Jump to content

விண்வெளியில் ஒரு குப்பைத் தொட்டி!


Recommended Posts

விண்வெளியில் ஒரு குப்பைத் தொட்டி!

 
 
விண்வெளியில் குப்பைகளை சேகரித்தல்

ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்வது முதல், வயலின் கட்டுவதற்கு பட்டுக்கூடுகளைப் பிண்ணும் சிலந்திகள் வரை, இதோ இங்கே இருக்கிறது எதிர்கால அறிவியல்.

பொதுப்பயன்பாட்டுக்கு வரக்கூடிய வாய்ப்புள்ள அதி-நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் தீர்வுகள் தொடர்பான உதாரணங்கள் குறித்து லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி அறிமுகப்படுத்தி வருகிறது.

அவர்களது 2016-ம் ஆண்டு பட்டியலில், ஆர்வத்தைத் தூண்டும் ஐந்து படைப்புக்கள் கண்டுப்பிடிக்கப்ட்டன. இவை, ஆய்வுக் கூடங்களைத் தாண்டி, மனித வாழ்க்கையில், சோதித்துப் பார்க்கத் தயாராகிவிட்டன. அதில் ஒன்று விண்வெளியில் குப்பைகளை சேகரித்தல்.

விண்வெளியில் குப்பைகளை சேகரித்தல்

காலியான ராக்கெட் ஏவுகலண்கள், செயலிழந்து போன பெரும் செயற்கைக் கோள்கள், கண்ணாடி மற்றும் பெயின்ட் சிதிலங்கள் போன்றவை விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கின்றன. 7 ஆயிரம் டன் விண்வெளிக் குப்பைகள் மூலம், இந்த மெய்நிகர் குப்பைத் தொட்டி உருவாகியுள்ளது. விண்வெளிக் காலம் துவங்கியது முதல் இப்படித்தான் விண்வெளி குப்பையாக்கப்பட்டிருக்கிறது.

உயிருக்கு ஆபத்தானதா விண்வெளி பயணம்?

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பல கலன்கள், இன்னும் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. பயன்பாட்டில் இருக்கும் செயற்கைக் கோள்களுடன் மோதக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளன. ஆனால், அந்த செயற்கைக் கோள்கள் நமது இணையதளம் மற்றும் மொபைல் தொலைபேசித் தொடர்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமானவை.

இது ஏற்கெனவே நடந்துவிட்டது. மணிக்கு ஆயிரக்கணக்கான மைல் வேகத்தில் பூமியை சுற்றி வரும் பயனற்றுப் போன விண்கலத்தின் சிறிய பாகங்கள் கூட, பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடியவை என்பதைக் காட்டியிருக்கின்றன. விண்வெளிக் குப்பைகளுடன் மோதல் ஏற்படாமல் தவிர்க்க, சர்வதேச விண்வெளி நிலையம், அடிக்கடி தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

விண்வெளியில் குப்பைகளை சேகரித்தல்

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வருகிறது குப்பைகளை அகற்றும் திட்டம். 2017-ம் ஆண்டு துவக்கத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. விண்வெளிக் குப்பைகளை பூமிப்பாதைக்குள் இழுத்து வரும் இந்தத் திட்டம், புதிய தொழில்நுட்பத்தின் முதல் முயற்சி.

''இது அறிவியல் கதை அல்ல. நிஜமான பிரச்சினை. விண்வெளிக் குப்பைகள் அனைத்தும், புவியீர்ப்புத்தன்மை காரணமாக பூமிக்கு வந்துவிடும். ஆனால், சில குப்பைகள் அல்லது துண்டுகள், பூமியிலிருந்து ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளன. அந்த உயரத்தில் இருந்து பூமிக்கு வர ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அவ்வளவு காலம் நம்மிடம் இல்லை. விண்வெளிக் குப்பைகளால் பெரும் பிரச்சினை ஏற்படுவதற்கு இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகள்தான் இருக்கின்றன'' என்று விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளிக் குப்பைகளை அகற்றும் அணியைச் சேர்ந்த ஜேசன் ஃபோர்ஷா பிபிசியிடம் தெரிவித்தார்.

பழைய குழாய்கள் மூலம் சூரிய புயலை கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் உதகை ஆய்வகம்

சோதனை ரீதியாகப் பயன்படுத்தப்படும் குப்பைகளை அகற்றும் தொழில்நுட்பம், ஆச்சரியப்படத்தக்க வகையில், சாதாரண தத்துவங்களின் அடிப்படையிலானது.

ஒன்று, விண்வெளி வலை. மீன் பிடி வலையைப் போன்று, இந்த வலையை விண்வெளியில் வீச வேண்டும். வலையில் விண்வெளிக் குப்பை சிக்கியவுடன், கயிற்றால் கட்டப்பட்ட லாரியைப் போல அவை விண்கலத்துக்குப் பின்னால் இழுக்கப்பட்டு, பூமிக்குக் கொண்டுவரப்படும்.

பூமிக்குத் திரும்பும்போது, அதனால் ஏற்படும் வெப்பத்தால் குப்பைத் துண்டுகள் எரிந்துவிடும். அவ்வாறு முழுமையாக எரிந்துபோகாத துண்டுகள், பசிபிக் கடலில் விழும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு, செலுத்தப்படும்.

இன்னொரு முறை, பட்டம் போன்று இருக்கும். இது, பாய்மரப்படகில் கட்டப்படும் பாயைப் போன்று, இது வெள்ளிப் பாய். மெல்லிய சவ்வினால் உருவாக்கப்பட்ட இது காற்றுக்குப் பதிலாக, சூரிய ஒளியின் மூலம் செலுத்தப்படும். விண்வெளியில் உள்ள குப்பைகளை இழுத்து பூமிக்கு அனுப்புவுதுதான் இதன் பணி.

http://www.bbc.com/tamil/global-39480682

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்றைய உலகில், மதத்தை வைத்து பிழைப்பவர்களும் அதை விற்று பிழைப்பவர்களுமுண்டு. மதத்தின் புனிதம், மனித நேயம் எல்லாம் மரணித்து வெகுகாலமாகிவிட்டது. இந்து தமிழர் கட்சி தலைவர், ராம ரவிக்குமார் கிறிஸ்தவர்களை சாடியிருக்கிறார். ஒன்று இவர்களின் லாப நோக்கு அல்லது நிர்வாக திறன் இன்மையே காரணம் என்பதை ஒத்துக்கொள்ள தயாரில்லை. அங்கே முழங்கினால் இங்கே சச்சியர் வீட்டில் அடை மழைபெய்யும். கிறிஸ்தவர்களை வாங்கு வாங்கென்று வாங்குவார். ஆனால் தமிழக அரசு, இது ஒரு ஊர்ஜிதமற்ற குற்றச்சாட்டு என்றும் இவர்கள் கூறும் நிலையத்தில் கோவில் பிரசாதம் (லட்டு) செய்ய பொருட்கள் கொள்வனவு செய்வதில்லையென்றும் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. 
    • அம்பாறையில் தேர்தல் நிலவரம்! அம்பாறை  மாவட்டத்தின்  திகாமடுல்ல  தேர்தல் தொகுதியில்  30 வீதம் வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அம்பாறை மாவட்டத்தில் 5,55,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 528 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 4 ஆசனங்களுக்காக 39 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளாகவும் பல சுயேட்சைகளாகவும் களமிறங்கி உள்ளனர். இத்தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் 82,830 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99727 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 1,84,653 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 188222 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது” இவ்வாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தனது வாக்கினை விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400420
    • யாழில் தேர்தல் நிலவரம்! யாழ்ப்பாணத்தில் இன்று  மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில்,நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் 35 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை 04 மணி வரையில் வாக்களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400414
    • பின்னாலை... ரணில்,  காஸ் சிலிண்டருடன் சத்தமே  இல்லாமல்  போறார். . 😂 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.