Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'துணை சபாநாயகரா? சசிகலா பிரதிநிதியா?' -தம்பிதுரையை கலாய்த்த அருண் ஜெட்லி #VikatanExclusive #OPSvsSasikala

Featured Replies

'துணை சபாநாயகரா? சசிகலா பிரதிநிதியா?'  -தம்பிதுரையை கலாய்த்த அருண் ஜெட்லி #VikatanExclusive #OPSvsSasikala

வித்யாசாகர் ராவ்-பன்னீர்செல்வம்

மிழக ஆளுநரை இன்று இரவு 7.30 மணியளவில் சந்திக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா. ' சட்டசபையில் பலத்தை நிரூபிக்கும் கட்சிக்குத்தான் ஆளுநர் வாய்ப்பு கொடுப்பார். பன்னீர்செல்வத்தால் முடியவில்லை என்றால், ஆட்சிக் கலைப்பை நோக்கிச் செல்லும் முடிவில் இருக்கிறது மத்திய அரசு' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க நிர்வாகிகள் அணி திரண்டு வருகின்றனர். இன்று மதியம் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு கொடுத்தார் அவைத் தலைவர் மதுசூதனன். இப்படியொரு சந்திப்பை மன்னார்குடி உறவுகள் எதிர்பார்க்கவில்லை. மாநிலம் முழுவதும் பன்னீர்செல்வத்திற்குப் பெருகும் ஆதரவைத் தடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, பிரகாஷ் ஜவடேகர், சுரேஷ் பிரபு ஆகியோரை சந்தித்துப் பேசினார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். இந்த சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. " தமிழக அரசியல் சூழலில், பா.ஜ.க எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்துத்தான் விரிவாக எடுத்துரைத்தார் தமிழிசை.

தமிழிசைமத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் பேசும்போது, ' மக்கள் ஆதரவு முழுக்க பன்னீர்செல்வம் பக்கமே இருக்கிறது. எம்.எல்.ஏக்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றனர். அவர்களை முடிவு எடுக்கவிடாமல் சசிகலா அணியினர் சதி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. தேச நலனுக்கு எதிராக செயல்படுகின்றவர்கள்தான் போயஸ் கார்டனில் உள்ளனர். இவர்களோடு காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் கூட்டு வைத்துள்ளனர். அவர்களை நாம் ஆதரித்தால், இந்திய அளவில் நமது ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படும்' என விளக்கினார் தமிழிசை. இதை அவரும் ஆமோதித்துக் கேட்டுக் கொண்டார்" என விளக்கிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர், 

தம்பிதுரை" மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்திக்கச் சென்றார் தமிழிசை. சரியாக 11.30 மணியளவில் அவருடன் விவாதித்துக் கொண்டிருந்தபோது, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஜெட்லியை பார்ப்பதற்காக வந்தார். அவரிடம் பேசியவர், ' நீங்கள் மக்களவை துணை சபாநாயகராக என்னை சந்திக்க வந்திருக்கிறீர்களா? அல்லது சசிகலாவின் பிரதிநிதியாக வந்திருக்கிறீர்களா?' எனக் கேட்டார் ஜெட்லி. அதற்குப் பதில் சொல்லாமல் சிரித்தபடியே அமர்ந்தார் தம்பிதுரை. நிதி அமைச்சரிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு வெளியே வந்துவிட்டார் தமிழிசை. தமிழக நிலவரம் குறித்தும் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிப்பதற்காகத்தான் தம்பிதுரை வந்திருந்தார். தற்போதுள்ள சூழலில், ' சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபியுங்கள்' என பன்னீர்செல்வத்திற்கு ஆளுநர் உத்தரவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ' கட்சியும் ஆட்சியும் பல துண்டுகளாக சிதறியிருப்பதால், இப்படியொரு முடிவை அவர் எடுப்பார்' என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், ஆட்சிக் கலைப்பை நோக்கிச் செல்லும் முடிவை அவர் எடுக்கலாம். சபையில் பலத்தை நிரூபிக்க ஏழு நாட்கள் வரையில் அவகாசம் கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது" என்றார் விரிவாக. 

" தன்னுடைய முதலமைச்சர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துவிட்டாலும், பலத்தை நிரூபிக்க அவகாசம் கேட்க இருக்கிறார். சட்டமன்றத்தில் யார் பலத்தை நிரூபிக்கிறார்களோ, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் முடிவைத்தான் ஆளுநர் எடுப்பார். சசிகலா மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதால், பன்னீர்செல்வத்திற்கு வாய்ப்பு வழங்குவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. 'சசிகலாவுக்கு ஆதரவாக 128 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்' என்கின்றனர். இவர்களை சுதந்திரமாக செயல்படவிட்டால், பன்னீர்செல்வத்தை நோக்கிப் போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, கார்டனில் உள்ளவர்கள் பயப்படுகின்றனர். அதனால்தான், அவர்களை எங்கும் நகரவிடாமல் சிறைவைத்துள்ளனர். ஆளுநர் எடுக்கும் முடிவைப் பொறுத்தே, அரசியல் காட்சிகள் முடிவுக்கு வரும்" என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/80272-are-you-a-deputy-speaker-or-representative-of-sasikala-arun-jaitley-trolls-thambidurai.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.