Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்ல முடிவு எடுப்பேன்! திடீர் அதிர்ச்சி தரும் மாஃபா. பாண்டியராஜன்

Featured Replies

நல்ல முடிவு எடுப்பேன்! திடீர் அதிர்ச்சி தரும் மாஃபா. பாண்டியராஜன்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சசிகலா அணியில் உள்ளார். இவர் தொடர்ந்து சசிகலா முதல்வராக ஆதரவு தெரிவித்து வருகிறார்.

 

Will surely listen to the collective voice of my voters & decide in a way to uphold the dignity of Amma's memory & unity of AIADMK !

இந்நிலையில் பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தொகுதி மக்களின் கருத்துகளை கேட்டு நல்ல முடிவு எடுப்பேன். அம்மாவின் பெருமையை நிலைநிறுத்தும் வகையிலும், அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்கும் வகையிலும், நல்ல முடிவு எடுப்பேன்' எனக்கூறியுள்ளார்.

Mafo Pandiyarajan Tweet

http://www.vikatan.com/news/tamilnadu/80449-minister-mafo-pandiyarajas-viral-tweet-about-his-decision.html

  • தொடங்கியவர்

யாருக்கு ஆதரவு?- வாக்காளர்களை நாடுகிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

 

 
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டர் பக்கம்.
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டர் பக்கம்.
 
 

தனது வாக்காளர்களின் கருத்தைக் கேட்டு, யாருக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுப்பேன் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன.

கடந்த 7-ம் தேதி இரவு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென ஜெயலலிதா நினைவிடத்துக்குப் போய் மவுனமாக தியானத்தில் அமர்ந்ததும், 'கட்டாயப்படுத்தி தான் என்னிடம் ராஜினாமா கடிதம் பெற்றனர்' என்று கூறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தின் கவனம் ஓபிஎஸ் பக்கம் திரும்பியது.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக அவர் பக்கம் வரத் தொடங்கினர். 5 எம்எல்ஏக்களும் அவரது அணிக்கு வந்தனர்.

இதற்கிடையில், சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் உள்ளிட்ட 2 இடங்களில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அந்த எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

பள்ளிக் கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். இவருடைய ட்வீட்டுக்கு, நடிகர் அரவிந்த்சாமி அளித்த பதில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் "எனது வாக்காளர்களின் கருத்தை கண்டிப்பாக கேட்டு அம்மாவின் மதிப்பையும், அதிமுகவின் ஒற்றுமையையும் நிலைநிறுத்தும் வண்ணம் முடிவெடுப்பேன்" என்று தெரிவித்துள்ளார் மாஃபா பாண்டியராஜன்.

முன்னதாக, தன்னுடைய தொகுதிச் சென்று மக்களின் கருத்தைக் கேட்டு, அதையே சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவாக தெரிவிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/யாருக்கு-ஆதரவு-வாக்காளர்களை-நாடுகிறார்-அமைச்சர்-மாபா-பாண்டியராஜன்/article9536214.ece?homepage=true

  • தொடங்கியவர்

பன்னீர்செல்வத்தை சந்திக்கிறார் மாஃபா பாண்டியன்! அதிமுக தலைமையில் பரபரப்பு

pandiyarajan_long_1_11105.jpg

முதல்வர் பன்னீர்செல்வத்தை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் இன்று சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளார். முதன்முறையாக அமைச்சர் ஒருவர், முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவிக்க இருப்பது அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சசிகலா அணியில் இருந்து வந்தார். இவர் தொடர்ந்து சசிகலா முதல்வராக ஆதரவு தெரிவித்து வந்தார்ர்.

 

இந்நிலையில் பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தொகுதி மக்களின் கருத்துகளை கேட்டு நல்ல முடிவு எடுப்பேன். அம்மாவின் பெருமையை நிலைநிறுத்தும் வகையிலும், அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்கும் வகையிலும், நல்ல முடிவு எடுப்பேன்' எனக்கூறியுள்ளார்.

Mafo Pandiyarajan Tweet

இதனிடையே, முதல்வர் பன்னீர்செல்வத்தை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் இன்று சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளார். முதன்முறையாக அமைச்சர் ஒருவர், முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவிக்க இருப்பது அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/80449-minister-mafo-pandiyarajas-viral-tweet-about-his-decision.html

  • தொடங்கியவர்

'சிறு தூறல் சுனாமியாகும்'- பன்னீர் இல்லத்தில் மாஃபா பேட்டி

Maafa.Pandiarajan

நேற்றுவரை அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து கூறிவந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார். 

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா.பாண்டியராஜன், 'சிறு தூறலாக ஆரம்பித்துள்ள இந்த அரசியல் மாற்றம் சுனாமியாகும். மக்கள் ஆதரவு பொருத்துதான் இந்த மாற்றம். கட்சி ஒன்றாக சீரிய தலைமையில் இயங்க வேண்டும். ஆட்சி நல்லபடியாக நடத்த பன்னீர்செல்வத்தினால் தான் முடியும். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஓ.பி.எஸ் தலைமையில் பணியாற்ற வரவேண்டும்' என்று கூறினார். 

http://www.vikatan.com/news/tamilnadu/80481-little-drop-will-emerge-as-tsunami-says-maafa-pandiarajan.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.