Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் ஒன்றிணையுங்கள் - வடக்கு முதல்வர் சி.வி.அழைப்பு

Featured Replies

 

01-69373dca1f2e53f2e0a41ba38f6a211c793c4acc.jpg
 ஜன­நா­யக வழி­மு­றை­களில் மக்கள் தங்கள் கவ­னத்தைத் திருப்­பி­யுள்­ளார்கள். முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வும் ஒரு­விதப் போராட்டம் தான். அநி­யா­ய­மாக கொலை செய்­யப்­பட்ட எம் மக்­களை நாம் ஒன்­றி­ணைந்து நினைவு கொள்­வதன் மூலம் மக்­களின் ஒரு பாரிய துயர அலையை உண்­டு­ப­டுத்­து­கின்றோம் என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

இறந்து போன­வர்­களின் ஆன்­மாக்கள் சாந்தி அடைய வேண்டும் என்று ஒரு­மித்து மன­தார கோரிக்கை விடு­வது இங்கும் பிற­நா­டு­களில் வாழும் தமிழ் மக்­க­ளையும் மனதால் ஒன்று சேர் க்க உத­வு­கின்­றது. அத்­துடன் எம்மக்­களின் ஒற்­று­மையே எமது

கோரிக்­கை­க­ளுக்கு ஆட்­சி­யா­ளர்­களைச் செவி­சாய்க்க வைக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அத்­துடன் அர­சாங்கம் நீதியை வழங்­குவோம் என கூறி ஐக­கிய நாடுகள் சபையின் மனித உரிமை போர­வையில் நீட்­சியைப் பெற்­றுக்­கொண்­டாலும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக தெரி­ய­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இறுதி யுத்­தத்தின் போது உயி­ரி­ழந்த எமது மக்­களை நினை­வு­கூரும் சோக நாளாக இம்­மாதம் 18ஆம் திகதி முல்­லைத்­தீவு முள்­ளி­வாய்க்­காலில் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வி­ருக்­கின்ற நிலையில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வரன் விடுத்­துள்ள அறி­விப்பில் மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி அளவில் ஏற்­பட்ட எம் இனிய உற­வு­களின் அநி­யா­ய­மான உயி­ரி­ழப்­பு­க­ளுக்கு உணர்வு பூர்­வ­மாக அஞ்­சலி செலுத்தும் புனித நாளே இம்­மாதம் வரும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் தின­மாகும். அந்த உயி­ரி­ழப்­புக்கள் நடந்து 8 வரு­டங்கள் ஆகின்­றன.

அன்று குழந்­தை­க­ளா­க­வி­ருந்த இளம் சிறார்கள் இன்று இளைஞர் யுவ­தி­க­ளாக உரு­மாற்றம் பெறும் நிலையில் உள்­ளார்கள். ஆனால் அவர்­களின் உள்­ளங்­களில் கூட அன்று நடந்த பயங்­க­ர­மான நிகழ்­வுகள் ஓர­ளவு வடுக்­களை விட்டுச் சென்­றுள்­ளன.

சாட்­சி­யில்­லாது நடத்­தப்­பட்ட சமரே முள்­ளி­வாய்க்கால். வெளி­யாரின் உள்­ளீ­டுகள் தடுக்­கப்­பட்டு, ஊடக உள்­நு­ழைவு மறுக்­கப்­பட்டு, போர் நடை­மு­றை­க­ளுக்கு முரண்­பட்ட விதத்தில் போரா­யு­தங்கள் பாவிக்­கப்­பட்டு கர­வாக மக்­களை அழித்­தொ­ழித்த சமரே முள்­ளி­வாய்க்கால். அப்­பாவிப் பெண்கள், பிள்­ளைகள், குழந்­தைகள், வயோ­தி­பர்­களின் உயிர்­களைக் கார­ண­மின்றிக் காவிச் சென்­றதே முள்­ளி­வாய்க்கால்.

வட கிழக்கு மாகாண மக்­களின் சரித்­தி­ரத்தில் மாறா இடம்­பெற்­று­விட்ட சோக வர­லாற்­றுப்­ப­திவே முள்­ளி­வாய்க்கால். அன்­றைய தினம் என்­றென்றும் எம் மக்­களின் வர­லாற்றில் ஒரு துக்க தின­மாக அனுஷ்­டிக்­கப்­பட வேண்­டிய தின­மாகும்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முடி­விலே உயி­ரி­ழந்த ஆயி­ர­மா­யிரம் பொது­மக்கள் தொடர்­பான உண்மை நிலை இது வரைக்கும் வெளிச்­சத்­திற்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. நடந்­தது சம்­பந்­த­மான நம்­ப­கத்­தன்மை வாய்ந்த விசா­ர­ணைப்­பொ­றி­முறை இது­வ­ரையில் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இன்றும் எம் மக்கள் உண்­மையை அறிய ஆவ­லாக உள்­ளார்கள்.

அண்­மையில் ஐக்­கிய நாடு­க­ளுக்­கான மனித உரி­மைகள் பேரவை, போரிலே கொல்­லப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நீதி உறு­திப்­ப­டுத்­தப்­படும் என்ற தோர­ணையில் மேலும் இரு வரு­டங்கள் கால நீட்சி அளித்­துள்­ளது. வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் பொறுப்புக் கூற­லா­னது நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்­பதே சர்­வ­தே­சத்­த­வர்­களின் எதிர்­பார்ப்பு. இலங்கை அர­சாங்கம் இது பற்­றிய உரிய நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தாகக் கூறியே கால நீட்சி பெற்­றுக்­கொண்­டது.

ஆனால் அது பற்றி எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்க அர­சாங்கம் முன்­வ­ரு­வ­தாகத் தெரி­ய­வில்லை. முன்­னைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா மட்டும் வெளி­நாட்டு உள்­ள­டங்­க­லுடன் போர்க்­குற்ற விசா­ரணை நடை­பெற வேண்டும் என்ற தமது தனி­யான கருத்தை வெளி­யிட்­டுள்ளார். வெளி­நாட்டு உள்­ளீ­டுகள் இல்­லாத நீதி விசா­ரணை ஒரு போதும் உண்­மையை வெளிக்­கொண்­டு­வர உதவி செய்­யாது.

சிலர் இவ்­வா­றான பொறி­மு­றையை நாங்கள் வேண்டி நிற்­பதன் நோக்கம் குற்ற வாளிகள் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்­பதே என்று நம்­பு­கின்­றார்கள். அதனால் பெருந்­தன்­மை­யுடன் இரக்கம் காட்டி அதைப்­பற்றி மறந்­து­வி­ட­லாமே என்று கூறு­கின்­றார்கள்.

இவ்­வாறு கூறு­ப­வர்கள் கொழும்­பிலும் வேறு இடங்­க­ளிலும் சொகு­சாக இருந்­து­கொண்டு இவ்­வா­றான கருத்­துக்­களை வெளிக்­கொண்டு வரு­கின்­றார்கள். இது தவறு. இப்­பேற்­பட்ட விசா­ரணை தமிழ் மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­களை சர்­வ­தே­சத்­திற்கு எடுத்­து­ரைக்க உதவும்;. குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டு­கின்­றார்­களோ இல்­லையோ இது­வரை காலமும் தமிழ் மக்கள் எவ்­வாறு நடாத்­தப்­பட்­டுள்­ளார்கள் என்­பது சம்­பந்­த­மான விட­யங்கள் இவ்­வா­றான விசா­ர­ணைகள் வெளிக்­கொண்­டு­வ­ரு­வ­ன­வாகும்.

அத்­துடன் நடந்­தவை வெளிச்­சத்­திற்கு வந்தால் அவை தமிழ் மக்­களின் நல்­ல­தொரு அர­சியல் தீர்­வுக்கு முன்­னோ­டி­யாக அமை­யக்­கூடும். தமி­ழர்கள் தமது அர­சியல் உரி­மைக்­கான கோரிக்­கை­களை இது­வ­ரை­கா­லமும் தொடர்ச்­சி­யாக முன்­வைத்து வந்த கார­ணங்­களை எடுத்­தி­யம்ப அவ்­வா­றான விசா­ர­ணைகள் வழி­வ­குப்­ப­ன­வாகும். உண்­மை­யான அதி­காரப் பர­வ­லாக்கம் விரைந்து செயற்­ப­ட­வேண்­டி­ய­தொன்று என்­பதை அனை­வ­ரையும் அறிந்து கொள்­ளச்­செய்­வ­ன­வாகும்.

இன்று ஜன­நா­யக வழி­மு­றை­களில் மக்கள் தங்கள் கவ­னத்தைத் திருப்­பி­யுள்­ளார்கள். அடி­தடி எடுத்தே ஒரு விட­யத்­திற்கு தீர்வு காணலாம் என்ற எண்ணம் போய் எம்மை நாமே வருத்தி அகிம்சை முறையில் போராடி வெற்­றிகள் காண­மு­டி­யு­மென்­பதை எமது மக்கள் எடுத்­துக்­காட்டி வரு­கின்­றார்கள்.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வும் அந்­த­வ­கை­யிலே ஒரு­விதப் போராட்­டம்தான். அநி­யா­ய­மாக கொலை செய்­யப்­பட்ட எம் மக்­களை நாம் ஒன்­றி­ணைந்து நினைவு கொள்­வதன் மூலம் மக்­களின் ஒரு பாரிய துயர அலையை உண்­டு­ப­டுத்­து­கின்றோம். இறந்து போன­வர்­களின் ஆன்­மாக்கள் சாந்தி அடைய வேண்டும் என்று ஒரு­மித்து மன­தார கோரிக்கை விடு­வது இங்கும் பிற­நா­டு­களில் வாழும் தமிழ் மக்­க­ளையும் மனதால் ஒன்று சேர்க்க உத­வு­கின்­றது. எம் மக்­களின் ஒற்­று­மையே எமது கோரிக்­கை­க­ளுக்கு ஆட்­சி­யா­ளர்­களைச் செவி­சாய்க்க வைக்கும்.

ஆகவே இம் மாதம் 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்­காலில் நடை­பெறும் நினை­வேந்தல் நிகழ்ச்­சியில் கட்சி பேத­மின்றி, மத பேத­மின்றி, இன பேத­மின்றி, வர்க்க பேத­மின்றி, ஏழைகள் பணக்­கா­ரர்கள் என்ற வித்­தி­யா­ச­மின்றி எமது மக்கள் சேர்ந்து பங்­கு­பற்ற வேண்டும். வட­கி­ழக்கு மாகா­ணங்­களில் உள்ள அனைத்து தமிழ் மக்­களும் அத்­துடன் நாட்டின் ஏனைய இடங்­களில் வசிக்கும் தமிழ் மக்­களும் புலம் பெயர் தமிழ்­மக்­களும் ஒன்று சேர்ந்து தமது துக்­கத்தை வெளிப்­ப­டுத்தும் நாளாக அதை மாற்ற வேண்டும்.

எனவே இம்­மாதம் 18ஆம் திகதி காலை 9.30 மணிக்கு முள்­ளி­வாய்க்­காலில் கூடும் ஜனக்­கூட்டம் 3 நிமிட நேர மௌன அஞ்­ச­லியை நடாத்தும். அதே வேளை வடக்­கிலும் கிழக்­கிலும் ஏனைய இடங்­க­ளிலும் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் மற்றும் புலம்­பெயர் தமிழ்ப்­பேசும் மக்கள் ஆகியோர் காலை 9.30 மணி தொடக்கம் 3 நிமிட நேர மௌன அஞ்­ச­லியை நடாத்த வேண்டும்.

வெளி­நா­டு­களில் உள்­ள­வர்கள் தமது வச­திக்­கேற்­ற­வாறு மூன்று நிமி­ட­நேர மௌன அஞ்­ச­லியில் ஈடுபடலாம். ஒரு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எவ்வாறு மக்கள் எங்கெங்கு நிற்கின்றார்களோ அங்கு தனித்துநின்று நாட்டிற்குக் கௌரவத்தை அளிக்கின்றார்களோ அதேபோன்று வரும் 18ஆம் திகதி காலை 9.30 மணிக்கு சகலரும் இருக்குமிடத்தில் சிரம் தாழ்த்தி 3 நிமிட நேரத்திற்கு இறந்த எம் உறவுகளுக்காக நினைவஞ்சலி செலுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

இந்தத் தினம் வரும் வருடங்களிலும் தமிழர்தம் துக்க தினமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். முடியுமானவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு அன்று வந்து சேர்ந்திருந்து உங்கள் அமைதி அஞ்சலியைச் செலுத்த வேண்டுகின்றேன். பல இடங்களில் இருந்தும் மக்களை ஏற்றிவரப் பேரூந்துகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன என்றுள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-16#page-1

  • தொடங்கியவர்

இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டது

இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி நடைபெற்றவுள்ள நிலையில் தமிழ் மக்கள் பேரவை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18ஆம் திகதி ஆகும்.

எம்மக்கள் மீது , நெடுங்காலமாக இழைக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் உச்சமாக, 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலங்கள் நிகழ்த்தப்பட்டது.

நீதிக்கான குரல் எழுப்பிய மக்களை, நீதிக்காய் குரல் எழுப்பினார்கள் அதனோடு இணைந்து நடந்தார்கள் என்பதற்காகவே சர்வதேச யுத்தவிதிகளை புறந்தள்ளி , மனிதத்துவ நடைமுறைகளையெல்லாம் தூக்கியெறிந்து , பாலியல் பலாத்காரங்களை, உயிர்வாழ்வதற்கான உணவை ,மருந்தை கூட ஆயுதமாக்கி, சாட்சியங்கள் முடியுமானவரை

அகற்றி , பூகோள அரசியல் போட்டியின் பகடைக்காய்களாக்கப்பட்டு ,சர்வதேசம் கண்மூடி இருக்க , வஞ்சிக்கப்பட்டு எமது மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.

எதுவுமறியாத பாலகர்கள் , முதியவர்கள் அங்கவீனர்கள் என எந்த வேறுபாடுகளும் இன்றி, தமிழர்கள் என்பதற்காகவே ஆயிரம் ஆயிரமாய் எமது மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.

அந்த அவலங்களின் உச்சக்கட்டங்கள் நிகழ்ந்தேறிய நாள்தான் மே 18 . கடந்த 2006ஆம் ஆண்டு வாகரை மண்ணில் உச்சம் பெறத்தொடங்கிய இந்த கோரத்தாண்டவம் 2009 மே 18 இல் வன்னியின் முள்ளிவாய்க்கால் மண்ணில் வரலாறு காணாத பேரவலத்தை விதைத்திருந்தது.

அந்த மானுடப்பேரவலத்தின் எட்டாவது ஆண்டு நினைவு காலத்தை நாம் இப்போது அனுஷ்டித்து வருகின்றோம்.

உண்மையில் இலங்கை அரசு, தமிழர்கள் மீது தொடர்ச்சியாக இழைத்துவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் உச்சம் பெற்ற ஒரு தினமே மே 18 ஆகும்.

எம்மீதான இனப்படுகொலையின் ஒரு குறீயீட்டு நாளாகவே இந்த மே 18 ஐ தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஒருமுகப்பட்டு அனுஷ்டிக்கின்றோம்.

இந்த தினத்தில், தொடர்கின்ற இனப்படுகொலையில் கொல்லப்பட்டு இந்த மண்ணில் வீழ்ந்த அனைவருக்கும் எமது அஞ்சலிகளை தெரிவிக்கின்றோம்.

தாயகத்தில் வாழுகின்ற மக்கள் முடிந்தவரை, மானுடப்பேரவல நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கொல்லப்பட்ட மக்களுக்கான தமது அஞ்சலிகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஏனையவர்கள் தாம் வாழும் இடங்களில் அஞ்சலி தீபமேற்றி மூன்று நிமிட மெளன அஞ்சலி செலுத்தி இந்த மண்ணில் வீழ்ந்த எம் உறவுகளை நினைவுகூருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இனிவரும் காலங்களில் , எமது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இனப்படுகொலை நினைவேந்தல் குழுமம் ஒன்றின் மூலம் நினைவாலயம் ஒன்றை முள்ளிவாய்க்கால் மண்ணில்

நிறுவுவதும் , இனப்படுகொலைக்கான ஆவணப்படுத்தலை ஒருங்கிணைப்பதும் அனைவராலும் நேர்மையுடன் கருத்தில் கொள்ளப்படவேண்டும் .

இந்த நினைவேந்தல் நிகழ்வுகளானது , இதுவரை காலமும் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு வெறுமனே அஞ்சலி செலுத்தி விளக்கேற்றும் நிகழ்வாக மட்டும் எடுக்க முடியாதது.

சர்வதேச விதிகளை அப்பட்டமாக மீறி கொடூரமாக கொல்லப்பட்டவர்களுக்கும் தொடரும் இனப்படுகொலைக்குமான பொறுப்புக்கூறலிற்கான குரலை எந்தவித சமரசமுமின்றி முன்னெடுத்து செல்வோம் என உறுதி பூணவேண்டிய நாளும் இதுதான்.

எந்த அரசியல் உரிமைக்காக ,மானுட நீதிக்காக குரல் எழுப்பி அதற்காய் கொல்லப்பட்டார்களோ அந்த அரசியல் உரிமைக்கான குரலை தொடர்ந்தும் நீதியுடன் முன்னெடுப்போம் என எம்மை மீள உறுதிப்படுத்தப்படவேண்டிய தினமும் இதுதான் .

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை உதாசீனம் செய்து நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலிற்கான குரலையும், இனப்படுகொலைக்கான நீதிக்கான சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணைப்பொறிமுறையொன்றையும் எந்த வித மாயைகளுக்குள்ளும் உட்படாது நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் ஒற்றுமையாய் முன்னெடுத்தலும் எமது அரசியல் கோரிக்கைகளில் தெளிவுடனும் உறுதியுடனும் இருத்தலுமே இன்று எம் முன் உள்ள கட்டாய கடமைகளாகும்.

உண்மையில் இதுவே வீழ்த்தப்பட்ட எமது உறவுகளிற்கு நாம் செய்யும் நேர்மையான அஞ்சலியாகவும் அமையும்.

நீதிக்கான மக்களின் குரலை வன்முறைமூலம் அடக்கிவிடலாம் என்பது அடிப்படைப்புரிதல் அற்ற வன்மம் மிகுந்த செயன்முறையாகும்.

மறுக்கப்பட்ட நீதியை வழங்குவது மட்டுமே , அந்த மக்களின் குரலை அமைதிப்படுத்துமே தவிர , வரலாறுகளை மாற்றுவதும் சலுகைகள் மூலம் நீதிக்கான் குரல்களை ஒளித்துவைக்க முயல்வதும் அல்ல.

ஆனால், சிறிலங்கா அரசானது, தொடர்ச்சியாக இப்படியான ஏமாற்றும் செயன்முறைகளிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறது.

நல்லாட்சி என தம்மை அழைத்துக்கொள்ளும் இந்த அரசாங்கமும் அதே ஏமாற்று வழிமுறையையே தனது செல்நெறியாக வரித்துக்கொண்டுள்ளது.

இப்படியான மனோநிலை தொடர்ந்தும் இருக்கும்வரையில் சிறிலங்கா அரசாங்கமானது, சர்வதேச தலையீடு இல்லாதவரைக்கும், எமக்கான நீதியை தானே முன்வந்து வழங்கும் என நாம் ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது .

எனவே இந்த வரலாற்று யதார்த்தத்தையும் உண்மையான கள நிலவரத்தையும் புரிந்து கொண்டு , சர்வதேச சமூகம் எமது பிரச்சினையை நேர்மையுடன் அணுக வேண்டும் எனவும் நாம் மீளவும் வலியுறுத்துகிறோம்.

இறுதியாக, எமது கோரிக்கைகளில் தெளிவுடனும் உறுதியுடனும் இருப்போம் எனவும் எம்மிடையேயான பேதங்கள் அனைத்தையும் இந்த இழப்புகளின் பெயரால் தாண்டி , எமது இனத்தின் நீண்டகால நலனை மட்டும் முன்னிறுத்தி நடபோம் எனவும் இந்த மண்ணில் வீழ்த்தப்பட்ட எம் உறவுகளின் நினைவுகள் மீது உறுதியெடுத்துக்கொள்வோம் என்றும் தமிழ் மக்கள் பேரவை குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

http://www.tamilwin.com/statements/01/145927?ref=recommended1

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்கால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை பல இடங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் முள்ளிவாய்க்காலிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த அஞ்சலி நிகழ்வுகளில் முதல் நிகழ்வாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் முள்ளிவாய்க்கால் பொது நினைவிடத்தில் காலை 9.00 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பிற்பகல் 3.00 மணிக்கு மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜனின் தலைமையில் முள்ளிவாய்க்கால் தேவாலயப்பகுதியில் இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் நினைவு படிம கற்கள் பொறிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மேலும், பிற்பகல் 4 மணிக்கு தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி கட்சியின் ஏற்ப்பாட்டில் முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் அஞ்சலி நிகழ்வுகள் அனுஷ்டிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரின் ஏற்ப்பாட்டில் முள்ளிவாய்க்கால் இரட்டைப் புளியடிப்பகுதியிலும் அஞ்சலி நிகழ்வுகள் அனுஸ்டிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/146031?ref=view-latest

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.