ர­மன்றி, தமி­ழ­க­மெங்கும் அனலை வீசச் செய்­தது,

இலங்­கை­யிலும் கூட சமூக ஊட­கங்­களின் ஊடாக பலரும் அதற்கு ஆத­ர­வாகப் போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­தனர். அத்­த­கை­ய­தொரு எழுச்­சியை, வவு­னியா உண்­ணா­வி­ரதம் மூலம் ஏற்­ப­டுத்­தலாம் என்று யாரேனும் நினைத்­தி­ருந்தால் அது தவ­றா­னது.

ஜல்­லிக்­கட்டு போராட்­டத்­துக்கு ஆத­ர­வாக நல்­லூரில் திரண்ட இளை­ஞர்­களின் வேகத்தை வவு­னியா உண்­ணா­வி­ர­தத்தின் போது காண­மு­டி­ய­வில்லை. உண்­ணா­வி­ரதப் போராட்டம் நான்­கா­வது நாளை எட்­டிய போது தான், பலரும் உறக்­கத்தில் இருந்து விழித்­தனர்.

இரவில் கடும் குளிரில் நடுங்கிக் கொண்டு போதிய வெளிச்­சமும் பாது­காப்பும் இல்­லாமல் வீதி­யோ­ரத்தில் உறங்கிக் கொண்­டி­ருந்த போராட்­டக்­கா­ரர்­களை, மூன்று நாட்­க­ளாக எத்­தனை இளை­ஞர்கள் திரும்பிப் பார்த்­தனர்?

போராட்டம் முடித்து வைக்­கப்­பட்ட நாளன்று, காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் நல்­லூரில் ஒரு அடை­யாள உண்­ணா­வி­ர­தத்தை மேற்­கொண்­டனர். அதில் எத்­தனை இளை­ஞர்கள் வந்து பங்­கேற்­றனர். ஜல்­லிக்­கட்­டுக்­காக வந்­த­வர்­களில் பத்தில் ஒரு பங்­கி­ன­ரா­வது அதில் பங்­கேற்­ற­னரா?

இந்த நிலையில் தான் இளை­ஞர்­களின் எழுச்சி தடுக்­கப்­பட்­ட­தாக, அமுக்­கப்­பட்­ட­தாக பிர­சா­ரங்கள் செய்­யப்­ப­டு­கின்­றன.

சரி­யான தரு­ணத்தில் – சரி­யான முறையில் மெரீனா போராட்­டத்தை முடி­வுக்கு கொண்டு வரும் சந்­தர்ப்பம் வாய்த்த போது, அதனை அங்­கி­ருந்த போராட்­டக்­கா­ரர்கள் சரி­யாக பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை.

பேரம் என்­பது கைக்குக் கிடைக்கும் போது தான் பேச வேண்­டி­யது. கைந­ழுவிப் போன பின்னர் பேசு­வது பேர­மல்ல. மெரீ­னாவில், கைந­ழுவிப் போன பின்னர் தான் பேரம் பேச முனைந்­தார்கள்.

அதன் விளைவு, அந்தப் போராட்­டத்தின் வெற்­றியை கொண்­டாட முடி­யாத அவ­லத்­தையும், வீண் அழி­வு­க­ளையும் தான் சந்­திக்க நேரிட்­டது.

வவு­னியா போராட்­டத்­தையும், மெரீனா நிலைக்கு கொண்டு செல்­லவே பலரும் விரும்­பி­யி­ருக்­கின்­றனர் என்­பதை இப்­போது உணர முடி­கி­றது.

மெரீனா போராட்­டத்தை தொடங்­கி­ய­வர்கள், வேறு. அதனை கடை­சியில் முடிக்க விடாமல் தடுத்­த­வர்கள் வேறு.

ஆனால், வவு­னியா போராட்­டத்தில், உண்­ணா­வி­ரதம் இருந்­த­வர்கள் தான் தமது போராட்­டத்தை முடித்துக் கொள்ளும் முடிவை எடுத்­தனர். அதில் குளிர் காய முனைந்­த­வர்கள் அதனால் ஏமாற்­ற­ம­டைந்­தனர்.

உண்­ணா­வி­ரதப் போராட்டம் என்­பது சாதா­ர­ண­மான ஒன்­றல்ல. நெஞ்சில் எரியும் நெருப்­புடன், வயிற்றில் எரியும் நெருப்­பையும் ஒருங்கே கட்­டுப்­ப­டுத்த, நடத்த வேண்­டிய போராட்டம்.

இத்­த­கைய போராட்­டங்­களில் ஈடு­பட்­டதால், வாழ்நாள் முழு­வதும் நோயுடன் வாழ்­ப­வர்கள் பலர் இருக்­கி­றார்கள். அப்­ப­டிப்­பட்ட ஒரு போராட்­டத்தை வெறும் உணர்ச்சி அர­சி­ய­லுக்­காக பயன்­ப­டுத்த முனை­வது அபத்­த­மா­னது.

ஒரு உயிரின் இழப்பில் தான் எழுச்சி ஏற்­பட வேண்டும் என்­றில்லை. 1988இல், இந்­தி­யப்­ப­டை­யி­ன­ருக்கு எதி­ராக, போர்­நி­றுத்தம் உள்­ளிட்ட கோரிக்­கை­களை வைத்து, மட்­டக்­க­ளப்பில், 31 நாட்­க­ளாக உண்­ணா­வி­ரதம் இருந்த அன்னை பூபதி உயிர் துறந்தார்.

அந்த இறப்­பினால் கிழக்­கிலோ வடக்­கிலோ பேரெ­ழுச்சி ஏற்­ப­ட­வில்லை. எனவே, உயிர் இழப்பில் தான் எழுச்சி நிகழ வேண்டும் என்று எவ­ரேனும் கரு­தினால் அது தவறு.

தியாகி திலீ­பனின் உண்­ணா­வி­ரதப் போராட்டம், உயிர் துறப்பில் தான் முடிந்­தது. அத­னாலும் கூட இளை­ஞர்­களின் பேரெ­ழுச்சி நிக­ழ­வில்லை.

தியாகி திலீ­பனின் மர­ணத்தை அடுத்து, முல்­லைத்­தீவில் உண்­ணா­வி­ரதம் இருந்த கப்டன் திருச்­செல்­வமும், வல்­வெட்­டித்­து­றையில் உண்­ணா­வி­ரதம் இருந்த நால்­வரும் தமது போராட்­டங்­களை நிறுத்தக் கொள்ள நேரிட்­டது.

ஏனென்றால், அதற்கு மேல் போராட்டம் நடத்தி எந்தப் பய­னு­மில்லை, இந்­திய- இலங்கை அர­சுகள் எதற்கும் மசியப் போவ­தில்லை என்று தெரிந்த கொண்ட பின்னர், அதனைச் செய்­வதே உசி­த­மான செய­லாக இருந்­தது.

அர­சாங்கம் இறங்கி வந்து பேச முனைந்த போது அதனைத் தட்டிக் கழித்து விட்டு, தொடர்ந்து போராட்­டத்தை நடத்தி, இளைஞர்களை எழுச்சி பெறச் செய்வதால் மட்டும், காணாமலாக்கப்பட்டவர்களை கொண்டு வந்து நிறுத்தி விட முடியுமா?

எழுச்சிப் போராட்டத்தின் மூலம் சாதிப்பதற்கு இது ஒன்றும் ஜல்லிக்கட்டு அல்ல.

தமிழ் இளைஞர்கள் தமக்கான உரிமைகளை கேட்பதற்கு காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டம் தான் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமை.

தமது உரிமைகளுக்காக அடுத்தவரின் முதுகில் சவாரி செய்வதோ அவர்களின் பிணங்களில் அரசியல் செய்வதோ சரியானதல்ல.

தமக்கான உரிமைகளை இளைஞர்கள் எப்போது கேட்கிறார்களோ அது தான் போராட்டம். அது தான் எழுச்சி. அதற்கு ஒன்றும் தருணம் வாய்க்க வேண்டும் என்றில்லை. தானாக வரவேண்டும்.

அதை விட்டு விட்டு அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்ற வகையில், எழுச்சியை ஏற்படுத்தலாம் என்று கனவு கண்டால் அந்த எழுச்சியும் மெரீனாவைப் போலத் தான் பொசுங்கிப் போகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-02-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.