Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் என்ன செய்யப்போகிறது அரசாங்கம்

Featured Replies

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் என்ன செய்யப்போகிறது அரசாங்கம்

 

ரொபட் அன்டனி

யுத்­தக்­குற்ற நீதி­மன்­றங்­களை அமைப்­பது குறித்து இப்­போ­தைய கால­கட்­டத்தில் பேசு­வ­தற்கு ஆரம்­பித்தால் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் சாத்­தி­ய­மில்­லாமல் போய்­விடும். எனது ஆட்­சிக்­கா­லத்தில் இருந்­ததை விடவும் சவால்கள் தற்­போது அதிகம் 

"நாட்டில் ஜன­நா­யகம் உறு­திப்­ப­டுத்­தப்­பட் டால் ஆர்ப்­பாட்­டங்கள் நடப்­பது இயல்­பா­கி­விடும். அதுதான் தற்­போது நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. முன்னாள் பிர­தமர் பண்­டா­ர­நா­யக்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில் வரு­டத்தில் 365 நாட்­களில் 362 நாட்கள் ஆர்ப்­பாட்­டங்கள் நடந்­தன. அந்­த­வ­கையில் கடந்த 9 வரு­டங்­க­ளாக ஆர்ப்­பாட்டம் செய்ய முடி­யாமல் கிடந்த நாட்டு மக்கள் தற்­போது சுதந்­தி­ர­மாக ஆர்ப்­பாட்டம் செய்ய ஆரம்­பித்­துள்­ளனர். சுதந்­திரம் இருக்­கின்­ற­மையின் கார­ண­மாக நன்­றாக ஆர்ப்­பாட்டம் செய்­கின்­றனர். அக்­கா­லத்தில் ஆர்ப்­பாட்­டங்கள் நடக்­கும்­போது வெள்­ளை­வேன்கள் வந்­தன. ஆனால் தற்­போது இல்லை""

இவ்­வாறு அர­சாங்­கத்தின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன அண்­மையில் தெரி­வித்­துள்ளார். இந்த இடத்தில் அமைச்சர் ஏன் இந்த கருத்தை இவ்­வாறு பதிவு செய்­துள்ளார் என்­ப­தனை பார்க்­க­வேண்டும். அதா­வது நாட்டில் ஆர்ப்­பாட்­டங்­களும் போராட்­டங்­களும் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­துள்ள நிலையி­லேயே அர­சாங்­கத்தின் பேச்­சாளர் இந்த விட­யத்தை சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

ஒரு­புறம் ஆர்ப்­பாட்­டங்கள் மற்றும் போராட்­டங்கள் மறு­புறம் புதிய அர­சி­ய­ல­மைப்பை காட்டி பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை தவிர்த்து விடு­வார்­களா என்­ற­தொரு நிலை நாட்டில் காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லை­யி­லேயே ஆர்ப்­பாட்­டங்கள் தற்­போது மக்­களின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளன.

உண்­மையில் அவ்­வாறு என்­னதான் நடக்­கின்­றன நாட்டில் என்று அல­ச­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. தென்­னி­லங்­கையை பொறுத்­த­வரை தமது உரி­மை­களை வலி­யு­றுத்தி அரச ஊழி­யர்கள், விசேட தேவை­யு­டைய ஓய்­வு­பெற்ற இரா­ணுவ வீரர்கள், பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் என பல்­வேறு தரப்­பினர் முன்­னெ­டுக்கும் போராட்­டங்கள் தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றன.

தலை நகரில் அவ்­வப்­போது ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை கலைப்­ப­தற்கு நீர்த் தாரை பிர­யோ­கமும் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு தென்­னி­லங்­கையில் தொடர்ச்­சி­யாக ஆர்ப்­பாட்­டங்கள் அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.

இதே­வேளை வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளிலும் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது உரி­மை­களை பெற்­றுத்­த­ரக்­கோரி ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் போராட்­டங்­க­ளையும் நடத்­தி­வ­ரு­கின்­றனர். அவை எவ்­வா­றான ஆர்ப்­பாட்­டங்கள் என்று பார்த்தால் யுத்த காலத்தில் தம்­மிடம் இருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை மீளப்­பெறும் நோக்­கி­லான ஆர்ப்­பாட்­டங்கள், போராட்­டங்கள், காணா­மல்­போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­ப­தனை கேட்டு முன்­னெ­டுக்­கப்­படும் ஆர்ப்­பாட்­டங்கள் என அவற்றை வகைப்­ப­டுத்­தலாம். இந்த சூழ­லி­லேயே அமைச்­ச­ரவை பேச்­சாளர் நாட்டில் முன்­னெ­டுக்­கப்­படும் ஆர்ப்­பாட்­டங்கள் தொடர்பில் கருத்து வெ ளியிட்­டுள்ளார்.

எவ்­வா­றெ­னினும் தற்­போது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் மக்கள் தமது உரி­மை­க­ளையும் உறு­தி­ப்ப­டுத்­தக்­கோ­ரியும் தம்­மிடம் இருந்து அப­க­ரிக்­கப்­பட்­ட­வற்றை பெற்­றுத்­த­ரக்­கோ­ரியும் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் போராட்­டங்­க­ளையும் நடத்த ஆரம்­பித்­துள்­ள­துடன் அவற்றை தொடர்ச்­சி­யா­கவும் முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர்.

குறிப்­பாக கேப்­பாபுலவு மக்கள் தமது காணி­களை விடு­விக்­கக்­கோரி தொடர்ச்­சி­யான போராட்­டங்­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர். வெயி­லிலும் பனி­யிலும் துன்ப துய­ரங்­களை அனு­ப­வித்­துக்­கொண்டே மக்கள் இந்தப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர்.

எனினும் இந்த ஆர்ப்­பாட்டம் தொடர்பில் மக்­க­ளுக்கு முழு­மை­யான உத்­த­ர­வாதம் எதுவும் இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால் மக்கள் தொடர்ச்­சி­யாக போராட்­டத்தை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர். புதுக்­கு­டி­யி­ருப்பு மக்­களும் தமது காணி­களை விடு­விக்­கு­மாறு வலி­யு­றுத்தி சுழற்சி முறை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர்.

 காணாமல்போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­ப­தனை அறி­விக்­கு­மாறு கோரி யாழ்ப்­பா­ணத்தில் பாதிக்­கப்­பட்ட மக்கள் எதிர்­வரும் 20 ஆம் திகதி முதல் தொடர் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அது­மட்­டு­மின்றி சில வாரங்­க­ளுக்கு முன்னர் வவு­னி­யாவில் காணாமல் போனோரின் உற­வுகள் தமது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரி உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த நிலையில் அர­சாங்­கத்தின் தலை­யீட்­டை­ய­டுத்து அந்த போராட்டம் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆனால் இது­வரை அந்தப் பிரச்­சி­னைக்கும் இது­வரை தீர்­வு­கா­ணப்­ப­ட­வில்லை.

மேலும் இவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­படும் போராட்­டங்­க­ளுக்கு வடக்கு, கிழக்கு பகு­தி­களில் பல்­வேறு தரப்­பி­னரும் ஆத­ரவை தெரி­வித்­து­வ­ரு­கின்­றனர். அந்­த­வ­கையில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் மக்கள் தமது உரி­மை­களை வலி­யு­றுத்தி ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தி­வ­ரு­வதை அதி­க­ரித்­துள்­ளனர்.

உண்­மையில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது உரி­மை­களை வலி­யு­றுத்தி அகிம்சை ரீதியில் போராட்டங்­களை நடத்­து­வதை தவறு என்று கூற முடி­யாது. அர­சாங்கம் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் என்று நம்­பிக்­கொண்­டி­ருந்த மக்கள் தற்­போது நம்­பிக்­கை­யி­ழந்து தமது உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக போராட்­டங்­களை நடத்த ஆரம்­பித்­துள்­ளனர்.

அதா­வது அர­சாங்கம் உரிய முறையில் நல்­லி­ணக்க மற்றும் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட்­டி­ருந்தால் மக்கள் இவ்­வாறு தொடர் போராட்­டங்­களை முன்­னெ­டுக்கும் நிலை ஏற்­பட்­டி­ருக்­காது. எனினும் அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை பொறுப்­புக்­கூறல் பொறி­முறை விட­யத்தில் அதிக கவ­னத்தை செலுத்­தாமல் புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்தே அதிக கவனம் செலுத்­து­வ­தாக தெரி­கின்­றது.

இந்த விடயம் அண்­மையில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க வெ ளியிட்­டி­ருந்த கருத்­தி­லி­ருந்து தெளிவாக தெரி­கின்­றது. அதா­வது """ யுத்­தக்­குற்ற நீதி­மன்­றங்­களை அமைப்­பது குறித்து இப்­போ­தைய கால­கட்­டத்தில் பேசு­வ­தற்கு ஆரம்­பித்தால் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் சாத்­தி­ய­மில்­லாமல் போய்­விடும். எனது ஆட்­சிக்­கா­லத்தில் இருந்­ததை விடவும் சவால்கள் தற்­போது அதிகம். அந்த காலத்தில் கடும்­போக்கு அமைப்­புகள் இருக்­க­வில்லை.

முன்னாள் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான கூட்டு எதி­ரணி போன்ற பிரி­வு­களும் அப்­போது இருக்­க­வில்லை. அந்த வகையில் புதிய அர­சாங்­கத்­திற்கு சவால்கள் அதிகம் உள்­ளன. எவ்­வா­றா­யினும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக வெண்­தா­மரை திட்டம் போன்று மக்கள் ஆத­ரவு திரட்டும் திட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். இது­தொ­டர்பில் விரைந்து செய­லாற்­று­வது தற்­கா­லத்தின் தேவை­யாகும்.

அர­சாங்­கத்­திடம் உள்ள பல­ரிடம் புதிய அர­சி­ய­ல­மைப்பு மீது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­து­வது குறித்து அச்சம் காணப்­ப­டு­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் அனைத்­துமே மக்­களின் நல­னுக்­காக மட்­டுமே கொண்­டு­வ­ரப்­பட்­ட­வை­யாகும். . அதில் எவ்­வித சுய இலா­பமும் இல்லை. அத­னைப்­போ­லவே புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான கருத்­தா­டல்­களும் பய­னுள்­ள­தாக இருக்க வேண்டும்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டால் அத­னூ­டாக இலங்கை இரண்­டாகப் பிள­வு­படும் என்றும், தமிழ்த் தலை­வர்கள் எதிர்­பார்க்­கின்­ற­படி சமஷ்டி தீர்வும், வடக்கு, கிழக்கு இணைப்பும் வழங்­கப்­பட்­டு­விடும் எனவும் தென்­னி­லங்­கை­யி­லுள்ள சில பேரி­ன­வாத அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் சில அர­சி­யல்­வா­தி­களும் கூறி­வ­ரு­கின்­றனர்""

இவ்­வாறு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தொடர்­பான விட­யத்தை எடுத்­து­ரைத்­துள்ளார். இதன் மூலம் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் அர­சா­ங்கம் அந்­த­ள­வுக்கு ஆர்வம் காட்­ட­வில்லை என்­பது தெ ளிவா­கின்­றது.

காரணம் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் அவ­தானம் செலுத்­தினால் புதிய அர­சி­ய­ல­மைப்பை முன்­னெ­டுப்­பது கடி­ன­மா­கி­விடும் என்­பது அர­சாங்­கத்தின் கருத்­தா­க­வுள்­ளது. ஆனால் இவ்­வாறு கூறு­வதன் மூலம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கு­வதை அர­சாங்கம் புறக்­க­ணித்­து­விட முடி­யாது. காரணம் பாதிக்­கப்­பட்ட மக்கள் நீண்­ட­காலம் நீதிக்­காக காத்­தி­ருக்­கின்­றனர்.

விசே­ட­மாக காணாமல் போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற உண்­மையை மக்கள் அறிந்­து­கொள்­ள­வேண்டும். அத்­துடன் யுத்த காலத்தில் பொது மக்­க­ளிடம் இருந்து பெறப்­பட்ட காணிகள் மீள் கைய­ளிக்­கப்­ப­ட­வேண்டும். இவற்றை முன்­னெ­டுக்­க­வேண்­டு­மாயின்

  பொறுப்­புக்­கூறல் பொறி­முறை உரிய முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டுதல் அவ­சி­ய­மாகும்.

ஆனால் அர­சாங்­க­மா­னது புதிய அர­சி­யல்­மைப்பு விவ­கா­ரத்தை காட்டி பொறுப்­புக்­கூ­றலை தட்­டிக்­க­ழித்­து­வி­டக்­கூ­டாது. இது மிகவும் உணர்­வு­பூர்­வ­மான விட­யம்தான் என்­ப­தனை அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும்.

அதா­வது பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தொடர்பில் தென்­னி­லங்­கையின் கடும்­போக்­கு­வாத சக்­திகள் மக்கள் மத்­தியில் தவ­றான பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்தால் அனைத்து விட­யங்­களும் குழம்­பி­விடும் என்­பதில் சந்­தேகம் இல்லை.

எனவே மிகவும் அவ­தா­ன­மா­கவும் கவ­ன­மா­கவும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாக இது காணப்­ப­டு­கின்­றது. சற்று குழம்­பி­னா­லேயே அனைத்து விட­யங்­களும் சீர்­கு­லைந்­து­விடும் அபாயம் இதில் காணப்­ப­டு­கின்­றது. எனவே பொறுப்­பான முறையில் இதனை முன்­னெ­டுக்­க­வேண்டும்.

இதனால் அர­சாங்கம் ஆபத்­தான கட்­டத்­துக்கு செல்­ல­வேண்டும் என்ற நிலை ஏற்­ப­டலாம். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் இந்த விட­யத்தில் அர்ப்­ப­ணிப்­புடன் இருந்­தாலும் கடும்­போக்­கு­வாத சக்­திகள் இந்த நிலை­மையை மாற்றி அதனை பூதா­க­ர­மாக்­கி­விடும் அபாயம் காணப்­ப­டு­கின்­றது.

ஆனால் இவற்றை காரணம் காட்டி பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாட்டை தவிர்த்­து­விட முடி­யாது. அது மட்­டு­மின்றி பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றைக்கு பின்னால் சென்று கொண்­டி­ருந்தால் புதிய அர­சி­ய­ல­மைப்பை முன்­னெ­டுக்க முடி­யாமல் போய்­விடும் என்று அர­சாங்கத் தரப்­பினர் தெரி­விக்­கின்­றனர்.

ஆனால் இவ்­வாறு கூறு­கின்ற அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான முழு­மை­யான அதி­காரப் பகிர்­வுடன் கூடிய தீர்­வுத்­திட்டம் கிடைக்­குமா என்­பதும் சந்­தே­க­மா­ன­தாகும். காரணம் பொறுப்­புக்­கூறல் செயற்பாட்டை கடும்போக்குவாதிகள் எவ்வாறு எதிர்க்கின்றனரோ அதற்கு சற்றும் சலைக்காத வகையிலேயே புதிய அரசியலமைப்பு விவகாரத்துக்கும் கடும்போக்குவாதிகள் எதிர்ப்பு வெ ளியிட்டுவருகின்றனர்.

குறிப்பாக இதுவரை உருவாக்கப்படாத தயாரிக்கப்படாத பேச்சு மட்டத்தில் மட்டுமே இருக்கின்ற புதிய அரசியலமைப்பு விடயத்தையே கடும்போக்குவாதிகள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிரிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்துவருவதாக கூட்டு எதிரணியினர் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

எனவே புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவது என்பதும் பாரிய சவால்களுக்கு உட்பட்டதுடன் கடினமானதுமாகும். எனவே அரசியலமைப்பின் ஊடாக தீர்வை வழங்குவது என்பதும் கடினமானதாகவே அமையும். இந்நிலையில் அரசாங்கம் மக்களின் காணி பிரச்சினை மற்றும் காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் ஆராயவேண்டும்.

மக்களின் போராட்டங்களை நடத்த ஆரம்பித்திருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் தலையிட்டு தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். ஐக்கிய நாடுகள் சபை அனைத்து விடயங்களையும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் தற்போதைய போக்குகளை பார்க்கும்போது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அரசாங்கம் எவ்வாறு என்ன செய்யப்போகின்றது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-02-18#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.