Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பன்னீர் தியானத்துக்குப் பிறகு... சசிகலா, தி.மு.க, சட்டசபை என்னவாகும்?

Featured Replies

பன்னீர் தியானத்துக்குப் பிறகு... சசிகலா, தி.மு.க, சட்டசபை என்னவாகும்?

பன்னீர் செல்வம் பன்னீர்செல்வம்

மெரீனா கடற்கரை மற்றொரு வரலாற்று நிகழ்வுக்கு சாட்சியாக நின்று அலைகளை வரித்துக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மாணவர்களின் திரட்சியான போராட்டம் அந்தக் கடற்கரையில் பெற்ற அதே முக்கியத்துவத்தை, ஓ.பன்னீர் செல்வம் என்ற ஒற்றை மனிதனின் இறுகிய தியானமும் பெற்றுள்ளது. தியானத்துக்குப் பிறகு தன் மௌனம் கலைத்த பன்னீர் செல்வம் உச்சரித்த ஒவ்வொரு வார்த்தையிலும் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டு இருக்கிறது. அமைதியே உருவான அந்த ஒற்றை மனிதனின் நிதானமான வார்த்தைகள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும், கோடிக்கணக்கான தொண்டர்களுடைய மனச்சாட்சியின் குரல் பேரிரிசைச்சலாய் ஒலித்தது. 

“நான் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல், என்னை முதல் அமைச்சராக்கி, என் அமைச்சரவை சகாக்களை வைத்தே என்னை அவமானப்படுத்தினார்கள். என்னை மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கினார்கள்” என்று ஓ.பி.எஸ் சொன்னபோது அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமல்ல... தொலைக்காட்சிகளின் முன் உட்கார்ந்திருந்த ஒவ்வொரு மனிதனும் உறைந்து போனான். தமிழக அரசியலில் ஆயிரம் வர்தா புயல்கள் அடிக்க வைத்துள்ளது ஓ.பி.எஸ்ஸின் வார்த்தைகள். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அந்தப் புயல்கள் எந்தக் கரையில் கடக்கும்? அ.தி.மு.க என்ற பேரியக்கத்தில் என்ன  நடக்கும்? 32 ஆண்டுகள் ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியாக நீடித்த சசிகலா முதல் அமைச்சராக ஆவாரா? 20 ஆண்டுகளாக ஜெயலலிதாவுக்கு மிஸ்டர் விசுவாசமாக இருந்த பன்னீர் செல்வம் என்ன ஆவார்? கவர்னர் ஆட்சியைத் தமிழகம் சந்திக்க வேண்டிய நிலை வருமா? 

பாயிண்டு 1: என்ன செய்வார் கவர்னர்?

முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், “என்னிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை மிரட்டி வாங்கினார்கள்” என்று தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க-வுக்கு இது புதிதல்ல என்பதை தமிழகம் நன்கறியும். தமிழகத்தை அறிந்த அரசியல் தலைவர்களுக்கும் இது புரியும். அதனால் இப்போது முடிவெடுக்க வேண்டிய கவர்னர், “ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே மிரட்டப்பட்டு இருக்கிறார்(!).... அதனால், பன்னீர் செல்வத்தின் ராஜினாமா கடித்தை ஏற்றுக்கொள்ளமாட்டேன்” என்பார். ஏற்கனவே, அவர் கொண்டுவிட்டார் என்றாலும், அதை தற்போது வாபஸ் பெற்றுவிடுவார். அதனால் இன்னும் சில நாள்களுக்கு பன்னீர் செல்வம் முதலமைச்சராகவே தொடர்வார்...  அந்தச் சில நாள்கள் என்பது எத்தனை நாட்கள் என்பது அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் கையில் இருக்கிறது. அவர்கள் கூட்டம் கூடி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் வரை பன்னீர் தொடர்வார். 

சசிகலா

பாயிண்டு 2: என்ன செய்வார் சசிகலா?

அ.தி.மு.க. என்ற மிகப்பெரிய கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் சசிகலா. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை சர்வசக்தி படைத்த பதவி அதுதான். அவருடைய கைகளுக்குள்தான் அந்தக் கட்சியின் எல்லா அதிகாரமும் இருக்கிறது.(இப்போது புரிகிறதா... நடராஜன் ஏன் பொது9ச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை முதலில் கொண்டு வந்து, முதலமைச்சர் பதவியை இரண்டாவது வாய்ப்பாக வைத்தார் என்று). அதனால் விரைவில் பொதுச் செயலாளர் சசிகலா உத்தரவுப்படி, அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில், எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் கூடும். அதில் சசிகலாவுக்கு ஆதரவான எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியும், அவரை முதலமைச்சராக நியமித்து தாங்கள் ஏற்கனவே கொண்டுவந்த தீர்மானத்தை ரத்து செய்தும் புதிதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றுவார்கள். (சசிகலா உத்தரவுப்படி அந்தத் தீர்மானத்தை 118 எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் ஆதரித்தால்) அதை கவர்னருக்கு அனுப்புவார்கள். கவர்னர் உடனடியாக அந்தத் தீர்மானத்தை மத்திய சட்டத்துறைக்கும், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கும் அனுப்புவார். அங்கு க்கீளீயரன்ஸ் கிடைத்தால், பன்னீர் செல்வம் முதலமைச்சர் பதவியை இழப்பார். அங்கு க்ளீயரன்ஸ் கிடைக்கவில்லை என்றால், இழுபறியே நீடிக்கும். சசிகலாவின் முதல் அமைச்சர் கனவு தள்ளிப்போகும்.  

பாயிண்ட் 3 : சட்டசபை கூடி முடிவெடுக்கும்?

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது கவர்னரும் மத்திய அரசும் எந்த முடிவும் எடுக்காமல் இழுபறி நீடித்தால், உடனடியாக சட்டசபை கூட்டப்படும். அந்தக் கூட்டத்தில், “பன்னீர் செல்வத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அவரை சட்டமன்ற ஆளும்கட்சித் தலைவராக நியமித்ததை நாங்கள் வாபஸ் பெறுகிறோம்” என்று தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவார்கள். இதில் கவர்னர் எந்த இழுபறியும் செய்ய முடியாது. அதோடு, தங்களுடைய சட்டமன்ற ஆளும்கட்சித் தலைவராக சசிகலாவைத் தேர்ந்தெடுக்கிறோம் என்றும் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றி(அதை 118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரித்தால்), கவர்னர் சசிகலாவை பதவி ஏற்க அழைத்துத்தான் தீரவேண்டும். அதில் சசிகலாவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அப்படிக் கொண்டு வரும் தீர்மானத்தை அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் 118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரிக்காமல், 20 எம்.எல்.ஏ-க்கள் மாற்றி வாக்களித்தால், இருவருக்கும் மெஜாரிட்டி இல்லாமல் போகும். இந்த இடத்தில், தி.மு.க வின் முடிவு முக்கியமானது. அவர்கள் ஒருவேளை பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தால் தமிழக வரலாற்று அதிசயமாக பன்னீர் செல்வமே தொடர்வார். ஏனென்றால், தி.மு.க-விடம்  தற்போது 98 எம்.எல்.ஏ-க்கள்(தி.மு.க -89; காங்கிரஸ் - 8; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1) உள்ளனர். அவர்களும், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் சிலரும் சேர்ந்து பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து, அந்த எண்ணிக்கை 118-ஐத் தொட்டுவிட்டால், அப்போதும் பன்னீர் செல்வமே தொடர்வார். ஆனால், இதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு. 

ஓ.பி.எஸ்

பாயிண்டு 4 : ஆட்சி கலைக்கப்படுமா? 

சட்டசபையில் கொண்டுவரப்படும் நம்பிக்கை தீர்மானத்தில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் மட்டுமே அந்த ஆட்சியை கவர்னர் கலைப்பார். ஒரு வேளை சசிகலாவுக்கு அந்த ஆதரவு கிடைத்தால், அவரைத்தான் ஆட்சி அமைக்க அழைப்பார். மெஜாரிட்டி இருக்கும் ஒரு அரசாங்கத்தை வெற்றுக் காரணங்கள் காட்டி கலைக்கக்கூடாது என்று பொம்மை வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமீபத்தில் உச்ச நீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை உறுதி செய்துள்ளது. எனவே, ஆட்சியைக் கலைக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு. 

பாயிண்டு 5: தி.மு.க ஆட்சி அமைக்க ஆதரவு உள்ளதா? 

ஒருவேளை அதிருப்தி எம்.எல்.ஏ-க்களில் 20 பேர்  சசிகலாவையும் ஆதாரிக்காமல், பன்னீர் செல்வத்தையும் ஆதாரிக்காமல், தி.மு.க-வுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தால் போதுமானது. ஏற்கனவே 98 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் தி.மு.க-வுக்கு வெறும் 20 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு போதுமானது. அந்த எண்ணிக்கை கிடைத்துவிட்டால், தி.மு.க ஆட்சி அமைக்கும். தி.மு.க செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், முதல்முறையாக முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்கலாம். இந்த 5 பாயிண்டுகளில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். 

சசிகலா

பாயிண்டு 6: எங்கேயாவது ஒளிந்திருக்கலாம்!

இந்த 5 பாயிண்டுகளைத் தாண்டியும் கற்பனைக்கே எட்டாத 6-வது பாயிண்டும் எங்கேயாவது ஒளிந்திருக்கலாம். தமிழக அரசியலுக்குள் இன்று இரவு 9.30 மணிவரை ஓ.பன்னீர் செல்வம் ஒளிந்திருந்ததைப் போல... அப்படி ஒளிந்திருக்கும் 6-வது பாயிண்டு ஏதேனும் ஒரு வழியில் எந்த நேரத்திலும் வெடித்துக் கிளம்பி வெளிச்சத்துக்கு வரலாம்... இன்று இரவு 9.30 மணிக்கு மேல், ஓ.பி.எஸ். வெடித்துக் கிளம்பி வெளிச்சத்துக்கு வந்ததுபோல... எது எப்படியோ... இப்போதைக்கு இந்தச் சூழலை எப்படி வரையறுக்கலாம் என்றால், சசிகலாவின் முதலமைச்சர் கனவு இன்னும் கொஞ்சம் தள்ளிப்போய் இருக்கிறது. ஆனால், முற்றாக கலைந்துவிடவில்லை.

http://www.vikatan.com/news/coverstory/80095-what-will-happen-to-sasikala-and-dmk-after-opaneerselvam-move.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.