Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“பேரிருளின் மீது ஓ.பன்னீர்செல்வம் பாய்ச்சிய சிறு வெளிச்சம்!”

Featured Replies

“பேரிருளின் மீது ஓ.பன்னீர்செல்வம் பாய்ச்சிய சிறு வெளிச்சம்!”

ஓ. பன்னீர்செல்வம்

நிச்சயம் இந்த இரவின் தொடக்கம் இப்படியாக இருக்குமென்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.  கடந்த ஆண்டு செப்டம்பர் 22 -ம் தேதியிலிருந்தே, தமிழக அரசியல் களம் தெளிவாக இல்லை தான். நாளொரு நாடகங்களும் பொழுதொரு களேபரங்களும் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன. எப்போதும் எல்லாவாற்றையும் தள்ளி நின்று பார்த்துப் பழகிய சாமான்ய தமிழன்... இந்த முறை கொஞ்சம் விரக்தியுடன் தூரப் போனான். மனதுக்குள் புழுங்கி தவித்தான். ஏதாவது ஒன்று நிகழாத... எங்கிருந்தாவது ஒருவன் வந்து நம்மை இந்த சாக்கடையிலிருந்து மீட்க மாட்டானா என்று தனக்குள்ளேயே வெம்பினான்.  அதன் வெளிப்பாடுதான் மெரினாவில் கூடிய கூட்டம். ஆம், மெரினாவில் கூடிய கூட்டம் நிச்சயம் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் கூடிய கூட்டம் இல்லை... தமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடம் அல்லது அந்த வெற்றிடத்தை நிரப்ப துடிக்கும், மக்கள் பணியை என்றுமே செய்யாத தன்நலனை மட்டுமே முதன்மையாக நினைக்கும் அறமற்ற மனிதர்களுக்கு எதிரான கூட்டம். ஆனால், அந்த போராட்டங்களும் அதிகாரத்தின் சுழ்ச்சியால் வரலாற்றுப் பக்கங்களிக் செங்குருதியைச் சிந்திச் சென்றது.  மீண்டும் மீண்டும் தோல்வி... மீண்டும் மீண்டும் விரக்தியென்று துவண்டு போன சூழலில் தான்... இந்த இரவின் மீது கொஞ்சம் நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சிருக்கிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். 

அந்த வெளிச்சம் எத்தகையது என்று பார்ப்பதற்கு முன்... எந்த தைரியம் மன்னார்குடியை இப்படி செயல்பட வைத்ததென்று பார்ப்போம்.

“எது சசிகலாவை தொடர்ந்து முன்னேற வைக்கிறது....?” 

பெரும்பான்மை தமிழ்ச் சமூகம் எக்காலத்திலும் சசிகலாவையும், அவரது சொந்தங்களையும் ஏற்றுக் கொண்டதே இல்லை. தமிழ் சமூகத்தை விடுங்கள்... ஜெயலலிதாவே சசிகலாவை தன் தோழியாக ஏற்றுக் கொண்டாரே தவிர, ஒரு அரசியல் தலைவியாகவெல்லாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இதற்கான சான்றுகளை நீங்கள் எங்கும் தேட வேண்டாம்.  அதிமுக பொதுச் செயலாளாராக பொறுப்பேற்கும் போது சசிகலா ஆற்றிய உரையை கூர்ந்து கவனித்தாலே போதும், ஜெயலலிதா சசிகலாவிடம் என்ன விவாதித்திருக்கிறார் என்பது தெளிவாக தெரியும். புரியும். இத்தகைய சுழலில் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டதால் நான் அதிமுக பொதுச் செயலாளாராக பொறுப்பேற்கிறேன் என்று சசிகலா சொன்னதை யாரும் நம்பவில்லையென்பது மன்னார்குடியின் மனசாட்சிக்கு நன்கு தெரியும். 

சசிகலா

பின் எது சசிகலாவை தொடர்ந்து முன்னேற வைத்தது....? எது சசிகலாவை முதல்வர் நாற்காலியை நோக்கி நகர்த்தியது...? எங்கு காணினும் மக்கள் எதிர்ப்பு...  சமூக ஊடகங்களில்  மீம்கள்...  போயஸ் வீதியில் கைகளில் சங்குடன் ராப் இசை கலைஞர்கள். ஆனால், எதற்கும் அசைந்துக் கொடுக்காமல் தன் இஷ்டத்திற்கு காய்களை நகர்த்த எது சசிகலாவை தூண்டியது...?  

நிச்சயம் அழுக்கான கரங்களின் அரண்தான் சசிகலாவை காத்தும், தாங்கியும் நின்றது. ஆம், இங்கு எல்லோரும் தம் அதிகாரங்களை பாழ்படுத்தி, பயன்படுத்தி சம்பாரித்து வைத்திருக்கிறார்கள். அதில் சிறு சிராய்ப்பும் வர யாரும் விரும்பமாட்டார்கள். இந்த அழுக்குகரங்களை வைத்தே தன்னை பலப்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கைதான், சசிகலாவை, அவரது குடும்பத்தை தங்கள் இஷ்டத்திற்கு ஆட வைத்தது.  அரசியலில்  காய்களை நகர்த்த வைத்தது.  மக்களின் விருப்பம் குறித்து அவர்கள் கிஞ்சித்தும் கவலைக் கொள்ளவில்லை. மக்களை வெறும் மாக்களாக மட்டுமே கருதினர்.  மக்களுக்கும் அரசுக்கும், ஆட்சிக்கும் சம்பந்தமில்லை... இதுவெல்லாம் மேலிட விவகாரம், இதிலெல்லாம் அவர்களை இழுக்க வேண்டாம் என்பது போலவே இருந்தது அவர்களது நடவடிக்கை. 

பன்னீர்செல்வம்

“பேரிரவின் மீது படர்ந்த சிறு ஒளி”

இன்று அந்த அரணில் ஒரு ஓட்டை விழுந்திருக்கிறது. தாங்கி நின்ற ஒரு கரம் வெடுக்கென்று எடுத்திருக்கிறது. உண்மையின் ஒரு பக்கத்தைமட்டும் சொல்ல தொடங்கி இருக்கிறது.  நிச்சயம் இது இருள் சூழ்ந்த ஒரு பேரிரவின் மீதான் சிறு ஒளிதான்.   அங்கு அனைத்து கரங்களும் அழுக்கு கரங்கள்தான். நிச்சயம் இதில் மாற்று கருத்து ஏதுமில்லை. தங்கள் நலன் பாதிக்காத வரை அங்கு யாருமே பேசியதில்லைதான். ஒப்புக்கொள்கிறேன். இன்று ஓ. பன்னீர்செல்வம் பேசியது பின்னால் பல சதிகள் இருக்கிறதுதான். ஆம், சந்தேகிக்கலாம். 

ஆனால், இதையெல்லாம் கடந்து முதன்முதலாக மக்கள் எண்ணத்திற்கு மாற்றாக நடந்துக் கொள்ள நினைத்தவர்களுக்கு எதிராக ஒரு வலுவான குரல் ஒலித்திருக்கிறது.  

“இதையெல்லாம் ஒப்புக்கொள்ள முடியாது... வற்புறுத்தினார்கள் என்றால் அதை இப்போதா சொல்வது. அவரிடம்தானே அதிகாரம் இருந்தது. அவர்தானே முதல்வர். இதைகூட அவருக்கு கையாள தெரியவில்லையென்றால் எப்படி அவர் ஆட்சியை நடத்துவார்...?” நியாயமான கேள்விதான்... கோபம்தான்.  ஆனால், இப்போது இந்த கேள்விகளைவிட முதன்மையாக இருப்பது அவர் சொல்லி இருக்கும் பிற விஷயங்கள். 

அவர் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார். அது எல்லாவற்றுக்கும் மையமாக இருப்பது மன்னார்குடி குடும்பத்தின் அதிகாரம்.  ஆட்சியில், அரசில் எந்த பங்கும் வகிக்காத ஒரு குடும்பம் அனைத்திலும் அதிகாரம் செலுத்துகிறது என்கிறார்.  இது எதுவும் சாமன்யனுக்கு தெரியாதது இல்லைதான். ஆனால், முதல்வாராக இருப்பவரே இந்த குற்றச்சாட்டை கூறுகிறார்.  இப்போது நாம் சரமாரியாக கேள்வி எழுப்ப வேண்டியது... பலவீனப்படுத்த வேண்டியது யாரை...?

http://www.vikatan.com/news/coverstory/80096-o-paneerselvam-a-ray-of-hope.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.