Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பன்னீர்செல்வத்தையும் புறக்கணித்தார் மோடி! - சசிகலா பதவியேற்பு 'பரிதவிப்பு' பின்னணி #VikatanExclusive

Featured Replies

பன்னீர்செல்வத்தையும் புறக்கணித்தார் மோடி!  - சசிகலா பதவியேற்பு 'பரிதவிப்பு' பின்னணி  #VikatanExclusive

vk.sasikala

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் சசிகலாவுக்காக காத்திருக்கிறது. ஊட்டி நிகழ்ச்சியை தள்ளிப் போட்ட ஆளுநர் வித்யாசாகர் ராவ், 'பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்' என அ.தி.மு.க நிர்வாகிகள் உறுதியாக நம்பினர். அவர்கள் நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. ' சொத்துக்குவிப்பு வழக்கைக் காரணம் காட்டி பதவியேற்பை ஒத்திவைத்துவிட்டனர். இதனால் கடும் மனஉளைச்சலில் இருக்கிறார் சசிகலா' என்கின்றனர் கார்டன் அபிமானிகள். 

அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் கடந்த 5-ம் தேதி நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சட்டசபைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. ' தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறேன்' என ஆளுநர் வித்யாசாகர் ராவுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். ' பதவியேற்பு நடக்கும்வரையில் பன்னீர்செல்வமே தொடரட்டும்' என அறிவித்தார் ஆளுநர். இந்நிலையில், 'சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு' என அதிர்ச்சி கிளப்பியது உச்ச நீதிமன்றம். 'கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளவர், முதல்வர் ஆகலாமா?' என எதிர்க் கட்சித் தலைவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கினர். 'இதையே காரணம் காட்டி பதவியேற்பை ஒத்தி வைத்துவிடுவார்கள்' என அஞ்சிய சசிகலா, "7-ம் தேதி நல்ல நாள். எட்டாம் தேதி நல்ல நாள் இல்லை. ஒன்பதாம் தேதி தைப்பூசத் திருநாளில் பதவியேற்கலாம். அதற்குள் சூழல்கள் மாறிவிடும். நாளையே(7-ம் தேதி) பதவியேற்க வேண்டும். ஆளுநரிடம் சந்திப்புக்கான நேரத்தை உறுதி செய்யுங்கள்' என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். அதற்கேற்ப, சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் பதவியேற்புக்கான பணிகள் வேகம் பெறத் தொடங்கின. 'நேற்று இரவு ஆளுநரை சந்திப்பார் சசிகலா' என அ.தி.மு.க நிர்வாகிகள் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தனர். 'மும்பையில் அவசர நிகழ்ச்சி இருப்பதால், இரவு 10.30 மணியளவில் ஆளுநர் கிளம்பிப் போய்விட்டார். இந்தத் தகவலை அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டார் சசிகலா. 'நமக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை. ஜனநாயகரீதியாக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டரைப் புறக்கணிப்பது நியாயமா?' என ஆதங்கக் குரல் எழுப்பினர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

பிரதமர் மோடி"சசிகலா முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவதை காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவர்களான ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டவர்கள் எதிர்த்தனர். ' சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை அவர் எதிர்கொள்ள இருக்கிறார். ஒரு வாரத்தில் தீர்ப்பு என்று வந்துவிட்ட பிறகு, பதவியேற்பில் எதற்காக அவசரம் காட்ட வேண்டும்? அமலாக்கத்துறையின் வழக்குகளையும் அவர் எதிர்கொள்ள இருக்கிறார். வழக்கின் தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்துவிட்டால், பதவி விலக வேண்டிய சூழல் ஏற்படும். இவ்வளவு சிக்கல்களை வைத்துக் கொண்டு முதல்வராக பதவியேற்கத்தான் வேண்டுமா?' என எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டனர். இந்த விவகாரத்தில் பிரதமரின் பார்வை தமிழக அரசியல் களத்தை குறிவைத்திருக்கிறது. ' சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில், சட்டரீதியாக எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், தமிழக மக்களின் அதிருப்தியைச் சந்திக்க நேரிடும் என்றுதான் பா.ஜ.க நினைக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைக்கும் முடிவில் இருக்கிறார் பிரதமர்.

அந்தநேரத்தில் கூட்டணி குறித்துப் பேசுவதற்கு பன்னீர்செல்வம் சரியான தேர்வாக இருப்பார்' என்று நம்பித்தான், மாநில அரசின் உரிமைகளுக்கு சட்டரீதியான அங்கீகாரத்தைக் கொடுக்கும் பணியைத் துரிதப்படுத்தினார் மோடி. ஆனால், அவருடைய நம்பிக்கைக்கு மாறாக பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததை, பா.ஜ.க மேலிடம் ரசிக்கவில்லை. 'இனி பன்னீர்செல்வத்தையும் நம்ப முடியாது' என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். 'சசிகலாவை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தால், ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோபம் பா.ஜ.கவை நோக்கித் திரும்பும். இப்படியொரு அழிவு ஏற்படுவதற்கு நாம் காரணமாக இருக்க வேண்டுமா?' என மத்திய உளவுத்துறையின் அறிக்கையைக் குறிப்பிட்டு பிரதமரிடம் விவாதித்தார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. இதையடுத்து, ஆளுநரையும் மும்பைக்குச் செல்ல அறிவுறுத்தினர். 'சென்னையில் இருந்தால், பதவிப் பிரமாணம் செய்து வையுங்கள்' என அ.தி.மு.க மட்டுமல்லாமல், ஆளுநருக்கு வேண்டப்பட்ட சிறிய கட்சிகளின் தலைவர்களும் ராஜ்பவனுக்குப் படையெடுப்பார்கள் என்பதால்தான், தலைமையின் முடிவுக்கு ஏற்ப மும்பை விரைந்தார் வித்யாசாகர் ராவ்" என விளக்கினார் ஆளுநர் மாளிகை வட்டார அதிகாரி ஒருவர். 

வித்யாசாகர் ராவ்'ஜெயலலிதா இறந்தபிறகு, ஆட்சி அதிகாரத்திற்குள் குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாய்ப்பைக் கொடுத்தோம். இப்போது சசிகலாவை முன்னிறுத்துகிறீர்கள். நாளை அவருக்கு எதிராக தீர்ப்பு வந்துவிட்டால், முதல்வராக இன்னொருவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வையுங்கள் எனத் தேடி வருவீர்கள். நிலையான ஆட்சி என்பதற்கு இதுதான் அடையாளமா? மாறி மாறி முதல்வர் நாற்காலியை இடம் மாற்றிக் கொண்டிருந்தால், நிலையான ஆட்சியை நோக்கி எப்படி நடைபோட முடியும்? இப்படியொரு குழப்பச் சூழலில் சட்டசபையில் இரண்டாவது பெரிய கட்சியான தி.மு.கவுக்கு வாய்ப்பளிப்பதில் என்ன தவறு?' என ஆளுநர் மாளிகை கேள்வி எழுப்பியதாகவும் அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். 

தமிழக பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினோம். " ஒரு கட்சியில் எந்த ஈடுபாடும் காட்டாமல், கட்சிப் பணி எதையுமே செய்யாமல், மக்கள் போராட்டங்களை முன்னெடுக்காமல் முதல்வர் பதவியை ஒருவர் எட்டிப் பிடிப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். 'தலைவியோடு முப்பது ஆண்டுகள் இருந்தேன். அதனால்தான் முதல்வர் பதவியைக் கொடுங்கள்' என்று சொல்வதே ஜனநாயகத்திற்கு விரோதமானதுதான் என்பதை மக்களுக்குச் சுட்டிக் காட்டுகிறோம். ' கட்சியும் ஆட்சியும் ஒரே இடத்தில் இருந்தால்தான், அதிகாரத்தை சிறப்பாகக் கொண்டு போக முடியும்' என அ.தி.மு.க நிர்வாகிகள் பேசுகின்றனர். இது முற்றிலும் தவறானது. அப்படியானால், பன்னீர்செல்வத்திடம் என்ன குறையைக் கண்டுவிட்டார் சசிகலா? எங்கள் கட்சியில் ஆட்சி அதிகாரம் பிரதமரிடமும் கட்சி அதிகாரம் அமித் ஷாவிடமும் இருக்கிறது. இரண்டும் நல்லபடியாகத்தானே சென்று கொண்டிருக்கிறது. 'முதலமைச்சராக பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்படவில்லை. மக்கள் அதிருப்தியை சம்பாதித்துவிட்டார்' என்றால், இவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது? அவசரகதியில் பதவியேற்க வேண்டிய சூழல் எதுவுமே இப்போது இல்லை. இரண்டு மாநிலங்களின் ஆளுநராக வித்யாசாகர் ராவ் இருக்கிறார். அவருக்கு நிர்வாகரீதியாக ஏராளமான பணிகள் இருக்கின்றன. பதவியேற்பு தள்ளிப் போவற்கு அவரைக் காரணம் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை" என்றார் நிதானமாக. 

கார்டன் ஜோதிடர்கள் கணித்துக் கொடுத்த 'நல்லநாள்' தள்ளிப் போகும் கவலையில் இருக்கிறார் சசிகலா. ' ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு மாறாக பதவியில் அமர நினைக்கிறார் சசிகலா' என மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறது தி.மு.க. ' இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டுமல்ல, எப்போதுமே சசிகலா பதவியில் அமரக் கூடாது' என பா.ஜ.க நிர்வாகிகள் வேலை பார்த்து வருகின்றனர். ' கழுத்து எலும்பு தேய்மானம்'  எனக் கூறிவிட்டு, அப்போலோ வி.ஐ.பிக்கள் வார்டில் படுத்துக் கிடக்கிறார் ம.நடராசன். ' அரசியல் சூழல்கள் அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை' என்றே அச்சப்படுகின்றனர் அ.தி.மு.க தொண்டர்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/80004-why-pm-modi-avoids-sasikala-natarajan-.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.