Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் மூளை சலவை செய்யப்பட்ட சர்வதேச சமூகம்

Featured Replies

ஜெனீவாவில் மூளை சலவை செய்யப்பட்ட சர்வதேச சமூகம்

 

ஜெனிவா மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது கூட்டத்தொடரின் இலங்கை பற்­றிய முடி­வுகள், கால அவ­காசம், சர்­வ­தேச விசா­ரணை என்ற விவ­கா­ரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் பாரிய நெருக்­க­டி­க­ளையும் விரி­சல்­க­ளையும் முரண்­பட்ட போக்­கு­க­ளையும் உரு­வாக்கும் நிலை­யொன்று உரு­வா­கி­யி­ருப்­பதைக் காண­மு­டி­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உரு­வாக்கம் என்­பது போருக்கு பின்­னுள்ள நிலை­மை­களில் எவ்­வ­ளவு முக்­கி­யத்­துவம் பெற்­றுக்­கா­ணப்­பட்டு வரு­கி­றது என்­பதை நிகழ்­காலப் போக்­கு­க­ளி­லி­ருந்து தெரிந்து கொண்­டி­ருக்­கிறோம்.

குறிப்­பாக சர்­வ­தேச நாடுகள், சர்­வ­தேச சமூகம் மற்றும் உலக அமைப்­புகள் சார்ந்த விவ­கா­ரங்கள் தொடர்பில் த.தே.கூட்­ட­மைப்பின் வகி­பாகம் 2010 ஆம் ஆண்­டுக்­குப்பின் மிக முக்­கி­யத்­துவம் பெற்­ற­தா­கவும் பிர­பலம் பெற்­ற­தா­கவும் இருந்து வந்­துள்­ளது என்­பதும் அனை­வரும் அறிந்து கொண்ட விட­ய­மாகும்.

உள்­நாட்டு பேச்­சு­வார்த்­தைகள், சர்­வ­தேச நாடுகள் தொடர்­பான சந்­திப்­புகள், தொடர்­புகள் என்­ப­வற்­றுக்கு மேலாக 2012 ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவால் இலங்­கைக்­கெ­தி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னங்கள், அதைத் தொடர்ந்து தீர்­மா­னங்­களை நிறை­வேற்ற வாக்­கெ­டுப்பு தொடர்பில் உலக நாடு­களின் ஆத­ரவை திரட்டிக் கொள்­வ­தி­லுள்ள தந்­தி­ரோ­பா­யங்கள் என எல்லாக் கைங்­க­ரி­யங்­க­ளிலும் கூட்­ட­மைப்பின் பாரிய பங்­க­ளிப்பை மறைத்­து­விட்டு செல்ல முடி­யாது.

இவ்­வ­கை­யான முக்­கி­யமும் கவ­னிப்பும் காத்­தி­ரமும் கொண்ட கூட்­ட­மைப்பில் இன்­றைய போக்­கி­லுள்ள தளர்­நி­லையைப் பார்க்­கின்­ற­போது மக்கள் மற்றும் புத்­தி­ஜீ­விகள் அதிர்ச்­சியும் கவ­லையும் கொள்ள வேண்­டிய நிலை­யொன்று உரு­வா­கி­வி­டுமோ என்று பயம் கொள்ள வேண்­டி­யுள்­ளது.

ஜெனிவாவில் இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­கப்­பட்­ட­மைக்­கான காரணம் கூட்­ட­மைப்­பி­லுள்ள தமி­ழ­ரசுக் கட்சி அர­சுக்கு சார்­பாக நின்று கொண்டு சர்­வ­தேச சமூ­கத்தின் மூளையை சலவை செய்­து­விட்­டது. இதன் கார­ண­மா­கவே இலங்­கைக்கு

34 ஆவது பேரவைத் தொடரில் கால அவ­காசம் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதன் பின்­ன­ணியில் தமி­ழ­ரசுக் கட்­சியே இருந்­துள்­ளது என கூட்­ட­மைப்­புக்குள் இருக்கும் ஒரு சில பங்­கா­ளிக்­கட்­சிகள் குற்றம் சாட்­டி­யி­ருப்­பதும் இந்த குற்றச்சாட்­டுக்கு பதி­ல­ளிப்­பது போல் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் பதில் அளிக்­கும்­போது 'ஒற்­று­மையின் நிமித்­தமே மௌன­மாக இருக்­கிறோம். உரிய நேரத்தில் பதி­ல­ளிப்­போ­மென' பதில் அளித்­தி­ருப்­பதும் கூட்­ட­மைப்பின் சம­நிலைத் தன்­மையில் பாதிப்பு உரு­வா­க்கி­வி­டுமோ என்ற பயத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

போர் முடி­வுக்­குப்பின் கைய­றுந்து போன நிலையில் காணப்­பட்ட தமிழ் மக்­க­ளைத் தாங்கிப் பிடிக்கும் கொழு­கொம்­பாக ஆகிக் கொண்­டது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்­பது யாவரும் தெரிந்து கொண்ட விடயம். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை மக்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மான ஒரு காப்­பா­ள­னாக ஏற்­றுக்­கொண்­ட­மைக்கு பல கார­ணங்கள் இருந்­தன.

போர்க்காலத்தில் அர­சியல் ஆளுமை மிக்க ஒரு கட்­சியை உரு­வாக்க வேண்­டு­மென்ற நோக்கில் அது விடு­தலைப் போரா­ளி­களால் உரு­வாக்­கப்­பட்­டமை இன்­னொரு காரணம். மரபு முறை­யான அர­சியல் சம்­பி­ர­தா­யங்­களில் அனு­பவம் கொண்ட தமி­ழ­ரசுக் கட்­சியின் துணை­யுடன் போர் மனச்­சிந்­த­னை­யுடன் வளர்ந்­த­வர்­களை இணைத்து ஒரு இரு பக்க கூட்­டாக இது உரு­வாக்­கப்­பட்­டமை மக்கள் அங்­கீ­க­ரித்­த­மைக்­கான இன்­னு­மொரு கார­ண­மாக இருந்­துள்­ளது.

போருக்கு முன்­னுள்ள எல்லா நிலைப் பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் போரா­ளி­களும் சர்­வ­தேச துறைசார் நிபு­ணர்­க­ளையும் அழைத்து பங்­கு­கொள்ள வைத்­தார்கள். ஆனால் பழுத்த அனு­ப­வமும் ஆற்­றலும் கொண்ட அர­சி­யல்­வா­திகள் இப்­பேச்­சு­வார்த்­தை­களில் சேர்த்துக் கொள்­ளப்­ப­ட­வில்லை. சில வேளை­களில் அவர்கள் மீது நம்­பிக்­கை­யீ­னங்கள் இருந்­தி­ருக்­கலாம்.

ஆனால் அவ்­வாறு சேர்த்துக் கொள்­ளப்­ப­டா­மையின் எதிர்­வி­ளை­வு­களை நாம் நிறை­யவே அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கிறோம். கிழக்கின் உடை­வுகள், பயங்­க­ர­வாத இயக்கம் என்ற முத்­திரை குத்­தல்கள், தடை­வி­திப்­புகள் என எத்­த­னையோ அசம்­பா­வி­தங்­க­ளையும் சூழ்ச்­சி­க­ளையும் எமது உரி­மைப்போர் சந்­திக்க நேர்ந்­தது. அது­மட்­டு­மன்றி இலங்கை அரசு சர்­வ­தேச நாடு­க­ளையும் வல்­ல­ர­சு­க­ளையும் அணி­தி­ரட்­டிக்­கொண்டு யுத்­தத்தை வெற்றி கொண்­ட­மை­யெல்லாம் அர­சியல் சாணக்­கியம், சாது­ரியம் மிக்க, ஒரு அர­சியல் ஆளு­மை­மிக்க சபை இல்­லாமை என்ற உண்­மை­யையும் நாம் ஏற்­றுக்­கொண்டு தான் ஆக­வேண்டும். இந்த விடயம் தொடர்பில் பின்­னாளில் பல அர­சியல் ஆய்­வா­ளர்­களும் அர­சியல் ஞானி­களும் கூறி­யுள்­ள­மை­யையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

ஆயு­தப்போர் ஆதிக்கம் பெற்ற ஒரு சூழ்­நி­லை­யி­ருந்த போது மக்கள் எவ்­வாறு முழு­மை­யான நம்­பிக்கை கொண்­டி­ருந்­தார்­களோ போருக்­குப்பின் த.தே.கூட்டமைப்பை அந்­த­ள­வுக்கு நம்­பிக்கை கொள்ள வேண்­டிய சூழ்­நிலை உரு­வா­கி­யி­ருந்­துள்­ளது என்ற யதார்த்­தத்­தையும் நாம் புரிந்து கொண்­டி­ருக்­கிறோம். இப்­போ­தைய சம­தன்­மை­யற்ற போக்கு த.தே.கூட்டமைப்­புக்குள் எப்­போது உரு­வா­கிக்­கொண்­டது என்ற தேடல் ஒரு முக்­கி­ய­மான விட­ய­மாக பேசப்­ப­டு­கி­றது. போர் முடிந்­தபின் த.தே.கூட்டமைப்பு 2010 ஆம் ஆண்டு தேர்­தலை பலத்­து­டனும் ஒற்­று­மை­யு­டனும் அதே­வேளை வீரி­யத்­து­டனும் எதிர்­கொள்ளும் ஒரு சூழ்­நி­லை­யொன்று இருந்­துள்­ளது.

2004 ஆம் ஆண்டு தேர்­தலை ஆலோ­சனைப்படியும் வழி­காட்டல் முறைப்­ப­டியும் எதிர்­கொண்­ட­நிலை 2010, ஆம் ஆண்டு தேர்­தலில் இருக்­க­வில்லை. இத்­தேர்­தலில் தமிழ் தரப்­பினர் சார்ந்த சகல அமைப்­பு­களும் கைகோர்த்துக் கொண்டு ஒரே திசை நோக்கி பல­மாக சுதா­ரிக்க வேண்­டிய தேவை இருந்­தது. காரணம் யுத்­தத்­தினால் மக்கள் அனு­ப­வித்த கொடு­மைகள், துன்­பங்கள், துய­ரங்கள் சொல்­ல­மு­டி­யா­த­வை­யா­கவும் கணக்­கிட முடி­யா­த­வை­யா­கவும் இருந்­தன.

இதி­லி­ருந்து மக்­களை மீட்­டெ­டுக்க வேண்­டு­மாயின் அர­சியல் பல­மொன்றை உள்­நாட்­ட­ள­விலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் தேட வேண்­டிய அவ­சி­யமும் அவ­ச­ரமும் ஏற்­பட்ட கார­ணத்­தினால் முறிவு, நெளிவு, உடைவு, விரிசல் இல்­லாத பய­ண­மொன்றை மேற்­கொள்ள வேண்­டிய கடப்­பாடு கூட்­ட­மைப்­புக்கு இருந்­தது என்­பது உண்­மையே.

2013 ஆம் ஆண்டு வட­மா­காணத் தேர்­த­லிலும் தங்கள் பலத்­தையும், மக்கள் வைத்­தி­ருக்கும் ஆத­ர­வையும் சர்­வ­தே­சத்­துக்கு எடுத்துக் காட்­டு­ம­ள­வுக்கு கூட்­ட­மைப்பு வட­மா­காண சபைத் தேர்­தலில் சாதனை புரிந்­துள்­ளது என்­பதும் ஒரு வெளிச்­ச­மான விடயம். ஆனால் 2015 ஆம் ஆண்­டுக்குப் பின்­னுள்ள நிலை­மைகள் தாறு­மா­றாக போன­மைக்கு என்ன காரணம் என்­பதை தேடிப்­பி­டிப்­பதில் தான் பல்­வேறு சிக்­கல்­களும் சங்­க­டங்­களும் காணப்­ப­டு­கின்றன.

நல்­லாட்சி தேசிய அர­சாங்கம் என்­பதை உரு­வாக்­கு­வதில் த.தே.கூட்டமைப்பு கணி­ச­மான பங்­க­ளிப்பை செய்­துள்­ளது என்­பது உல­க­றிந்த விட­ய­மாக இருந்த போதிலும் 2015 ஆம் ஆண்­டுக்குப் பின்­னுள்ள நிலை­மைகள் கூட்­ட­மைப்­புக்கு ஆரோக்­கி­யத்தைத் தர­வில்­லை­யென்­பதை பல்­வேறு நிகழ்­வுகள் மூலம் உண­ர­மு­டி­கி­றது.

கூட்­ட­மைப்பின் ஒற்­று­மை­யையும் பலத்­தையும் உடைத்­து­வி­டு­வதன் மூலம் தம் மீது உள்ள குறிப்­பாக நாட்டின் மீதும் முன்­னைய அர­சாங்­கத்தின் மீது­முள்ள குற்­றச்­சாட்­டு­க­ளையும் அப­கீர்த்­தி­க­ளையும் துடைத்து விட­லா­மென்ற உள்­நோக்கம் கருதி அரச ஆதிக்­க­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­படும் சதி­மு­யற்­சியா அல்­லது தந்­தி­ரோ­பா­யமா என்று சந்­தே­கப்­ப­டு­ம­ள­வுக்கு காரி­யார்த்­தங்கள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

ஏலவே கிழக்கின் உடை­வுக்கும் கார­ண­மாக இருந்­த­வர்கள் என்று எண்­ணப்­ப­டு­கின்ற முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா முன்­கொண்­டு­வந்த பொதியை ஏற்­பு­டையதல்­ல­வென பாரா­ளு­மன்றில் தாறு­மா­றாக கிழித்­தெ­றிந்த ஒரு ஆட்­சி­யா­ளரை நம்பி தமிழ் மக்கள் நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள் என்ற அதி­ருப்­திகள் வளர்ந்து கொண்­டி­ருக்­கின்ற சூழ்­நி­லையில் தான் மேற்­படி உட்­கட்சி நிலை­த­ளர்­வுகள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

ஐ.நா.மனித உரிமைப் பேர­வை­யில் இலங்­கைக்கு இரண்டு வரு­ட­கால அவ­காசம் வழங்கி நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­ன­மா­னது கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்­கைக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னத்­தையே மீளவும் மேற்கோள் காட்டி அவற்றை இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்ற வேண்­டு­மெனத் தெரி­வித்­துள்­ளது. இவ்­வா­றான நிலையில் இத்­தீர்­மா­னத்தை இலங்கை அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இரண்­டு­வ­ரு­ட­கால கால அவ­கா­சத்தை பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் நிலையில் ஏன் இந்த கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

இலங்கை அர­சாங்­கத்­துக்கு கால அவ­காசம் வழங்­கிய செயற்­பாட்­டுக்கு த.தே.கூட்­ட­மைப்­பில் தமி­ழ­ரசுக் கட்சி மாத்­திரம் தமது ஆத­ரவை வழங்­கி­யுள்­ளது. இத்­த­கைய நிலையில் தமி­ழ­ரசுக் கட்சி தமது ஆத­ர­வி­னூ­டாக எதனை சாதிக்க முற்­ப­டு­கி­றது என்­பதை தெளி­வு­ப­டுத்த வேண்டும். அத்­துடன் இக்­கால அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளித்த தமி­ழ­ரசுக் கட்­சியால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்கும் வகை­யில் சர்­வ­தேச நீதி­வி­சா­ரணை ஆணைக்­கு­ழு­வையோ சர்­வ­தேச சட்­டத்­த­ர­ணி­க­ளையோ வழக்­க­றி­ஞர்­க­ளையோ கொண்டு வர­மு­டி­யுமா என்ற கேள்வி பங்­கா­ளிக்­கட்­சி­யொன்­றினால் தொடுக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வி­வ­கா­ர­மா­னது நேர­டி­யா­கவே பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுக்கு முதன்மை ஸ்தானத்தில் நிற்கும் தமி­ழ­ரசுக் கட்­சியை சுட்­டிக்­காட்­டு­வ­தாக அமைந்த நிலையில் தான் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் என்ற வகையில் அதன் தலைவர் மாவை சேனா­தி­ராஜா சாவ­கச்­சே­ரியில் இடம்­பெற்ற வைப­மொன்றில் இவ்­வாறு கூறி­யி­ருந்தார்.

காலத்தின் தேவைக்கு ஏற்ப நாம் ஒன்றிணைந்து செயற்­ப­டு­வதே இன்­றைய தேவை­யாக உள்­ளது. கிளை­யில் இருந்து கொண்டு அடி­ம­ரத்தை வெட்­டு­வது போன்றே த.தே.கூ .அமைப்பில் இருந்து தமி­ழ­ரசுக் கட்­சியை வெளி­யேற்ற வேண்­டு­மென்று கூறப்­ப­டு­வ­தாகும் என அவர் குறிப்­பிட்­டி­ருந்­த­துடன் மக்­களின் வாக்­கு­று­தி­களை நாங்கள் தூக்­கிப்­போ­ட­வில்லை. மக்­களை மனதில் வைத்­துக்­கொண்டே நாங்கள் செய­லாற்றி வரு­கிறோம். காலத்தின் தேவைக்கு ஏற்ப நாம் ஒன்றிணைந்து செயற்­ப­டு­வதே இன்­றைய தேவை­யா­க­வுள்­ளது. எவ்­வ­ள­வுக்கு எவ்­வ­ளவு எமது ஒற்­றுமை பலப்­படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு எமது மக்­களின் தேவை­க­ளையும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வையும் பெற்­றுக்­கொள்ள முடி­யு­மென மாவை சேனா­தி­ராஜா பதில் அளித்­துள்ளார்.

அவரின் பதிலில் நியா­யத்­தன்­மை­யுடன் ஒற்­றுமை கட்­டிக்­காக்­கப்­பட வேண்­டு­மென்ற வாதம் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருப்­பது காலத்தின் தேவை­யாக மாத்­தி­ர­மன்றி அவ­சி­ய­மா­கவும் கரு­தப்­ப­டு­வ­தாகக் கொள்­ளலாம்.

இன்று இலங்கை அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை நிறை­வான வாக்­கு­று­தி­யொன்றை சர்­வ­தே­சத்­துக்கும் ஐ.நா.மனித உரிமைப் பேர­வைக்கும் வழங்­கி­யி­ருக்­கி­றார்கள். அது யாதெனில் 2015 ஆம் ஆண்டு மனித உரிமைப் பேர­வையில் தீர்­மா­னிக்­கப்­பட்­டதும் இணை­ அனு­ச­ரணை வழங்­கப்­பட்­ட­து­மான 30.1 தீர்­மா­னங்கள் அனைத்­தையும் தரப்­பட்ட இரு­வ­ருட காலத்­துக்குள் முழு­மை­யாக நிறை­வேற்­று­வோ­மென்ற வாக்­கு­று­தி­களை நல்­கி­யி­ருக்­கி­றார்கள்.

ஏலவே 2015 ஆம் ஆண்டு கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை இலங்கை அர­சாங்கம் 18 மாத ­கால அவ­காசம் இருந்­த­போ­திலும் எதை­யுமே செய்து முடிக்­க­வில்லை. மீள்­கு­டி­யேற்றம், காணிப்­பி­ரச்­சி­னைகள், வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர், கடத்­தப்­பட்டோர், அர­சியல் கைதிகள் தொடர்பில் காத்­தி­ர­மான எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்கத் தவ­றி­விட்­டது என்ற குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்ட நிலையில் வழங்­கப்­பட்­டி­ருக்கும் 24 மாத கால எல்­லைக்குள் எதை­யுமே இலங்கை அர­சாங்கம் செய்­யப்­போ­வ­தில்லை. அது­வு­மின்றி வழங்­கப்­ப­டு­கிற கால அவ­காச எல்லை முற்­றுப்­பெ­று­கிற காலத்தில் அர­சாங்­கத்தின் ஆயுள்­கா­லமும் ஏறத்­தாழ முடி­வ­டைந்­து­விடும். மீண்டும் தமிழ் மக்கள் போரில் கண்ட ஏமாற்­றத்­தையே தீர்­மான விட­யத்­திலும் காணப்­போ­கி­றார்கள் என்ற அதி­ருப்­தி­களும் அவநம்பிக்கைகளும் சாதாரண பொது மக்களால் மாத்திரமன்றி புத்திஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகளாலும் முன்வைக்கப்படத்தான் செய்கிறது. இதேவேளை கூட்டமைப்பின் சார்பில் கால அவகாசத்தை ஏற்றுக்கொள்கின்றவர்கள் தங்கள் நியாயத்தை பின்வருமாறு முன்வைக்கின்றார்கள்.

அமெரிக்கா, பிரித்தானியாவின் துணையுடன் கொண்டுவந்த தீர்மானத்தில் சர்வதேச நிலைமைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக வலியுறுத்தவோ, வலிமைப்படுத்தவோ முடியும் சூழ்நிலை தற்பொழுது இல்லை. சர்வதேச சமூகத்துடனோ அல்லது உலக நாடுகளோடு ஒத்து ஓடவேண்டிய சூழ்நிலையொன்று எமக்கு உருவாகியிருக்கிறது. அவற்றை மீறி செயற்படுவது என்பது கடினமான காரியம் என்பது மாத்திரமன்றி ஐ.நா.சபையில் வீட்டோ அதிகாரத்தைப் பாவிக்கக்கூடிய நாடுகளான ரஷ்யா, சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இலங்கைக்கு சார்பாக இருக்கின்ற நிலையில் இவற்றை மீறி த.தே.கூட்டமைப்பு செயற்படுவதென்பது அசாத்தியமான காரியமென கூறிவருகின்றார்கள்.

 

எது எவ்வாறு இருந்த போதிலும் கூட்டமைப்புக்குள் ஏற்படக்கூடிய விரிசல்களும் முரண்பாடுகளும் தவிர்க்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒற்றுமை இணைவு என்பது அவசியமானவையென்பதுடன் காலத்தின் தேவையாகவும் கருதப்படுகிறது. பொரிமா தோண்டியின் கதை போல் போட்டு உடைக்காமல் விட்டுக் கொடுப்புகளுடனும் புரிந்துணர்வுடனும் நடந்து கொள்வதன் மூலமே எல்லாவற்றையும் வென்றெடுக்க முடியும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாகவும் காணப்படுகிறது.

 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-04-01#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.