Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிமுக எம்.எல்.ஏக்கள் வேறு ரகசிய இடத்திற்கு மாற்றம்!

Featured Replies

அதிமுக எம்.எல்.ஏக்கள் வேறு ரகசிய இடத்திற்கு மாற்றம்!
 
சசிகலா கோஷ்டியினர் தங்களுக்கு ஆதரவு சேர்ப்பதற்காக அதிமுக எம்.எல்.ஏக்களை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் கோல்டன் பே ரெசார்ட்டில் கடந்த இரண்டு நாட்களாக எம்.எல்.ஏக்கள் தங்க வைத்திருந்தனர். 
 
ரிசார்ட்டுக்கு வந்துபோகும் வாகனங்களால் எரிச்சலுக்கான ஊர்மக்கள், தங்களது சுதந்திரம் பறிபோகிறது என்று  சாலைமறியலில் ஈடுபட்டனர்.  சசிகலா கோஷ்டியினரே அவர்களை சமாதானப்படுத்திவிட்டனர்.  இருப்பினும், இந்த இடம் பலருக்கும் தெரிந்துவிட்டதால் வேறு ரகசிய இடத்தில் தங்க வைக்கலாம் என்று முடிவெடுத்து, பழையபடி சொகுசு பேருந்தில் அழைத்துச்சென்றாலும் தெரிந்துவிடும் என்பதால், தனித்தனி காரில் எம்.எல்.ஏக்களை அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
 
  • தொடங்கியவர்
எங்க எம்.எல்.ஏ., காணாம போயிட்டார்...: குவியும் புகாரால் 'டரியல்' ஆகும் போலீஸ்
 
 
 
 
Tamil_News_large_170827920170210235434_318_219.jpg
 

சசிகலா தரப்பினரின் பிடியில் சிக்கியுள்ள, எம்.எல்.ஏ.,க்களை காணவில்லை என, தமிழகம் முழுவதும் குவியும் புகார்களால், போலீசார் செய்வதறியாமல் திகைக்கின்றனர்.

கோவை, காந்திபுரம் பகுதி, அ.தி.மு.க., துணை செயலர் சீனிவாசன் மற்றும் கட்சியினர், மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் நேற்று அளித்த புகார்:கோவை மாவட்டத்தில், ஒன்பது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும், எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகம் உள்ளது.

ஒரு வாரமாக, எம்.எல்.ஏ., அலுவலகங்கள் பூட்டி கிடக்கின்றன. எம்.எல்.ஏ.,க்கள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டால், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. புகார் கொடுக்க முடியாமல், பொதுமக்கள் தவிக்கின்றனர். எனவே, காணாமல் போன, எம்.எல்.ஏ.,க்களை கண்டுபிடித்து தர வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

சேலம், கொண்டலாம்பட்டி பகுதி, அ.தி.மு.க., செயலர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள், சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:நாங்கள், அ.தி.மு.க.,வில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகிறோம். மூன்று நாட்களுக்கு முன் எங்கள் தொகுதி, எம்.எல்.ஏ., சக்திவேலை, வார்டு பிரச்னைக்காக சந்திக்க, அவரது இல்லத்துக்கு சென்றோம்.
அங்கிருந்தவர்கள், எம்.எல்.ஏ., எங்கு சென்றார் என தெரியவில்லை என கூறினர். நாங்கள் போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதை தெரிவிக்க, மாநகர மாவட்ட செயலரும், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான வெங்கடாசலத்தை சந்திக்க சென்றோம். அவரையும் மூன்று நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை.
இருவரையும் சமூக விரோதி கள் கடத்தியிருக்கலாம் என அஞ்சுகிறோம். அவர்களது உயிருக்கு ஆபத்து வரும் முன், கண்டுபிடித்து தருமாறுகேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ.,க்களை கண்டுபிடித்து தருமாறு, கட்சி நிர்வாகிகள் புகார் அளித்து வருவதால், போலீசார் தலையை பிய்த்து கொள்கின்றனர்.

துணை சபாநாயகரை தேடி விளம்பரம்

'காணோம்...- காணோம்-... பொள்ளாச்சி தொகுதி, எம்.எல்.ஏ.,வும், துணை சபாநாயகருமான ஜெயராமனை காணோம்' என்ற விளம்பரம், அவரது படத்துடன், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.'பேஸ்புக்' பதிவு ஒன்றில், 'அ.தி.மு.க.,வில் போட்டியிட்ட ஜெயராமனுக்கு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்காக ஓட்டு போட்டு, நான்கு முறை வெற்றி பெற வைத்தோம். நேற்று காலை முதல் அவரை காணவில்லை. தொடர்புக்கு, பொள்ளாச்சி சட்டசபை தொகுதி வாக்காளர்கள்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

'வாட்ஸ் ஆப்' பகிர்வு போட்டோ ஒன்றில், ஜெயலலிதாவுக்கு ஜெயராமன் பூங்கொத்து கொடுப்பது போன்ற போட்டோவுடன், 'பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமனை காணவில்லை. அவர் எங்கிருந்தாலும், தொகுதிக்கு உடனடியாக வரவும். நல்ல உயர்தர ஓட்டலில் தங்குவதற்கு, தொகுதி மக்கள் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம்' என, குறிப்பிட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும், இந்த விளம்பரங்களால் அ.தி.மு.க., வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1708279

  • தொடங்கியவர்

கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் இடமாற்றமா? - அதிமுகவில் அடுத்தகட்ட பரபரப்பு

 
 
கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சொகுசு விடுதிக்கு செல்லும் சுழல் விளக்கு பொருத்தப்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்கள் | படங்கள்: கோ.கார்த்திக்
கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சொகுசு விடுதிக்கு செல்லும் சுழல் விளக்கு பொருத்தப்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்கள் | படங்கள்: கோ.கார்த்திக்
 
 

கல்பாக்கத்தை அடுத்த கூவத் தூரில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுவதால் அதிமுகவில் அடுத்தகட்ட பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் மீது புகார் தெரிவித்து முதல் வர் பன்னீர்செல்வம் பேசியதை யடுத்து, அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரு கின்றன. சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதற் காக, அதிமுக எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக் கம் அடுத்த கூவத்தூர் கிராமப் பகுதியில் உள்ள ‘கோல்டன் பே’ என்ற தனியார் சொகுசு விடுதியில் மூன்றாவது நாளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சசிகலாவுக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்த சில எம்எல்ஏக்களை, மாமல்லபுரம் அடுத்த வடநெம்மெலி மற்றும் பூந்தண்டலம் ஆகிய பகுதியில் உள்ள அக்கட்சி பிரமுகர்களின் பங்காளாக்களில் தங்க வைத்துள்ளதாக தெரிகிறது. விடுதியில் தங்கியுள்ள சட்டப் பேரவை உறுப்பினர்களிடம் பேச் சுவார்த்தை நடத்தும் பணிகளில் சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. மேலும், நேற்று முன்தினம் நள்ளிரவு 5 முக்கிய அமைச்சர்கள் சசிக லாவை ஆதரிக்கும்படி எம்எல்ஏக்களிடம் பேசியதாக வும், சில சட்டப்பேரவை உறுப் பினர்கள் அதிருப்தியில் உள்ள தாகவும் கூறப்படுகிறது.

வானூர் எம்எல்ஏ. சக்ர பாணியை நேரில் சந்தித்து பேசு வதற்காக அவருடைய உதவி யாளர்கள் மற்றும் குடும்பத்தினர், கூவத்தூர் விடுதிக்கு வந்தனர். அங்கு, விடுதிக்கு செல்லும் வழியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அவர்களது காரை வழிமறித்து திருப்பி அனுப்பினர். இதனால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற் பட்டது.

பிற்பகல் 2 மணியளவில் விடுதியில் இருந்த செல்போன் சிக்னல் ஜாமர் கருவி பொருத் தப்பட்ட வாகனம், சசிகலாவால் அதிமுக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செங்கோட் டையன் வாகனம் உட்பட 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெளியேறின. எனினும், செங் கோட்டையன் மட்டும் அடிக்கடி முகத்தை மூடியவாறு விடுதிக்கு சென்று வந்தார்.

கூவத்தூர் பகுதியில் தனியார் விடுதியில் எம்எல்ஏக்கள் தங்கி யிருந்தாலும், குறைவான அளவே எம்எல்ஏக்கள் தங்கியி ருப்பதாக அதிமுக நிர்வாகி கள் தெரிவித்தனர். மேலும், அமைச்சர்களின் வீடுகளில் 30-க்கும் மேற்பட்ட எம்எல் ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள தாகவும். மற்றவர்கள் பூந்தண் டலம் மற்றும் சென்னை, வட நெம்மெலி ஆகிய பகுதிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், நேற்று முன்தினத்தைவிட அதிக அளவிலான வாக னங்கள் விடுதிக்கு வந்து சென்றதால், விடுதியில் தங்கியிருந்த எம்எல்ஏக்களை வேறு இடத்துக்கு மாற்றி வருவதாகக் கூறப்படு கிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/கூவத்தூரில்-தங்க-வைக்கப்பட்ட-எம்எல்ஏக்கள்-இடமாற்றமா-அதிமுகவில்-அடுத்தகட்ட-பரபரப்பு/article9535474.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.