Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க காங்கிரஸின் அனுமதியின்றி ஈரான் மீது படை எடுக்க வேண்டாம்

Featured Replies

புஷ்ஷுக்கு ஹிலாரி எச்சரிக்கை

அமெரிக்க பாராளுமன்றத்திடம் அனுமதி பெறாமல், ஈரான் மீது படை எடுக்க வேண்டாம் என்று எச்சரித்தார் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டன்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி, நியூயோர்க் நகரிலிருந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தொழில் ரீதியாக சிறந்த வழக்கறிஞர். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிடக்கூடியவர். சர்வதேச அரசியல் விவகாரங்களில் அதிக அக்கறை காட்டுகிறவர். அவருடைய எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.

அமெரிக்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை பேசிய ஹிலாரி இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

"ஈரானுக்கு எதிராக போர் தொடுப்பது அவசியம் என்று நிர்வாகம் நினைத்தால், அதை பாராளுமன்றத்திலே தெரிவித்து, பாராளுமன்றத்தில் விவாதித்து, அங்கு ஒப்புதல் பெற்று பிறகு நடவடிக்கை எடுக்கலாம்.

நியூயோர்க், வாஷிங்டன் நகரங்கள் மீது அல்-ஹைடா பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தபோது, பயங்கரவாதிகளையும் அவர்களுக்குத் துணை போகிறவர்களையும் தாக்கலாம் என்று அமெரிக்க பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் அந்தச் சூழலை மனதில் நினைத்து நிறைவேற்றப்பட்டது. இதையே எல்லா படையெடுப்புகளுக்கும், அங்கீகார சாசனமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கக்கூடாது.

பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்பதை எல்லா அமெரிக்கர்களும் உணர்ந்தேயுள்ளனர். ஆனால், ஒரு நாட்டின் மீது படையெடுப்பதை சற்று நிதானித்தே மேற்கொள்ள வேண்டும். ஈராக்கில் படை எடுத்ததால் ஏற்பட்டு வரும் விளைவுகளை ஒதுக்கிவிட முடியாது. எனவே, சர்வதேச அணுவிசை ஏஜென்சியின் நிபந்தனைகளை ஏற்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காவோ அல்லது ஊகங்களின் அடிப்படையிலோ ஈரான் மீது படை எடுத்துவிட்டு பிறகு அது குறித்து பரிசீலிப்பது சரியாக இருக்காது" என்று ஹிலாரி குறிப்பிட்டிருக்கிறார்.

ஈராக்கில் பயங்கரவாதிகள் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். சதாம் ஹுசெய்ன் அவர்களுக்குப் புகலிடம் அளித்திருக்கிறார். ஏராளமான மக்களை கும்பல் கும்பலமாகக் கொல்லக்கூடிய இராசாயன ஆயுதங்கள், உயிரி ஆயுதங்கள், அணுகுண்டுகள் ஈராக்கில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்றெல்லாம், ஈராக் மீது படை எடுப்பதற்கு முன்னால் அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வும் இதர உளவு அமைப்புகளும் கூறின. உண்மையில் ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் படையெடுத்து ஆக்கிரமித்த பிறகு அப்புகார்களில் ஒன்றைக்கூட நிரூபிக்க முடியவில்லை.

கடைசியாக, சொந்த நாட்டு மக்களை அடக்குமுறைகள் மூலம் சதாம் ஹுசெய்ன் கொன்றார் என்ற குற்றச்சாட்டைக் கூறி, விரைந்து விசாரணை நடத்தி தூக்கில் போட்டுவிட்டனர். எனவே, ஈரான் விஷயத்திலாவது நிதானம் தேவை என்று ஹிலாரி எச்சரித்திருக்கிறார்.

http://www.thinakkural.com/news/2007/2/17/...s_page21491.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.