Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா முதல்வராக வேண்டும் என ஏன் துடிக்கிறார் சுப்ரமணியன் சுவாமி? OPSvsSasikala

Featured Replies

சசிகலா முதல்வராக வேண்டும் என ஏன் துடிக்கிறார் சுப்ரமணியன் சுவாமி? OPSvsSasikala

சசிகலா

ஜெயலலிதாவின் மறைவு தமிழக அரசியல் களத்தையேப் புரட்டிப் போட்டுவிட்டது.கடந்த டிசம்பர் 5 - ம் தேதியில் இருந்து தமிழக அரசியலில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன.அனைத்து மாநில அரசியல் நகர்வுகளையும் மக்கள் மறந்துவிட்டு தமிழகத்தையே உற்று நோக்குகிறார்கள் இந்திய மக்கள். அந்த அளவுக்கு அதிரடி மாற்றங்கள், அனல் பறக்கும் அரசியல் பேட்டிகள் என தமிழக அரசியல் களம் அதகளப்படுகிறது. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டவுடன் விரைவில் முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளதாக அப்போதே தகவல் வெளியானது. இந்த நிலையில், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் கடந்த (5.2.2017)ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில், சசிகலா நடராசன் சட்டமன்றக்குழுத் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் சசிகலா முதல்வராகப் பதவி ஏற்பது உறுதியானது.இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.இந்த நிலையில்,கடந்த செவ்வாய்க்கிழமை (7.2.2017) முதல்வராக சசிகலா பதவி ஏற்பதற்கான விரிவான ஏற்பாடுகளும் நடைபெற்றன.ஆனால், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து தமிழகம் திரும்பாத காரணத்தால் சசிகலா பதவி ஏற்பதில் குழப்பம் நிலவியது.

இந்த சூழ்நிலையில், (நேற்று  7.2 .2017) திடீரென ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு மாலையில் வந்த ஓ.பன்னீர்செல்வம் ஜெ. சமாதி முன்பாக தியானத்தில் அமர்ந்தார்.பின்னர் மௌனத்தை கலைத்த அவர், "நிர்பந்திக்கப்பட்டதால்தான் ராஜினாமா செய்தேன்" என்று அதிரடியாக மீடியாவில் பேச ஆரம்பிக்கவும் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

மாஸ்டர் மைண்ட் சு. சுவாமி....

பி.ஜே.பி-யின் செல்வாக்கு ஓ.பன்னீர் செல்வத்துக்கு இருப்பதாகத் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.இதுகுறித்து ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவருடைய நம்பிக்கையைப் பெற்ற நபரிடம் நாம் பேசினோம்."உண்மையில் மத்திய அரசின் நம்பிக்கையை பன்னீர்செல்வம் பெற்றுள்ளாரா? அல்லது சசிகலா பெற்றுள்ளாரா? என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும். அதனை இப்போது முழுமையாக சொல்லமுடியாது.அந்த அளவுக்கு இரு தரப்பிலும் இருந்து காய் நகர்த்தல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.இவர்களுடைய இந்தக் காய் நகர்த்தல்களின் மாஸ்டர் மைண்ட் வேறு இடத்திலும் இருப்பதாகத் தெரிகிறது. 6_13013.jpg

சசிகலாவின் பின்னால் சுப்பிரமணியன் சுவாமி இருக்கிறார்.அதனால்தான் அண்மைக் காலமாக சசிகலாவுக்கு ஆதரவாக சுப்பிரமணியன் சுவாமி பேசி வருகிறார்.இதில் ஜென்டில் அக்ரிமெண்ட் ஒன்று  நடந்துள்ளதாகவும் சொல்கின்றனர்.தமிழக முதலமைச்சராக சசிகலா பதவி ஏற்றால் அதற்கு அடுத்த ஆறு மாத காலத்துக்குள் கவர்னராக சுப்பிரமணியன் சுவாமி நியமிக்கப்படுவது உறுதி என்கிறார்கள்.அதன்பின் ராம மோகன ராவும் தலைமைச் செயலாளராக வருவார் என்றும் சொல்கிறார்கள்."என்றார்

யாருக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? என்ற அரசியல் அலசல்தான் இன்றைய தமிழக அரசியலின் ஹாட் பேச்சாக இருக்கிறது. எந்த அரசியலாக இருந்தாலும் அது மக்கள் நலன் சார்ந்ததாக இருந்தால் சரி.

http://www.vikatan.com/news/tamilnadu/80141-this-is-why-subramanian-swamy-is-backing-sasikalaopsvssasikala.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.