Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார்டனில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? பி.ஹெச்.பாண்டியன் சந்தேகம்

Featured Replies

கார்டனில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? பி.ஹெச்.பாண்டியன் சந்தேகம்

PH_Pandian_11286.jpg

ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதம் நடந்ததாகத் தகவல் வெளியானது என்றும், அதனால் வீட்டில் நடைபெற்ற நிகழ்வுகள் என்னென்ன என்பவை குறித்த சந்தேகம் ஏற்படுகிறது என்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன் கூறினார்.

சென்னை அண்ணாநகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று பி.ஹெச். பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நினைவிழந்த நிலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்குச் சென்றேன். மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்குப் பல்வேறு வகையான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர். அரவக்குறிச்சித் தேர்தல் பிரசாரத்துக்கு ஜெயலலிதா போகப்போவதாகவும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தார்கள். மருத்துவமனையில் நன்றாக இருந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். ஆனால் முதல்வராக ஜெயலலிதாவின் மறைவு பேரிழப்பாக அமைந்துவிட்டது.

ஆனால், கடந்த 2 நாள்கள் நடந்த நிகழ்வுகள் எனது மவுனத்தைக் கலைத்துவிட்டன. ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதம் நடந்ததாக ஊடகங்களில் தகவல் வெளியானது. அதனால், வீட்டில் நடைபெற்ற நிகழ்வுகள் என்னென்ன என்பவை குறித்த சந்தேகம் ஏற்படுகிறது. போயஸ் தோட்ட இல்லத்தில் கீழே விழுந்த ஜெயலலிதா, தனக்கு உதவும்படி கோரினாரா.
ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்த போது மெய்க்காப்பாளர்கள்தாம் பேசினர் என்று கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80007-what-happened-to-jayallithaa-in-poes-garden--ph-pandian.art

‘சசிகலா ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை’ : பி.எச்.பாண்டியன்

PH Pandian

அ.தி.மு.க வை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், செய்தியாளர் சந்திப்பின்போது, ’கடந்த 2 நாட்களில் நடந்த நிகழ்வுகள் எனது மவுனத்தை கலைத்துவிட்டன.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமையத்தில், 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். சசிகலா மற்றும் குடும்பத்தினர் முகத்தில் கொஞ்சம் கூட வருத்தம் இல்லை. ஜெயலலிதா, இறந்தார் என்ற செய்தி கேட்டு சசிகலா ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை’, என்றார்.  

”கீழே விழுந்த ஜெயலலிதா...” : பி.எச்.பாண்டியன்

Pandiyan

அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் ,’ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் என்ன நடந்தது என்பதை ஊடகங்களில் பார்த்து தெரிந்து கொண்டேன். மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பு, ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. பிரச்னை முடிவில், கீழே விழுந்த ஜெயலலிதாவை தாங்கிபிடிக்க கூட யாரும் இல்லை. இந்த நிலையில் தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். சசிகலா மற்றும் குடும்பத்தினர் முகத்தில் கொஞ்சம் கூட வருத்தம் இல்லை. கடந்த 2 நாட்களில் நடந்த நிகழ்வுகள் எனது மவுனத்தை கலைத்துவிட்டன’, என்றார்

http://www.vikatan.com/news/tamilnadu/80005-jayalalithaa-has-fallen-down--phpandiyan.art

  • தொடங்கியவர்

விஷம் வைத்து கொல்வார்கள் என ஜெ., அச்சம்: மனோஜ் பாண்டியன் திடுக்

 

சென்னை: தன்னை விஷம் வைத்து கொன்று விடுவார்களோ என அச்சமுள்ளதாக ஜெயலலிதா தன்னிடம் தெரிவித்ததாக அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன் கூறினார்.
 

 

நீக்கம்:

மனோஜ் பாண்டியன் கூறியதாவது: 2011 டிச.19க்கு ஒரு வாரத்திற்கு முன்பு தலைமை செயலகத்தில் 45 நிமிடம் என்னிடம் பேசினார். அப்போது, நான் முதல்வராக இருக்கிறேன். ஒரு பெருங்கூட்டம் முதல்வர் பதவியில் இருந்து நீக்க சதி செய்கிறது. அவர்களை வீட்டை விட்டு வெளியேற்ற போகிறேன் என்றார். அதனை தொடர்ந்து சில நாட்களில் அந்த கும்பலை கட்சியிலிருந்தும் வீட்டிலிருந்தும் நீக்கினார். அதன் முதல் கட்சியின் சட்டப்பிரிவு செயலாளர் என்ற முறையில், கட்சிக்கு தேவையான ஆலோசனை வழங்கினேன்.
 

 

மறக்க மாட்டேன்:

மார்ச் 30க்குப் பிறகு, சசிகலா மன்னிப்பு கடிதம் கேட்டு மீண்டும் உள்ளே வந்தார். அவர் ஜெயலலிதா ஆசி பெற்று உள்ளே சென்றார். அப்போது 5 பேரை மாடிக்கு ஜெ., அழைத்தார். அதில் நானும் ஒருவன். அப்போது என்னிடம், அவர்களை அரசியலில் ஈடுபடுத்த மாட்டேன். பெங்களூருவில் அவர்கள் செய்த சதியை மறக்கவில்லை. ஆனால், எனக்கு ஒரு உதவியாளர் தேவை. அதனால் அவர்களை நான் அனுமதித்தேன்.
பிறகு, துக்ளக் ஆசிரியர் சோவையும் என்னையும் அழைத்த ஜெயலலிதா, எனக்கு பயமாக உள்ளது. இந்த கும்பல் என்னை விஷம் வைத்து கொன்றுவிடுவார்கள் என்ற பயமாக உள்ளது என்றார். அதற்கு, 1.5 கோடி தொண்டர்களும் உங்களுக்கு சொந்தமானவர்கள். மக்கள் உங்களை பாதுகாப்பார்கள். உங்களுக்கு அச்சுறுத்தல் வராது எனக்கூறினேன்.
 

 

அதிகாரம் வழங்கவில்லை:

தற்போது அதிமுக சட்டவிதி 19 - 8 என்ற விதியின் கீழ் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்ததாக கூறுகின்றனர். அதிமுகவின் கொள்கைகளை வகுப்பது தான் பொதுக்குழு. அது தொண்டர்களை கட்டுபடுத்தும் என சொல்லப்பட்டுள்ளது. இதனைபயன்படுத்தி தற்போது அவர்கள் பொது செயலாளராக தேர்வானதாக கூறுகின்றனர். 20 - 2 என்ற விதியில் பொது செயலாளர் என்பவர், தொண்டர்களால் மட்டும் தேர்வு செய்யப்பட முடியும்.
தற்காலிக பொதுச் செயலரை தேர்வு செய்யக்கூடிய எந்த அதிகாரமும் வழங்கவில்லை. சட்ட விதிகள் 205 என்ற விதிப்படி, பொதுச் செயலர் காலியாக இருந்தாலும், தற்காலிகமாக தேர்வானவர் நிரந்தரமாக தேர்வு செய்யப்படுவார் என்பது விதி. ஜெயலலிதா, சசிகலாவை கவுன்சிலராக்கியது கூட கிடையாது.
 

 

நினைவு இல்லம்:

போயஸ் கார்டன் அதிமுக தொண்டர்களுக்கு கோயில் போன்றது. அதனை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்பது தான் தொண்டர்களின் எண்ணம். போயஸ்கார்டன் வீடு, விருது, கார் ஆகியவற்றை நினைவாக, தமிழக மக்கள், தொண்டர்கள் வணங்க வேண்டும் என்பதற்காக நினைவகம் அமைக்க வேண்டும் .
 

 

கேள்வி:

25 நாளில் பொது செயலாளர், 60 நாளில் முதல்வர் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஜெ.,விடம் எப்படி அன்பாக இருந்திருக்க முடியும்? ஆசையில்லாதவர்களாக இருக்க முடியும்? ஜெ.,வுடன் ராஜம் என்பவர் தான் நீண்ட வருடம் உள்ளார். அவர் ஜெயலலிதாவின் 13 வயதில் இருந்து மரணமடையும் வரை ஜெ.,வுடன் தான் உள்ளார். அவர் தான் தாயாக உள்ளார்
 

 

விருப்பத்திற்கு மாறாக...:

மக்கள் அனைவரின் விருப்பத்திற்கு மாறாக நடக்கிறது. தொண்டர்களை வஞ்சித்தும் நடக்கிறது. பொருளாதார குற்றங்கள் செய்தவர்கள் நாடாண்டால் என்னாகும். இவர்கள் முதல்வராக தமிழகத்தை எங்கு கொண்டு செல்வார்கள். மக்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 

 

அதிகாரமில்லாதவர்...:

தற்காலிக பொது செயலாளருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்க கூட அதிகாரம் கிடையாது. நிர்வாகிகள் யாரையும் நீக்கவும் முடியாது. நியமிக்கவும் முடியாது. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு என்பது கூட தேர்தல் ஆணையம் முன்பு கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1706277

  • தொடங்கியவர்
 
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் : பி.எச்.பாண்டியன் பகீர்
 
 
 
 

மாற்றம் செய்த நாள்

07 பிப்
2017
12:44
 
பதிவு செய்த நாள்
பிப் 07,2017 11:23
Tamil_News_large_1706276_318_219.jpg
 

சென்னை: முன்னாள் சபாநாயகரும், அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான பி.எச். பாண்டியன் இன்று நிருபர்களை சந்தித்தார். இவர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது மரணத்தால் சசிகலா உள்பட யாரும் அழவில்லை. மேலும் சசி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதனால் மேலும் அதிமுகவை சேர்ந்த பலர் இவருடன் சேரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

126 seek to 10%, 20% … 60%

பத்திரிகையாளர்களை சந்தித்த பாண்டியன் கூறியதாவது:

 

சந்தேகம்:

 

இரண்டு நாளில் நடந்த நிகழ்வுகளை பார்க்கும் போது, பிப். 24ல் மவுனம் கலைக்கலாம் என முடிவு செய்து இருந்தாலும் தற்போது சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மயக்கமற்ற நிலையில், மூச்சுத்திணறல் உள்ள நிலையி்ல, உடலில் தண்ணீர் சத்து இல்லாமல் இருந்த நிலையில், நினைவிழைந்தவராக அப்பல்லோ மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார் என்ற செய்தி கேட்டேன். ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதம் நடந்ததாகவும், இதில் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாகவும், சில நிமிடங்கள் வரை அவரை யாரும் தூக்கிவிடவில்லை என செய்திபடித்தேன்.
தொடர்ந்து வீட்டில் அசம்பாவிதம் நடைபெற்றால், பழி வரும் என்ற பயத்தினால் தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்ட்டார் என்ற செய்தியையும் கேள்விப்பட்டேன். மெய்காப்பாளர்கள், ஜெ.,வுக்கு ஒன்றுமில்லை. மாலையில் வீடு திரும்பவார் என சொன்னார்கள். மறுநாளும் இதையே சொன்னார்கள். இதனையடுத்த என்ன நடந்தது என தெரிந்து கொள்ள அப்பல்லோ மருத்துவமனை சென்றேன்.
ஜெ., அனுமதிக்கப்பட்ட 2வது தளத்தில், அதே வரிசையில் டாக்டர்கள் அறையில் அமர்ந்தேன். என்ன நடந்தது என கேட்டு தெரிந்து கொள்ள யாரும் கிடையாது. அங்குள்ள மெய்காப்பாளர்கள் அம்மா நலமாக உள்ளார். நன்றாக உள்ளார்.சீக்கிரம் வந்துவிடுவார்கள் என என்னிடம் சொன்னார்கள். மீண்டும் மறுநாள் சென்ற போது, ஜெ., நன்றாக உள்ளார் சாப்பிட்டு கொண்டுள்ளார் என மெய்காப்பாளர்கள் தாங்களாகவே சொன்னார்கள்.

 

டாக்டர்கள் வருகை:

 

 

 

ஆனால் எந்த முன்னேற்றமும் எனக்கு தென்படவில்லை. என்ன நடக்கிறது என்பதை தீர விசாரி்தத போது , டில்லியில் எய்ம்ஸ் மருத்துவர் வரப்போகிறார், லண்டனில் இருந்து பீலே வரப்போகிறார். சிங்கப்பூரிலிருந்து பிசியோதெரபி மருத்துவர்கள் வரப்போகிறார் என தெரிவித்தனர். நான் அமர்ந்த அறைக்கு அருகே எய்ம்ஸ் மருத்தவர்கள், அதிகாரிகள் வந்து சென்றனர். அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் செல்ல போகிறோம் என கூறினர்.
யாரிடம் இருந்து உத்தரவு வருகிறது எனக்கேட்டால், பதில் இல்லை. 15 நாள் அங்கு இருந்தேன். சில அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்ஏ.,க்கள் வந்து சென்றனர். ஜெ., மறைந்த நேரத்தில் சசிகலா உள்பட யாரும் அழவில்லை.
ஜெ., மறைந்த 20 நாட்களில் பொதுசெயலர் ஆவதற்கு முயற்சி செய்கிறார். தனது துதிபாடிகள் மூலம் அவருக்குத்தான் முழு தகுதி உள்ளது என்று பேச வைத்தார். ஜெயலலிதா ஆன்மாவால் சசியின் முதல்வர் பதவியேற்பு தள்ளி போகிறது. சசிகலா பொதுசெயலர், முதல்வர் ஆக தகுதி அற்றறவர். இவ்வாறு பாண்டியன் கூறினார்.

 

யார் இந்த சபாநாயகர் ?

 

1985 ல் எம்.ஜி.ஆர்., காலத்தில் சபாநாயகராக இருந்த அவர் எனக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்று கூறி பெரும் அளவில் அரசியல் தரப்பில் பேசப்பட்டவர் பி.எச்., பாண்டியன் . எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின்னர் அவரது மனைவி ஜானகி, ஜெயலலிதா, தலைமையில் அதிமுக உடைந்த போது பி.எச்.பாண்டியன் ஜானகிக்கு முழு ஆதரவாக இருந்தார். 1989 ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஜானகி அணியில் வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ., என்ற சிறப்பு இவருக்கு உண்டு. இவர் சேரன்மாதேவி தொகுதியில் கடந்த 1999ல் திருநெல்வேலி தொகுதி எம்.பி.,யாகவும் இருந்தார். சமீப காலமாக சசி தரப்பினரால் அவர் ஓரம்கட்டப்பட்டவர். அதிமுக.,வின் அமைப்பு செயலர் பதவி சமீபத்தில் பறிக்கப்பட்டது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1706276

  • தொடங்கியவர்

செப்டம்பர் 22ல் கார்டனில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? செங்கோட்டையன் பரபர பேட்டி

செங்கோட்டையன்

செப்டம்பர் 22-ம் தேதி போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு விஷம் கொடுத்ததாக பி.ஹெச்.பாண்டியன் கூறிய குற்றச்சாட்டுக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதம் நடந்ததாக தகவல் வெளியானது என்றும், அதனால் வீட்டில் நடைபெற்ற நிகழ்வுகள் என்ன என்பது குறித்த சந்தேகம் ஏற்படுகிறது என்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் மற்றும் கொள்கைப் பரபரப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் கூறுகையில், "ஜெயலலிதாவுக்காக இன்று வக்காலத்து வாங்குகிறார் பி.ஹெச்.பாண்டியன். இவரது குடும்பத்தில் உள்ள ஐந்து பேரும் பதவியில் இருக்கிறார்கள். எந்த இயக்கத்தில் ஒரு குடும்பத்துக்கு ஐந்து பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்துக்கு ஐந்து பதவி கொடுத்த இயக்கம் அ.தி.மு.க.தான். இதற்கு நன்றி சொல்ல வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. இந்த இயக்கத்துக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்ற கும்பலோடு சேர்ந்திருக்கிறார். அ.தி.மு.க ஒற்றுமையுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாங்கள் ஒருமித்த கருத்துகளோடு இருக்கிறோம்.

1990-ம் ஆண்டு ராஜீவ்காந்தி, ஜெயலலிதாவின் இல்லத்துக்கு வந்தபோது சசிகலாவை பக்கத்தில் அழைத்து வைத்து, 'எனக்கு நட்பின் இலக்கணமாக இருப்பவர் இவர்தான்' என்று குறிப்பிட்டுக்காட்டினார் ஜெயலலிதா. 1998ல் வாஜ்பாயை சந்தித்து பேசியபோது, 'எனக்கு தாயாக இருக்கும் ஒருவர் இவர்தான்' என்று சசிகலாவை அறிமுகப்படுத்திக் காட்டினார். இதுவே நமக்கு அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. துரோகிகளுடன் சேர்ந்து அறிக்கை விட்டுக் கொண்டு இருப்பவர்களை பார்த்து நான் கேட்கிறேன். "ஜெயலலிதாவுக்கு இந்த துன்பம், இடர்பாடு யாரால் வந்தது என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை (செய்தியாளர்களை) அழைத்து தெரிவித்து இருக்கிறோம். பி.ஹெச்.பாண்டியனை நேரடியாக சந்தித்து பேசவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். துரோகிகளுடன் இணைந்து அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்த யார் முயன்றாலும் அது முடியாது. இந்த இயக்கம் எஃகு கோட்டை.  அ.தி.மு.க.வை பற்றிப் பேச பி.ஹெச்.பாண்டியனுக்கு என்ன உரிமை இருக்கிறது. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டிருந்தபோது மீட்டெடுக்க உதவாதவர் பி.ஹெச்.பாண்டியன். 1996ல் ஜெயலலிதா மீது வழக்கு தொடர காரணமாக இருந்தவர் பி.ஹெச்.பாண்டியன். அ.தி.மு.க.வுக்காக பி.ஹெச்.பாண்டியன் துரும்பைக்கூட கிள்ளிப்போட்டதில்லை. பதவியைவிட கட்சியே பெரிது என்று எண்ணுபவர்கள்தான் உண்மையானவர்கள். சசிகலா மீது பி.ஹெச்.பாண்டியன் வீண்பழி சுமத்துகிறார். சசிகலா முதல்வராக பதவியேற்பது உறுதி.

பி.ஹெச்.பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன்

செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதாவுக்கு விஷம் கொடுத்ததாக பி.ஹெச்.பாண்டியன் கூறுகிறார். அன்று நான் போயஸ் கார்டனில்தான் இருந்தேன். தேவையில்லாமல் இப்படிப்பட்ட கருத்தைக் கூறக்கூடாது. பதவி இருந்தால்தான் அ.தி.மு.க.வில் இருப்பேன் என்று பி.ஹெச்.பாண்டியன் சொல்லியிருக்கிறார். விஷம் கொடுத்ததாக சொல்கிறார்கள். இதை யார் சொல்லணும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள்தான் சொல்லணும். அவர்கள் சொல்லவில்லையே. நாம் எதுவேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகலாம். ஒருவர் மீது பழிசுமத்துவது எளிது.

பொதுச் செயலாளரை நியமிக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்கிறார். எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து தி.மு.க பொதுக்குழுதான் நீக்கியது. இதனால் எம்.ஜி.ஆர் வேதனைப்பட்டார். இதுபோன்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்றுதான் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது, அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சியில் சட்டம் கொண்டு வந்தார். அ.தி.மு.க.வில் மட்டும்தான் இந்த தேர்வு முறை இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த இயக்கத்தை நடத்திச் செல்வதற்கு ஒரு பொதுச் செயலாளர் தேவை. எல்லா உறுப்பினர்களையும் ஒன்று சேர்த்து இதற்காக தேர்தல் நடத்த கால அவகாசம் இல்லை. இந்த சூழ்நிலையில் சசிகலாவை பொதுச் செயலாளராக்க பொதுக்குழு பரிந்துரை செய்கிறது. இதில் எந்த தவறும் இல்லை. பொதுக்குழு பரிந்துரை செய்யக்கூடாது என்று கழக சட்டத்திட்ட விதிகளில் இல்லை. அதே நேரத்தில் பொதுக்குழு உறுப்பினர்களின் உரிமை பறிக்கப்படவில்லை. மீண்டும் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வரும்போது இதனை அவர்கள் செய்யலாம். தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டாலும் கூட பொதுச் செயலாளர் பொறுப்பு போட இதில் இடமிருக்கிறது. பொதுக்குழு பரிந்துரை செய்யக்கூடாது என்று கழக சட்டத்தில் எங்கே இருக்கிறது. அது கிடையாது. அதன் அடிப்படையில்தான் சசிகலாவை பொதுச் செயலாளராக பொதுக்குழு நியமனம் செய்துள்ளது" என்று கூறினர். 

http://www.vikatan.com/news/tamilnadu/80046-k-a-sengottaiyan-speaks-about-what-happened-to-jayalalithaa-on-september-22.art

  • தொடங்கியவர்

'ஜெயலலிதாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா...?' பி.எச். பாண்டியன் VS பண்ருட்டி ராமச்சந்திரன்!

ஜெயலலிதா

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இப்போது முதல்வராக பதவியேற்க தமிழக கவர்னரின் வருகைக்காக காத்திருக்கிறார் சசிகலா. ஆனால், கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வானதே செல்லாது, அப்புறம் எப்படி அவர் முதல்வராக முடியும் என்று கேள்வி எழுப்பி, சட்டப் போராட்டத்திற்கு தயராகி வருகிறார் அ.தி.மு,க முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகருமான பி.ஹெச்.பாண்டியன். அவருடைய மகனும், முன்னாள் எம்.பி-யுமான மனோஜ் பாண்டியனும் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். 

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நாள்தோறும் அப்போலோவிற்கு விசிட் செய்து வந்தவர் பி.ஹெச். பாண்டியன். ஜெயலலிதா மரணம் அடைந்து, இறுதிச்சடங்கு நடைபெற்றபோது பி.ஹெச். பாண்டியன் அங்கு இருந்தார். ஆனால், அதன் பிறகு தொடர்ந்து அமைதிகாத்து வந்தார். குறிப்பாக, அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யபட்டதும் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், முக்கியப் பிரமுகர்களும் சசிகலாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போதிலும் இவர் அமைதியாகவே இருந்து வந்தார். சசிகலாவிற்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போர்க்கொடி உயர்த்தி வருவதன் பின்னணியில் பி.ஹெச்.பாண்டியன் இருந்து வருவதாகக் கூறப்பட்டது.

ஆனால், கடந்த இரண்டு மாதமாக எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் ஒதுங்கி இருந்தவர் திடீரென இன்றுகாலை சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை  சந்தித்தார் பி.ஹெச்.பாண்டியன். அவருடன் மகன் மனோஜ் பாண்டியனும் இருந்தார். முதலில் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஹெச். பாண்டியன், “அ.தி.மு.க என்ற இயக்கம் ஆரம்பித்து, அதன் சட்ட திட்டங்களை வகுக்க அமைக்கபட்ட குழுவில் நானும் இருந்தேன். அதில் பொதுச்செயலாளர் தேர்வு குறித்து நாங்கள் ஆலோசனை செய்து ஒட்டுமொத்த அ.தி.மு.க தொண்டர்களும்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்றும், இந்தச் சட்டத்தை மாற்றவோ, நீக்கவோ முடியாத வகையில்தான் சட்ட விதிகளை இயற்றினோம். 

பி.எச். பாண்டியன்

ஆனால், இப்போது சசிகலா அ.தி.மு.க-வின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வாகியிருப்பது தவறு. சட்டம் தெரியாமல் அவர்கள் உள்ளார்கள். அப்போலோவில் டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தபோது, சசிகலா ஒருசொட்டு கண்ணீர்கூட விடவில்லை. ஜேம்ஸ்பாண்ட் கோட்டை போட்டுக்கொண்டு அங்கும், இங்கும் நடந்து கொண்டுதான் இருந்தார். ஜெயலலிதா வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டும்” என்றார். 

மனோஜ் பாண்டியன் பேசும்போது, "2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் போயஸ்கார்டனில் ஜெயலலிதா என்னிடம் அவரைக் கொல்ல ஒரு கும்பல் பெங்களூருவில் சதி செய்கிறது. அவர்களை நான் கட்சியை விட்டே நீக்கப் போகிறேன்" என்றார். அதன் பிறகுதான் சசிகலா உட்பட அவருடைய குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள். அதன் பிறகு சில மாதங்களில் மீண்டும் சசிகலா கார்டனுக்குள் வந்தார். அதன் பிறகு என்னிடமும், மறைந்த பத்திரிகையாளர் சோ-விடமும் ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்தபோது 'எனக்குப் பயமாக இருக்கிறது. எனக்கு பாய்சன் வைத்துக் கொன்று விடுவார்களோ என்ற பயம் உள்ளது' என்று தெரிவித்தார்” என்றார் அதிரடியாக.

பி.ஹெச். பாண்டியனின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அ.தி.மு.க நிர்வாகிகள் உடனடியாக செய்தியாளர் சந்திப்பை கூட்டி எதிர்வினை செய்து விட்டார்கள். அ.தி.மு.க தலைமைக்கழகத்திற்கு பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டார்கள், அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமசந்திரன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்று பி.ஹெச்.பாண்டியனின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்தார்கள். 

பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், "பொதுக்குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவைத் தேர்வு செய்துள்ளார்கள். இனி, அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் அவர் தேர்வு செய்யப்படுவார். இப்போது தேர்வு செய்யப்பட்டிருப்பது இடைக்கால ஏற்பாடுதான். இப்படி செய்யக்கூடாது என்று கட்சியின் சட்ட திட்ட விதிகளில் சொல்லப்படவில்லை. பொதுச் செயலாளர் பதவிக்கு முறையான தேர்தல் நடக்கும்வரை சசிகலா நியமனம் செல்லும். எம்.ஜி.ஆருடன்  இருந்தவன் நான். கட்சியின் சட்ட திட்ட விதிகள் பற்றி பி. ஹெச். பாண்டியனை விட எனக்கு நன்றாகத் தெரியும். துரோகிகளுடன் சேர்ந்து கொண்டு அபாண்டமாக பழி சுமத்துகிறார். கட்சி, ஆட்சி நிர்வாகம் ஆகிய இரண்டும் ஒருவரிடமே இருக்க வேண்டும். அதுதான் நல்லது. யாரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பது கட்சியின் நிர்வாகிகளாகிய எங்கள் உரிமை. எங்களுக்குள் யாரை மாற்றிக் கொள்கிறோம் என்பது எங்கள் உரிமை. அதன் மூலம் மக்களுக்கு நல்லது நடக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். 

தமிழகத்தில் அரசியல் ஆதாயம் தேட மத்திய அரசு, முயற்சி செய்யவில்லை. பி.ஜே.பி மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.  எந்தக் குழப்பத்தையும் மத்திய அரசு ஏற்படுத்தவில்லை. சசிகலாவுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக நாங்கள் கருதவில்லை. அ.தி.மு.க ஒற்றுமையுடன் இருக்கிறது" என்றார்.

பண்ருட்டி ராமச்சந்திரன்

செங்கோட்டையன் கூறுகையில், “எம்.ஜி.ஆர் இறந்தபோதே கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியவர் பி.ஹெச்.பாண்டியன். அம்மா மீது வழக்குத் தொடர இவர்தான் காரணமாக இருந்தார். கட்சியினால் இவரது குடும்பம் அனுபவித்தது ஏராளம். ஆனால், கட்சிக்காக இவர் ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போட்டதில்லை. துரோகிகளுடன் சேர்ந்து கொண்டு கைக்கூலி வேலையை பார்க்கிறார். 'என் அம்மாவின் மறைவுக்குப் பின், எனக்கு அம்மாவாக இருப்பவர் சசிகலாதான்' என்று புரட்சித்தலைவி அம்மாவே சொல்லியிருக்கிறார். 'விஷம் கொடுத்தார்' என்று புழுகுகிறார்கள். சின்னம்மா குடும்பத்தினர் அதிகார மையமாக இருக்கிறார்கள் என்று குறைசொல்லி வரும் கூட்டத்திற்கு நான் பதில் சொல்லமுடியாது. சசிகலாவின் திறமையை நாங்கள் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். அ.தி.மு.க-வில் பிளவை ஏற்படுத்தலாம் என்று அவர் நினைப்பது ஒரு போதும் நடக்காது" என்றார். 

இந்த பேட்டிமுடிந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி அளித்தார். ''ஆரம்பத்தில் இருந்தே அத்தைக்கு அளித்த சிகிச்சை விவரங்களை நான் கேட்டு வருகிறேன். இதுவரை யாரும் சொல்லவில்லை. அத்தை ஜெயலலிதா மரணம் அடைந்து, 2 மாதம் கழித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதிலும் ஏராளமான குழப்பங்கள். மருத்துவர்கள் அளித்த விளக்கம் மேலும் மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. முதல்வராக சசிகலா தேர்வானதை ஏற்க முடியாது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி முக்கிய முடிவை அறிவிப்பேன். அத்தையின் லட்சியத்தை வென்றெடுப்பேன். தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். ஒருவருடன் 33 வருடங்கள் இருந்தது மட்டுமே முதல்வர் ஆவதற்கான தகுதி ஆகி விடாது" என்று தீபா தெரிவித்தார். 

http://www.vikatan.com/news/tamilnadu/80054-was-jayalalithaa-poisoned-p-hpandian-vs-panruti-ramachandran.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.