Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுமுறையில் முதல்வரின் பாதுகாப்பு எஸ்.பி., : யாரை ஆதரிப்பது என்பதில் குழப்பம்

Featured Replies

விடுமுறையில் முதல்வரின் பாதுகாப்பு எஸ்.பி., :
யாரை ஆதரிப்பது என்பதில் குழப்பம்
 
 
 

முதல்வர் பன்னீர்செல்வம் - சசிகலா, இருவரில் யாரை ஆதரிப்பது என தெரியாமல், போலீசார் குழப்பத்தில் உள்ளனர். அதனால், முதல்வரின் பாதுகாப்பு பிரிவு, எஸ்.பி., திடீரென விடுமுறையில் சென்றார்.

 

Tamil_News_large_170819020170211003046_318_219.jpg

முதல்வர் பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பு பிரிவு, எஸ்.பி., சுதாகர்; மதுரையை சேர்ந்த இவர், 2015 முதல், இப்பொறுப்பில் உள்ளார். முதல்வரின் வாகனம் புறப்படும் முன், அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் கவனிக்க வேண்டிய, முக்கிய பொறுப்பில் உள்ளவர்.

விசாரணை :


ஜெயலலிதா இருக்கும் வரை, பொது நிகழ்ச்சி களில், இவர் தலை காட்டியதில்லை. அவரது மறைவிற்கு பின், பன்னீர் முதல்வரானதும், அவரது நிழலாக வலம் வந்தார். பிப்., 7ல், ஜெ., நினைவிடத்தில், பன்னீர் பேட்டி அளித்த போதும், அருகில் நின்றிருந்தார். இதன்பின், பன்னீர் வீட்டுப் பக்கம், எஸ்.பி., சுதாகரை காண முடியவில்லை. மும்பையிலிருந்து கவர்னர், சென்னை திரும்பும் தகவல், நேற்று முன்தினம் பிற்பகல் உறுதியானது.

கவர்னரை, விமான நிலையத்தில் சென்று சந்திக்க, ஓ.பி.எஸ்., முடிவு செய்தார். வீட்டிலிருந்த ஓ.பி.எஸ்., 'எங்கே, செக்யூரிட்டி எஸ்.பி.,யை காணோம்' என, அவரது உதவி யாளர்களிடம் கேட்டுள்ளார். அவர்கள், டி.ஜி.பி., அலுவலகத்தில் உள்ள உயரதிகாரிகளிடம் விசாரித்தனர். 'எஸ்.பி., சுதாகர், டி.ஜி.பி.,யிடம் அனுமதி பெற்று, விடுமுறையில் சென்று விட்டார்.

மாற்று, எஸ்.பி.,யை சில மணி நேரத்தில், முதல்வர் வீட்டிற்கு அனுப்பி விடுவோம்' எனக் கூறினர். இத்தகவல், முதல்வர் பன்னீருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகே அவர், டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை நேரில் அழைத்து விசாரித்தார்.

அப்போது, 'அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சட்ட விரோதமாக, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக, விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும்' என, உத்தர விட்டதாக தெரிகிறது. அதற்கு, அதிகாரிகள்

தரப்பில் ஒத்துழைப்பு கொடுக்கப்பட வில்லை என தெரிகிறது. அதையடுத்து, சிட்டி போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜை, இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அரசாணை :


அந்த தகவல், மீடியாக்களில் பரபரப்பாக வெளியா னது. ஆனால், அது குறித்த அரசாணை கடைசி வரை வெளியாகவில்லை. முதல்வரின் உத்தரவை கேள்விப்பட்ட உயரதிகாரிகள், 'காபந்து முதல்வராக இருக்கும் போது, அதிகாரிகள் மாற்றம் உட்பட முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது. அப்படி செய்தால் சட்ட சிக்கலை ஏற்படுத்தும்' என,கூறியுள்ளனர்.

அப்போது தான், அதிகாரிகள் தரப்பில் தமக்கு ஒத்துழைப்பு இல்லை என்பதை, பன்னீர்செல்வம் புரிந்து கொண்டு, மவுனமாகி விட்டார். இந்த பரபரப்பு சம்பவங்கள் நேற்று முன்தினம் காலை நடந்து முடிந்ததும், மாலை விமான நிலையத்திற்கு சென்று கவர்னர் வித்யாசாகரை வரவேற்க, பன்னீர்செல்வம் புறப்பட்டார்.

முதல்வரின், 'கான்வாய்' வாகனத்தை வழி நடத்திச் செல்லும், செக்யூரிட்டி, எஸ்.பி., இல்லை என்ற தகவல் தெரிய வந்ததால், அங்கு செல்ல முடியவில்லை.மற்றொரு முதல்வர் செக்யூரிட்டி, எஸ்.பி., சுரேஷ், கவர்னர், 'கான்வாய்' வாகனத்தை வழி நடத்தும் பணிக்காக, விமான நிலையம் சென்று விட்டார். இந்த தகவல், டி.ஜி.பி., அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு எட்டியது.

முதல்வர் செக்யூரிட்டி, எஸ்.பி.,யாக பணியாற்றிய, அனுபவம் வாய்ந்த முத்துச்சாமியை, ஓ.பி.எஸ்., வீட்டுக்கு அனுப்பினர். முத்துச்சாமி, சீருடைப் பணியாளர் தேர்வாணைய, எஸ்.பி.,யாக இருக்கிறார்.

ஓ.பி.எஸ்., வீட்டிற்கு சென்ற முத்துச்சாமி, ஓ.பி.எஸ்., ராஜ்பவன் செல்வதற்கான, 'ரூட்' பணியில் ஈடுபட்டார். அதற்குள், விமான நிலையத் திலிருந்து, ராஜ்பவனுக்கு கான்வாயை வழிநடத்திச் சென்ற, எஸ்.பி., சுரேஷ், ஓ.பி.எஸ்., வீட்டிற்கு அவசரமாக வந்து, 30 நிமிடமே பணியாற்றிய, தற்காலிக எஸ்.பி., முத்துச் சாமியை, 'ரிலீவ்' செய்தார்.

கவர்னரை சந்தித்த, ஓ.பி.எஸ்., போலீஸ் அதிகாரி கள் தனக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்ற விபரத் தையும், அத்தோடு சில போலீஸ் அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் நேற்று போலீஸ் அதிகாரிகளை அழைத்துகவர்னர் விசாரித்தார்.

சீனியாரிட்டி மாற்றம்:


எஸ்.பி., விசுவாசம் : முதல்வர் செக்யூரிட்டி, எஸ்.பி., சுதாகர், 2002ம் ஆண்டு பேட்ச் நேரடி, டி.எஸ்.பி., பதவி உயர்வில் எஸ்.பி.,யாக கோவை சென்றவர். சில ஆண்டுகள் இருந்தவர், மாறுதலில்,

 

டி.ஜி.பி., அலுவலக, 'கியூ' பிரிவிற்கு மாற்றப் பட்டார். ஒரு மாதம் பணியாற்றியதும், முதல் வர் பாதுகாப்பு பிரிவு, எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கார்டனில் நெருக்கம் காட்டிய எஸ்.பி.,யின் சீனியாரிட் டியை, பல மடங்கு உயர்த்தி, மேல்நிலைக்கு கொண்டு வர, கார்டன் தரப்பில், சீருடைப் பணி யாளர் தேர்வாணையத்திற்கு, 'கிரீன் சிக்னல்' தரப்பட்டது. தேர்வாணையத்தில் உள்ள உறுப்பி னர்கள், 'எஸ்.பி., பணியில் சேர்ந்த போது, அவருக்கு மேல் உள்ள சீனியர்களை விட, கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.

அதனால், அவரது சீனியாரிட்டி, அவரது மதிப் பெண் அடிப்படையில் உயர்த்தப்படுகிறது' என, தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினர். அரசும் அதை பரிசீலித்து, அரசாணை பிறப்பித் ததாக தெரிகிறது. இந்த நிலையில், சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் தேர்வு சரியில்லை என கூறிய ஐகோர்ட், அவர்கள் தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது.

அதனால், தேர்வாணையம் பிறப்பித்த உத்தர வும், செல்லுபடியாகாது என கூறப்படுகிறது. எஸ்.பி.,யின் சீனியாரிட்டி கனவு தகர்ந்துள்ள நிலையில், கார்டனுக்கு விசுவாசம் காட்ட விடுமுறையில் சென்றதாக, போலீஸ் வட்டா ரத்தில், பரபரப்பாக பேசப்படுகிறது.

காஞ்சிபுரம் போலீசார் சசிக்கு கரிசனம் :


சென்னை அருகேயுள்ள காஞ்சிபுரம் மாவட்டம் கூவாத்துார் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை யில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில், ஆளுங் கட்சியின் சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தங்கியிருக் கும் இடத்திற்கு, ஓ.பி.எஸ்., ஆதரவு அ.தி.மு.க., வினர் செல்லாதவாறு, அப்பகுதி போலீசார் பார்த்துக் கொண்டனர். அந்த பணியில் சில ரவுடி களையும் ஈடுபடுத்தி, ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களையும், செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகை யாளர்களையும் விரட்டியடித்தனர். காஞ்சிபுரத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள், சசி ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1708190

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.