Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலில் உச்சக்கட்ட மோதல்: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு -சென்னையில் விடிய விடிய சோதனை

Featured Replies

அரசியலில் உச்சக்கட்ட மோதல்: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு -சென்னையில் விடிய விடிய சோதனை

 

 
 

தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது.

 
 
 
 
அரசியலில் உச்சக்கட்ட மோதல்: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு -சென்னையில் விடிய விடிய சோதனை
 
சென்னை, பிப். 12-

தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு 2 மாதங்களாக அமைதியாக இருந்த தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. ஜெயலலிதாவின் திடீர் மரணத்துக்கு பிறகு முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஜெயலலிதாவால் ஏற்கனவே 2 முறை முதல்- அமைச்சராக அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் 3-வது முறையாக அப்பதவியில் அமர்ந்தார். இதனை தொடர்ந்து ‘‘ஆட்சிப் பொறுப்பை பன்னீர் செல்வமும் கட்சிப் பொறுப்பை சசிகலாவும் கவனித்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் திடீரென சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். தன்னை  கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என்று கூறிய அவர் சசிகலா மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறினார். இதன் பின்னர் தமிழக அரசியல் களத்தில் கடந்த 6 நாட்களாக அனல் பறக்கிறது.

ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் தனித்தனியாக தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்கள். தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியதாக கூறிய பன்னீர் செல்வம் அதனை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். அதே நேரத்தில் சசிகலாவோ, எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தனக்கே இருப்பதாகவும் எனவே தன்னை முதல்-அமைச்சராக பதவி ஏற்க அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து ஆதரவு கடிதத்தையும் அளித்தார். ஆனால் இந்த வி‌ஷயத்தில் கவர்னர் இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் நாளை மறுநாள் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலும், ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுகளுமே கவர்னரின் தாமதத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து 4 நாட்களாகியும் கவர்னர் தாமதிப்பது அ.தி.மு.க.வை பிளவுபடுத்தவே என்று குற்றம்சாட்டியுள்ள சசிகலா, பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று நேற்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேட்டி அளித்தார்.

இன்று மாற்று வழியில் போராடப்போவதாகவும் அவர் கூறினார். இதற்கு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சசிகலா அணியில் இருந்து ஓ.பி.எஸ். அணிக்கு தாவிய அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். போராட்டம் என்பது எப்படி சட்டத்துக்குட்பட்டு இருக்க முடியும். அதுபோன்று யார் செயல்பட்டாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் அவர் கூறினார்.

இதனால் தமிழக அரசியல் களத்தில் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா அணிகளுக்கு இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், 2 தரப்பினரும் திடீர் திடீரென ஆதரவு ஊர்வலங்களையும் நடத்தி வருகிறார்கள். இதனால் 2 பிரிவினர் களுக்குமிடையே மோதல் ஏற்பட்டு சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் உஷார்படுத்தப்பட்டுள் ளனர். பிரச்சினைக்குரிய பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையிலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறார்கள். லாட்ஜுகள் மற்றும் தங்கும் விடுதிகளில் சந்தேகத்துக்கிடமாக சமூக விரோதிகள், ரவுடிகள் தங்கி இருக்கிறார்களா? என்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று கமி‌ஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து நேற்று மாலையில் இருந்து சென்னை மாநகரில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். விடிய விடிய இந்த சோதனை நடந்தது. இதில் சந்தேக நபர்கள் பலர் சிக்கி உள்ளனர்.

தமிழக அரசியல் களத்தில் நிலவும் பதட்டமான சூழல் தற்போது பொதுமக்கள் மனதிலும் ஏற்பட தொடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வெடித்த கலவர சூழல் போன்று தற்போதும் ஏதாவது ஏற்பட்டு விடுமோ? என்கிற பீதி மக்களை பற்றிக் கொண்டுள்ளது.

இதனை தணிப்பதற்காக நேற்று இரவு போலீசார் மோட்டார் சைக்கிள் அணி வகுப்பிலும் ஈடுபட்டனர். சென்னையில் பல இடங்களிலும் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. சென்னை மாநகர் முழுவதும் நேற்று இரவு போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. அனைத்து வாகனங்களும் கடுமையாக சோதனைக்குட்படுத்தப்பட்டன.

இன்று 2-வது நாளாக போலீசாரின் வாகன சோதனையும், தங்கும் விடுதிகளில் நடைபெற்று வரும் ஆய்வும் தொடர்கிறது. பதட்டமான சூழலே தொடர்ந்து நிலவுகிறது. இதன் காரணமாக கிண்டி கவர்னர் மாளிகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதி, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம், சசிகலா வசித்து வரும் போயஸ் கார்டன், அடையாறில் உள்ள முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் வீடு, தி.நகரில் உள்ள பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் 150-க்கும் மேற்பட்ட லாட்ஜ்கள், 90 திருமண மண்டபங்களில் நேற்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர். விடிய, விடிய வாகன சோதனையும் நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா உத்தரவின் பேரில் போலீசார் தமிழக- கர்நாடகா எல்லையான கக்கநல்லா சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநில எல்லையிலும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.
 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/12112013/1067790/tight-security-whole-tamilnadu-police-taken-full-control.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.