Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரண்பாடு! சசிகலா பதவியேற்பு தொடர்பான கவர்னர் அதிகாரத்தில்...: இரு வேறு கருத்துக்கள் நிலவுவதால் தொடரும் குழப்பம்

Featured Replies

முரண்பாடு!
சசிகலா பதவியேற்பு தொடர்பான கவர்னர் அதிகாரத்தில்...:
இரு வேறு கருத்துக்கள் நிலவுவதால் தொடரும் குழப்பம்
 
 
 

தமிழக முதல்வராக, சசிகலா பதவியேற்பது தொடர்பாக, எந்த உறுதியான தகவலும் வெளியாகாத நிலையில், பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து முடிவெடுக்க, அவகாசம் எடுத்துக் கொள்ள, கவர்னருக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், பல்வேறு தரப்பினர் முரண்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதால், குழப்பம் தொடருகிறது.

 

Tamil_News_large_170640220170207233820_318_219.jpg

அ.தி.மு.க., பொதுச் செயலராக பதவியேற்றுள்ள சசிகலாவை, கட்சியின் சட்டசபை தலைவராக ஏற்பதாக, கட்சியின், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.அதன்படி, தமிழக முதல்வராக, சசிகலா, 9ல் பதவியேற்பார் என, கூறப்பட்டது. ஆனால், தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ள, மஹாராஷ்டிர கவர்னர் வித்யாசாகர் ராவ், எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில், முதல்வருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து முடிவெடுப்பதில், அவகாசம் எடுத்துக் கொள்ள, கவர்னருக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவசியம் இல்லைஇதில், முரண்பட்ட பல்வேறு கருத்துக்கள் நிலவுவதால், பல்வேறு சந்தேகங்களும் எழுந்துள்ளன. ஒரே கட்சியைச் சேர்ந்த இருவர், இரு விதமான கருத்துக்களை கூறுகின்றனர்.

''கவர்னருக்கு அதிகாரம் உள்ளது,'' என, காங்கிரசின் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறுகிறார். அதே நேரத்தில், ''இதில் கால தாமதம் செய்ய வேண்டிய அவசியமில்லை,'' என, அதே கட்சியின் மூத்த தலைவரான, சந்தீப் தீட்சித் கூறுகிறார்.

''ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அடுத்த வாரத்தில் தீர்ப்பு வர உள்ளதால், கவர்னர் காத்திருக்கிறார் என, நினைக்கிறேன். ஒருவருக்கு, முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என, மறுக்க, கவர்னருக்கு அதிகாரம் உள்ளது,'' என, சிதம்பரம் கூறியுள்ளார்.
 

மிகவும் அரிது


ஆனால், இது போன்றஅதிகாரம் மிகவும் குறைவு; அதே போல், செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளும் மிகவும் அரிது. சென்னை ஐகோர்ட்டில் நடந்த, தர்மலிங்கம் மற்றும் தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கில், 'தன் விருப்பப்படி முடிவெடுக்க, கவர்னருக்கு உரிமை உள்ளது' என, தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
அதே போல், கோவா கவர்னர் மற்றும் பிரதாப் ராவோஜிராவ் ரானே வழக்கில், 'தவறான முடிவாக இருந்தாலும், கோர்ட்டுக்கு கவர்னர் பதிலளிக்க வேண்டியதில்லை' என, தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், காங்., மூத்த தலைவரான, சந்தீப் தீட்சித், இதை ஏற்க மறுக்கிறார். ''கட்சியின், எம்.எல்.ஏ.,க்களால் சட்டசபை தலைவராக, சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அதனால், முதல்வராக அவர் பதவியேற்க, கவர்னர் உட்பட, யாரும் ஆட்சேபிக்க முடியாது,'' என, கூறியுள்ளார்.

பா.ஜ., மூத்த தலைவரான, சுப்பிர மணியன் சாமியும், இதே கருத்தை கூறுகிறார். ''இதில், கால தாமதம் செய்வது தவறு. கட்சியால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவருக்கு, உடனடியாக, பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும். நமக்கு அவரை பிடிக்கும், பிடிக்காது என, பார்க்கக் கூடாது; சட்டபடிசெயல்பட வேண்டும்,'' என்கிறார் சுப்பிரமணியன் சாமி.
 

சொத்து குவிப்பு வழக்கு


தேர்தல் நடைமுறைகளில் மாற்றங்கள் கோரி வரும், அரசு சாரா அமைப்பான, ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் நிர்வாகியான, திரிலோச்சன் சாஸ்திரியும் இதையே

 

வலியுறுத்துகிறார். ''ஜெயலலிதாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த போது, சசிகலாவுக்கு மட்டும் எப்படி மறுக்க முடியும்?'' என்கிறார் சாஸ்திரி.

''பதவிப் பிரமாணம் செய்து வைப்பதை ஒத்தி வைக்க, கால தாமதம் செய்ய கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளதால், மீண்டும் ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அவர் காத்திருக்கலாம்,'' என்கிறார், பிரபல அரசியலமைப்பு சட்ட நிபுணர், சுபாஷ் கஷ்யப்.

கவர்னரின் அதிகாரம் குறித்து, இவ்வாறு முரண்பட்ட கருத்துக்கள் வெளிவருவதால், இந்த விவகாரத்தில் முடிவு எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கவர்னர் அறிவிப்பு வெளியிட்டால் தான், இதில் குழப்பம் தீரும் என, அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
 

சட்டையா மாற்றி கொள்ள?


ஒரு மாதத்திற்கு முன்தான், பன்னீர்செல்வம் மீது நம்பிக்கை உள்ளதாக கூறினர். தற்போது, அவர் மீது நம்பிக்கை இழப்பதற்கு காரணம் என்ன; அரசியலமைப்பு சட்டத்தை அவர் மீறியுள்ளாரா அல்லது சட்ட விரோதமாக ஏதாவது செய்துள்ளாரா? அவர்களது கட்சியில், என்ன வழிமுறைகள் வைத்துள்ளனர். முதல்வர் பதவி என்ன சட்டையா, ஒவ்வொரு நாளும் மாற்றிக் கொள்வதற்கு?

-சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,

http://www.dinamalar.com/news_detail.asp?id=1706402

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.