Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க விமானப்படையினர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்-ஹைடாவுடன் நெருங்கிய தொடர்புடைய ஈராக்கிய குழுவொன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட இணைய ஒளிநாடா அமெரிக்க ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்படுவதை காண்பிக்கின்றது.

அமெரிக்க இராணுவம் உடனடியாக தனது சி.எச்.46 Sea Night ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்படவில்லை என தெரிவித்தாலும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் அந்த ஒளிநாடாவின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகின்றனர்.

சீ நைட் ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அவர்கள் மறைமுகமாக ஏற்றுக் கொள்கின்றனர்.

பெப்ரவரி ஏழாம் திகதி அமெரிக்க விமானம் வீழ்த்தப்பட்டதை காண்பிக்கும் இரண்டு நிமிட வீடியோவில் சீ நைட் ஹெலிகொப்டர் பறப்பதும் பின்னர் அதற்கருகில் புகை போன்ற ஒன்று தென்படுவதும் பின்னர் உலங்கு வானூர்தி வெடித்து சிதறுவதும் காண்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பொருள் ரொக்கட்டா என்பதும் அது விமானத்தை தாக்குகின்றதா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஈராக்கில் உள்ள இஸ்லாமிய தேசம் எனும் அமைப்பே வீடியோவை வெளியிட்டுள்ளது. அல்-ஹைடா உட்பட பல கிளர்ச்சிக் குழுக்களை உள்ளடக்கிய அமைப்பே இவ்வாறு அழைக்கப்படுகின்றது.

கிறிஸ்தவர்களின், ஈராக்கில் உள்ள மத நம்பிக்கையற்றவர்களின் நரகம் என அழைக்கப்படும் அந்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வேறு இரு ஹெலி கொப்டர்களை சுட்டு வீழ்த்தியதற்கும் குறிப்பிட்ட அமைப்பு உரிமை கோரியுள்ளது.

ஜனவரி 20 இற்குப் பின்னர் ஆறு அமெரிக்க ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா தனது நான்கு ஹெலிகொப்டர்கள் வீழ்ந்ததை ஏற்றுக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக இரு முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன.

ஈராக்கிய கிளர்ச்சிக்காரர்கள் அமெரிக்க விமானங்கள் மீது தாக்குதல்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்களா என்பது முதலாவது கேள்வி. மேலும், அவர்கள் புதிய தொழில் நுட்பத்தையும் புதிய விமான எதிர்ப்பு ஆயுதங்களையும் பெற்று விட்டார்களா என்பது மற்றைய கேள்வி.

அமெரிக்க இராணுவப் பேச் சாளர் மேஜர் ஜெனரல் வில்லியம் காலட்வெல், கடந்த சில வாரங்களில் அமெரிக்க விமானங்களுக்கான அபாயம் அதிகரித்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார். அமெரிக்க இராணுவம் தனது எத்தனை விமானங்களும் ஹெலிகொப்டர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதனை வெளியிடாததன் காரணமாக உறுதியாக எதனையும் தெரிவிக்க முடியாத நிலையும் காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் ஈராக்கில் கிளர்ச்சிக் குழுக்கள் சிறிய ரக ஆயுதங்களையும் சோவியத் காலத்தைய எஸ். ஏ-7 ஏவுகணைகளையும் பயன்படுத்தின.

ஈராக்கின் சில குழுக்கள் ஹெலிகொப்டர்களை வீழ்த்துவதற்கு தம்மிடம் புதிய வழிவகைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

எனினும், இந்த புதிய வழிமுறை என்னவென்பது குறித்து தகவல்களுமில்லை.

2003 மே மாதத்திற்கு பின்னர் அமெரிக்கா ஈராக்கில் 55 ஹெலிகொப்டர்களை இழந்துள்ளது. இவற்றில் அரைவாசி எதிரிகளால் வீழ்த்தப்பட்டது என்கிறது புருக்கிங் நிறுவாகம்.

எனினும் அமெரிக்க இராணுவம் இம்முறை இதனை அலட்சியமாக விடுவதற்கு தயாராகயில்லை.

சமீபத்தைய இழப்புகளைத் தொடர்ந்து விமானங்களின் தந்திரோபாயங்கள் மாற்றப்பட்டுள்ளன.

புதிய தந்திரோபாயங்கள் குறித்து இராணுவ அதிகாரிகள் எதனையும் தெரிவிக்காத போதிலும் தந்திரோபாய மாற்றங்களை உறுதி செய்துள்ளனர்.

பாக்தாத்தில் வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ள அமெரிக்காவிற்கு ஹெலிகொப்டர்கள் வீழ்வது நெருக்கடியை கொடுத்துள்ளது.

அமெரிக்க இராணுவம் ஈராக்கில் தனது முக்கிய நடவடிக்கைகளுக்கு ஹெலிகொப்டர்களையே நம்பியுள்ளது.

எமது யுத்த வழிமுறைக்கு ஹெலிக்கொப்டர் மிக முக்கியமானது என்கின்றனர் முன்னாள் இராணுவ அதிகாரிகள்.

எமது நடவடிக்கைகளுக்கு முக்கிய தூண் இந்த ஹெலிகொப்டர்கள். இதன் காரணமாக அமெரிக்கா பதில் தந்திரோபாயத்தை வகுக்க வேண்டிய நிலையிலுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அமெரிக்கா சில தந்திரோபாயங்களில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. எதிரியின் தாக்குதல் பலம் அதிகரித்துள்ளது என்பதை மூத்த இராணுவ அதிகாரிகள் ஏற்றுக் கொள்கின்றனர்.

படை நகர்த்தல், வேவு பணி, தரைப்படையினருக்கு ஆதரவு வழங்குதல், விநியோகம், மருத்துவ உதவி போன்ற அனைத்திற்கும் அமெரிக்கா ஹெலிகொப்டர்களை பயன்படுத்துகின்றது.

அமெரிக்க இராணுவ வாகனங்கள் ஈராக்கின் வீதியோர வெடிகுண்டு தாக்குதல்களுக்கு இலக்காகக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாகவுள்ளதால் படையினரின் போக்குவரத்திற்கு ஹெலி கொப்டர்களே இதுவரை மாற்றீடாக அமைந்திருந்தன.

மேலும் விமானப் பலம் எதுவுமில்லாத ஈராக்கிய படையினருக்கு தொடர்ச்சியாக சில வருடங்களாவது விமான உதவியை வழங்க வேண்டிய நிலையில் அமெரிக்காவுள்ளது.

இன்றைய யுத்தத்தின் முக்கிய விடயமாக ஹெலிகொப்டர்களே உள்ளன. பாக்தாத்தா அல்லது ஈராக்கின் கிராமப்புறமா என்பது முக்கியமல்ல. உங்களது வான் பலம் எப்படியுள்ளது என்பதே அனைத்தையும் தீர்மானிக்கும் என்கின்றனர் இராணுவ ஆய்வாளர்கள்.

1980 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுக்கு எதிராக போரிட்ட வேளையே ஹெலிகொப்டர்கள் மூலம் ஆதிக்கம் செலுத்துவதன் அவசியம் உணரப்பட்டது.

1986 இல் முஜாஹிடின்களுக்கு தோளில் வைத்து பயன்படுத்தக் கூடிய ஏவுகணையை அமெரிக்கா வழங்க தீர்மானித்ததே இந்தப் போரின் திசையை மாற்றியது என அவ்வேளை சி.ஐ.ஏ.யின் முக்கிய அதிகாரியாக பணியாற்றிய மிலட் பியர்டேன் தெரிவிக்கின்றார்.

அதுவரை வான்வெளி சோவியத்தின் கரங்களிலிருந்தது. ஆப்கான் கிளர்ச்சிக் காரர்கள் முதன் முதலில் ஏவுகணையை பயன்படுத்திய அன்று மூன்று ஹெலிகொப்டர்களை சுட்டு வீழ்த்தினர் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அந்த நிமிடத்தில் அவர்களது உணர்வு மாறத் தொடங்கியது. ஸ்ரிங்கரை கையில் வைத்துள்ள நபர் இருந்தால் போதும் என அவர்கள் நம்பத் தொடங்கினர். ஹெலிகொப்டர்கள் விழத் தொடங்க சோவியத்தின் ஆதிக்கம் குறைவடையத் தொடங்கியது என்கிறார் அந்த அதிகாரி.

எனினும், ஈராக்கில் இவ்வாறான நிலையேற்படுவது சாத்தியமா என்பதை உறுதி செய்ய முடியாதுள்ளது.

கிளர்ச்சிக்காரர்களிடம் எவ்வகையான ஆயுதங்கள் உள்ளன என்பதைப் பொறுத்தே இதனை எதிர்வு கூறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கிளர்ச்சிக்காரர்கள் அமெரிக்க விமானங்களில் பயண வழிமுறைகளை நன்கு அறிந்து கொண்டுள்ளதுடன் பழைய ஆயுதங்களை சிறப்பாக பயன்படுத்தவும் பழகியுள்ளனர்.

நவீன விமான எதிர்ப்பு ஏவுகணை சாதனங்கள் பொருத்தப்பட்டவிமானங்கள் தரையிலிருந்து பயன்படுத்தப்படும் மரபு வழி ஆயுதங்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாதவை என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது.

ஈராக்கிய கிளர்ச்சிக் குழுக்களிடம் நவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

அவர்களிடம் எஸ் -18 ஏவுகணை போன்றவை (ரஷ்யா தயாரிப்பு) இருக்கும் பட்சத்தில் அமெரிக்க விமானங்களுக்கான ஆபத்து மேலும் அதிகமாகும்.

மேலும் ஈரானே இதனை வழங்கியிருக்கலாம் என்பதால் அந்த நாட்டுடனான அமெரிக்காவின் பகையுணர்வு தீவிரமாகலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.