Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காளையுடன் செல்ஃபி, காஃபி-டீ, சாப்பாடு... எப்படி இருக்கிறது ஓ.பன்னீர்செல்வம் வீடு? #SpotReport #VikatanExclusive

Featured Replies

காளையுடன் செல்ஃபி, காஃபி-டீ, சாப்பாடு... எப்படி இருக்கிறது ஓ.பன்னீர்செல்வம் வீடு? #SpotReport #VikatanExclusive

சென்ற மாதம் அதிகம் விமர்சிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் இன்று சிக்ஸர்  நாயகனாக  மாறி  இருக்கிறார். ஒட்டு  மொத்த  இந்தியாவையும் தன் ஸ்டைலில் திரும்பிப்  பார்க்க  வைத்து, சசிகலா தரப்பை இரவு  ஒரு மணிக்கு வெளியில் வரவைத்து விட்டார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ளது முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு. கடந்த  இரண்டு  நாட்களாக மக்கள் வெள்ளத்தில் திளைத்து  வரும் அந்த வீடு  எப்படி இருக்கிறது?

ஓ.பி.எஸ்  

1. முதல்வரின் வீட்டைப் பார்க்க பொதுமக்கள் அதிக  அளவில் வருகின்றனர்.அவரது  வீட்டின் கேட்டில் உள்ள முதலமைச்சர் பன்னீர்செல்வம்  என்கிற போர்டுக்கு பக்கத்தில்  நின்றும், அவரது  காருக்கு  அருகில்  நின்றும் செல்ஃபி எடுத்து  கொள்கின்றனர்.

2. ஒரு முதல்வரின்  வீட்டுக்குள் எந்த  கெடுபிடியும்  இல்லாமல் சென்று  வருவது கட்சியினர்  இடையே மிகுந்த  சந்தோஷத்தை  ஏற்படுத்தி  இருக்கிறது. ''போயஸ்  கார்டன் போனா நிக்கக்கூட  விட மாட்டாங்க  போலீஸ்காரங்க. இங்க டீ-காஃபி, உட்கார சேர், தனி  பாத்ரூம், அவரே வந்து  நேர்ல  பேசறதுன்னு இதுவரைக்கும் எங்க  கட்சியில பாக்காத காட்சிகளா  இருக்கு” என்கின்றனர் கட்சிக்கார்கள்.  

3. முதல்வர் போலவே இந்த  இரண்டு  நாட்களில் அவரது  வீட்டில் இன்னொரு  பிரபலமும்  உருவாகி  இருக்கிறார். அது ஓ.பி.எஸ் வளர்க்கும்  காளை. அவரது  வீட்டுக்கு  வரும் பெரும்பாலானோர், அதனுடன்  செல்ஃபி  எடுத்துக் கொள்கின்றனர். மேலும் அங்கு உள்ள இரண்டு கன்றுக்குட்டிகளை கொஞ்சாமல் அங்கிருந்து செல்வது இல்லை. ஜல்லிக்கட்டுக்காக  போராடிய  மாணவர்கள், அவரைச் சந்திக்க வீட்டுக்கு  வந்தபோது  அந்தக்  காளையை  அவர்களிடம் காட்டினாராம். தினமும் வெளியில் கிளம்பும் முன்பு பசுவுக்கும், காளைக்கும் தீனி வைத்துவிட்டு, அதை  வணங்கிவிட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஓபிஎஸ்  என்கின்றனர் அங்கு  உள்ள ஊழியர்கள்.

ஓ பன்னீர்செல்வம்
 

4. மெரினா தியானம் நடத்திவிட்டு வந்த அந்த  இரவு முழுவதுமே முதல்வர் தூங்கவில்லையாம். ஆனாலும் மறுநாள் முழுவதும் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி  கொடுப்பது, கட்சிக்காரர்களைச் சந்திப்பது என்று  முழு  உற்சாகத்துடன்  இருந்திருக்கிறார்.  

5. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தொழில்நுட்பப்  பிரிவுச்  செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் தொழில்நுட்பப்  பிரிவை சேர்ந்தவர்கள் வீட்டின்  பல்வேறு  இடங்களில் எல்.ஈ. டி. டிவி களை கொண்டு வந்து வைத்து முதல்வர்  கொடுக்கும்  பேட்டிகளை நேரலையாக ஒளிபரப்பிக்  கொண்டு இருந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம்


6. ராஜேந்திரன்  என்பவர் தீபாவை  பொதுச்செயலாளர் ஆக்கக்  கோரியும், ஓ.பி.எஸ்சை முதல்வராக  வலியுறுத்தியும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டார். பல  பெட்டிகளுடன் உட்கார்ந்து இருந்த அவர் ஓபிஎஸ்ஸை முதல்வர்  ஆக்குவது, தீபாவை  பொதுச்செயலாளர்  ஆக்குவது குறித்தெல்லாம் சட்ட நுணுக்கங்களை அள்ளி  வீசிக்கொண்டு  இருந்தார் . சிலர்  அதை ‘ஃபேஸ்புக் நேரலை’ செய்து  கொண்டு இருந்தனர்.

ஓ.பி.எஸ்  வீடு
 

. கீரின் வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் வீடுகளை பராமரிக்க பொதுப்பணித்துறை சார்பில் தனியாருக்குக் காண்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. தற்போது ஓ.பி.எஸ் வீட்டுக்கு மக்கள் அதிகமாக வருவதால், விளக்கு அமைப்பது, பந்தல் போடுவது உள்ளிட்ட பணிகளுக்கு அந்த கண்ட்ராக்டரை அழைத்த போது வர மறுத்துவிட்டாராம். இதனால் வெளியில் இருந்தே விளக்குகள், பந்தல்கள்  உள்ளிட்டவை வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது

8. முதல்வருக்கு  அவரது  பேத்தியின்  மீது மிகுந்த  பாசம். கடந்த  இரண்டு நாட்களாக பிஸியாக  இருந்ததால் பேத்தியைப் பார்க்க முடியவில்லை. நேற்று  இரவு  தாத்தாவை  பார்த்தே  ஆக  வேண்டும்  என்று ஓடி வந்து  விட்டாள்.  ‘தாத்தா வேலையா முடிச்சுட்டு  வந்து உன்னைய  பாக்குறேன் ' என்று சமாதானபடுத்தி அனுப்பி  இருக்கிறார். 

ஓ.பி.எஸ்

9. ஓ.பன்னிர் செல்வம்  அமைச்சராக  இருக்கின்ற  காலத்தில்  இருந்தே  அவரது  வீட்டில்  தினமும் 50 பேருக்கு  சாப்பாடு தயாராகும். தற்போது  மக்களும், பத்திரிகையாளர்களும் , காவல் துறையினரும் அதிக  அளவில் வந்து போவதால் காலை,மதியம், இரவு என மூன்று வேளையும் வெளியில்  இருந்து உணவு  தயார் செய்து  கொண்டு வருகின்றனர். பொங்கல்,லெமன், புளியோதரை, இட்லி என சுடசுட உணவு  பரிமாறப்படுகிறது. இதற்கான  தனியாக  ஆட்கள்  நியமிக்கபட்டு ''அண்ணே சாப்பிட்டீங்களா'' என  அனைவரையும் அவர்கள் விசாரித்துக்  கொண்டே இருக்கின்றனர்.

10.  இரவு 10 மணிக்கு மேல் அங்கு  இருப்பவர்களை, 'ஐயா  கொஞ்சம்  ஓய்வு எடுக்கணும்’ என்று அன்பாகக்  கூறி வெளியில் அனுப்புகின்றனர் காவல்  துறையினர். 'ஆனாலும் ‘போலீஸை முழுசா நம்பலாமானு தெரியலையே.. நாமதான் ஓபிஎஸ் அண்ணனுக்கு பாதுகாப்பா இருக்கணும்’ என்று சொல்லியபடி சிலர்  அங்கே தங்கியும் இருக்கின்றனர்.

நேற்று கவர்னர் - முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு முடிந்துவிட்ட நிலையில், இன்னும் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது அவர் வீடு!

http://www.vikatan.com/news/tamilnadu/80338-how-is-opanneerselvams-residence-now-spotreport.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.