Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிப்.11-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

Featured Replies

பிப்.11-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா | கோப்புப் படம்: வி.கணேசன்
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா | கோப்புப் படம்: வி.கணேசன்
 
 

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவது கவனிக்கத்தக்கது.

தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும், சட்டம் - ஒழுங்கு நிலை குறித்தும் மத்திய அரசிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் 3 பக்க அறிக்கை தாக்கல் செய்ததாக நேற்றிரவு தகவல் வெளியானது. தொலைக்காட்சி செய்தி சேனல்களில் இதுதொடர்பாக செய்திகள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஆளுநர் மாளிகை அந்தச் செய்தியை மறுத்துவிட்டதால், அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

பிப்ரவரி 7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் இன்று 5-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

2.30 pm: கூவத்தூர் விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா புறப்பட்டுச் சென்றார்.

2.03 pm: ஓரளவுக்குதான் பொறுமை காப்பேன். அதற்கு மேல் அதிமுகவினர் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டியதைச் செய்வோம் என சசிகலா கூறியுள்ளார். விரிவான செய்திகள்> ஓரளவுக்குதான் பொறுமை காப்பேன்: சசிகலா காட்டம்

1.55 pm: "யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்று நிருபிக்கச் சொல்ல வேண்டும். ஆளுநர் தாமதப்படுத்துவது ஜனநாயக விரோத செயல்" என்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

1.15 pm:மாஃபா பாண்டியராஜனைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வருவார்கள் என்று பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். விரிவான செய்திகள்> அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வருவார்கள்: ஓபிஎஸ் நம்பிக்கை

12.40 pm: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு சென்றார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். பிறகு, ஓபிஎஸ்ஸுக்கு தன் ஆதரவை தெரிவித்தார். விரிவான செய்திகள்> அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவருமே ஓ.பி.எஸ்.ஸை ஆதரிப்பர்: அணி மாறிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜ் உறுதி

12.55 pm: தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஏதுவாக, தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கக் கோரி, பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார். விரிவான செய்திகள்> எம்.எல்.ஏ.க்களுடன் சந்திக்க உடனே நேரம் ஒதுக்கக் கோரி ஆளுநருக்கு சசிகலா கடிதம்

12.40 pm: மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடக்கப்பட்டது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

12.21 pm: தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி கூறியுள்ளார்.

11.52 am: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்கிறார் பள்ளிக் கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். அதிமுகவில் பிளவு ஏற்பட்ட பிறகு முதல்வரை சந்திக்கும் முதலாவது அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆவார்.

11.17 am: தனது வாக்காளர்களின் கருத்தைக் கேட்டு, யாருக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுப்பேன் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். விரிவான செய்தி> யாருக்கு ஆதரவு?- வாக்காளர்களை நாடுகிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

10.40 am: நாமக்கல் எம்.பி. பி.ஆர். சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி. அசோக்குமார் ஆகிய இருவரும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். | விரிவான செய்தி > ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக எம்.பி.க்கள் இருவர் ஆதரவு; சசிகலாவுக்கு தொடரும் பின்னடைவு

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்11ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9536288.ece?homepage=true

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜெ. போயஸ் கார்டன் இல்லம் நினைவிடம்! பன்னீர்செல்வம் முதல் கையெழுத்து!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், போயஸ் கார்டன் இல்லம் ஜெ., நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

Poes garden

இந்நிலையில், இதுதொடர்பாக கையெழுத்து இயக்கம், க்ரீன்வேஸ் சாலையில் உள்ள, பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் இன்று துவங்கியது. இந்த கையெழுத்து இயக்கத்தை, பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு துவங்கி வைத்தார். இதில் மதுசூதனன், நத்தம் விஸ்வநாதான் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/80463-signature-campaign-begins-for-jayalalithaas-poes-garden-house-to-memorial.html

 

 

 

பிப்.11-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா | கோப்புப் படம்: வி.கணேசன்
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா | கோப்புப் படம்: வி.கணேசன்
 
 

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவது கவனிக்கத்தக்கது.

தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும், சட்டம் - ஒழுங்கு நிலை குறித்தும் மத்திய அரசிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் 3 பக்க அறிக்கை தாக்கல் செய்ததாக நேற்றிரவு தகவல் வெளியானது. தொலைக்காட்சி செய்தி சேனல்களில் இதுதொடர்பாக செய்திகள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஆளுநர் மாளிகை அந்தச் செய்தியை மறுத்துவிட்டதால், அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

பிப்ரவரி 7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் இன்று 5-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

4.45 pm: சென்னை ஆளுநர் மாளிகையை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

4.33 pm: சென்னை வந்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

4.00 pm: கூவத்தூர் விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா.

3.45 pm: முதல்வராக ஓபிஎஸ், தமிழகத்துக்கு நீதி என்பதே நமது போராட்டம் என்று கவுதமி தெரிவித்துள்ளார். விரிவான செய்திகள்> முதல்வராக ஓபிஎஸ் நீடிக்க வேண்டும்: கவுதமி விருப்பம்

3.40 pm: தங்களுடைய தொகுதி மக்களின் விருப்பத்தைக் கேட்டறிந்த பிறகு, யாருக்கு வாக்களிப்பது (சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பு) என முடிவெடுக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களுக்கு நடிகர் அரவிந்த்சாமி யோசனை தெரிவித்துள்ளார். விரிவான செய்திகள்> எம்.எல்.ஏ.க்கள் செய்ய வேண்டியவை: அரவிந்த்சாமி யோசனை

3.30 pm: "யார் வேண்டுமானலும் என்னை வந்து சந்திக்கலாம். நான் மயிலாப்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில்தான் உள்ளேன். மக்களை சந்தித்து சேவை ஆற்றுவதை நிறுத்தப்போவதில்லை" என்று மயிலாப்பூர் தொகுதி அதிமுக எல்எல்ஏ நட்ராஜ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விரிவான செய்திகள்> தொகுதி மக்கள் கருத்தறிந்து முடிவு: மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் தகவல்

3.15 pm: "நமது ஆட்சி விரைவில் மலரும் காலம் வரும். அப்போது அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நல்லாட்சியை வழங்குவோம்'' என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். விரிவான செய்திகள்> திமுக ஆட்சி விரைவில் மலரும்: ஸ்டாலின் நம்பிக்கை

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்11ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9536288.ece?homepage=true

  • தொடங்கியவர்

5.11pm: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்த அவரை, முதல்வரின் ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர். அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார்.

முன்னதாக சசிகலாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட வேண்டும்; அவர் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்றும், முதல்முதலில் அதிமுகவில் குரல் எழுப்பியவர் பொன்னையன் என்பது நினைவுகூரத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்11ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9536288.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிப்.11-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 

 
படம். | ம.பிரபு.
படம். | ம.பிரபு.
 
 

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவது கவனிக்கத்தக்கது.

தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும், சட்டம் - ஒழுங்கு நிலை குறித்தும் மத்திய அரசிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் 3 பக்க அறிக்கை தாக்கல் செய்ததாக நேற்றிரவு தகவல் வெளியானது. தொலைக்காட்சி செய்தி சேனல்களில் இதுதொடர்பாக செய்திகள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஆளுநர் மாளிகை அந்தச் செய்தியை மறுத்துவிட்டதால், அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

பிப்ரவரி 7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் இன்று 5-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

8.45 pm: பிளவு படுத்தவே காலதாமதம்: எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்த பிறகு சசிகலா பேட்டி

கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து விட்டு போயஸ் தோட்டம் திரும்பிய வி.கே.சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஆளுநர் கால தாமதம் செய்வது அதிமுகவை பிளவுபடுத்தும் ஒரு நடவடிக்கையாகவே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

எம்.எல்.ஏ.க்களை சந்தித்த பிறகு அதிமுக குடும்ப உறுப்பினர்களை சந்தித்த திருப்தி ஏற்பட்டுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மன உறுதியுடன் இருக்கிறார்கள்.

ஆளுநர் முடிவுக்காக இன்று வரை காத்திருந்தோம், நாளை முதல் எங்கள் போராட்டம் வேறு விதத்தில் இருக்கும், என்றார்.

அப்போது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா: ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என்றார்.


7.30 pm: முதல்வர் ஓபிஎஸ்-க்கு மேலும் ஒரு எம்.பி. ஆதரவு: திருப்பூர் எம்.பி., சத்தியபாமா ஆதரவு தெரிவித்தார். முதல்வருக்கு ஆதரவு தெரிவிக்கும் 4-வது எம்.பி. சத்தியபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தியபாமா கூறியதாவது: “முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு அதிமுக-வில் பதவி தரப்படுகிறது. மக்கள் ஜெயலலிதாவுக்குத்தான் ஆதரவு அளித்தனர்.

ஜெயலலிதாவுக்கு ஈடு இணை யாரும் கிடையாது. யாரும் வரவும் முடியாது. ஜெயலலிதாவுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் சசிகலா நிறைவேற்றவில்லை.

ஜெயலலிதாவின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமையும்” என்றார்.

6.30 pm: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, கிண்டி ஆளுநர் மாளிகையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்தார். தமிழக அரசியலில் நிலவும் சூழல் குறித்து ஆளுநருடன் ஆலோசனை செய்கிறார்.

6.28 pm: தமிழக மக்களின் நலன் காக்க தகுதி படைத்தவர் ஓபிஎஸ் மட்டுமே: பொன்னையன் பேச்சு

நல்ல தலைமையின் கீழ் அதிமுக இயங்க வேண்டும். தமிழக மக்களின் நலன் காக்க தகுதி படைத்தவர் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறினார். அதன் விவரம்: தமிழக மக்களின் நலன் காக்க தகுதி படைத்தவர் ஓபிஎஸ் மட்டுமே: பொன்னையன் பேச்சு

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்11ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9536288.ece?homepage=true

  • தொடங்கியவர்

மனதில் இருப்பதை சொல்லுங்கள் - எம்.எல்.ஏக்களிடம் தனித்தனியாக கேட்ட சசிகலா

சென்னை கூவத்தூரில், தனியார் விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏ-க்களை, தனித்தனியாக அழைத்து பொதுச் செயலாளர் சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார்.

 
மனதில் இருப்பதை சொல்லுங்கள்  - எம்.எல்.ஏக்களிடம் தனித்தனியாக கேட்ட சசிகலா
 
சென்னை:
 
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை சசிகலா அளித்திருந்தாலும், உடனடியாக அவரை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை. 
 
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சசிகலா இன்று பிற்பகல் கூவத்தூர் சென்று நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன்,  செங்கோட்டையன், தம்பிதுரை, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றனர்.
 
இந்நிலையில், ஒவ்வொரு எம்.எல்.ஏக்களையும் தனித் தனியாக அழைத்துப் பேசிய சசிகலா, அவர்களின் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறுமாறு கேட்டுள்ளார். குறிப்பாக மக்களிடம் தனக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது. கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் யார் முதல்வராக வரவேண்டும் என நினைக்கின்றனர், என பல கேள்விகளை எம்.எல்.ஏக்களிடம் எழுப்பியுள்ளார்.
 
எம்.எல்.ஏக்களும், சசிகலாவிடம் தங்களது தனிப்பட்ட விருப்பத்தையும் பகிர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்ட சசிகலா தனது இல்லத்திற்கு திரும்பினார்.
 
  • தொடங்கியவர்

அணி மாறும் யோசனையில் 12 அமைச்சர்கள்... பெரும்பான்மையை இழக்கிறதா சசிகலா முகாம்?!

பன்னீர்செல்வம்; சசிகலா

யார் முதல்வர் என்பதில் சசிகலாவுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்குமிடையே ஏற்பட்ட அதிகார மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. சசிகலாவை முன்னின்று ஆதரித்த அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொன்னையன், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் என அடுத்தடுத்து பன்னீர்செல்வம் முகாமுக்கு தாவி வருகிறார்கள். இதுவரை 6 எம்.எல்.ஏ.க்களும், சில எம்.பி.க்களும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்த பட்டியல் விரைவில் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.சி.வீரமணி, நிலோபர் கபில் என 12 அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கக் கூடும் என தகவல் வெளியாக அதிர்ந்து போயுள்ளது சசிகலா தரப்பு. இதையடுத்தே கூவத்தூர் சென்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார் சசிகலா. இந்த கூட்டத்தில் சசிகலாவுக்கு நேரடியாக ஆதரவு தெரிவிப்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் 111 பேர் தான்.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

மொத்தமுள்ள 135 பேரில் 117 பேர் ஆதரவு இருந்தால் தான் ஆட்சியமைக்க முடியும். ஆரம்பத்தில் 135 பேரின் ஆதரவையும் பெற்றிருந்த சசிகலாவின் முகாமில் இருந்து இதுவரை 7 பேர் அணி மாறியுள்ளனர். எம்.எல்.ஏ.க்களில் 17 பேர் யாருக்கு ஆதரவு என்பதை முடிவு செய்யாமல் உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது இருக்கும் 111 பேரில் அமைச்சர்கள் சிலர் அணி மாறும் யோசனையில் இருப்பதால் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சசிகலா தரப்பு.

தற்போதைய நிலையில் யாருக்கு ஆதரவு என முடிவெடுக்காமல் உள்ள எம்.எல்.ஏ.க்களும், அணி மாறும் முடிவில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களும் பன்னீர்செல்வத்தை ஆதரித்தால் சசிகலா தரப்புக்கான ஆதரவு என்பது 100க்கும் குறையும் என சொல்லப்படுகிறது.

சசிகலா

தமிழக சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. 233 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் சபாநாயகர் தவிர 232 பேர் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள். பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க 117 பேர் தேவை. அ.தி.மு.க.வில் மொத்தம் 135 சட்டமன்ற உறுப்பினர்களும், தி.மு.க.வில் 89, காங்கிரஸில் 8, முஸ்லீம் லீகில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என மொத்தம் 233 பேர் உள்ளனர்.

135 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் தனக்கு உள்ளதாக கூறி முதலில் ஆட்சியமைக்க கோரினார் சசிகலா. இது பின்னர் 131, 129 ஆக குறைந்து, இப்போது 111 ஆக மாறி இருக்கிறது. இதனால் சசிகலா தரப்புக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே சூழலில் பன்னீர்செல்வம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமானால் 117 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். அ.தி.மு.க.வில் இருந்து 117 பேரின் ஆதரவை பெற முடியாத பட்சத்தில், பன்னீர்செல்வம் தி.மு.க., காங்கிரஸ் உதவியை நாட வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாகும்.

இருக்கும் 111 பேரை தக்க வைக்கவும், யாருக்கு ஆதரவு எனமுடிவு செய்யாத 17 பேரை தங்கள் பக்கம் இழுக்கவும் முயன்று வருகிறது சசிகலா தரப்பு. அதேபோன்று தங்கள் பக்கம் இழுக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் முயற்சித்து வருகிறது.
குதிரை பேரம் துவங்கி விட்டது. தாமதம் ஊழலுக்கு வழி வகுக்கும் என்பார்கள். இங்கே ஆளுநர் முடிவெடுப்பதில் செய்யும் தாமதம் குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறது.

http://www.vikatan.com/news/coverstory/80492-12-ministers-in-oscillationwill-sasikala-lose-majority.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.