Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்த 75 நாட்கள்.. இந்த 60 நாட்கள்... முழு உண்மையையும் உடைப்பாரா பன்னீர்

Featured Replies

அந்த 75 நாட்கள்.. இந்த 60 நாட்கள்...
முழு உண்மையையும் உடைப்பாரா பன்னீர்
 
 
 

ஜெ., சமாதி முன் அமர்ந்து, அவர் கண்களை மூடியிருந்த அந்த நிமிடங்களில், பல கோடி தமிழர்களின் விழிகள் மூடாமல் இருந்தன. அவர் எழுந்து வந்து, ஊடகங்களின் முன் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காக, தமிழகமே செவிகளைத் திறந்து வைத்து காத்திருந்தது.

 

Tamil_News_large_170709020170209000637_318_219.jpg

பரந்து விரிந்த கடலின் மையப் பரப்பில், ஒரு புள்ளியாக உருவெடுத்து, மெதுமெதுவாக வேகமெடுத்து, சூறைக் காற்றோடு சுழற்றியடிக்கும் புயலைப் போல இருந்தது, பன்னீர் செல்வத்தின் பேட்டி.

என்ன சொல்லப் போகிறாரோ, எந்தெந்த உண்மைகளை உடைக்கப் போகிறாரோ என, ஏராளமான இதயங்கள் படபடத்துக் கிடந்திருக் கலாம். ஆனால், அவர் உண்மையை தான் சொல்கிறார் என்பதை, அவரது பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக உணர்த்தியது.

அவர் பிரயோகப்படுத்திய வார்த்தைகள், மிக மென்மையாக இருந்தன; அவரது குரலும் அத்தனை ஆவேசமாக இல்லை; அடுத்தடுத்த நிமிடங்களில், அவருடைய வார்த்தைகளில் இருந்து வந்து விழுந்த உண்மைகள் தான், சுனாமி அலைகளை மிஞ்சக்கூடிய அதிர்வலைகளாக காற்றில் பரவின.

சுருக்கமாகத்தான் இருந்தது, அவரது பேட்டி; ஆனால், 'சுருக்' என்று இருந்தது. மன்னார்குடி கும்பலின் சதியை அம்பலப்படுத்தி, சசிகலா வின் பதவி ஆசையை, அந்த கடற்கரையி லேயே கரைத்து விட்டு விட வேண்டுமென்ற

யுக்தி, அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டது. பேட்டி நடந்த அரை மணி நேரத்துக் குள், அதைத் தெளிவாக ஒளிபரப்பிய செய்தி சேனல்களைப் போலவே, பன்னீரின் 'ரேட்டிங்'கும், பல மடங்கு எகிறியது.

நேற்று வரை, 'சசிகலா வந்தால் நாடு தாங்காது' என்று சொல்லி வந்தவர்களுடைய வாயிலும், நேற்று வந்த வார்த்தை, 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பதாக இருந்தது. மன்னார்குடி கும்பலை,துவைத்து தொங்கப் போட்டுக் கொண்டி ருக்கின்றனர்,

'நெட்டிசன்'கள். முக்கால் மணி நேர தியானத்தில், தமிழகத்தின் புதிய தலைவராக அவதாரம் எடுத்தார் பன்னீர்செல்வம். ஜெ., மறைவு, கருணாநிதி முடக்கம், என, தலைவன் இல்லாத தமிழகத்துக்கு, பன்னீரின் பரபரப்பு பேட்டி, ஆறுதல் பரிசாய் தெரிந்தது.

ஊடகங்களில், நேற்றும், ஓ.பி.எஸ்., நிறையப் பேசினார். தன்னை, ஒரு தலைவனாக முன்னிறுத்து வதற்கான முழு முயற்சியும், அதில் தெரிந்தது. எதிர்விளைவையும், அது ஏற்படுத்தியது; பொருளா ளர் பதவியிலிருந்து, உடனடியாக நீக்கப்பட்டார்; கட்சியிலிருந்தே பன்னீரை நீக்கப் போவதாகவும், சசிகலா கூறி விட்டார்.

நீக்கினாலும், அவருக்கு, அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் மக்கள் மனதில் உள்ள இடத்தை அழிப்பது சுலபமில்லை. ஆனால், அந்த இடத்தைத் தக்க வைக்கவும், தலைவனாக உருவெடுக்கவும், அவர் செய்ய வேண்டியதும், பேச வேண்டியதுமாக, சில விஷயங்கள் இருக்கின்றன.ஜெ., மருத்துவமனை யில் இருந்தபோது நடந்த விஷயங்களை ஒளிவு மறைவின்றி, அம்பலப்படுத்த வேண்டும்.இடை யிடையே, முதல்வர் பொறுப்பை வகித்தபோது, மன்னார்குடி கும்பல், எந்தெந்த வகையில் ஆதிக்கம் செலுத்தியது, சசி கும்பலுக்கு, அமைச்சர்கள் செலுத்திய கப்பங்கள், வேட்பாளர் தேர்வில் இந்த கும்பல் நடத்திய வசூல் வேட்டை எல்லாவற்றை யும் பற்றி, பட்டவர்த்தனமாகத் தெரிவிக்க வேண்டும்.

அவ்வப்போது, அமைச்சர்கள் மாற்றப்பட்டார்களே,

 

அதன் பின்னணியில் சசிகலா செய்த மாய் மாலங்களை விளக்க வேண்டும். இப்போது, ஜெ., மறைவு குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக் கப்படும் என்று சொல்லும் நீங்கள், அந்த, 75 நாட்களில் ஏன் அமைதி காத்தீர்கள்; அதற்கான நிர்ப்பந்தம் என்ன என்பதையும், மறக்காமல் சொல்ல வேண்டும்.

சேகர் ரெட்டி, 'மாஜி' தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் ஆகியோருடனான, சசி கும்பல் தொடர்பு எல்லாமே, மக்களுக்குத் தெரிய வேண்டும். ஜெ., மீது பெரும் மரியாதையும், பேரன்பும் காட்டும் நீங்கள், அவருடைய உயிரைக் காப்பது தொடர்பான விஷயத்தில், அமைதி காத்தது ஏன் என்பதையும் விளக்கியே தீர வேண்டும்.

ஊடகங்களின் துணையோடு, ஒரே நாளில் எல்லாரது கவனத்தையும், உங்கள் பக்கம் திருப்புவதில் வெற்றி கண்டு விட்டீர்கள், பன்னீர். இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும்,

அ.தி.மு.க.,வின், 1.50 கோடி தொண்டர்களின் இதயங்களையும், எட்டு கோடி தமிழ் மக்களின் நம்பிக்கையையும் வெல்வது, அத்தனை எளிதான விஷய மில்லை. அதற்கு, இன்னும் கொஞ்சம் உண்மை பேச வேண்டும்!

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1707090

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.