Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஜி.ஆருக்கு செருப்பு... கருணாநிதிக்கு கண்ணாடி... ஜெயலலிதாவுக்கு சேலை... பன்னீர்செல்வத்துக்கு அரிவாள்...! #OPSVsSasikala

Featured Replies

எம்.ஜி.ஆருக்கு செருப்பு... கருணாநிதிக்கு கண்ணாடி... ஜெயலலிதாவுக்கு சேலை... பன்னீர்செல்வத்துக்கு அரிவாள்...! #OPSVsSasikala

எம் ஜி ஆர்

மிழக வரலாற்றில் 2-12-1972-ம் தேதி மறக்கவியலாதது. ஆம் தமிழக சட்டமன்ற வரலாற்றில் இரு சபைகள் நடந்ததோடு, முதன்முறையாக சபாநாயகரை பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அன்றுதான். அதே நாளில்தான் எம்.ஜி.ஆர் முதல்வராவதற்கான அச்சாரமும் போடப்பட்டது. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தி.மு.க-வில் இருந்து பிரிந்தார் எம்.ஜி.ஆர். தி.மு.க நிர்வாகிகளின் சொத்துக்கணக்கை கேட்டதால், அவரைக் கட்சியிலிருந்து கட்டம் கட்டியது தி.மு.க.!

இந்த நிலையில், தி.மு.க அரசில் சபாநாயகராக இருந்த மதியழகன் எம்.ஜி ஆருடன் நட்பு பாராட்டிவந்தார். இதனால், அவர் எம்.ஜி.ஆருடன் செல்வார் என்று பேசப்பட்டுவந்த நிலையில் 13-11-1972 அன்று சபை கூடியது. தி.மு.க அமைச்சரவை மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. எனவே நீடிப்பது சரியா?  என கேள்வி எழுப்பினார் எம்.ஜி.ஆர்.

அப்போது மதியழகன் எம்.ஜி.ஆருக்கு ஆதரவான குரலில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்துங்கள் என்று கூறி சட்டசபையை டிசம்பர் 2- ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அன்றைய தினம் அமைச்சரவைக்கு வந்த ஆபத்தைக் காக்க நெடுஞ்செழியன் மூலம் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது தி.மு.க. 185 உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட மதியழகன் இனி சபாநாயகர் பொறுப்பு வகிக்கமுடியாது. எனவே, முதலில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் என அறிவித்து துணை சபாநாயகர் பெ.சீனிவாசனை இன்னொரு நாற்காலியில் சபாநாயகராக அமரவைத்தது தி.மு.க.

ஜெயலலிதா

அதேசமயம் அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லாத தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என எம்.ஜி.ஆர் கேட்டுக்கொள்ள அத்தனை களேபரத்திலும் அதுபற்றி பேச அனுமதித்தார் மதியழகன். இரண்டு சபாநாயகர்கள்; இரண்டு தீர்மானங்கள். சட்டசபை அமளிதுமளியானது. எம்.ஜி.ஆரின் முன் இருந்த ஒலிபெருக்கி அணைக்கப்பட்டது. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத தீர்மானத்தை பெ.சீனிவாசன் நடத்திக்கொண்டிருந்தார். அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லாத தீர்மானத்தை மதியழகன் நடத்தினார். ஒரேநாளில் இருசபைகளை பார்த்தது சட்டமன்றம். 176 வாக்குகள் பெற்று சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத தீர்மானம் நிறைவேறியதாக அறிவித்து தங்களது அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லாத தீர்மானத்தை வெற்றிகரமாக முறியடித்தது தி.மு.க. 

அப்போது சட்டசபையிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர் மீது மாடத்திலிருந்து சீறிவந்துவிழுந்தது ஒரு செருப்பு. அதிர்ச்சியும் அவமானமும் அடைந்த எம்.ஜி.ஆர், உரத்த குரலில் சொன்னார். ''சட்டசபை செத்துவிட்டது. இனி நான் இங்கே வரமாட்டேன். முதல்வராகவே வருவேன்.” எனக் கூறிவிட்டு வெளியேறினார். 

அத்தோடு 1977-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றபின்தான் அவர் சட்டசபைக்குள் நுழைந்தார். 

1987-ல் எம்.ஜி.ஆர் மரணத்துக்குப்பின் அ.தி.மு.க ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியாகவும், ஜானகி அம்மையார் தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்துநின்றன. ஜானகி தலைமையில் நடந்த ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட பின் ஓராண்டு தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடந்தது. அடுத்துவந்த தேர்தலில் ஜானகி அணி படுதோல்வியைத் தழுவிய நிலையில் அவர் தன் அணியை ஜெயலலிதாவுடன் இணைத்துவிட்டு அரசியலில் இருந்து விலகினார். 

1989 தேர்தலில், தி.மு.க 151 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் ஜெயலலிதா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததாக கடிதம் ஒன்று பத்திரிகைகளில் வெளியாகியது. உண்மையில் அந்த கடிதம் ம.நடராசன் வீட்டில் நடந்த ரெய்டின்போது கைப்பற்றப்பட்டு தி.மு.க-வினால் பத்திரிகைகளில் கசியவிடப்பட்டதாக சொல்லப்பட்டது. 

மார்ச் 25-ம் தேதி அன்று சட்டசபை கூடியது. பட்ஜெட் உரையைப் படிக்க எழுந்தார் கருணாநிதி. படிக்கக்கூடாது என எதிர்ப்பு குரல் கொடுத்தார் ஜெயலலிதா. பெரும் அமளி ஏற்பட்டது. கருணாநிதியிடமிருந்து பட்ஜெட் உரைப்புத்தகத்தை ஒரு அ.தி.மு.க எம்.எல்.ஏ பிடுங்கி கிழித்து எறிந்தார்.

கருணாநிதி

அப்போது இன்னொரு அ.தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதியின் முகத்தைப் பார்த்து ஒரு குத்துவிட கருணாநிதி லாவகமாக குனிந்தபோதும் அவரது அடையாளமான கருப்பு கண்ணாடி நழுவி விழுந்து உடைந்து சிதறியது. 

இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சிலர் ஜெயலலிதாவை தாக்கினர். அப்போது ஜெயலலிதாவின் சேலை கிழிந்தது. ஒரு பெண்ணாக தான் சேலை கிழிக்கப்பட்டு அவமானம் அடைந்ததை அவரால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. தலைவிரிகோலமாக சேலை கிழிக்கப்பட்ட நிலையில், சட்டசபையிலிருந்து வெளியேறிய அவர் 'இனி தான், சட்டசபைக்கு வரப்போவதில்லை' என கர்ஜித்தபடி வெளியேறினார். எம்.ஜி.ஆரைப்போல் அவரும் அடுத்துவந்த 1991 தேர்தலில் வென்று  முதல்வராகத்தான் சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.

இன்று ஓ.பன்னீர்செல்வம்

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இன்றைக்குத் தமிழ்நாட்டில் அரசியல் பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. எம்.ஜி.ஆர் மறைந்தபோது ஜெயலலிதாவுக்கும், ஜானகிக்கும் இடையே என்ன பிரச்னை நடந்ததோ அது அப்படியே ஜெயலலிதா மறைவுக்குப் பின் தற்போது பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையில் நடந்து வருகிறது. 

கடந்த செவ்வாய் கிழமை (7-2-2017) இரவு மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு விசிட் அடித்தார். அங்கு 40 நிமிடத்துக்கு மேல் மௌன அஞ்சலி இருந்தார் பன்னீர்செல்வம். மௌன அஞ்சலிக்குப் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் சசிகலா, தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டார் என்றும், முதல்வரான தன்னை பல முறை அவமானப்படுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும், ''நான் சொல்லியது எல்லாம் வெறும் 10 சதவிகிதம்தான். இன்னும் 90 சதவிகிதம் உண்மையை சொன்னால் தமிழ்நாட்டில், மிகப்பெரிய பிரளயமே ஏற்படும்'' என்றார். இதையடுத்து ஒரு சில எம்.எல்.ஏ.கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்கள். இந்த நிலையில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த 128- எம்.எல்.ஏ-க்களை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ‘கோல்டன் பே ரிசார்ட்டில்’ தனது கஸ்டடியில் அடைத்து வைத்துள்ளார் சசிகலா. 

பன்னீர்செல்வம்

அ.தி.மு.க அடுத்து யார் கைகளுக்குச் செல்லும் என்ற மிகப்பெரிய சந்தேகம் தமிழக மக்கள் அனைவருக்குமே ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் சசிகலா ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பன்னீர்செல்வத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் மிரட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசியமுன்னாள் தி.நகர் எம்.எல்.ஏ-வான வி.பி.கலைராஜன், " 'பொறுத்திருந்து பாருங்கள்... நாங்கள் அ.தி.மு.க.வை கைபற்றப்போகிறோம்.' என்று சொல்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அவர் மட்டும் கையை வைத்துப் பார்க்கட்டும்... அவர் உடம்பில் கையே இருக்காது. அப்படி இல்லாமல் பண்ணிவிடுவோம் நாங்கள்..." என்று பகிரங்க மிரட்டல் விடுத்தார். 

'சசிகலா தரப்பால் நான் மிரட்டப்பட்டேன்' என்பதையே முதன்மையானக் குற்றச்சாட்டாக வைத்திருக்கிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இந்த நிலையில், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ - ஒருவர் பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே 'ஓ.பன்னீர்செல்வம் கைகளை வெட்டுவேன்' என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருப்பது சசிகலா தரப்புக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/coverstory/80470-identities-of-tamilnadu-political-leaders-opsvssasikala.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.