Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆசை இல்லை! அரசியல் ஆசை இல்லை என்றவர் முதல்வராகிறார்

Featured Replies

ஆசை இல்லை!
அரசியல் ஆசை இல்லை
என்றவர் முதல்வராகிறார்
 
 
 

'எனக்கு அரசியல் ஆசை எப்போதும் இல்லை' என, மறைந்த முதல்வர் ஜெயலிதாவிடம் சொல்லி, மன்னிப்பு கோரி, மீண்டும் அவருடன் இணைந்த சசிகலா, அந்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு, முதல்வராக உள்ளார்.

 

Tamil_News_large_170493320170206010430_318_219.jpg

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த, விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு, சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி, சசிகலா, திவாகரன் என, ஆறு குழந்தைகள். இவர்களில், ஐந்தாவ தாக பிறந்தவர் சசிகலா. 10ம் வகுப்பு படித்துள் ளார். இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தை சேர்ந்த, நடராஜனுக்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடந்தது.

நடராஜன் அப்போது, தமிழக அரசில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்தார். நடராஜன், சென்னைக்கு மாற்றலாகி வந்த போது, மனைவிக்கு, 'வினோத் வீடியோ விஷன்' என்ற பெயரில், வீடியோ கேசட் கடை வைத்து கொடுத்தார்.
 

சிபாரிசு


அப்போது, அ.தி.மு.க.,வின் கொள்கை பரப்பு செயலராக, ஜெயலலிதா நியமிக்கப்பட்டார். தமிழகம் முழுவதும், ஜெயலலிதா சுற்றுப் பயணம் செய்தபோது, அந்த நிகழ்ச்சிகளை, வீடியோ எடுக்கும் பணி, வினோத் வீடியோ விஷனுக்கு, நடராஜன் சிபாரிசில் வாங்கப் பட்டது. அப்படி எடுக்கப்பட்ட வீடியோ கேசட்டை கொடுப்பதற்காக, முதன் முதலில், 'வேதா இல்லம்' என்ற, போயஸ் கார்டன் வீட்டிற்கு, சசிகலா சென்றார்.

அதன்பின், கேசட் கள் கொடுப்பதற்காக, அடிக் கடி போயஸ் கார்டன் செல்ல, ஜெயலலிதா - சசிகலா இடையே நட்பு ஏற்பட்டது. உடல்நலக் குறைவு ஏற்பட்டு, பெங்களூரு மருத்துவமனை யில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது, அவரை பார்ப்பதற்காக சசிகலா அங்கு சென்றார். இதன் மூலமாக நட்பு மேலும் வலுவானது. தொடர்ந்து, ஜெ., வீட்டுக்கு, சசிகலா அடிக்கடி போக ஆரம்பித்தார்.

எம்.ஜி.ஆர்., மறைந்த நேரத்தில், அவரது இறுதி ஊர்வலத்தின் போது, உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தில், ஜெ.,வை ஏற்றாமல் அவமானப் படுத்தினர். அப்போது, அவருக்கு ஆறுதல் அளித்தது சசிகலா. எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு, கட்சி இரண்டாக உடைந்தது. எனினும், ஜெ., தன் முயற்சியால், கட்சியை ஒருங் கிணைத்து, 1991ல் தமிழக முதல்வரானார்.

அவர் முதல்வராக பதவியேற்க வந்த போது, அவருடன் சசிகலா வந்தார்.
 

எரிச்சல்


அப்போது தான் கட்சியினர், அவரை, 'சின்னம்மா' என, அழைக்கத் துவங்கினர். சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாக, ஜெயலலிதா தத்தெடுத்தார். சுதாகரன் திருமணம், மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்டது, மக்களிடம் எரிச்சலை ஏற்படுத் தியது.சசிகலாவின் உறவினர்கள், கட்சியி லும், ஆட்சியிலும், ஆதிக்கம் செலுத்தத் துவங்கினர். அந்த ஐந்து ஆண்டு ஆட்சியின் போது, சசிகலா குடும்பத்தினரின் அட்டகாசம் காரணமாக, ஜெயலலிதா மக்களின் வெறுப்பை சம்பாதித்தார்.

அடுத்து வந்த தேர்தலில், அ.தி.மு.க., பெரும் தோல்வியை சந்தித்தது.தோல்விக்கான காரணம் என்ன என, கட்சியினரிடம் ஜெயலலிதா கேட்ட போது, சசி குடும்பத்தினரின் அட்டகாசத்தை தெரிய படுத்தினர். அதைத் தொடர்ந்து, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை, கட்சியில் இருந்து நீக்கி னார். ஒரே ஆண்டில் மீண்டும் சேர்த்துக் கொண்டார்.

கடந்த, 2011ல் ஜெ., மீண்டும் முதல்வரானதும், சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் தலை துாக்கி யது. கட்சியினர் புகார் தெரிவித்தனர். மீண்டும் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். சசிகலா மன்னிப்பு கடிதம் கொடுத்ததை தொடர்ந்து, மீண்டும் அவரை தன் வீட்டிற்கு வரவழைத்தார் ஜெயலலிதா.
 

துரோகம்


அப்போது சசிகலா கொடுத்த கடிதத்தில் கூறியிருந்த தாவது: எனக்கு அரசியல் ஆசை எப்போதும் இல்லை. அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே விரும்புகிறேன். என் வாழ்க்கையை, ஏற்கனவே அக்காவுக்கு அர்ப்பணித்து விட்டேன். என் உறவினர்கள், நண்பர்கள் என, சொல்லி, அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்கள் செய்தது, மன்னிக்க முடியாத துரோகம். அக்காவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தா லும், அவர்களுக்கும் எனக்கும் எவ்வித ஒட்டு மில்லை, உறவுமில்லை. இவ்வாறு கடிதத்தில் கூறியிருந்தார்.

ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவ மனையில், ஜெயலலிதா அனுமதிக்கப் பட்டிருந்த போது, அவரை யாரும் பார்க்க விடாதபடி, சசிகலா தடுத்தார். ஜெ., அண்ணன் மகள் தீபாவை கூட அனு மதிக்கவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட ஜெ., வீடு திரும்பாமல், அங்கேயே இறந்தார்.

அவர் மறைந்ததும், ஜெ.,க்கு தான் கொடுத்த வாக்கு றுதியை மறந்து, கட்சி நிர்வாகிகளை தன்கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்து, அ.தி.மு.க., பொதுச் செயலரானார். தற்போது முதல்வராக தயாராகி விட்டார்.
 

அனைவரும் வலியுறுத்தியதால் முதல்வராகிறேன்: சசிகலா


''கட்சி பொதுச்செயலராகவும், தமிழக முதல்வ ராகவும், ஒருவரே இருக்க வேண்டும் என, அனை வரும் வலியுறுத்தியதால், உங்கள் கோரிக்கையை

 

ஏற்கிறேன்,'' என, சசிகலா தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், அவர் பேசிய தாவது:ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,பிளவு படாதா என கனவு கண்ட, நம் அரசியல் எதிரிகளின் எதிர்பார்ப்புகளை பொடி பொடி யாக்கிய உங்களுக்கு நன்றி. என்றும், நாம் அம்மாவின் குழந்தைகள் என்பதை, சூழ் நிலை கள் எப்படி வந்தாலும், நிரூபித்துக் காட்டி வருகி றோம்.கட்சிக்கு இடையூறு வந்த போதெல் லாம், ஜெ., முதல்வராக இருக்க, தடங்கல் வந்த போதெல்லாம், கட்சி தலைமைக்கு விசுவாசமாக திகழ்ந்தவர்,

பன்னீர்செல்வம். ஜெ., மறைந்த போது நிலைகுலைந்த என்னிடம், 'கட்சியின் பொதுச் செயலராகவும், முதல்வராகவும் பொறுப்பேற்க வேண்டும்' என, முதன் முதலில் வலியுறுத்தி னார்.அப்போது, எதையும் ஏற்கும் மனநிலை யில் நான் இல்லை. ஜெ., இல்லாத நிலையில், அவர் வாழ்ந்த இல்லத்தில் என்னை கட்சியினர் சந்தித்து, பொதுச்செயலராக வேண்டும் என்ற னர். 'ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், கட்சி, மக்களுக்காக உழைக்கும்' என்ற, ஜெ., கனவை ஈடேற்ற, அவரது குழந்தைகள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.
 

நிறைவேற்றுவேன்


இப்போதும், 'கட்சி பொதுச் செயலராகவும், தமிழக முதல்வராகவும், ஒருவரே இருக்க வேண்டும்' என, அனைவரும் வலியுறுத்திய தால், உங்கள் கோரிக்கையை ஏற்கிறேன். ஜெ., கனவை முழுமையாக நிறைவேற்றுவேன்; அவர் வழியில், மக்களுக்காக இந்த அரசு செயல்படும் என, உறுதி அளிக்கிறேன் இவ்வாறு சசிகலா பேசினார்.
 

ராசியான '5'


சசிகலாவின் ராசியான எண் '5'. கடந்த 29.12.2016ல் அ.தி.மு.க., பொதுச்செயலாளராக தேர்வானார். இதன் கூட்டுத்தொகை (2+9+1+2+2+0+1+6=23, 2+3=5). பொதுக்குழுவில்
தயாரிக்கப்பட்ட அறிக்கை 41 பக்கங்கள் (4+1=5).
இதன் 14வது (1+4=5) பக்கத்தில் சசிகலா பொதுச் செயலாளர் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. சசிகலா பொதுச்செயலாளராக கையெழுத் திட்ட நேரம் பகல் 11:30 (1+1+3+0=5). நேற்று பிப். 5, அ.தி.மு.க., சட்டசபை தலைவராக தேர்வானார். ஜெயலலிதா மறைந்ததும் டிச.5. இப்படி எல்லாம் 5 மயமாக உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1704933

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.