Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத் தலைமைகளின் அத்துமீறல்

Featured Replies

தமிழகத் தலைமைகளின் அத்துமீறல்

Page-01-image-6c03ba6b094723123473530e275be6b78415ac69.jpg

 

ஈழத் தமி­ழர்­களின் போராட்­டத்­துக்கு எப்­போதும் துணை நின்று வந்­தது தமிழ்­நாடு. நெருக்­க­டி­யான கால­கட்­டங்­களில் கூட, தமக்­கான தனிப்­பட்ட பாது­காப்பைக் கருத்தில் கொள்­ளாமல், தமி­ழக மக்­களும், பல அர­சியல் தலை­வர்­களும் ஈழத்­த­மி­ழ­ருக்­காக குரல் கொடுத்­தனர், உத­வி­களைச் செய்­தனர், போராட்­டங்­களை நடத்­தினர்.

இலங்­கையில் தமி­ழர்கள் கொன்று குவிக்­கப்­பட்­டதைப் பொறுத்துக் கொள்ள முடி­யாமல்- அவர்­களைக் காப்­பாற்றக் கோரி, சர்­வ­தே­சத்­தையும், இந்­திய மத்­திய அர­சையும் தலை­யிட்டு, போரை நிறுத்தக் கோரி தமி­ழ­கத்தில் உள்ள பல உற­வுகள் உயிரைக் கூடக் கொடுத்­தி­ருக்­கி­றார்கள்.

அந்­த­ள­வுக்கு ஈழத் தமி­ழர்­க­ளுக்கும், தமி­ழக உற­வு­க­ளுக்கும் இடையில் நெருங்­கிய உறவு நீடித்து வந்­தி­ருக்­கி­றது.

இலங்கைத் தமிழர் பிரச்­சி­னையை அணு­ கிய விதங்­களில், தமி­ழக அர­சியல் தலை­வர்­களை இரண்டு வகை­யாக பிரிக்­கலாம்.

ஒரு வகை­யினர், எப்­போ­தெல்லாம் ஈழத் தமிழர் பிரச்­சினை தமி­ழக மக்கள் மத்­தியில் உணர்வுக் கொதிப்பை ஏற்­ப­டுத்­து­கி­றதோ, அந்தச் சந்­தர்ப்­பங்­களில் அந்தப் பக்கம் சாய்ந்து, அதனை அர­சியல் அறு­வ­டை­யாக் கிக் கொள்­வ­தற்கு முயற்­சிப்­ப­வர்கள்.

இன்­னொரு வகை­யினர், எப்­போதும், எந்தக் காலச் சூழ­லிலும், ஈழத் தமி­ழர்­க­ளுக்­காக குரல் கொடுப்­ப­வர்கள், போராட்­டங்­களை நடத்­து­ப­வர்கள். அதற்­காக சிறைக் கம்­பி­களை எண்­ணு­வ­தற்கும் தயங்­கா­த­வர் கள்.

தமி­ழ­கத்தில் உள்ள பெரும்­பா­லான அர­ சியல் தலை­வர்கள், காலத்­துக்குக் காலம், ஈழத் தமி­ழர்­களின் பால் அன்­பையும், ஆத­ர­வையும், ஏதோ ஒரு வகையில் வெளிப்­ப­டுத்­தி­ய­வர்­க­ளா­கவே இருந்­தனர், இருக்­கின்­றனர்.

சில சம­யங்­களில் அவர்­களின் அர­சியல் கொள்­கைகள், கட்­சிகள் மாறிய போது வேண்­டு­மானால் அமை­தி­யாக ஒதுங்கி நின்­றி­ருக்­கலாம். ஆனாலும், உணர்வு ரீதி­யாக பெரும்­பா­லான தமி­ழக அர­சியல் தலை­வர்கள், ஒரே நிலைப்­பாட்டைக் கொண்­ட­வர்கள் தான். எனினும் விதி­வி­லக்­காக ஒரு சிலர் இருப்­பதை மறுக்­கவும் முடி­யாது.

இவ்­வா­றாக பல தசாப்­தங்­க­ளா­கவே ஈழத் தமி­ழரின் போராட்­டங்­க­ளுக்கு தோளோடு தோளா­கவும், உணர்­வோடு உணர்­வா­கவும் நெருங்கி நின்ற தமி­ழக அர­சியல் தலை­வர்கள் இப்­போது, இங்­குள்ள தமிழ் மக்­களின் நிலை மற்றும் உணர்­வு­களை எந்­த­ள­வுக்கு சரி­யாக மதிப்­பீடு செய்­கின்­றனர் என்ற சந்­தே­கங்கள் எழுந்­தி­ருக்­கின்­றன.

விடு­தலைப் புலிகள் தமக்கு ஆத­ர­வ­ளித்த தமி­ழக அர­சியல் தலை­வர்­களை அதிகம் நம்­பி­யி­ருந்­தனர். முள்­ளி­வாய்க்கால் இறுதிப் போரை இந்­தியா நிறுத்தும் என்று அவர்­களால் புலி­களின் தலை­மைக்கு உறுதி அளிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கின.

ராஜீவ்­காந்தி கொலைக்குப் பின்னர், ஈழத் தமி­ழரின் போராட்டம் குறித்த அக்­க­றை­யீனம் தமி­ழ­கத்தில் தீவி­ர­ம­டைந்த போது, விடு­தலைப் புலிகள் தமக்­கான ஓர் ஆத­ரவு வட்­டத்தை மட்­டுமே பலப்­ப­டுத்தி வந்­தனர். அதற்கு வெளியே நின்ற மிகப் பல­மான தமி­ழக அர­சியல் தலை­வர்­களை அணுக முனை­ய­வில்லை.

எனினும், போர் இறு­திக்­கட்­டத்தை எட்டிக் கொண்­டி­ருந்த போது தான், அந்த வட்­டத்தை உடைத்துக் கொண்டு, பரந்­து­பட்ட ஆத­ரவை தேடிக் கொள்ள முனைந்­தார்கள். அது கிட்­டத்­தட்ட வெள்ளம் தலைக்கு மேல் சென்ற பின்னர் மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சி­யாகத் தான் அமைந்­தது.

விடு­தலைப் புலி­க­ளுக்குப் பிந்­திய கால­கட்­டத்தில் தமி­ழக அர­சியல் தலை­வர்கள், பெரும்­பாலும் புலம்­பெயர் தமி­ழர்­களால் தான் கையா­ளப்­பட்டு வரு­கி­றார்கள். விடு­தலைப் புலி­க­ளுக்கு நெருக்­க­மாக இருந்த தமி­ழக அர­சியல் தலை­வர்­களும், புதி­தாக முளைத்த சிலரும் தான் இப்­போதும் அந்த வட்­டத்­துக்குள் இருக்­கி­றார்கள்.

இதனால், தமி­ழக அர­சியல் தலை­மை­க ­ளுக்கும், ஈழத் தமிழ் அர­சியல் தலை­மைக் கும் இடையில் ஒரு பெரிய இடை­வெளி தோன்றி விட்­டது.

இலங்­கையில் 2009ஆம் ஆண்­டுக்குப் பின்னர், தோன்­றிய தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மைகள், தமி­ழக அர­சியல் தலை­வர்­க­ளுடன் நெருங்­கிய உறவைப் பேண முடி­ய­வில்லை. அதற்கு இரு­த­ரப்­பிலும் காணப்­ப­டு­கின்ற குறு­கிய அர­சியல் நோக்­கங்­களும் கார­ண­மாக இருக்­கின்­றன என்­பதில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை.

இந்த இடை­வெ­ளியை, பலரும் பயன்­ப­டுத்திக் கொள்ள முனை­கி­றார்கள். அவ்­வா­றான ஒன்று தான், ரஜி­னி­காந்தின் வட­ப­குதிப் பய­ணத்­துக்கு தமி­ழ­கத்தில் தோற்­று­விக்­கப்­பட்ட எதிர்ப்பும், அது சார்ந்து எழுந்­தி­ருக்­கின்ற சர்ச்­சை­களும்.

இலங்­கையின் வடக்குப் பகு­தியில் போராட்­டங்கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. அங்கு சூழல் சரி­யில்லை. இதனால் ரஜி­னிகாந்த் அங்கு செல்லக் கூடாது என்று சில தமி­ழக அர­சி­யல்­வா­திகள் எழுப்­பிய குரல்­களின் விளை­வாக அந்தப் பய­ணத்தை ரஜி­னிகாந்த் நிறுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

கடந்த இரண்டு வாரங்­க­ளாக சூடு­பி­டித்­தி­ருந்த இந்த விவ­கா­ரத்­துக்கு, தமி­ழக, ஈழத் தமிழ் அர­சியல் தலை­வர்­க­ளுக்­கி­டையில் நில­வு­கின்ற இடை­வெளி தான் பிர­தான காரணம். ரஜி­னி­காந்தை வைத்து யாரோ ஏதோ அடைந்து விடப் போகி­றார்கள் என்­பது போன்று செய்­யப்­பட்ட பிர­சா­ரங்கள் தர்க்க ரீதி­யாக நியா­ய­மற்­றவை.

ஈழத் தமி­ழ­ருக்­காக இது­வ­ரையில் குரல் கொடுக்­காத- அதற்­கான போராட்­டங்­களில், பங்­கேற்­காத ஒருவர் தான் ரஜினி. அது அவ­ரது தனிப்­பட்ட முடிவு. அதற்­காக, அவர் யாழ்ப்­பா­ணத்­துக்குப் பயணம் மேற்­கொள்ள எடுத்த முடிவு எத்­த­கைய நலன் சார்ந்­த­தாக இருந்­தாலும், அதனைத் தடுக்­கின்ற சூழ­லுக்குக் கொண்டு செல்­லப்­பட்­டமை சரி­யா­ன­தொரு நகர்­வல்ல.

சில தமி­ழக அர­சியல் தலை­வர்கள், ஈழத் தமிழர் விவ­கா­ரத்தை தாமே குத்­த­கைக்கு எடுத்துக் கொண்­டது போல நடந்து கொள்ள முனை­கி­றார்கள். இது ஏற்­பு­டை­ய­தொரு விட­ய­மாகப் பார்க்க முடி­யாது. ரஜி­னிகாந்த் தமி­ழ­ராக இல்­லா­வி­டினும், ஓர் இந்­தி­ய­ராக, அவரைத் தடுப்­ப­தற்கு தமி­ழக அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு உரிமை இருக்­கலாம். (06 ஆம் பக்கம் பார்க்க)

ஆனால், ஈழத் தமி­ழர்­களின் நிலையில் இருந்து அதனைச் செய்­வ­தற்­கான உரிமை குறிப்­பிட்ட சில தமி­ழக அர­சியல் தலை­வர்­க­ளுக்கு குத்­த­கைக்கு கொடுக்­கப்­ப­ட­வில்லை. ரஜி­னி­காந்தின் பய­ணத்­துக்கு கடு­மை­யாக எதிர்ப்புத் தெரி­வித்து அறிக்கைப் போர் நடத்­திய ஒரு தமி­ழக அர­சியல் தலைவர், வடக்கு மாகா­ணத்தில் உள்ள அர­சியல் தலை­வர்கள் கேட்டுக் கொண்­டதால் தான் ரஜி­னிக்கு தாம் இந்த அழைப்பை விடுத்­த­தாக கூறினார், பின்னர் அவர் புலம்­பெயர் தமி­ழர்­களே கோரி­ய­தாக குறிப்­பிட்டார். 

ரஜி­னி­காந்தின் பய­ணத்தை ஈழத் தமி­ழர்­களே விரும்­ப­வில்லை என்­பது போன்ற நிலையை தமி­ழக அர­சியல் தலை­வர்கள் உரு­வாக்க முனைந்­தி­ருக்­கி­றார்கள். தமக்கு நெருக்­க­மான ஒரு சிலரை வைத்து ஒட்­டு­மொத்த ஈழத் தமி­ழர்­களின் நிலை­யையும் தீர்­மா­னிக்­கின்ற அள­வுக்குத் தான், தமி­ழக அர­சி­யல்­வா­திகள் இன்று இருக்­கி­றார்கள்.

ரஜி­னிகாந்த் வடக்­கிற்கு வந்து செல்­வதால் வசந்தம் வந்து விடப் போவ­தில்லை. ஆனால், ஈழத்­த­மி­ழர்­களின் நிலையை நேரில் பார்த்து, உண்­மை­யான நிலையை வெளியே சொல்­லக்­கூ­டிய வலு­வான குரல் ஒன்­றுக்­கான வாய்ப்பு பறிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

தமி­ழ­கத்தில் இன்று ஈழத் தமி­ழர்­க­ளுக்­காக குரல் கொடுக்கும் தலை­வர்­க­ளுக்கு இல்­லா­த­ள­வுக்கு, ரஜி­னியின் குரல் தமிழ்­நாட்டில் எடு­படும் என்­பதில் சந்­தேகம் இல்லை. அப்­ப­டி­யொரு வாய்ப்பு ஏன் தட்டிப் பறிக்­கப்­பட்­டது என்­பது தான் முக்­கி­ய­மான கேள்­வி­யாக இருக்­கி­றது.

வடக்கு மாகா­ண­சபைத் தேர்­தலின் போது, விக்­னேஸ்­வரன் தமி­ழர்­களின் தலை­வ­ராக முடி­யாது என்று கைநீட்­டிய தமி­ழக அர­சியல் தலை­வர்­களும் இருக்­கி­றார்கள். ஈழத் தமிழ் மக்கள் யாரை ஆத­ரிக்க வேண்டும் என்­பதை தீர்­மா­னிக்­கின்ற அள­வுக்கு தமி­ழக அர­சியல் தலை­வர்கள் சிலர் அத்­து­மீ­றி­ய­தையும் மறக்க முடி­யாது. இப்­போதும் கூட அந்த நிலை நீடிக்­கி­றது.

ஈழத் தமி­ழர்­களின் போராட்­டங்­க­ளுக்கு துணை­யாக இருந்­தார்கள், குரல் கொடுத்­தார்கள் என்­ப­தற்­காக, தமி­ழக அர­சியல் தலை­வர்­களே, இங்­குள்ள தமிழ்­மக்­களின் தலை­வி­தியை தீர்­மா­னித்து விட முடி­யாது. அது இங்­குள்ள மக்­களின் உரிமை.

ரஜி­னிகாந்த் விவ­கா­ரத்தில், தமி­ழக அர­சியல் தலை­வர்கள் சிலர் ஏன் இவ்­வாறு நடந்து கொண்­டார்கள் என்ற கேள்­விகள் இருக்­கின்­றன. அவர்கள் ஈழத்­தமிழ் அர­சி­யல்­வா­திகள் சில­ரையும், புலம்­பெயர் தமி­ழர்­க­ளையும் கைகாட்டி விட்டு ஒளிந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். ஏனென்றால், தமிழ் நாட்டில் ரஜி­னி­காந்த்தை எதிர்த்து அர­சியல் செய்ய அவர்கள் விரும்­ப­வில்லை.

அவர்கள் தமது அர­சியல் நிலைப்­பா­டு­க­ளுக்கு மத்­தியில் தெளி­வான ஒரு கோட்டைப் போட்டு வைத்­தி­ருக்­கி­றார்கள்.

ஈழத் தமிழர் பிரச்­சினை விட­யத்தில், தமி­ழக அர­சியல் கட்­சி­களை ஒன்­று­ப­டுத்த – ஒரே அணியில் நிற்க வைக்க முடி­யா­த­மைக்கு இந்தக் கோடு தான் பிரதான காரணம்.

இந்தக் கோட்டைத் தாண்டினால் அவர்களின் அரசியல் நலன்கள் பாதிக்கப்படும். அவர்களின் கட்சி சார் கொள்கை ரீதியாக அதனை தவறான நிலைப்பாடு என்று கூற முடியாது.

அதேவேளை, தமிழர் தமிழரின் போராட்டங்களுக்கு காலங்காலமாக ஆதரவு வழங்கி வந்தவர்கள் என்ற உரிமையை எடுத்துக் கொண்டு, சில தமிழக அரசியல் தலைவர்கள் தான்தோன்றித்தனமாக செயற்பட முனைவதும் ஆரோக்கியமானதல்ல.

ஈழத் தமிழர்களின் வாழ்வியல் யதார்த்தங்கள், நிலைப்பாடுகளுக்கு வெளியில் நின்றே இவர்கள் சிந்திக்க முனைகிறார்கள், வெறுமனே உணர்ச்சி அரசியல் கோசங்களின் ஊடாக ஈழத்தமிழரின் நலன்களை உறுதி செய்யலாம் என்ற இவர்களின் நிலைப்பாடு, நிச்சயமாக இங்குள்ள தமிழர்களின் நலன்களை உறுதி செய்யப் போவதில்லை.

இந்த உண்மையை ஈழத் தமிழர் ஆதரவு தமிழக அரசியல் தலைமைகள் எப்போது உணர்ந்து கொள்ளப் போகின்றன?

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-02#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.