Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிர்ச்சி..! சசிகலாவின் செயல்பாடுகளால் ஜெ., விசுவாசிகள் கவர்னரை சந்திக்க தினகரன் எதற்கு என கேள்வி

Featured Replies

அதிர்ச்சி..!
சசிகலாவின் செயல்பாடுகளால் ஜெ., விசுவாசிகள்
கவர்னரை சந்திக்க தினகரன் எதற்கு என கேள்வி
 
 
 

ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட, தன் உறவினர் தினகரனுடன் சென்று, அ.தி.மு.க., பொதுச் செயலராக, தன்னை அறிவித்துக் கொண்டுள்ள சசிகலா, கவர்னரை சந்தித்திருப்பது, கட்சியில் குடும்ப ஆதிக்கம் தொடர்வதை உறுதிப்படுத்தி உள்ளதாக, ஜெ., விசுவாசிகள் குமுறுகின்றனர். 'கட்சி உறுப்பினர்கள் இருக்கையில், உறவினரைக் கூட்டிச் சென்றது ஏன்?' என, கேள்வி எழுப்புகின்றனர்.

 

Tamil_News_large_170883620170211232645_318_219.jpg

சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்தால் ஏற்பட்ட கோபம் காரணமாக, அவரை இருமுறை வீட் டில் இருந்து வெளியேற்றினார் ஜெயலலிதா. கடந்த, 1996 தேர்தலில், அ.தி.மு.க., தோற்க, சசிகலா குடும்ப ஆதிக்கமும் முக்கிய காரணம். அப்போது, அவரை வீட்டை விட்டு வெளியேற்றி னார் ஜெயலலிதா. தலை காட்டவில்லைபின், 2012 டிசம்பரில், மீண்டும் சசிகலா வெளியேற்றப்பட்டார்.

அப்போது, ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து, மீண்டும் போயஸ் கார்டனில்

நுழைந்தார். 'எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை; என் குடும்பத்தினரும், கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டார்கள்' என, கடிதத்தில் உறுதி கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, சசிகலாவின் கணவர் நடராஜன், திவாகர், தினகரன் உள்ளிட்ட அவர்களது, 20 குடும்ப உறுப்பினர்களின் பெயர்களைகுறிப்பிட்டு, 'அவர்க ளுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது' என, ஜெ., அறிவித்தார். அவர் மறையும் வரை, அந்த கும்பல், போயஸ் கார்டன் பக்கம் தலைகாட்டவில்லை.ஆனால், ஜெ., மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து, அவர்களது

ஆதிக்கம் துவங்கியது. ஜெ., இறுதிச் சடங்கிலும், அது தொடர்ந்தது. சசியின் தம்பி திவாகரன் அளித்த பேட்டியில், 'எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், அ.தி. மு.க., வலுவாக விளங்குவதற்கு, எங்கள் குடும்பமே காரணம்' என, கூறியிருந்தார்.

சமீபத்தில், முதல்வர் அணிக்கு தாவிய மூத்த நிர்வாகி மதுசூதனன், 'சசிகலா குடும்பத்தின் ஆதிக் கத்தை பொறுக்க முடியாததால், அங்கிருந்து வெளி யேறினேன்' என, புகார் தெரிவித்து உள்ளார். இந் நிலையில், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்க, ராஜ்பவனுக்கு, நேற்று முன்தினம் சென்ற சசிகலா, தன் அக்கா மகன் தினகரனை அழைத்துச் சென்றார். இதனால், கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இப்போது ஏன்? இது குறித்து,அவர்கள் கூறியதாவது:

 

சசிகலாவை, முதல்வர் பதவியில் அமர்த்த, தம்பிதுரை, பொன்னையன், செங்கோட்டையன் போன்ற கட்சி நிர்வாகிகள், கடுமையாக போராடி வருகின்றனர். ஆனால், யாருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என, ஜெயலலிதா கூறினாரோ, அவரை, முக்கிய மான சந்திப்புக்கு சசிகலா தயக்கமின்றி அழைத்துச் சென்றுள்ளார்;

இது, பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இது, அவரு டன் உள்ள மூத்த நிர்வாகிகளின் சுயமரியா தையை கேள்விக்குறியாக்கி உள்ளது. அவர் களை, சசிகலா நம்பாததையே காட்டுகிறது; குடும்ப ஆதிக்கம் தொடர்வதை உறுதிப்படுத்தி உள்ளது. சசிகலா முதல்வரானால், அரசு நிர்வாகத்திலும், குடும்பத்தாரின் குறுக்கீடு அதிகரிக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1708836

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.