Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா சிகிச்சை விஷயத்தில் அப்போலோ சொன்னது உண்மையா? வெடிக்கும் சர்ச்சை! #Jayalalithaa #Apollo

Featured Replies

ஜெயலலிதா சிகிச்சை விஷயத்தில் அப்போலோ சொன்னது உண்மையா? வெடிக்கும் சர்ச்சை! #Jayalalithaa #Apollo

அப்போலோ

மிழ்நாட்டில் கடந்த மூன்று மாதத்தில் நடந்த பரபரப்பான நிகழ்வுகளைப் போன்று இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் நடந்தேயில்லை. இந்தியாவே மிரண்டு போகும் அளவுக்கு தமிழ்நாட்டில் எழுச்சிகளும், மர்மங்களும், அரசியல் சண்டைகளும் நடந்தேறி வருகின்றன. இவற்றில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சை என்பதுதான் மிகப்பெரிய மர்மமாக இன்றுவரை தொடர்கிறது. "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவ்வப்போது புகைப்படம் அல்லது வீடியோ வெளியிட்டு இருக்கலாமே" என்ற மக்களின் கேள்விக்கு, "அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ஐ.சி.யு பிரிவில் சி.சி.டி.வி. கேமாரா இல்லை" என அப்போலோ நிர்வாகமும், சசிகலா தரப்பும் உறுதியாகத் தெரிவித்தது.

ஆனால் தற்போது, அப்போலோ மருத்துமனையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், "எங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவரை, உலகின் எந்த மூலையில் இருந்தும் எங்களால் வீடியோவால் கண்காணிக்க முடியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், 'ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த அறையில் எப்படி கண்காணிப்பு கேமரா இல்லாமல் இருந்திருக்கும்?' என்று சமூக வலைதளங்களில் சசிகலாவிடமும், அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடமும் மக்கள் கேள்வி கேட்டுள்ளனர்.

ஜெயலலிதா - சசிகலா

கடுமையான காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது; அவரது உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள தமிழக மக்கள் தீவிரமாக முயற்சி மேற்கொண்ட போதிலும், எந்தவித உறுதியான தகவலும் வெளியிடப்படவில்லை.

சசிகலா தரப்பிலிருந்தோ, அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்தோ தெரிவிக்கப்பட்ட தகவலில், "ஜெயலலிதா உடல்நலம் தேறி வருகிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று மட்டுமே இறுதிவரை சொல்லப்பட்டு வந்தது. "ஜெயலலிதா மெதுவாகப் பேசினார்; உணவு சாப்பிட்டார்; சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்" என்றெல்லாம் அவ்வப்போது அறிக்கைகளும் வெளியாகின. ஆனால், பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க-வின் சாமான்ய தொண்டர்கள் சந்தேகத்தைப் போக்கக்கூடிய வகையில் எவ்வித ஆதாரங்களும் வெளியிடப்படவில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்றோ, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பின்னரோ அவரது புகைப்படம் அல்லது வீடியோ ஏதும் வெளியிடப்படவில்லை.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, தி.மு.க செயல்தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்களும் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் சென்ற எந்த தலைவரும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவ்வளவு ஏன், ஜெயலிதாவைப் பார்க்க ஓ.பன்னீர்செல்வத்தையே அனுமதிக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அப்படி ஜெயலலிதாவுக்கு என்னதான் நடந்தது? என மக்கள் குழம்பியநிலையிலேயே இருந்தனர். அவரைப் பற்றிய எந்தவொரு தகவலையும் வெளியிடாவண்ணம் சசிகலா அரணாகப் பார்த்துக் கொண்டார்.

அப்போலோ மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ வெப்சைட்

இறுதியாக, மாரடைப்பால் ஜெயலலிதா, டிசம்பர் மாதம் 5-ம் தேவி நள்ளிரவு 11.30 மணியளவில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மரணத்தை பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க தொண்டர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் நீடித்து வரும் மர்மம் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை எழுப்பியதெல்லாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் தற்போது பரவிவரும் தகவல் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளன. "அப்போலோ மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் 'எந்தவொரு மருத்துவமனையிலிருக்கும் நோயாளியையும் உலகின் எந்த மூலையில் இருந்தும் கண்காணிக்க முடியும். ஐ.சி.யு-வில் உள்ள நோயாளிகளை அடிக்கடி சென்று பார்ப்பதால், அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்ப்படும் அதனால் கேமராவின் மூலமே கண்காணிப்போம், அதோடு மட்டுமல்லாமல் மருத்துவ உபகரணங்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதை அறிய கண்காணிப்பு கேமரா அவசியம் என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கிறோம்" என்ற தகவல்தான் அது.

சசிகலா

அப்படியானால், ஜெயலலிதா அனுமதிக்கப்படிருந்த அப்போலோ அறையிலும் கேமரா இருந்திருக்க வேண்டுமல்லாவா? 'ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அந்த அறையில் கேமரா பொருத்தப்படவில்லை' என்று மருத்துவமனை நிர்வாகம் சொல்வதற்குக்கூட வாய்ப்பிருக்கிறது. சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், அங்காவது கேமரா இருந்திருக்க வேண்டும் என மக்கள் கருதுகிறார்கள். 

தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலைக்கும், அ.தி.மு.க.வில் ஏற்ப்பட்டுள்ள மிகப்பெரிய குழப்பத்துக்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்கிறது என்று மக்கள் கருதுவதுடன், மருத்துவமனையில் உள்ள வீடியோ வெளியானால் அதற்கெல்லாம் ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைக்கிறார்கள்.அண்மையில் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், சசிகலா மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தார்.

பன்னீர்செல்வம்

"நான் சொல்லியது 10 சதவிகிதம் மட்டுமே இன்னும் 90 சதவிகித உண்மைகளைச் சொன்னால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரளயமே ஏற்படும்" என்றும் அவர் சொன்னார். அப்படியென்றால் அந்த 90 சதவிகித உண்மை ஜெயலலிதா மரணம் பற்றிய உணமையாக இருக்குமோ என மக்கள் மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்த்துள்ளனர். எப்போது எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே இன்றைய தமிழக அரசியல் நிலைமையாக உள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/80349-social-media-talk-about-jayalalithaa-demise-controversy-jayalalithaa-apollo.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.