Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓமந்தூரார் முதல் ஓ.பி.எஸ் வரை: தமிழக முதல்வர்களின் இயல்பும் பின்னணியும்

Featured Replies

ஓமந்தூரார் முதல் ஓ.பி.எஸ் வரை: தமிழக முதல்வர்களின் இயல்பும் பின்னணியும்

காமராஜர்,ஓமந்தூரார்

ளிமையே உருவான காமராஜர்... கேட்போரை வசீகரித்துக் கட்டிப்போடும் பேச்சாற்றல் திறன் கொண்ட அண்ணா... திரைக்கதை வசனத்தில் அசத்தும் கருணாநிதி... பன்மொழி வித்தகர் ஜெயலலிதா என பல்வேறு விதமான, எண்ணற்ற திறமைகளை தன்னகத்தே கொண்ட முதல்வர்களை தமிழகம் இதுவரை கண்டுள்ளது. ஒவ்வொரு முதல்வருக்கும் ஒவ்வொரு பின்னணி, தனித்தனி இயல்பு உண்டு. பெரும்பாலும் இவர்கள் அனைவருமே பல்வேறு சந்தர்ப்பங்களில் அடிமட்டத்தில் இருந்து போராடி, படிப்படியாக முன்னேறி முதல்வர் பதவி வரை உயர்ந்தவர்கள். ஒரே நாளில் உச்சாணிக்கு வந்தவர்கள் அல்லர்... இந்தியா சுதந்திரமடைந்தது முதல் தற்போது முதல்வர் பதவியில் இருந்து விலகியிருக்கும் ஒ.பன்னீர் செல்வம் வரையிலான தமிழக முதல்வர்களின் பின்னணியும், இயல்புகளும் இங்கே...

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

சுதந்திர இந்தியாவில் தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் முதலாவது முதல்வராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். இவர், 1947-ம் ஆண்டு மார்ச் 23 முதல் 1949-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி வரை சென்னை மாகாண முதல்வராக பதவி வகித்தார். முதல்வராக இருந்தபோதிலும், திண்டிவனம் அருகில் இருந்த தனது பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்தே வாழ்ந்து வந்தார்.

பி.எஸ். குமாரசாமி ராஜா

1949 முதல் 1952-ம் ஆண்டு வரை தமிழ்நாடு (சென்னை மாகாணம்) முதலமைச்சராக இருந்தவர் குமாரசாமி ராஜா. இவர், தனது பள்ளிப்படிப்பை முடித்த உடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 'தென்னகத்து காந்தி' என மக்களால் பாராட்டப்பட்ட அளவுக்கு எளிமையாக வாழ்ந்தவர். 

ராஜாஜி 

வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், தமிழக முதல்வர் என பல முகங்களைக் கொண்டவர் ராஜாஜி. ஆரம்பகாலத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர், 1917-ல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும், பின்னர் நகர மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 முதல் 1954-ம் ஆண்டுவரை தமிழக முதல்வராக இருந்தார். 

காமராஜர்

வறுமை காரணமாக பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத நிலையில், படிப்பை நிறுத்தி விட்டு துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார் காமராஜர். வேலையில் இருக்கும் போது காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு, தனது 16-வது வயதில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். படிப்படியாக உயர்ந்து 1954 முதல் 1963-ம் ஆண்டு வரை தமிழகத்தின் முதல்வராக சிறப்பான பணியாற்றினார். இவர் ஆட்சியில்தான் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கல்விக் கட்டணமும் ரத்து செய்யப்பட்டது.

பக்தவச்சலம்

சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற பக்தவச்சலம், தொழிலாளர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்காக நீதிமன்றங்களில் வழக்காடியவர். 1963 முதல் 1967-ம் ஆண்டுவரை தமிழக முதல்வராக இருந்தவர். இவரது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர்தான், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகள்தான் தமிழகத்தில் மாறி, மாறி ஆட்சியில் இருந்து வருகின்றன.

அண்ணாதுரை

திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முதல் முதல்வரான அண்ணாதுரை 1967 முதல் 1969-ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்தார். நாடகம், எழுத்து, பேச்சு என அண்ணா பன்முகத் திறமை கொண்டவர். பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, திராவிடர் கழகத்தில் இணைத்து, பகுத்தறிவுக் கருத்துகளை தமிழகம் முழுக்க கொண்டு சென்றார்.

முதல்வர்கள் கருணாநிதி எம்.ஜி.ஆர்

கருணாநிதி

தமிழ்த் திரையுலகில் கதை, வசனம், பாடல் ஆகிய பணிகளில் ஈடுபாடு கொண்ட கருணாநிதி, ஆரம்பகாலங்களில் திரைத்துறையில் கொடிகட்டிப் பறந்தவர். தனது எழுத்து மற்றும் பேச்சுத் திறமையால் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். 1969-ம் ஆண்டு, அண்ணாவின் மறைவைத் தொடர்ந்து, தமிழக முதல்வராக கருணாநிதி பதவி ஏற்றார். 

எம்.ஜி.ஆர்

தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், பிறகு திரைத்துறையிலும் தடம் பதித்தார். 'சதிலீலாவதி' என்ற திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, கதாநாயகனாகி கொடிகட்டிப் பறந்தார். அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பின், கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அண்ணா தி.மு.க-வை தோற்றுவித்து, 1977-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தார். 1977 முதல், தான் மறையும் வரை அதாவது 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தமிழக முதல்வராக பதவி வகித்தவர் எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதா

நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களிலும், கதாநாயகியாகவும் நடித்தவர் ஜெயலலிதா. தனது அரசியல் ஆசானாக எம்.ஜி.ஆர்-ஐ ஏற்றுக் கொண்டு அவர் உதவியுடன் அரசியலில் நுழைந்தார், 1991-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று, ஜெயலலிதா முதல் முறையாக தமிழக முதல்வரானார். இடைப்பட்ட காலத்தில் வழக்குகளால் இரு முறை பதவியை இழக்க நேரிட்ட போது, ஒ.பன்னீர் செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

ஜெயலலிதா

ஓ.பன்னீர் செல்வம்

டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, 2002-ம் ஆண்டு முதல்வரானார் ஓ.பன்னீர் செல்வம். பெரியகுளம் பகுதியில் தேநீர் கடை நடத்தி வந்த ஓ.பி.எஸ் பெரிய குளம் நகராட்சித் தலைவராக இருந்தவர். டான்சி வழக்கில் இருந்து, ஜெயலலிதா விடுதலையானதும், ஓ.பி.எஸ் பதவி விலகினார். 2014-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டதும், அவர் பதவி பறி போனது. அப்போது இரண்டாவது முறையாக முதல்வரானார் ஓ.பன்னீர் செல்வம். 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்ததும், டிசம்பர் 6-ம் தேதி முதல்வராக 3-வது முறையாகப் பொறுப்பேற்றார் ஓ.பன்னீர் செல்வம். தற்போது சசிகலா முதல்வராகப் பதவியேற்க வசதியாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

இப்படி திறன்மிக்க, போராட்ட குணம் கொண்ட, வலிமையான முதல்வர்களைக் கண்ட தமிழகம்... இன்னும் சிறிய காலத்தில் புதிய முதல்வரைக் காண உள்ளது. இத்தகுதிகளும், தன்மைகளும் புதிய முதல்வருக்கு இருக்கிறதா என்பதை விரைவில் காலம் காட்டும்.

http://www.vikatan.com/news/tamilnadu/79981-omandurar-to-ops-history-behind-chief-ministers-of-tamil-nadu.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.