Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகார போட்டியில் வெல்லப் போவது யார் ஒட்டு மொத்த தமிழக மக்களும் காத்திருப்பு

Featured Replies

அதிகார போட்டியில் வெல்லப் போவது யார்
ஒட்டு மொத்த தமிழக மக்களும் காத்திருப்பு
 
 
 

சென்னை:''அ.தி.மு.க.,வில் நடக்கும் அனைத்து விபரங்களையும், கவர்னரிடம் தெரிவித்தோம்; அவர் நல்ல முடிவை அறிவிப்பார். நமக்கு நல்லதே நடக்கும்,'' என, கவர்னரை சந்தித்த பின், முதல்வர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Tamil_News_large_170763720170210000225_318_219.jpg

அவரைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவும், கவர்னரை சந்தித்து பேசியுள்ளார். எனவே, இரு தரப்புக்கும் இடை யிலான இந்த அதிகாரப் போட்டியில், வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
ஆளும், அ.தி.மு.க.,வில், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில், சசிகலா தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வெளியே வந்துள்ள முதல்வர் பன்னீர்செல்வத் திற்கு, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளிடம், ஆதரவு அதிகரித்து வருகிறது.

அதை தடுப்பதற்காக, அவசரமாக, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த சசி தரப்பு, அதில் பங்கேற்றவர்களை, கடற்கரை விடுதியில் சிறை வைத்துள்ளனர். சட்டசபை யில் நடக்க உள்ள, நம்பிக்கை ஓட்டெடுப்பு வரை, அவர்களை அங்கேயே, சகல வசதி களுடன் சிறை வைக்க திட்டமிட்டுள்ளனர். இத்தகைய அரசியல் பரபரப்புக்கு இடையில்,

கவர்னர் வித்யாசாகர் ராவ், மும்பையில்இருந்து, நேற்று சென்னை வந்தார். அவரை சந்திக்க, முதல்வர் பன்னீர்செல்வமும், சசிகலாவும் அனுமதி கேட்டனர். அதில், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, முதலில் நேரம் ஒதுக்கப்பட்டது.

அதன்படி, நேற்று மாலை, 5:00 மணிக்கு, முதல்வர் பன்னீர்செல்வம்,ராஜ்பவனில் கவர்னரை சந்தித்தார். அவருடன், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சபாநாயகர் உள்ளிட்டவர்கள் சென்றிருந்தனர். தயார் செய்து வைத்திருந்த மனுவை, கவர்னரிடம் அளித்தனர்.
ஏற்கனவே, தனக்கு நெருக்கடிகள் கொடுத்து, கட்டாயப்படுத்தி, பதவி விலகல் கடி தத்தை எழுதி வாங்கியதாக, சசிகலா மீது பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியிருந்தார். அதை எழுத்துப் பூர்வ புகார் மனுவாக, கவர்னரிடம் முதல்வர் அளித்தார். அத்துடன், அதற்கான ஆதாரங்களையும், அவருக்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் இருக்கும் ஆதரவு பட்டியலையும் அளித்துள்ளார்.

பின், அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும் கைப்பற்ற, சசிகலா தரப்பு மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்தும், கவர்னரிடம் விளக்கினர். கவர்னருடன் நடந்த, 15 நிமிட சந்திப்புக்கு பின், முதல்வர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், 'நல்லது நடக்கும்' என, நம்பிக்கை தெரிவித்தார்.
 

அவர் அளித்தபேட்டி


கவர்னரை சந்தித்து, தமிழகத்திலும், அ.தி.மு.க., விலும் நடக்கும் அனைத்து விபரங்களையும் விரிவாக பேசி விட்டு வந்திருக்கிறோம்; நல்லது நடக்கும்; தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் உறுதியாக, தர்மமே வெல்லும்.இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல, நேற்று இரவு, 7:30 மணிக்கு, சசிகலாவும், மூத்த அமைச்சர்களுடன் சென்று

 

கவர்னரை சந்தித்தார். தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள, எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலையும், தன்னை, அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்துள்ள கடிதத்தையும், கவர்னரிடம் அவர் வழங்கினார்.
இப்போது, கவர்னர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆட்சி அமைக்க, இரு தரப்பும் அதிகாரம் கோருவதால், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் படி, இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு தரப்படலாம்.

இல்லையேல், சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு வெளியாகும் வரையில், முடிவை தள்ளிப்போட விரும்பினால், இந்த விவகாரம் தொடர்பாக சட்ட ஆலோசனை கேட்க, கவர்னர் முன்வரலாம். சட்ட ஆலோ சனைக்கு பின், சட்டசபையை கூட்ட உத்தரவிடலாம்.

இதில், எந்த முடிவை கவர்னர் எடுக்க போகிறார்; அ.தி.மு.க.,வில் எழுந்துள்ள அதிகாரப் போட்டியில், வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பில், ஒட்டுமொத்த தமிழகமும் பரபரப்புடன் காத்திருக்கிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1707637

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.