Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்று மகிழ்ச்சி... இன்று அதிர்ச்சி...! தீபாவின் இந்த நிலைக்கு இதுதான் காரணம்?

Featured Replies

அன்று மகிழ்ச்சி... இன்று அதிர்ச்சி...! தீபாவின் இந்த நிலைக்கு இதுதான் காரணம்?

 
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டில் சில நாட்களாக ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அவரது தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

தீபா


ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளரான சசிகலாவின் தலைமையை ஏற்காதவர்கள் தீபாவின் பின்னால் அணிவகுத்தனர். தீபாவின் வீடு அமைந்துள்ள தி.நகருக்கு தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க.வினர் குவிந்தனர். தொடர்ந்து தீபா பேரவையும் தொடங்கப்பட்டு பேனர்களும் வைக்கப்பட்டன. தொண்டர்களைச் சந்தித்த தீபா, ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதி அரசியல் பயணம் குறித்து அறிவிப்பதாக தெரிவித்தார். இதற்கிடையில் சசிகலா, முதல்வராக தேர்வு செய்யப்பட்டதும் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்தார் தீபா. இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர். தீபாவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் ஜெயலலிதாவை நினைவுப்படுத்தும் வகையில் இருந்தன. 

இந்நிலையில், அ.தி.மு.க.வில் உள்கட்சி மோதலால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோர் தலைமையில் இரண்டு அதிகார மையங்கள் உருவாகி இருக்கின்றன. சசிகலாவின் தலைமையை விரும்பாதவர்கள் தீபாவை ஆதரித்த நிலையில் தற்போது அவர்களில் பெரும்பாலானவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி முடிவுக்குப்பிறகு தீபாவின் வீட்டுக்கு வரும் ஆதரவாளர்கள் கூட்டம் குறையத் தொடங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக உளவுப்பிரிவு போலீஸாரும் உயர் அதிகாரிகளுக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். இது சசிகலா தரப்புக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் பெரும் தலைவலியாக ஓ.பன்னீர்செல்வம் இருப்பதால் அவர்கள் அமைதியாக இருக்கின்றனர். 
இதுகுறித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், "தீபாவை ஆதரித்த கட்சியின் நிர்வாகிகள் மீது இதுவரை சசிகலா நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்த கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார் சசிகலா. சசிகலாவின் தலைமையை பெரும்பாலான கட்சியின் தொண்டர்கள், மக்கள் விரும்பவில்லை. வேறுவழியின்றி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்றும், அவரைப் போல உருவத் தோற்றம் இருப்பதைப் பார்த்தும் தொண்டர்கள் அங்கு சென்றனர். தற்போது கட்சியினருக்கு வழிகாட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். இதனால் தீபா வீட்டில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை தொண்டர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஆதரித்து வருகின்றனர். இதுவே எங்களுடைய பலம். ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். இதனால் அவரை நம்பி அனைவரும் வருகின்றனர். தீபாவையும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு அவர் ஆலோசித்துவிட்டு முடிவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். எங்களுடைய ஒரே நோக்கம் சசிகலா தரப்பினரிடம் ஆட்சியும், அதிகாரமும் சென்று விடக்கூடாது. அதே சமயத்தில் தீபா எங்களுக்கு எதிரியல்ல"என்றனர். 

தீபா ஆதரவாளர்கள் கூறுகையில், "ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் கூடியிருக்கும் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் தீபாவின் ஆதரவாளர்கள்தான். ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தீபா வருவதாக தகவல் பரப்பப்படுகிறது. இதனால் அங்கு தீபாவின் ஆதரவாளர்கள் செல்கின்றனர். உண்மையிலேயே அவர்கள் தீபாவின் ஆதரவாளர்கள். ஜெயலலிதாவின் விசுவாசிகள் நிச்சயம் தீபாவுக்கு ஆதரவளிப்பார்கள். தினமும் அவரது வீட்டுக்கு வரும் ஆதரவாளர்கள் கூட்டம் குறையவில்லை. ஜல்லிக்கட்டு விவகாரத்தின் போது கூட்டம் இல்லை. தற்போது வழக்கம் போல கூட்டம் உள்ளது. இதுபோன்ற தேவையில்லாத வதந்திகள் பரப்பப்பட்டாலும் தீபாவின் பின்னாலிருக்கும் கூட்டத்தை யாரும் கலைக்க முடியாது. கட்சியில் மட்டுமல்ல மக்களிடையேயும் தீபாவுக்கு ஆதரவு அதிகரித்து வருவதை எதிரணியில் இருப்பவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை"என்றனர். 

 இதுகுறித்து தீபாவிடம் கருத்துக் கேட்க அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போதும் அவர் பதில் அளிக்கவில்லை. வாட்ஸ்அப் மூலம் தகவலை அனுப்பியும் அவர் தரப்பிலிருந்து பதில் இல்லை.  

http://www.vikatan.com/news/tamilnadu/80382-current-status-of-deepa-in-opsvssasikala-situation.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.