Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்டாக்ஹோமில் மக்கள் கூட்டத்தில் லாரியை ஏற்றி தாக்குதல்:3 பேர் உயிரிழப்பு

Featured Replies

ஸ்டாக்ஹோமில் மக்கள் கூட்டத்தில் லாரியை ஏற்றி தாக்குதல்:3 பேர் உயிரிழப்பு

 
 

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மையப்பகுதியில் ஒரு கடைக்குள் லாரியைப் புகுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்ததாக சுவீடன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதல் நடந்த இடத்தில்படத்தின் காப்புரிமைLASSE GARE Image captionதாக்குதல் நடந்த இடத்தில்

துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பல பேர் காயமடைந்திருப்பதாக சுவீடன் போலீசார் தெரிவித்தனர்.

நகரில் பாதசாரிகள் பயன்படுத்தும் முக்கியப் பகுதியான குயின்ஸ் வீதியில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்தத் தாக்குதல் நடைபெற்றது.

ஒரு லாரி, டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குள் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு புகுந்ததாகவும், அதில் அடிபட்டு மக்கள் கிழே விழுந்து கிடந்ததைப் பார்க்க முடிந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்துக்குப் பிறகு சிட்டி சென்டரை போலீசார் சுற்றி வளைத்து, அரண் அமைத்துள்ளனர்.

ஆனால், உயிரிழந்தவர்கள் அல்லது காமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து போலீசார் உறுதிப்படுத்தவில்லை.

http://www.bbc.com/tamil/global-39531413

  • தொடங்கியவர்

ஸ்டாக்ஹோம் ட்ரக் தாக்குதல்: 5 பேர் பலி

truck

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கனரக வாகனமான ட்ரக்கை கொண்டு, மர்ம நபர் ஒருவர் மார்க்கெட்டில் விபத்து ஏற்படுத்தியதில் 5 பேர் பலியாகியுள்ளனர். அங்கு ட்ராட்னிங்கட்டான் பகுதியில் உள்ள முக்கிய வணிக வீதியில் இந்த தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

அங்குள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரக்கை, மர்ம நபர் ஒருவர் திருட்டுத்தனமாக இயக்கத் தொடங்கியுள்ளார். பின்னர், கூட்ட நெரிசல் மிகுந்த அந்த வணிக வீதியில் கண்மூடித்தனமாக அந்த ட்ரக்கை ஓட்டியுள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் சிதறி ஓடினர். தொடர்ந்து அந்த ட்ரக்கில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர். 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். அந்த ட்ரக்கை இயக்கியதாக கூறப்படும் மர்ம நபரை ஸ்வீடன் போலீஸ் மடக்கி பிடித்து கைது செய்துள்ளது. அந்த நபரின் பின்னணி மற்றும் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. அவரது ட்விட்டர் பக்கத்தில், 'இந்த தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தார்களுடன் இந்த துக்கத்தை பகிர்ந்து கொள்கிறோம். இந்த கடுமையான நேரத்தில் ஸ்வீடன் மக்களுடன் இந்தியா உறுதியாக நிற்கும்', என தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/world/85772-stockholm-truck-attack-five-dead.html

  • தொடங்கியவர்

ஸ்வீடன்: சன நெரிசலான பகுதிக்குள் வேகமாகப் புகுந்த ட்ரக் மோதி நால்வர் பலி!

 

 

ஸ்வீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில், சன நெரிசலான பகுதியில் படு வேகமாகப் புகுந்த வாகனம் மோதி நான்கு பேர் பலியாகினர். மேலும் பதினைந்து பேர் படு காயங்களுக்குள்ளாகினர். இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

2_V_Sweden.jpg

இச்சம்பவம் தீவிரவாதச் செயலாக இருக்கலாம் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

வார இறுதி நாளான நேற்று (7) வெள்ளியன்று, சன நெரிசலான சந்தைப் பகுதிக்குள் வேகமாக நுழைந்தது ஒரு பெரிய ட்ரக். வீதியின் இரு மருங்கிலும் வளைந்து வளைந்து ஓடிய அந்த ட்ரக், எதிர்ப்பட்டவர்களையெல்லாம் மோதியபடி சென்று ஒரு சிறப்பு அங்காடிக் கட்டிடத்தில் மோதி நின்றது. இதில், தள்ளுவண்டியில் வைத்து அழைத்து வரப்பட்ட குழந்தை ஒன்றும் அடக்கம்.

2_V_Sweden_1.jpg

குறித்த ட்ரக் வண்டி பியர் உற்பத்தி நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது. மர்ம நபர்கள் சிலர், பியர்களை வினியோகிக்க வந்த அந்த ட்ரக்கை கடத்தியே இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தியதாகத் தெரியவருகிறது. ட்ரக்கைக் கடத்தியவரைத் தடுக்க முயன்ற ட்ரக் சாரதியும் கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் உள்ளவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதோடு, சுற்று வட்டாரங்களில் தேடுதல் நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/18860

  • தொடங்கியவர்

ஸ்டாக்ஹோம்: தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியில் சந்தேகத்துக்குரிய பொருள்

 
 

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஒரு கடைக்குள் லாரியை ஏற்றி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட லாரியில் சந்தேகத்துக்குரிய பொருள் இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக போலீசார் உறுதி செய்துள்ளனர்.

லாரியின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருந்த அந்த `தொழில்நுட்ப கருவி ' என்ன என்பது குறித்து இப்போது தெரியாது என்றும், ஆனால் அது அங்கு இருக்கக் கூடாதது என்று மட்டுமே தெரியும் என்றும் தேசிய போலீஸ் ஆணையர் டேன் எலிசன் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீஸ் காவலில் உள்ள நபர், 39 வயதான உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று, ஸ்டாக்ஹோமில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் செலுத்தி நடத்தப்பட்ட லாரித் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர்.

சுவீடன் பிரதமர் ஸ்டீஃபன் லோவென், இது தீவிரவாதத் தாக்குதல் என்று கூறியுள்ளார். அவரது வேண்டுகோளின்படி, எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/global-39537862

  • தொடங்கியவர்

சுவீடன் ட்ரக் வண்டித்தாக்குதலில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது

 

சுவீ­டனில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ட்ரக் தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­யவர் என சந்­தே­கிக்­கப்­படும் மேலும் ஒரு சந்­தேக நபரை சுவீடன் பொலிஸார் கைது­  செய்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அத்­துடன் குறித்த ட்ரக் வண்­டிக்குள் வெடிக்­காத நிலையில் காணப்­பட்ட வெடி­பொருள் அடங்­கிய பய­ணப்பை ஒன்­றையும் குண்டு செய­லி­ழப்பு பிரி­வினர் மீட்­டுள்­ள­தா­கவும் சுவீடன் பொலி ஸார் நேற்று தெரி­வித்­தனர்.   

மேலும், குறித்த சந்­தே­க­நபர் நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு காரில் வேக­மாக பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த வேளையில் பொலிஸார் விரட்டிச் சென்று கைது செய்­துள்­ள­தாக உத்­தி­யோ­கப்­பூர்­வற்ற தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன. எனினும் இத்­தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணைக்­காக இருவர் அழைத்து செல்­லப்­பட்­டி­ருந்த நிலையில், சந்­தேக நபர் ஒரு­வரின் புகைப்­ப­டத்தை சுவீடன் பொலிஸார் வெளி­யிட்­டுள்­ளனர்.

 தாக்­குதல் தொடர்பில் ஆரம்­பத்தில் கைது­செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர் (39 ) உஸ்­பெ­கிஸ்­தானை சேர்ந்­தவர் எனவும் 4 பிள்­ளை­களின் தந்தை எனவும் ஆரம்ப கட்ட விசா­ர­ணையில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது..

மேலும், குறித்த சந்­தேக நபர் தனது சமூக வலைத்­த­ளத்தில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் தாக்­கு­தல்­களை நியா­யப்­ப­டுத்தும் வகையில் பதி­விட்­டி­ருந்தார் எனவும் 2013 இல் அமெ­ரிக்­காவில் பொஸ்டன் மரதன் போட்­டி­யின்­போது இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பு தொடர்­பான புகைப்­ப­டங்­களை லைக் செய்­தி­ருந்தார் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

சுவீடன் நாட்டின் தலை­நகர் ஸ்டாக்­ஹோமின் டிராட்­நிங்­கதன் தெருவில் ஆடம்­பர பல்­பொருள் அங்­காடி உள்­ளது. கடந்த வௌ்ளிக்­கி­ழமை பிற்­பகல் அதிக மக்கள் நட­மாட்டம் உள்ள வேளை ஒரு டிரக் வண்டி, கட்­டுப்­பாட்டை இழந்து தாறு­மா­றாக ஓடி, நடை­பா­தையில் உள்­ள­வர்கள் மீது மோதி­ய­துடன், பல்­பொருள் அங்­கா­டிக்குள் புகுந்து நின்­றது.

இந்த விபத்தில் 3 பேர் சம்வ இடத்­தி­லேயே உடல் நசுங்கி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த­துடன் சுமார் 15 பேர் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந்­நி­லையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த மேலும் ஒருவர் பலி­யா­கி­யுள்ளார்.

இவ்­வேளை குறித்த தாக்­கு­த­லுக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட டிரக் வண்டி பியர் போத்­தல்­களை ஏற்றி சென்­று­கொண்­டி­ருந்­த­வேளை சார­தி­யுடன் கடத்­தப்­பட்­ட­தாக பியர் தயா­ரிப்பு நிறு­வனம் தெரி­வித்­தி­ருந்­த­தாக செய்­தி­யொன்றும் வெளி­யா­கி­யி­ருந்­தது.

 தலை­ந­கரில் நடத்­தப்­பட்ட இந்த டிரக் தாக்­குதல் தீவி­ர­வாத தாக்­கு­த­லாக இருக்­கலாம் என சுவீடன் பிர­தமர் ஸ்டீபன் லோபென் தெரி­வித்­தி­ருந்தார். அத்­துடன் தாக்­குதல் சம்­ப­வத்தை தொடர்ந்து அந்­நாட்டின் எல்லை பகு­தி­களில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பிர­தமர் மேலும் தெரிவித்துள்ளார். அந்நாட்டின் இந்திய தூதரகத்தின் அருகிலேயே அரங்கேறிய இச் சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று தாக்குதல் இடம்பெற்ற இடத்திற்கு ஒன்று கூடிய பொதுமக்கள் இறந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-04-09#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.