Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிச்சர்ட் பீலே சொன்னது தெரியும்... எம்.ஜி.ஆர் இறந்தபோது, மருத்துவர் என்ன சொன்னார் தெரியுமா?

Featured Replies

ரிச்சர்ட் பீலே சொன்னது தெரியும்... எம்.ஜி.ஆர் இறந்தபோது, மருத்துவர் என்ன சொன்னார் தெரியுமா?

 

எம்ஜிஆர், ஜெயலலிதா

ஜெயலலிதாவின் மரணம் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி தமிழகத்தின் மேட்ரோ ரயில் திட்டத்தின்கீழ் சென்னையின் முதல்பயணத்தை துவக்கிவைத்துவிட்டு தன் வாழ்க்கையின் இறுதிப்பயணத்துக்குத் தயாரானார் . அன்றிரவு வீட்டில் மயங்கிவிழுந்தவரை அவசர அவசரமாக அப்போலோவில் சேர்த்தனர். அன்றிலிருந்து 75 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தவர், டிசம்பர் 5-ம் தேதி இரவு 11 மணிக்கு தொண்டர்கள் மற்றும் மக்களின் நம்பிக்கையையும் மீறி மரணமடைந்தார். 

ஜெயலலிதா இறப்பு நிகழ்ந்ததாக மருத்துவர்கள் குறிப்பிடும் இந்த நேரத்துக்கு சுமார் 5 மணிநேரத்துக்கு முன்னரே தனியார் தொலைக்காட்சிகளில் ஜெயலலிதா இறந்துவிட்டதாக தகவல்கள் பரவின. நம்பகமான ஒரு தொலைக்காட்சி கொஞ்சநேரத்தில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தொடர் ஒளிபரப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. இப்படி ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அவர் இறப்பு நிகழ்ந்த டிசம்பர் 5-ம் தேதி  இரவு வரை நிரம்பி வழிகின்றன. 
ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின் சசிகலா பொதுச் செயலாளராகி நேற்று எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அவர் சட்டமன்ற ஆளும்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரை இந்த மர்மங்கள் தொடர்பான எந்த சர்ச்சைகளுக்கு அவருக்கு சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனையோ தமிழக அரசோ உரிய விளக்கங்களை அளிக்கவில்லை.

இன்னும் சில தினங்களில் சசிகலா முதல்வராக உள்ள நிலையில் இன்று லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலெ இன்று கர்மசிரத்தையாக அமர்ந்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சரச்சைகளுக்கு விளக்கம் அளித்துவருகிறார். 

ரிச்சர்ட் பியெல்

தமிழக அரசியலில் மரணம் தொடர்பான சர்ச்சைகள் புதிதல்ல. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மரணமும் இப்படி சர்ச்சைக்குள்ளான ஒன்றுதான். ஆச்சர்யமும் அதிர்ச்சியும் என்னவென்றால் இந்த சர்ச்சையை கிளப்பியதும் வேறு யாரோ அல்ல; இன்று யாருடைய மரணத்தில் உண்மை தெரியவேண்டும் என்று மன்றாடிக்கொண்டிருக்கிறோமோ அதே ஜெயலலிதா தான். எம்.ஜி.ஆருக்கு மோரில் விஷம் வைத்து கொன்றுவிட்டார்கள் என்பதுதான் ஜெயலலிதா கிளப்பிய அதிர்ச்சிப் புகார். இந்த புகார் அன்று அரசியலில் கிளப்பிய சர்ச்சை அளவிடமுடியாதது. ஜெயலலிதா போகும் இடங்களில் எல்லாம் இதைக்கூறி தனக்கு அனுதாபங்களை ஏற்படுத்திக்கொண்டார். ஆனால் சிக்கலுக்குள்ளானது ஜானகி தரப்புதான். 

1988-ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கில் நடந்த பொதுக்கூட்டத்தில்தான், “எம்.ஜி.ஆர் சாவில் மர்மம் இருக்கிறது.நான் முதலமைச்சராக வந்தால்  முதல் வேலையாக அதுபற்றி விசாரிக்க ஒரு நீதிபதியை நியமிப்பேன்” என பரபரப்பு தீயை பற்றவைத்தார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரின் குடும்பத்திலும் அவரது தொண்டர்கள் மத்தியிலும் இது பரபரப்பு பேச்சானது. 

ஜெயலலிதாவின் பரமவைரியான அன்றைய அறநிலைத்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தனக்கு எதிராக ஜானகியை கட்சியில் முன்னிருத்துவதை தடுக்க ஜெயலலிதா எடுத்த இந்த அதிரடி அஸ்திரம் அவருக்கே வேறு விதமாக திரும்பியது.
“1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் புரட்சித்தலைவரை மருத்துவமனையில் சேர்க்கவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. அதற்கு முன் அவர் யார் யார் வீட்டுக்கெல்லாம் போனார். அங்கு அவருக்கு உணவில் என்ன கலந்துகொடுக்கப்பட்டது. அதை கொடுத்தவர்கள் யார் ” என பதிலடி கொடுத்தார் ஆர்.எம்.வீரப்பன்.

எம் ஜி ஆர்

அரசியல் சூழல் அதகளப்பட்ட அந்த நேரத்தில் மோர் சர்ச்சை பரபரப்புத் தீனியானது பத்திரிகைகளுக்கு.

ஆச்சர்யம் என்னவென்றால் சமூக வலைத்தளங்கள் மிகுந்துவிட்ட இக்காலத்தில் ஜெயலலிதா மரணம் குறித்த புதிர்களை டாக்டர்களே வந்துதான் அவிழ்க்கவேண்டியிருக்கிறது. ஆனால் ஜெயலலிதாவின் சர்ச்சைக்குரிய புகாருக்கு ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரின் சிறப்பு மருத்துவர் பி.ஆர்.எஸ் சுப்ரமணியம் பத்திரிகைகளுக்கு விளக்கம் அளித்தார். எம்.ஜி.ஆர் இறந்த அன்று இரவு என்னதான் நடந்தது?...அது குறித்து அவர் ராணி வார இதழுக்கு விரிவான பேட்டி  அளித்தார். 

“ எம்.ஜி.ஆர் இரண்டாவது முறை அமெரிக்காவுக்குச் சிகிச்சைக்காக சென்றுவந்தபின் அவரை தொடர்ந்து கண்காணிக்க  8 மணிநேரத்துக்கு ஒரு டாக்டர் என முத்துசாமி, சந்திரமோகன், மகாலிங்கம் என 3 டாக்டர்கள் வீட்டிலேயே டூட்டி பார்த்தனர். வீட்டிலேயே ஒரு மருத்துவமனைக்குரிய அத்தனை உபகரணங்களும் பராமரிக்கப்பட்டன.

எம்.ஜி.ஆர் இறப்பதற்கு முன்தினமான 23-ம் தேதி வழக்கம்போல் அவரை பரிசோதிக்கச் சென்றேன். எல்லாம் நார்மலாக இருந்தது. என்னுடன் எம்.ஜி.ஆர் உற்சாகமாக சிரித்துப் பேசினார். பிறகு வீட்டுக்குத் திரும்பிவந்துவிட்டேன். அன்று மாலை 5 மணிக்கு பாத்ரூம் சென்ற எம்.ஜி.ஆருக்கு சோர்வு ஏற்பட்டு என்னை வரச்சொன்னதாக போன் வந்தது. போனேன். நான் போவதற்கு முன்பே எம்.ஜி.ஆரின் இதயத்துடிப்பை சரிபார்த்தபோது அது வழக்கத்தும் குறைவாக இருந்தது. ரத்தஓட்டமும் குறைந்திருந்ததாக டாக்டர் முத்துசாமி சொன்னார்.
 

ஜெயலலிதா

30 ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் இருக்கிறேன். எம்.ஜி.ஆருக்கு அதுவரை இதயக்கோளாறு வந்ததில்லை. முதல்முறை அப்போலோவில் சேர்க்கப்பட்டபோதே அவருக்கு இதயக்கோளாறு என்றதை மறுத்தேன். பரிசோதனையிலும் அது உறுதியானது. இந்த முறை எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனடியாக அவரை  மருத்துவமனைக்கு அழைத்தபோது, எனக்கு வியர்க்கிறதா என்ன அதெல்லாம் வேண்டாம் என மறுத்துவிட்டார். பின்னர் சகஜமாகி இரவு 10 மணிவரை எங்களுடன் சிரித்துப் பேசியபடி இருந்தார். நடுவே 8 மணிக்கு கஞ்சி குடித்தார். 10 மணிக்கு மோர் வாங்கி குடித்தார். இடையே அறைக்குள் இருந்த பாத்ரூமில் சிறுநீர் கழித்தார். பின்னர் நீங்கள் போய்ப் படுங்கள் என்றார். கிளம்பிவந்துவிட்டோம். அப்போது முத்துசாமி, கல்யாண்சிங் என்ற 2 மருத்துவர்கள் அவருடன் இருந்தனர்.
நள்ளிரவு 12-30 மணிக்கு முத்துசாமி ஓடிவந்து எம்.ஜி.ஆருக்கு ஈ.சி.ஜி முறையாக இல்லை” என்றார். பதறியபடி ஓடினேன். நாங்கள் மேலே செல்வதற்குள் எம்.ஜி.ஆரின் இடதுபக்க இதய அறையில் துடிப்பு சீராக இல்லாமல் போய் துடிப்பு நின்றுவிட்டது. ஒரு கணம் உறைந்துபோனாம் நாங்கள். 

ஆனாலும் மாரடைப்பு உள்ளவர்களை காக்கும் இறுதி வாய்ப்பாக அவரது மார்பை டாக்டர்கள் இருவரும் பிசைந்து இதயத்தை இயங்க வைக்க முயன்றனர். இடையில் இருமுறை பலனளித்தது. ஆனால் 3 மணிக்கு நிரந்தரமாக இதயம் நின்றுபோனது. அதன்பின்னரே அதிகாரபூர்வமாக எம்.ஜி.ஆரின் மரணத்தை அறிவித்தோம்.

ஜானகிக்கு அப்போதுதான் ஆபரேஷன் ஒன்று நடந்திருந்ததால் அவரிடம் விஷயத்தை தயக்கத்துடன் சொன்னோம். அவர் குலுங்கி குலுங்கி அழுதார். உடனே அவருக்கு உடல்கோளாறு வராமல் இருக்க மாத்திரை கொடுத்து அமரவைத்தோம். எம்.ஜி.ஆரின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவேண்டியதிருப்பதால் எம்பாமிங் செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையிலிருந்து அவர்கள் வர 6 மணியாகிவிட்டது. அவரது தொடையில் துளையிட்டு எம்பாமிங் செய்யப்பட்டது. எம்பாமிங்கின்போது ஒருவரது உடலில் உடை இருக்காது என்பதால் அப்போது எம்.ஜி.ஆரைப்பார்க்க வந்த கருணாநிதி, ஜெயலலிதாவை தவிர்த்தோம்.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆருக்கு இதற்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது எப்போது?

எம்.ஜி.ஆருக்கு பல உடல்நோய்கள் இருந்தன. சர்க்கரை சிறுநீரகத்தில் கல், ரத்த அழுத்தம் என பலபிரச்னைகள் இருந்தாலும் எம்.ஜி.ஆருக்கு இதயம் மட்டும் சிங்கம்போல் இயங்கிவந்தது. வீட்டில் அவரது அறைக்குச் செல்ல 3 மாடிகள் ஏறவேண்டும். அப்படி செல்லும்போது அவர் கம்பீரமாக ஏறுவார். நான் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குவேன்.அவ்வளவு உறுதியான இதயம் அவருடையது. 
பிறகு எப்படி மாரடைப்பு ஏற்பட்டது..
.
அது அவரது உடல்பிரச்னையால் வந்திருக்காது. அரசியல் டென்ஷனால் ஏற்பட்டிருக்கலாம். 

அது என்ன ?

நான் ஒரு மருத்துவர் என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள்.

இலங்கை ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆர் மீது திணித்தது, ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமரை சந்தித்தபின் எம்.ஜி.ஆரை ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொல்லி ராஜீவ் சொன்னது போன்றவை எம்.ஜி.ஆரின் இதயத்தை பாதித்திருக்குமா...

மருத்துவத்தை பற்றி மட்டும் என்னிடம் கேளுங்கள்...

எம்.ஜி.ஆர் உடல்நலம் இல்லாதபோது ஜானகி எம்.ஜி.ஆரின் கவனிப்பு எப்படி இருந்தது..

அவர் மனைவியாக வாய்த்தது எம்.ஜி.ஆர் செய்த பாக்கியம் என்றே சொல்லுவேன். எம்.ஜி.ஆர் உடல்நலம் இல்லாமல் போனபின் ஜானகி அம்மையார் செய்த சேவைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை. ஒரு தாயாக, மனைவியாக, நர்ஸாகவும் அவர் செய்த பணிவிடைகள்தான் எம்.ஜி.ஆரை கடைசி 4 ஆண்டுகள் வாழவைத்தது என்பதே நிஜம். 

எம்.ஜி.ஆர் -ஜானகி

 

நோயுற்றிருந்தபோது பல்தேய்ப்பது முதல் குளிக்கவைத்து உடைமாற்றி வேளாவேளைக்கு மருந்து மாத்திரைகள் வழங்கி ஒரு குழந்தையைப்போல் தன் கணவரைப் பார்த்துக்கொண்டார்.  எம்.ஜி.ஆருக்கு மருந்து மாத்திரைகள் என்னை மீறி கொடுக்கப்படமாட்டாது. எந்த உணவையும் மருந்தையும் பி.ஆர்.எஸ் சாப்பிடலாமா என்று கேட்டே உண்பார். 

எம்.ஜி.ஆர் உடலை லிஃப்டை உடைத்து கொண்டுவரப்பட்டதாகவும் இன்னும் பல வதந்திகளும்  உண்மையில்லை. எம்.ஜி.ஆர் உடலை படுத்த நிலையில் லிப்டில் எடுத்துவருவது சாத்தியமில்லை என்பதால் சாய்ந்த நிலையில் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ராஜாஜி ஹாலுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. 

பொன்னிறமான எம்.ஜி.ஆர் மேனி கறுத்தது ஏன்...?

பொதுவாக ஒருவர் இறந்துவிட்டால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து உடல் கறுத்துவிடும். எத்தனை பொன்னிறமாக இருந்தாலும் இது இயல்பு. எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்டதுபோல் வேறு யாருக்கும் இந்த அளவுக்கு மருத்துவ கவனிப்பு அளிக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. (நன்றி ராணி வார இதழ் 1988)

இத்தனை விளக்கங்களுக்குப் பிறகும் ஜெயலலிதா தரப்பு தொடர்ந்து எம்.ஜி.ஆர் மரணம் குறித்த சர்ச்சையை கிளப்பிக்கொண்டிருக்கவே, ஒரு கட்டத்தில் இது அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் இதில் அன்றைய கவர்னர் நுழையவேண்டியதானது.

“எம்.ஜி.ஆரின் மரணம் பற்றிய விசாரணை நடத்தவேண்டும் என்று அரசியல் விவகாரம். இதற்கு அரசாங்கம் பதில் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. எம்.ஜி.ஆர் மரணம் பற்றி மருத்துவர்கள் அளித்த முழு அறிக்கை அரசாங்கத்திடம் உள்ளது. எனவே எம்.ஜி.ஆர் மரணம் பற்றி விசாரணை நடத்தவேண்டிய அவசியம் இல்லை” என்று முற்றுப்புள்ளி வைத்தார் அவர்.

http://www.vikatan.com/news/tamilnadu/79969-this-is-what-doctor-said-during-mgr-death.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.