Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல அமைச்சர்கள் அநுராவை ஹொரகொல்லையில் சந்திப்பு

Featured Replies

அமைச்சர் பதவிகளிலிருந்து அநுரா பண்டாரநாயக்கா, மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோர் நீக்கப்பட்ட நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் முக்கிய அமைச்சர்கள் பலர் ஹொரகொல்லையில் அநுரா பண்டாரநாயக்காவை சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 3 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு சென்ற நிலையில் ஹொரகொல்லையில் அநுரா பண்டாரநாயக்காவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பு முற்பகல் 11 மணியிலிருந்து மாலை 4 மணிவரை இடம்பெற்றதாகவும் தெரியவரும் அதேவேளை, இவ்வாரம் நாடு திரும்பும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தலைமையில் புதிய அணியொன்று உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் நேற்று முற்பகல் ஹொரகொல்லைக்குச் சென்று முன்னாள் அமைச்சர் அநுரா பண்டாரநாயக்காவை சந்தித்து பேச்சுக்கள் நடத்தியுள்ளதாக அறியவரும் அதேவேளை, இது சமரசப் பேச்சுவார்த்தையா அல்லது புதிய அணியொன்றை சுதந்திரக் கட்சிக்குள் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையா என்பது தொடர்பில் எதுவிதத் தகவல்களும் உடனடியாக வெளியாகவில்லை.

இப்பேச்சுவார்த்தைகள் சுமார் 5 மணிநேரம் நடைபெற்றுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தற்போது இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அடுத்த சில தினங்களில் நாடு திரும்பவுள்ளதாகத் தெரியவருகிறது.

முன்னாள் ஜனாதிபதியின் வருகையின் பின்னர், அமைச்சுப் பதவிகள் நீக்கப்பட்ட எம்.பி.க்களான அநுரா பண்டாரநாயக்கா, மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோர் இணைந்தும் சுதந்திரக் கட்சியில் குறிப்பிட்டளவானோரையும் வேறு பல கட்சிகளையும் இணைத்து பரந்துபட்ட ரீதியிலான புதிய கட்சியொன்றை உருவாக்கும் திட்டங்கள் தீட்டப்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

அக்கட்சி நாட்டில் கொலைகள், ஆட்கடத்தல்களை தடுத்து நிறுத்தவும் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முன்னிற்குமென்றும் தெரியவருகிறது.

இதேவேளை, பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரான ஷ்ரீபதி சூரியாராச்சி இது தொடர்பாக தினக்குரலுக்கு தெரிவிக்கையில்,

நான் உட்பட எம்.பி.க்களான அநுரா பண்டாரநாயக்கா, மங்கள சமரவீர ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்ட பின்னணியில் பாரிய சதித்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை யார் மேற்கொண்டார்கள், எதற்காக? என்ற கேள்விகளுக்கு நாளை செவ்வாய்க் கிழமை நாமனைவரும் இணைந்து நடத்தும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது பகிரங்கமாக பதிலளிப்போம்.

எம்மை வெளியேற்றியது திட்டமிட்ட செயலே, நாம் எதுவித சதித்திட்டத்திலும் ஈடுபடவில்லை.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவுடன் கடந்த பல மாதங்களாக எனக்கு எதுவித தொடர்பும் கிடையாது. தொலைபேசியூடாகவும் உரையாடியதில்லை.

கடந்த சில நாட்களாக ஒரு சில ஆங்கில வாரப்பத்திரிகைகளில், நான் நாட்டின் தலைமைத்துவத்திற்கு எதிராக செயல்படுவதாகவும் புலிகளுடன் தொடர்பு கொண்டுள்ள தாகவும் தொடர் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் என்னை கொலை செய்வதற்கு புலிகள் குண்டு வைத்தனர். இதனை அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவே தெரிவித்தார்.

இந்நிலையிலேயே இவ்வாறு சோடிக்கப்பட்ட கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றன.

இது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளேன், இதன் பின்னணியில் என்னை கொலை செய்வதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை நடத்தி பின்னணியில் உள்ளோரை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளேனென்றும் தெரிவித்தார்.

இதேவேளை, நாடு திரும்பவுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க மறைந்த தனது கணவர் ஸ்தாபித்த "மக்கள் கட்சிக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து தனது தம்பியையும் ஏனைய அதிருப்தியாளர்களையும் இணைத்துக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான தனது போராட்டத்தை ஆரம்பிக்கலாம் என்றும் தெரியவருகிறது.

இது தொடர்பாக, விஜயகுமாரதுங்க கொலை செய்யப்பட்ட தினமான எதிர்வரும் 16 ஆம் திகதி பாரியதொரு நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்தி தனது பகிரங்க மீள் அரசியல் பிரவேசிப்பை அறிவிப்பார் எனவும் தெரியவருகிறது.

அமைச்சுப் பதவிகளிலிருந்து வெளியேற்றப்பட்டோரை மீண்டும் இணைத்துக் கொள்வதில்லையென்றும் கட்சிக்குள்ளிருந்து குழிபறித்தால் இதே பாடம் புகட்டப்படுமென்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரித்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.thinakkural.com/news/2007/2/12/...s_page21247.htm

சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய மங்களவுக்கு விமான நிலையத்தில் மக்கள் பெரும் வரவேற்பு

பதவி நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.20 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையமூடாக நாடு திரும்பினார்.

கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மிக முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் (வி.ஐ.பி) நுழைவாயிலூடாக விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவை, பதவி நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஷ்ரீபதி சூரியாராச்சி ஆரத்தழுவி வரவேற்றார்.

பின்னர் அங்கிருந்து வாகனத்தில் ஏறிய மங்கள சமரவீர வாகனத்தின் ஜன்னலூடாக அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்கு கையசைத்து நன்றி தெரிவித்தார்.

ஆனால், அங்கு கூடியிருந்தோர் மத்தியில் எதுவிதக் கருத்துக்களையும் அவர் தெரிவிக்கவில்லை.

நாடு திரும்பிய முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவை வரவேற்பதற்காக மாத்தறை மாவட்டத்திலிருந்து நூறுக்கும் மேற்பட்ட பஸ்களில் ஆதரவாளர்கள் வந்து கட்டுநாயக்கா விமான நிலையமருகில் குவிந்திருந்தனர்.

ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்தியில் மிகச் சிரமத்துடன் முன்னாள் அமைச்சரின் வாகனத்தை பொலிஸார் விடுவித்து போக்குவரத்திற்கு உதவினர்.

ஆதரவாளர்களின் முற்றுகையினால் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு திரும்பும் நீர்கொழும்பு பாதையில் பல மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட கலகம் அடக்கும் பொலிஸார் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததோடு கண்ணீர்ப் புகை பிரயோகம் செய்யும் பொலிஸாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

அத்தோடு முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டிருந்ததையும் இங்கு காணக்கூடியதாக விருந்தது.

கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து கொழும்பு ஜாவத்தையிலுள்ள தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவையும் அவரது நெருங்கிய உறவினர்களை மட்டுமே அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸார் அனுமதித்தனரென்றும் அங்கு குழுமியிருந்த ஏனைய நெருங்கிய ஆதரவாளர்களை உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லையென்றும

Edited by ஈழவன்85

மங்கள சமரவீராவை குண்டு வைத்து ராஜபக்சாவின் ஆட்கள் கொன்றுவிட்டு இதை புலிகள் மேல் பழி போட்டு தப்பிக்கும் நாடகம் வெகுவிரைவில் அரங்கேறும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.