Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிப்.10-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

Featured Replies

பிப்.10-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 

 
இடது: சசிகலா, வலது: ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படங்கள்: எம்.வேதன்
இடது: சசிகலா, வலது: ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படங்கள்: எம்.வேதன்
 
 

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) தனித்தனியாக சந்தித்துப் பேசினர். இதையடுத்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால், தமிழக அரசியலில் உச்சகட்ட குழப்ப நிலை நீடிக்கிறது.

7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரப்பாகியுள்ள நிலையில் இன்று 4-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறிவருகின்றன. அவற்றின் தொகுப்பு:

11.00 am: கிருஷ்ணராயபுரம் தொகுதி பெண் எம்எல்ஏ கீதா, குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோரது உறவினர்கள் தொடர்ந்த வழக்கில் அவர்கள் இருவரையும் சேர்த்து மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து வரும் திங்கள்கிழமைக்குள் தமிழக டிஜிபி, போலீஸ் கமிஷனர் மற்றும் அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10.55 am: "எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. எம் எல் ஏ-க்கள் அவர்கள் பகுதிக்கு செல்ல வேண்டும். மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஏன் வெளியே வர தயங்குகிறார்கள். மக்கள் விருப்படி எம் எல் ஏக்கள் செயல்பட வேண்டும்" என்று அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டி கூறியுள்ளார்.

10.52 am: சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் வரை சசிகலா பதவியேற்க தடை கோரிய சட்டப்பஞ்சாயத்து மனுவை, அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

10.40 am: தமிழக அரசியல் நிலவரம் குறித்து புதுடெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

10.35am: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி ஆதரவு தெரிவித்துள்ளார்.

10.32 am: சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் ஆளுநர் காத்திருப்பது ஏன்? என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

10.30 am: "அ.தி.மு.க.வின் உட்கட்சிக்குள்ளேயே ஏற்பட்டிருக்கிற ஆட்சி, அதிகாரம் குறித்த விவகாரங்கள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் வாக்களித்த மக்கள் விரும்பாத நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

மேலும் நிலையான முதலமைச்சரும் இல்லை, நிரந்தர ஆளுநரும் இல்லை என்ற நிலையே தற்போது உள்ளது. இதற்கு காரணம் மாநில அரசும், மத்திய அரசும் தான். இது போன்ற அசாதாரண அரசியல் சூழலின் காரணமாக தமிழகத்தில் நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போய், நிர்வாகச் சீர்கேட்டிற்கு வழி வகுத்திருக்கிறது" என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

10.20 am: மனிதநேய ஜனநாயக கட்சி யாருக்கு (ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா) ஆதரவு என்பது குறித்து நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய முக்கியச் செய்திகள்

* தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் நேற்று தனித்தனியாக சந்தித்துப் பேசினர். இதையடுத்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால், தமிழக அரசியலில் உச்சகட்ட குழப்ப நிலை நீடிக்கிறது. அதன் விவரம்: ஓ.பன்னீர்செல்வம், சசிகலா சந்திப்புக்குப் பிறகு ஜனாதிபதி, பிரதமருக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர்: தீவிர ஆய்வுக்குப் பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்

*தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல் வத்தை தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் நேற்று அவரது வீட்டில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். அதன் விவரம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தலைமைச் செயலர், டிஜிபி ஆலோசனை

* சசிகலா ஆதரவு காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் தயாரிக் கப்பட்டுள்ளது. அவர்கள் விரை வில் இடமாற்றம் செய்யப்பட வுள்ளனர். அதன் விவரம்: சசிகலாவுக்கு ஆதரவான காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் தயாரிப்பு: முக்கிய அதிகாரிகள் விரைவில் இடமாற்றம்

* கிருஷ்ணராயபுரம் தொகுதி பெண் எம்எல்ஏ கீதாவைக் காணவில்லை என அவரது உறவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். குன்னம் எம்எல்ஏவைக் காணவில்லை என்று அத்தொகுதி வாக்காளர் மனு தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்: கிருஷ்ணராயபுரம் பெண் எம்எல்ஏ உட்பட 2 எம்எல்ஏ மாயமானதாக ஆட்கொணர்வு மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்10ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9533644.ece?homepage=true

  • தொடங்கியவர்

'இறுதி முடிவு' எடுப்பது யார்?- ஆளுநரின் நிதானமும் நீடிக்கும் உச்சகட்ட குழப்பமும்

 

இடது: சசிகலா, வலது: ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படங்கள்: எம்.வேதன்

இடது: சசிகலா, வலது: ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படங்கள்: எம்.வேதன்
 
 

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) தனித்தனியாக சந்தித்துப் பேசினர். இதையடுத்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால், தமிழக அரசியலில் உச்சகட்ட குழப்ப நிலை நீடிக்கிறது.

7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் இன்று 4-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு:

11; 58 am: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று (வெள்ளிக்கிழமை) காலை தமிழக டிஜிபி சந்தித்தார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து டிஜிபியிடம் ஆளுநர் விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் சந்திக்கிறார்.

11.30 am: மாநில அரசியல் செயல்பாட்டிற்கு ஆளுநரே பொறுப்பு என்றும், தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்து ஆளுநரே முடிவு எடுப்பார் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் நேற்று தனித்தனியாக சந்தித்துப் பேசினர். இதையடுத்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கைகளின் அடிப்படையில் சட்ட நிபுணர்களிடம் விரிவாக ஆலோசனை நடத்தியும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலை பெற்றும் ஆளுநர் உரிய முடிவுகளை எடுப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது மத்திய உள்துறை அமைச்சகமோ தமிழக பொறுப்பு ஆளுநரையே கைக்காட்டியுள்ளது. இதனால், தமிழக அரசியலில் உச்சகட்ட குழப்ப நிலை நீடிக்கிறது.

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

பாதுகாப்பு வாபஸ்.. பதவியேற்பு விழா நடக்குமா?

sasikala sworn in ceremony

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் போடப்பட்டிருந்த  பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. சசிகலாவின் பதவியேற்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறவிருந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த அதிரடியான செய்தியாளர்கள் சந்திப்பில், சசிகலா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து சசிகலா முதல்வராகப் பதவியேற்பதில் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது, பதவியேற்பு பற்றி ஆளுநரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லாததால் அங்கு பாதுகாப்புப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்த காவல்துறையினர் அனைவரும் திரும்ப பெறப்பட்டனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/80351-police-protection-taken-back-from-madras-university.art

  • தொடங்கியவர்

1.14pm: அதிமுகவில் தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியே கிடையாது. பொதுச் செயலாளரை அதிமுக தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். 2012-ஆம் ஆண்டு மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் அதிமுகவில் இணைந்தவர் சசிகலா. அதிமுக பொதுச் செயலளாராக சசிகலாவை ஏற்றுக் கொள்ள கூடாது எனக் குறிப்பிட்டு அதிமுக அவைத் தலைவர் மசூதனன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

1. 02 pm: "வட மாநிலங்களில் பாஜக நடத்திய அரசியல் விளையாட்டை தமிழகத்திலும் நடத்த நினைப்பது தவறு. ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

12. 40 pm: "எம்எல்ஏக்கள் அனைவரும் சுதந்திரமாகவும், சொகுசாகவும் உள்ளனர். தாங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம் என்று எம்எல்ஏக்கள் யாராவது புகார் கொடுத்தார்களா? எம்எல்ஏக்களை யாரும் கட்டுப் டுத்தவில்லை" என்று அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறினார்.

12. 15 pm: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி, முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்10ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9533644.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிப்.10-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 

 
மதுசூதனன் (இடது) ; சசிகலா (வலது) | கோப்புப் படம்.
மதுசூதனன் (இடது) ; சசிகலா (வலது) | கோப்புப் படம்.
 
 

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) தனித்தனியாக சந்தித்துப் பேசினர். இதையடுத்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால், தமிழக அரசியலில் உச்சகட்ட குழப்ப நிலை நீடிக்கிறது.

7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் இன்று 4-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு:

5.05 pm: "ஆளுநர் காலம் தாழ்த்துவது சட்டத்துக்கு புறம்பானது. மூன்று முறை முதல்வர் பதவி வழங்கப்பட்டும் பன்னீர்செல்வம் திருப்தி அடையவில்லை. ஆட்சி அமைக்க சசிகலாவை ஆளுநர் அழைப்பார் என்று நம்புகிறோம்" என்று அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் கூறியுள்ளார்.

4.53 pm: தனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாகவும், மிரட்டல் விடுப்பது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்றும் அதிமுக செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார். அதன் விவரம்: ஓபிஎஸ் ஆதரவாளர்களால் கொலை மிரட்டல்கள்: சி.ஆர்.சரஸ்வதி ஆவேசம்

4.28 pm : தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்தை நீக்க விரைந்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

4.13 pm: அதிமுக எம்எல்ஏக்கள் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

3.15 pm: "அதிமுக அவைத் தலைவர் பதவியிலிருந்து மதுசூதனனை நீக்கும் அதிகாரம் சசிகலாவுக்கு இல்லை" என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

3.05 pm: ”செங்கோட்டையனை புதிய அவைத் தலைவராக நியமித்தது சரியான முடிவு, அதிமுகவின் கோட்டையை உடைக்க சில சுயநலவாதிகள் செய்யக் கூடிய சதியில் பன்னீர்செல்வமும் இணைந்துள்ளார். மதுசூதனனின் மனமாற்றத்திற்கு கேகர் பாபுதான் காரணம்" என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறியுள்ளார்.

3.03 pm: சசிகலா முதல்வராவதற்கு அவசரப்பட என்ன காரணம்? என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி லதா கேள்வி எழுப்பியுள்ளார். அதன் விவரம்: முதல்வராவதில் சசிகலாவுக்கு அவசரம் ஏன்?- ஜெ. தோழி லதா கேள்வி

2. 12 pm: அதிமுக அவைத் தலைவர் பதவியிலிருந்து மதுசூதனன் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக புதிய அவைத் தலைவராக கே.ஏ.செங்கோட்டையன் நியமனம். விவரம்: அதிமுக அவைத் தலைவர் பதவியிலிருந்து மதுசூதனன் நீக்கம்

1.30 pm: முன்னாள் எம்பி இளங்கோவன் மற்றும் கூடலூர் எம்எல்ஏ அய்யப்பன் ஆகியோர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்10ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9533644.ece?homepage=true

  • தொடங்கியவர்

காணொலி காட்சி மூலம் சசிகலா ஆலோசனை!

sasikala

போயஸ் கார்டன் இல்லத்தில் அதிமுக எம்.பிக்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், கூவத்தூர் ரெசார்டில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசித்து வருகிறார். பத்துக்கும் மேற்பட்ட அதிமுக எம்.பிக்கள், சசிகலாவின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக அதிமுக அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்தார்.

மேலும், சசிகலா தங்கியுள்ள போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/80389-vksasikala-discusses-with-admk-mps-and-mlas.html

  • தொடங்கியவர்

பிப்.10-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 
சசிகலா தனக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்கள் பட்டியலுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் | கோப்புப் படம்.
சசிகலா தனக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்கள் பட்டியலுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் | கோப்புப் படம்.
 
 

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) தனித்தனியாக சந்தித்துப் பேசினர். இதையடுத்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால், தமிழக அரசியலில் உச்சகட்ட குழப்ப நிலை நீடிக்கிறது.

7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் இன்று 4-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு:

6.25 pm: தமிழக அரசியல் நெருக்கடி குறித்து தமிழக ஆளுநரிடமிருந்து குடியரசுத்தலைவருக்கோ, உள்துறை அமைச்சகத்துக்கோ எந்த வித அறிக்கையையும் அனுப்பவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதன் விவரம்: தமிழக ஆளுநர் எந்த அறிக்கையையும் அனுப்பவில்லை: உள்துறை அமைச்சகம் தகவல்

5.31 pm : நெருக்கடி நிலவுகிறது என்று தெரிந்தும் சென்னை வராமல் கிளம்பிச் சென்றதும், அடுத்த கட்ட நடவடிக்கையைத் தள்ளிப் போடுவதுமான ஆளுநரின் அணுகுமுறை கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் விவரம்: நெருக்கடி சூழலில் ஆளுநரின் அணுகுமுறை கண்டனத்துக்குரியது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம்

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்10ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9533644.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிப்.10-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 
 
படம். | ம.பிரபு.
படம். | ம.பிரபு.
 
 

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) தனித்தனியாக சந்தித்துப் பேசினர். இதையடுத்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால், தமிழக அரசியலில் உச்சகட்ட குழப்ப நிலை நீடிக்கிறது.

7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் இன்று 4-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு:

7.50 pm: அதிமுகவை யாரும் கைப்பற்ற விடமாட்டோம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது அவர், “எனக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக என்ற இயக்கம் இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்கும் என்று அம்மா கூறியிருந்தார்.

அந்த இயக்கத்தினை ஒரு குடும்பத்தினர் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம். அதிமுக என்பது ஒவ்வொரு தொண்டனின் சொத்தாகும், இதனை யாரும் கைப்பற்ற விடமாட்டோம். இதைக் கைப்பற்றலாம் என்ற கனவு பலிக்காது.

நான் ஏற்கெனவே சொன்னது போல், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மம் வெல்லும். மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள்தான் ஆட்சி அமைக்க வேண்டும்” என்றார்.

6.45 pm: அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கம்: மதுசூதனன் கூறுகிறார்

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என்று மதுசூதனன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளர் பதவி கிடையாது. பொதுச்செயலர் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

அதிமுக பொதுச்செயலர் தேர்தல் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும். தொண்டர்களே தயாராக இருங்கள்” என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்10ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9533644.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.