Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா மரண விசாரணைக் கமிஷனில் இந்தக் கேள்விகள் இடம்பெறுமா...? #OPSvsSasikala

Featured Replies

ஜெயலலிதா மரண விசாரணைக் கமிஷனில் இந்தக் கேள்விகள் இடம்பெறுமா...? #OPSvsSasikala

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் பன்னீர் செல்வம்

முதல்வர் பன்னீர்செல்வம், மெரினாவில்... நேற்று (7-2-17) ஜெயலலிதாவின் நினைவிடத்தின் முன்பு, 40 நிமிடங்கள் தியானம் மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து, தனது மன உந்துதலால்தான் சில உண்மைகளைச் சொல்ல வெளிவந்ததாகக் கூறினார். சசிகலா கட்டாயப்படுத்தியதன் பேரிலேயேதான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறிய அவர், சசிகலா முதல்வராகப் பதவியேற்பதில் தனக்கு இருந்த அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து சசிகலாவால் நீக்கப்பட்டார் ஓ.பி.எஸ். இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை மீண்டும் சந்தித்த பன்னீர்செல்வம், ''ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த அந்த 75 நாட்களும்... அவரை, பார்க்க தான் அனுமதிக்கப்படவில்லை என்றும், அவரது மரணம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்'' என்றும் கூறியுள்ளார். 

விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்கிற நிலையில், அவர்கள் முன்னிறுத்த வேண்டிய கேள்விகள்: 

ரிச்சர்ட் பியெல்

1. சர்க்கரை நோய் தாக்கம் இருந்ததாகக் கூறப்பட்ட ஜெயலலிதாவுக்குத் திடீரென நுரையீரல் மற்றும் இருதயக் கோளாறு ஏற்படக் காரணம் என்ன?

2. டாக்டர் ரிச்சர்ட் பியெல், செப்ஸிஸ் நோய் சிகிச்சை நிபுணர். செப்ஸிஸ் தாக்கத்திலிருந்து ஒருவர் குணமடைந்தாலும், அவரின் 25 சதவிகித உடல் ஆரோக்கியத்தைத்தான் திரும்பப் பெற முடியும் என்பது உண்மையா... செப்ஸிஸ், குணமடைவதற்கான சிகிச்சைகள் உள்ளனவா... சிகிச்சை இல்லையென்றால், ஜெ. உடல்நிலை தேறி வருகிறார் என்று தொடர்ந்து கூறி வந்தது ஏன்?

3. அப்போலோ மருத்துவமனையின் ஒரு தகவலில், முதல்வர் ‘pulmonary edema’ நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்திய பேட்டியில்... ''ஜெயலலிதா செப்ஸிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்'' என்றார் டாக்டர் ரிச்சர்ட். இந்த முரண்பட்ட கருத்து ஏன்?

4. தமிழக மருத்துவச் சிகிச்சை வரலாற்றில், ‘எக்மோ’ என்னும் கருவி பற்றிச் சாமான்யர்கள் இப்போதுதான் கேள்விப்படுகிறார்கள். எக்மோ கருவியின் செயல்பாடு என்ன... வென்டிலேட்டர் கருவியைவிட, அது மேம்பட்டதா... எக்மோ கருவியின் உதவியுடன், ஒரு நோயாளியை எவ்வளவு நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்திருக்கலாம்?

5. எக்மோ உதவியுடன் மீண்டும் குணமடைவது சாத்தியமா?

6. 4.12.2016 அன்று திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்படுவதற்கு முன்பு ஜெயலலிதாவின் உடல்நிலை எப்படி இருந்தது?

ஜெயலலிதா

7. ரிச்சர்ட் முதன்முதலில் அவரை மருத்துவமனையில் சந்தித்தபோது... அவரால் பேச முடிந்ததா, அவர் உங்களிடம் என்ன சொன்னார்?

8. ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக சிகிச்சை அளிக்க வேண்டி ரிச்சர்டை முதன்முதலில் தொடர்புகொண்டது யார்?

9. ஜெயலலிதா உடல்நிலை தொடர்பான ரிச்சர்டின் முதற்கட்டத் தகவலறிக்கை என்னவாக இருந்தது?

10. ஜெயலலிதாவுக்குத் தர வேண்டிய தீவிர சிகிச்சை தொடர்பாக... என்னென்ன ஆலோசனைகள் ரிச்சர்டால், அப்போலோ டாக்டர்களுக்கு வழங்கப்பட்டன? அவை அத்தனையும் சரிவரப் பின்பற்றப்பட்டனவா?

11. ரிச்சர்ட், கடைசியாக அவரைச் சந்தித்தபோது... அவரது உடல்நிலை எப்படி இருந்தது?

12. கண் இமைக்கும் நேரத்தில், அத்தனையும் நிகழ்ந்தேறி உள்ளன. இது எதிர்பார்த்ததுதானா?

13. ''காப்பாற்ற முடியாது என்று தெரிந்ததும் டாக்டர்களே முடிவு செய்து கருவியை அகற்றினோம்; செயலாளர்களுக்குத் தகவல் தெரிவித்தோம்'' என்றார் டாக்டர் பாபு ஆபிரகாம். மாநில முதல்வரின் உயிர் பற்றி முடிவெடுக்க அப்போலோ நிர்வாகத்துக்கு அனுமதி யார் தந்தது? எப்போதும் அந்த அறையில் உடனிருந்த மன்னார்குடி குடும்பத்தினர் அப்போது எதுவுமே சொல்லவில்லையா?

14. ''டிசம்பர் 4-ம் தேதி மாலை, திடீர் மாரடைப்பு ஏற்பட்டது; உடனடியாக, எக்மோ கருவி பொறுத்தப்பட்டது; ஆனால், கருவி மட்டுமே இயங்கியது; ஜெ-யின் இதயம் இயங்கவேயில்லை'' என்கிறார். அப்படியென்றால், ஜெ. இறந்தது எப்போது? 4-ம் தேதியா அல்லது 5-ம் தேதியா? 4-ம் தேதியென்றால் அவரது இறப்பை அறிவிக்கத் தாமதம் ஏன்? அவரது நலனுக்காகவா அல்லது சிலரின் அரசியல் நலனுக்காகவா?

15. ''செப்சிஸ் நோய் தாக்கம் ஏற்பட... நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளாது, இரண்டு நாட்களில்கூடப் பரவும்'' என்கிறார் டாக்டர் ரிச்சர்ட். அப்படியென்றால் நீர்சத்துக் குறைவு மற்றும் காய்ச்சல் என்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, செப்சிஸ் நோய் தாக்கம் ஏற்பட்டது எப்போது? 

http://www.vikatan.com/news/politics/80116-list-of-queries-to-be-expected-in-the-enquiry-commission-regarding-jayalalithaas-death-opsvssasikala.art

  • தொடங்கியவர்

இன்னும் நிறைய கேள்விகள் மிச்சம் இருக்கின்றன!

 

தமிழக அரசியலிலும், ஆட்சியிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆகியோர் விளக்கமளித்திருப்பது தொடர் விவாதத்துக்கே வழிவகுக்கிறது.

செப்டம்பர் 22 அன்று அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே பொதுமக்கள் மத்தியில் ஏராளமான சந்தேகங்கள் இருந்தன. தமிழக பொறுப்பு ஆளுநர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை பலரும் மருத்துவமனைக்குச் சென்று வந்தார்களே தவிர, அவரை நேரடியாகச் சந்தித்து அவரது உடல்நலம் குறித்துப் பேசியதாக ஒரு தகவலும் வரவில்லை. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட காலத்தில், ஒரு புகைப்படம் கூட வெளியிடப்படவில்லை.

தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகள், தகவல்கள் வெளிவந்தபோதிலும் “ஜெயலலிதா குணமடைந்துவருகிறார்” எனும் ஒரு வரி எல்லோரையும் அமைதிப்படுத்திவந்தது. ஜெயலலிதா மரணம் அடைந்தபோது அந்தச் சந்தேகங்கள் மீண்டும் தலைதூக்கின. அரசுத் தரப்பிலோ, அதிமுக தரப்பிலோ விரிவான விளக்கங்கள் வெளிவராத நிலையில், இது தொடர்பில் சமூக வலைதளங்களில் எண்ணற்ற வதந்திகள் சிறகடித்துப் பறந்தன. இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளரான சசிகலா, முதல்வர் பதவியை நோக்கி நெருங்கும் சமயத்தில், ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் குழு இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்திருப்பதை இயல்பானதாகக் கருதிக் கடக்க முடியவில்லை.

ஒரு மாநிலத்தின் முதல்வர் திடீர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மரணம் அடைகிறார்; அதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்; ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன; மக்கள் பரிதவித்து நிற்கிறார்கள்; ‘நாங்கள் பதில் அளிக்க மாட்டோம்’ என்று இறுக வாய் மூடி இருப்பது என்ன மாதிரியான ஒரு மனோபாவம்? அந்த அளவுக்கு இதுநாள் வரை பொதுமக்களிடம் அலட்சியத்தையும் ஆணவத்தையும் வெளிப்படுத்தியவர்கள், இப்போது தானாக வலிய வந்து மருத்துவர்களுடனான செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவதன் பின்னுள்ள நோக்கம் என்ன?

இப்போதும்கூட, தமிழக அரசு சார்பில் சுகாதாரத் துறை அமைச்சரோ, செயலரோ விளக்கம் அளிக்கும் இடத்தில் ஏன் அமரவில்லை? பாமக நிறுவனரும் மருத்துவருமான ராமதாஸ் இது தொடர்பில் விடுத்திருக்கும் அறிக்கை, பொதுமக்களின் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. உண்மையில், மருத்துவர்களின் பேட்டி பொதுமக்களின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. மேலும் பல கேள்விகளையே உருவாக்கச் செய்திருக்கிறது.

இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், ஜெயலலிதா என்ன சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதில் தொடங்கி, அவருக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என்பது வரை காத்திரமான ஆதாரங்களோடும் மருத்துவ ஆவணங்களோடும் மக்களிடத்தில் அரசு விளக்கமளிப்பதே அதற்கான ஒரே வழி. அதுவே அரசின் கடமையும்கூட!

http://tamil.thehindu.com/opinion/editorial/இன்னும்-நிறைய-கேள்விகள்-மிச்சம்-இருக்கின்றன/article9528311.ece

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவுக்கு நடந்த சிகிச்சை... தீராத சந்தேகங்கள்! #SepsisAlert

ருவர் காய்ச்சல் என்று மருத்துவமனைக்குப் போகிறார். அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு நீர்ச்சத்துக் குறைபாடு இருக்கிறது உடனே அதற்கான சிகிச்சை எடுக்க வேண்டும் என்கிறார். உடல் பரிசோதனை நடக்கிறது. நோய்த்தொற்றுக்கு அவர் ஆளாகி இருப்பது கண்டறியப்படுகிறது; அதிலும் நுரையீரல், இதயம் உள்ளிட்ட உறுப்புகளில் நோய்த்தொற்று அதிகமாகியிருக்கிறது என்கிறார்கள்... அதற்கு சிகிச்சை. பிறகு டிரக்கியோஸ்டமி (Tracheostomy), பிசியோதெரபி என நீண்டுகொண்டே செல்கிற வைத்தியம் ஒரு கட்டத்தில் பலன் தராமல், மாரடைப்பு வந்து இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடந்தது இதுதான். கிட்டத்தட்ட 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் குழு அளித்த பேட்டியில், ஜெயலலிதாவுக்கு இருந்த பிரச்னைகளில் ஒன்றாகக் கடைசியாகக் குறிப்பிட்டிருப்பது செப்சிஸ். 

ஜெயலலிதா

டிசம்பர் 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது; ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்; பா.ம.க நிறுவனர் ராமதாசும் இது தொடர்பான விளக்கம் தேவை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

முன்னாள் முதல்வரின் உடலில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கைகள் மூலம் தெரிவித்து வந்தது. இறுதியில் அவர் மாரடைப்பால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு செப்சிஸ் (Sepsis) பாதிப்புக்கு இருந்ததாக சமீபத்தில் மருத்துவர்கள் குழுவின் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டது.

இளைஞர்களோ, முதியவர்களோ பலவீனமான நோய் எதிர்ப்பு சக்திகொண்டவர்களை செப்சிஸ் பாதிக்கும். செப்சிஸ் என்பது உயிருக்கே உலைவைக்கக்கூடிய ஒரு மோசமான நிலை. நம் உடல் உறுப்புகளும் திசுக்களும் நோய்த்தொற்றை இருகரம் நீட்டி வரவேற்கும் நிலை என்றுகூடச் சொல்லலாம். ஜுரம், இதயத்துடிப்பு அதிகமாதல், மூச்சுவிட சிரமப்படுதல்... இவையெல்லாம் செப்சிஸுக்கான பொதுவான அறிகுறிகள். குறிப்பிட்ட இந்த நோய்த்தொற்று ஒருவரைத் தாக்கியிருக்கும்போது, இருமலுடன் கூடிய நிமோனியா காய்ச்சல், சிறுநீர்க் கழிக்கும்போது வலி, சிறுநீரகத் தொற்று இவையெல்லாம்கூட ஏற்படலாம். மிகத் தீவிரமான செப்சிஸ் நிலையில், ரத்த ஓட்டம் சீராக இருக்காது; உடல் உறுப்புகளின் செயல்பாடு குறையும். ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், ரத்த அழுத்தம் குறையும். சுருக்கமாக, செப்சிஸ் என்பது ஒரு நோய்த்தொற்று ஏற்படும்போது, நம் நோய் எதிர்ப்பு சக்தி, அதை எதிர்க்க முடியாத நிலை. 

பொதுவாக பாக்டீரியாக்களால் நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்றாலும், வைரஸ், நுண்ணுயிரிகளாலும் ஏற்படலாம். பிரதானமாக சிறுநீரகப் பாதை, மூளை, இரைப்பை, வயிற்றில் உள்ள உறுப்புகளில் செப்சிஸ் பாதிப்பை ஏற்படுத்தும். புற்றுநோய், சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு மிக பலவீனமான நோய் எதிர்ப்பாற்றல் இருந்தால், நோய்த்தொற்று ஏற்படும்போது செப்சிஸ் நிலை ஏற்படும். ஏதோ காலில் கல் குத்திக் காயம்படுகிறது. `தண்ணீர் படாமல் பார்த்துக்கோ... செப்டிக் ஆயிடும்’ என்று யாராவது சொல்வார்கள் இல்லையா? அதுபோலத்தான் இதுவும். புண் ஆறாமல் மேலும் மேலும் தீவிரமாகும் நிலை'' என்கிறார் நெஞ்சக நோய் மருத்துவர் ஜெயராம். இந்த நிலையில்தான் ஜெயலலிதா இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியெல். 

ஜெயலலிதா

சந்தேகம்...

ஏற்கெனவே ஜெயலலிதா மரணம் குறித்து ஏகப்பட்ட யூகங்கள்... வதந்திகள்... கற்பனைகள் உலவிக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில்கூட சர்க்கரைநோய்க்கான மருந்துகள் அவருக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டதால்தான் அவர் இறக்க நேரிட்டது என ஒரு செய்தி, வலைதளங்களில் உலவியது. ஜெயலலிதா அப்போலோவில் இருந்த நாட்களில் அவ்வப்போது, ‘அவர் நலமாக இருக்கிறார்’, ‘அவருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது’ என்று செய்திகள் வெளியாகினவே தவிர, அவருக்கு உடலில் இந்த நோய்த் தாக்கம் எனக் குறிப்பிட்டு ஒன்றுமே சொல்லப்படவில்லை. இப்போது தாமாகவே வந்து பத்திரிகையாளர் சந்திப்பில், சிகிச்சை அளித்த மருத்துவர் குழு `செப்சிஸ்’ என்கிற குண்டைத் தூக்கிப் போட்டிருப்பது இன்னும் பல சந்தேகங்களை எழுப்பி இருக்கிறன. ஜெயலலிதாவுக்கு செப்சிஸ் பாதிப்பு இருக்கும்பட்சத்தில் ஆரம்பத்திலேயே அதை வெளியிலே சொல்லியிருக்கலாமே..! 

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்கட்டும் அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணைக்குழுகூட அமைக்கப்படட்டும். உண்மை எப்படியாவது வெளியாக வேண்டும். `அம்மா... அம்மா’ என்று அரற்றிக்கொண்டிருக்கும் உண்மையான அ.தி.மு.க தொண்டர்களுக்கும் மக்களுக்கும் வேண்டியதெல்லாம் இதுதான்!

http://www.vikatan.com/news/health/80186-doubts-raised-over-jayalalithaas-treatment.art

  • தொடங்கியவர்

 

இதுவரை விசாரணை கமிஷன் செய்த சாதனைகள் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.