Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கத்திற்குள் காணப்படும் முரண்நிலையை அமைச்சரவை மாற்றம் தணிக்கக் கூடிய சாத்தியம்

Featured Replies

அரசாங்கத்திற்குள் காணப்படும் முரண்நிலையை அமைச்சரவை மாற்றம் தணிக்கக் கூடிய சாத்தியம்

 

கலா­நிதி ஜெகான் பெரேரா

கடந்­த­வாரம் இடம்­பெற்ற அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்­போது அர­சாங்­கத்­திற்குள் முக்­கி­ய­மான பொறுப்­புகள் கைமா­றி­யி­ருக்­கின்­றன. எந்­த­வி­த­மான பிரச்­சி­னை­யு­மின்றி இணக்­க­மான முறையில் அமைச்சுப் பொறுப்­புகள் மாற்றம் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­ற­மையும் மாற்­றங்­க­ளுக்­குள்­ளா­ன­வர்கள் புதிய பொறுப்­பு­களை நல்­லி­ணக்­கத்­துடன் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­ற­மையும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடை­யி­லான வர­வு­களைத் தொந்­த­ர­வுக்­குள்­ளாக்கிக் கொண்­டி­ருந்த பதற்ற நிலை இனிமேல் தணிந்து மேலும் கூடு­த­லான அள­வுக்கு பய­னு­று­தி­யு­டைய ஆட்சி முறைக்கு வழி­பி­றக்கும் என்ற நம்­பிக்­கையைத் தரு­கின்­றன. தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க­ளான இரு பிர­தான அர­சியல் கட்­சி­க­ளி­னதும் உறுப்­பி­னர்கள் கடந்த பல மாதங்­க­ளாக அடிக்­கடி அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருந்­ததைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. தங்கள் கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான சக­வாழ்வு உடன்­ப­டிக்­கையின் பய­னு­டைத்­தன்மை குறித்து அவர்கள் வெளிப்­ப­டை­யா­கவே சந்­தே­கங்­களைக் கிளப்­பிக்­கொண்­டி­ருந்­த­துடன் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த இரு­வ­ரு­ட­கால உடன்­ப­டிக்கை முடி­வுக்கு வரும்­போது அதை நீடிப்­பதா இல்­லையா என்று வாக்­கு­வா­தத்­திலும் ஈடு­பட்­டார்கள். உடன்­ப­டிக்­கையின் பிர­கா­ர­மான இரு­வ­ருட சக­வாழ்வை அர­சாங்­கத்­தினால் பூர்த்தி செய்ய முடி­யா­மலும் போகலாம் என்ற விச­னமும் ஏற்­பட்­டி­ருந்­தது.

ஆனால் இரு கட்­சி­களும் தொடர்ந்து இணைந்­தி­ருந்து அர­சாங்­கத்தை நடத்­து­வதா அல்­லது பிரிந்து செல்­வதா என்ற தீர்­மா­னத்தை எடுக்கக் கூடிய வல்­லமை கொண்ட முக்­கிய புள்­ளி­க­ளாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­க­வுமே விளங்­கு­கி­றார்கள். ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் பொறுத்­த­வரை அவர்­களின் உள்­ம­னதில் இருக்­கக்­கூ­டிய அக்­க­றைகள் எவை­யாக இருந்­தாலும் ஐக்­கி­யத்தை விடவும் பிரிந்து செல்­வதில் நாட்டம் காட்­டு­கின்ற தங்கள் கட்­சி­களின் உறுப்­பி­னர்­களின் ஐயப்­பா­டு­களை இரு­வரில் எவ­ருமே பகி­ரங்­க­மாக எதி­ரொ­லித்­த­தில்லை. தலை­மைத்­துவ நிலை கார­ண­மாக அவர்கள் இரு­வரும் பொறு­மை­யி­ழந்­த­வர்­க­ளாக்காணப்­பட்ட கட்சி உறுப்­பி­னர்­களை விடவும் கூடு­த­லான அள­வுக்கு பொறுப்­பு­ணர்­வுடன் யதார்த்த நில­வ­ரங்­களைச் சீர்­தூக்கிப் பார்த்து தீர்­மா­னங்­களை மேற்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருந்­தது. இரு­வ­ருட சக­வாழ்வு உடன்­ப­டிக்கை புதுப்­பிக்­கப்­பட்டு அர­சாங்­கத்தின் முழு­மை­யான ஐந்­து­வ­ருட பத­விக்­கா­லத்­துக்கும் நீடிக்­கப்­ப­டு­மென்று ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் பகி­ரங்­க­மாக உறு­திப்­ப­டுத்­தி­னார்கள். இரண்டு அடிப்­படைக் கார­ணங்­க­ளுக்­காக தாங்கள் தொடர்ந்து ஒன்­றாக இருக்க வேண்டும் என்­பதை அவர்கள் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றார்கள் போலத் தெரி­கி­றது.

முத­லா­வது காரணம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும் கூட்டு எதி­ர­ணியில் உள்ள அவரின் அர­சியல் நேச அணி­களும் மீண்டும் ஆட்­சி­ அதி­கா­ரத்­துக்கு வரு­வதைத் தடுக்க வேண்­டு­மானால் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தொடர்ந்து ஒன்­றி­ணைந்து ஆட்­சியை நடத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். முன்னாள் ஜனா­தி­ப­திக்கு மக்கள் மத்­தியில் கணி­ச­மான ஆத­ரவு தொடர்ந்தும் இருந்து வரு­கி­றது. ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த பத்­து­வ­ரு­ட­கால கட்­டத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு அவர் தலை­வ­ராக இருந்­தவர் என்­பதால் கட்­சியின் கட்­ட­மைப்­பு­க­ளுக்­குள்ளும் கணி­ச­மான ஆத­ரவை தொடர்ந்தும் அவர் கொண்­டி­ருக்­கிறார்.

நாட்டின் அதி­யுயர் பத­வியில் நீண்­ட­காலம் இருந்­ததன் விளை­வா­கவும் பெரு­ம­ளவு நிதி­வ­ளத்தைக் கொண்­டி­ருப்­ப­வர்­களின் ஆத­ரவு அவ­ருக்கு இருப்­ப­த­னாலும் முன்னாள் ஜனா­தி­பதி பிர­மாண்­ட­மான அளவு நிதி­வ­ளத்தைப் பயன்­ப­டுத்திக் கொள்­ளக்­கூ­டிய வாய்ப்பு நிலையில் இருக்­கிறார். மஹிந்த ராஜபக் ஷவுக்கு இருக்­கக்­கூ­டிய மக்கள் செல்­வாக்­கிற்கு புறம்­பாக கடந்த மே தினத்­தன்று கொழும்பு காலி முகத்­தி­டலில் இலட்­சக்­க­ணக்கில் மக்­களை அணி திரட்­டி­யதில் கூட்டு எதி­ர­ணி­யினர் காட்­டிய வல்­லமை அவர்­க­ளினால் எவ்­வ­ளவு பெருந்­தொகைப் பணத்தை செல­வி­டக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது என்­ப­தற்கு ஒரு சான்­றாகும்.

தேசிய நலன்

ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் தொடர்ந்தும் ஒன்­றாக அர­சாங்­கத்தில் இருக்க வேண்­டி­ய­தற்­கான இரண்­டா­வது காரணம் அதி­கா­ரத்தில் தொடர்ந்து இருப்­பதில் அல்­லது ஏனை­ய­வர்­களை அதி­கா­ரத்­துக்கு வர­வி­டாமல் தடுப்­பதில் தனிப்­பட்ட அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு இருக்­கக்­கூ­டிய நலன்­க­ளுக்கு அப்­பாற்­பட்­ட­தாகும். அது ஆட்சி முறையின் அடிப்­ப­டை­யா­னதும் முக்­கி­ய­மா­ன­து­மான ஒரு கார­ணி­யாகும். பாரம்­ப­ரி­ய­மாக முர­ணான கொள்­கை­களைக் கொண்ட ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இரு­த­ரப்பு கருத்­தொ­ரு­மிப்பின் அடிப்­ப­டையில் சேர்ந்து அமைத்­தி­ருக்­கின்ற அர­சாங்கம் ஆட்­சி­முறை ஒழுங்கை மறு­சீ­ர­மைப்­ப­தற்­கான களத்தைக் கொடுக்­கி­றது.

மூன்று தசாப்­த­காலப் போருக்கும் அந்த குழப்­ப­க­ர­மான கால­கட்­டத்தில் அரச நிறு­வ­னங்­களின் சீர்­கு­லை­வுக்கும் வழி­வ­குத்த அடிப்­படைப் பல­வீ­னங்­க­ளையும் குறை­பா­டு­க­ளையும் கையா­ளக்­கூ­டி­ய­தாக ஆட்­சி­முறை ஒழுங்கை மறு­சீ­ர­மைக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­துக்குத் தேவை­யான மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ரவை அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டி­ருக்­கி­றது. பல­வீ­ன­மான அர­சுகள் பற்­றிய 2008 ஆம் ஆண்டுக் குறி­காட்­டியின் உச்­சியில் இரு­பது நாடு­களுள் இலங்கை ஒன்­றாக இருந்­தது. இன்று 178 நாடு­களின் வரி­சைப்­ப­டியில் பல­வீ­ன­மான நாடு­களின் பட்­டி­யலில் 43 ஆவது இடத்தில் இலங்கை இருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. மூன்று தசாப்­த­கா­லப்­போரும் அரச நிறு­வ­னங்கள் பல­வீ­னப்­பட்ட நிலை­மை­யுமே தேசிய பொரு­ளா­தா­ரத்தின் சீர­ழி­வுக்கும் பரந்­த­ள­வி­லான மனித உரிமை மீறல்­க­ளுக்கும் பொறுப்­பாக இருந்­தது.

2015 ஆம் ஆண்டு ஜன­வ­ரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­போது பெரு­ம­ளவு சீர்­தி­ருத்­தங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மென்ற எதிர்­பார்ப்பு காணப்­பட்­டது.

மாற்­றத்­திற்­கான அர­சியல் பிர­சா­ரங்­க­ளையும் செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுத்த கட்­சிகள் நல்­லாட்­சியை நிறு­வு­வ­தா­கவும் சட்­டத்தின் ஆட்­சியை மீளவும் நிலை­நி­றுத்­து­வ­தா­கவும் மனித உரிமை மீறல்கள் மற்றும் நிதித்­துறை குற்றச் செயல்­களை பொறுத்­த­வரை சட்­டத்­தி­லி­ருந்து விடு­பட்டு உரிமையைப் பெற்­ற­வர்கள் போன்று செயற்­பட்­ட­வர்­களை பொறுப்­புக்­கூற வைக்கப் போவ­தா­கவும் நாட்டு மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­தனர். புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்த உட­ன­டி­யா­கவே உயிர் வாழ்­வுக்கும் கருத்து வெளிப்­பாட்டு சுதந்­தி­ரத்­திற்கும் பிர­தான இடத்தை வழங்­கு­கின்ற வகை­யி­லான அர­சியல் கலா­சா­ரத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யதன் மூல­மாக மக்­களின் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு இணை­யான முறையில் நடந்­து­கொண்­டது. முன்­னைய அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களின் விளை­வாக தோற்­று­விக்­கப்­பட்­டி­ருந்த பீதிக்­க­ல­வரம் புதிய ஆட்­சியின் கீழ் பெரு­ம­ள­விற்கு இல்­லாமல் போய்­விட்­டது. மறு­பு­றத்தில் மனித உரிமை மீறல்­க­ளையும் நிதி மோச­டி­க­ளையும் செய்த முன்­னைய அர­சாங்­கத்தின் உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஏனைய தரப்­பி­ன­ருக்கும் எதி­ராக புதிய அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­விட்­டது.

கடந்த காலத்தில் இடம்­பெற்ற மட்­டு­மீ­றிய குற்றச் செயல்கள் தொடர்பில், அதுவும் குறிப்­பாக, போருடன் சம்­பந்­தப்­ப­டாத வகையில் இடம்­பெற்ற கார­ணத்தால், தேசி­ய­வாத அர­சி­யலின் நெருக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளாக வேண்­டி­யி­ராத குற்­றச்­செ­யல்கள் தொடர்பில் அர­சாங்­கத்­தினால் தாக்கல் செய்­யப்­பட்ட ஒரு சில வழக்­கு­களில் சிறி­த­ளவு முன்­னேற்றம் ஏற்­பட்­டதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. கொலைகள் மற்றும் பிர­மாண்­ட­மான ஊழல் மோச­டிகள் இதில் அடங்கும்.

நீதி­மன்­றங்­களில் வழக்குகள் தாக்கல் செய்­யப்­பட்ட போதிலும் கூட, அவற்றைத் தீர்த்து வைப்­பதில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­ற­மில்லை. பொலி­ஸாரும் விசா­ர­ணை­களை நடத்­து­கின்ற ஏனைய அதி­கா­ரி­களும் அர­சியல் அதி­கா­ரத்தில் உள்ள தங்­க­ளது ஆசான்கள் என்ன செய்ய விரும்­பு­கி­றார்கள் என்­பதைப் பற்றி ஒரு நிச்­ச­ய­மற்ற நிலையில் இருப்­பதால், இவர்கள் காலத்தை இழுத்­த­டித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இதனால், கடந்த காலத்தில், கிரி­மினல், மனித உரிமை மீறல்கள் மற்றும் நிதி மோசடி குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருப்­ப­வர்­களில் சில­ருக்கு எதி­ராக வழக்குத் தொட­ரு­வதில் அர­சாங்கம் ஒரே சிந்­த­னை­யுடன் இல்லை என்ற ஊகங்கள் பிறக்க வழி ஏற்­ப­டு­கி­றது.

முக்­கி­ய­மான சவால்கள்

அர­சாங்கம் பல­வீ­ன­மா­ன­தா­கவும் தீர்க்­க­மான முடி­வு­களை எடுக்­க­மு­டி­யா­த­தா­கவும் இருக்­கி­ற­தென்ற தோற்­றப்­பாடு கார­ண­மாக அர­சாங்­கத்தை மதிக்­கா­த­ வ­கை­யி­லான திமிர்த்­த­ன­மான செயற்­பா­டுகள் இடம்­பெற ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. அடிக்­கடி வேலைநிறுத்­தத்தில் ஈடு­ப­டு­வதன் மூல­மாக சில தொழிற்­சங்­கங்கள் அவற்றின் ஆணைக்கு அர­சாங்­கத்தை பணிய வைக்க முயற்­சித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. இத் தொழிற்­சங்­கங்கள் கடந்த வாரம் இடம்­பெற்ற அமைச்­ச­ரவை மாற்­றத்தை கேலி செய்­வ­தையும் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. தங்­க­ளது பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­ப­தற்கு அமைச்­ச­ரவை மாற்றம் உதவப் போவ­தில்லை என்று இந்தத் தொழிற்­சங்­கங்கள் கூறு­கின்­றன.

இது இவ்­வா­றி­ருக்க, அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற தொடர்ச்­சி­யான தாக்­கு­தல்கள் மிகவும் பார­தூ­ர­மான ஒரு விவ­கா­ர­மாகும். இது அந்தச் சமூ­கத்தின் மத்­தியில் பெரும் பீதியைத் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது. நாட்டின் பல பகு­தி­களில் முஸ்­லிம்­களின் மத வழி­பாட்டுத் தலங்­க­ளுக்கு எதி­ரா­கவும் வர்த்­தக நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ரா­கவும் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றி­ருப்­ப­தாக அறி­விக்­கப்­ப­டு­கி­றது. இதனால் பொரு­ளா­தார ரீதி­யான பாதிப்­புகள் எற்­ப­டு­வ­துடன், மத­ரீ­தி­யான உணர்­வுகள் புண்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. முஸ்லிம் சமூகம் பெரும் விரக்­திக்கும் ஏமாற்­றத்­திற்கும் உள்­ளா­கி­யி­ருப்­ப­துடன், தங்கள் பாது­காப்பு தொடர்­பா­கவும் பெரும் பீதிக்­குள்­ளா­கி­யி­ருக்­கி­றது. இந்த மோச­மான போக்கு பல வரு­டங்­க­ளாகத் தொட­ரு­கி­றது. முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான செயற்­பா­டுகள் இடைக்­கிடை குறு­கிய காலத்­துக்கு தணிந்து காணப்­படும். பிறகு மீண்டும் தீவி­ர­மாகத் தலை­காட்டும். இவ் வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து தீவி­ர­ம­டைந்த முஸ்லிம் விரோத நட­வ­டிக்­கை­களின் போது இரு­ப­துக்கும் அதி­க­மான தாக்­கு­தல்கள் அல்­லது தாக்­குதல் முயற்­சிகள் கடந்த இரு­மா­தங்­களில் நாட்டின் பல பகு­தி­களிலிருந்தும் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான இந்த அட்­ட­கா­சத்தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு இரு தரப்பு முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஏனென்றால், நாட்டில் மிகப் பெரிய அர­சியல் சக்­தி­யாக விளங்­கு­கின்ற சிங்­களத் தேசிய வாதத்­துடன் இது சம்­பந்­தப்­பட்­ட­தாகும். இந்த சிங்­களத் தேசி­ய­வா­தத்­துக்கு எதி­ராக துணிந்து செயற்­ப­டு­வ­தற்கு ஒரு சிலர் தான் முன்­வ­ரு­வார்கள். பெரும்­பான்மைச் சமூ­கத்தின் மத்­தியில் உள்ள சில பிரி­வு­க­ளிடம் விரோத உணர்­வுகள் அதி­க­ரித்துக் கொண்டு வரு­வது குறித்து அர­சாங்கம் கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிம் விரோத உணர்­வு­களைக் கொண்ட இச்­சக்­திகள் தங்­க­ளது செய்­தியைச் சொல்­வ­தற்கு வன்­முறை மார்க்­கத்தில் நாட்டம் காட்­டு­கி­றார்கள். இந்த நில­வரம் தொடர்பில் தீவிர விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு பய­னு­று­தி­யு­டைய குறு­கி­ய­கால மற்றும் நீண்­ட­கால அடிப்­ப­டை­யி­லான நட­வ­டிக்­கைகள் மூல­மாக இதற்­கான கார­ணிகள் கண்­ட­றி­யப்­பட்டு களை­யப்­பட வேண்டும். பொய்ப்­பி­ரசா­ரங்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் அரசாங்கத்தினதும் சிவில் சமூகத்தினதும் நிகழ்ச்சி நிரலின் முக்கிய அங்கமாக்கப்படவேண்டும்.

இனங்களுக்கிடையில் பெருமளவுக்கு அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்து முகமாக அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டியிருக்கின்ற இன்னொரு முக்கியமான சவாலாகும். அதிகாரப் பகிர்வைச் செய்வதற்கு கடந்த காலத்தில் பல அரசாங்கங்கள் முயற்சித்தன. ஆனால் தோல்வியையே கண்டன.

அரசியல் சீர்திருத்தங்களுக்கான தேவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பிலான கருத்துக் கோணத்தில் நோக்குகையில், அமைச்சரவை மாற்றத்தில் காணக்கூடியதாக இருக்கின்ற மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர புதிய நிதியமைச்சராகவும் ஊடகத்துறை அமைச்சராகவும் நயமிக்கப்பட்டிருக்கின்றமையாகும். அரசாங்கம் அதன் சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்துக்கு மக்களின் ஆதரவை வென்றெடுக்க வேண்டுமென்பதில் அக்கறை கொண்டதாக இருக்கிறது என்ற நேர்மறையான செய்தியை இது கொடுக்கிறது. வெளியுறவு அமைச்சர் என்ற வகையில், மங்கள சமரவீர, நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கத்துக்காக சர்வதேச சமூகத்தின் ஆதரவை வென்றெடுக்கக்கூடிய முறையில் குரல் கொடுத்துச் செயற்பட்டவர். இப்போது செல்வாக்குமிக்க இரு அமைச்சுப் பொறுப்புகளையும் தன்வசம் கொண்டிருக்கும் சமரவீர, நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கான மிகவும் கஷ்டமான பொறுப்புக்காக பாடுபடவேண்டிய ஆணை தனக்கு வழங்கப்பட்டிருப்பதாக நினைத்து செயற்படவேண்டும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-03#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.