Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் சுதந்திர போராட்டம்: திமுக சவாலை ஏற்பதாக தமிழிசை அறிவிப்பு

Featured Replies

மு.க.ஸ்டாலின் (இடது), தமிழிசை சவுந்தரராஜன் (வலது) | கோப்புப் படம்.
மு.க.ஸ்டாலின் (இடது), தமிழிசை சவுந்தரராஜன் (வலது) | கோப்புப் படம்.
 
 

மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு நாடு தயாராகிவிட்டது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதற்கு, பதிலளித்துள்ள பாரதிய ஜனதா தமிழக தலைவர் தமிழிசை, திமுகவின் சவாலை ஏற்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

” தனி மனித உரிமையை பறித்த அவசர நிலை பிரகடனம் போன்ற நிலைமை இப்போது எங்கே இருக்கிறது, சாதாரண குடி மகனும் நாட்டின் பிரதமரையே விமர்சிக்க உரிமை இருக்கிறது. அன்று அவசர நிலை பிரகடனத்தால் பாதிக்கப்பட்ட ஸ்டாலின் அவர்களே அதை மறந்து பேசுவது வியப்பு, இதில் எங்கே சுதந்திர போராட்டம் வந்தது?

அன்று நடந்த சுதந்திர போராட்டத்தில் திமுக வின் பங்கு என்ன? திமுக வின் முன்னோடியான ஜஸ்டிஸ் கட்சி வெள்ளையருக்கு வெண்சாமரம் வீசியவர்கள் என்பதே வரலாறு, சுதந்திர தினத்திற்கு வாழ்த்து கூட செல்லாதவர்கள் திமுக வினர்.

இந்தியாவில் இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜன்சி என்கிறார் உமர்அப்துல்லா. அன்று அவசர நிலைப்பிரகடனம்செய்த இந்திரா பேரன் ராகுல் மேடையில் இருக்க ஷேக் அப்துல்லா பேரன் உரை நிகழ்த்தி உள்ளார். ஷேக் அப்துல்லாவை அவசர நிலை காலத்தில் கைது செய்து தமிழகத்தில் சிறை வைத்தவர் இந்திரா காந்தி.

பாஜக வை மதவாத கட்சி என்று விமர்சிக்கும் நீங்கள், உங்கள் பின்னால் அமர்ந்திருக்கும் முஸ்லீம் லீக் கட்சி என்ன மதசார்பற்ற கட்சியா? காஷ்மீரில் பாக்கிஸ்தான் கொடி ஏந்தும் போராளிகளுக்கு ஆதரவு அளிக்கும் உமர் அப்துல்லா கட்சியை உங்கள் மேடையில் ஏற்றி தேச பக்தர் மோடியையும், பாஜகவையும் விமர்சிப்பது என்ன நியாயம்? மக்கள் புரிந்துகொள்வார்கள்.

தமிழகத்தில் சாதிக் கட்சிகளுக்கு கடந்த காலத்தில் துணை போன திமுக, சமூகநீதி என்று பேசுவது மக்களை ஏமாற்றும் செயல். சாதிய அடையாளங்களோடு ஆங்காங்கே மாவட்டங்களாக, வட்டங்களாக, வேட்பாளர்களாக சாதிவாரி அமைச்சர்களையும், தலைவர்களையும் உருவாக்கியதும் திமுக தானே.

முத்தமிழறிஞரின் விழாவில் ஒலித்த நிதிஷ் அவர்களின் இந்தி உரைக்கு கிடைத்த கை தட்டும் ஆரவாரமும். பகுத்தறிவு கடவுள் மறுப்பு பேசிக்கொண்டே ரகசியமாக கடவுள் வழிப்படும், பூஜை யாகங்கள் நடத்தும் திமுக வினர் போலவே. இந்தியை எதிர்த்தவர்களின் கூட்டத்தில் நிதிஷ் அவர்களின் இந்தி உரைக்கு கிடைத்த கைதட்டும், ஆரவார வரவேற்பும் திமுக வினர் பலர் இந்தியை ரகசியமாக படிப்பதையே உணர்த்துகிறது அல்லவா? இதிலும் நீங்கள் ஏமாற்றியது தமிழ் மக்களைத்த்தானே! - இதை கேட்டால் நங்கள் இந்தியை எதிர்க்கவில்லை இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம் என்று கூறுகிறீர்கள்.

ஸ்டாலின் முதல்வராகி பூரண மதுவிலக்கு கொண்டு வர நிதிஷ் கோரிக்கை. தமிழகத்தில் இன்று வீதிக்கு வீதி மக்கள் போராடும் மதுவை கொண்டு வந்ததே திமுக தான் என்ற வரலாறு நிதிஷ் அவர்களுக்கு தெரியாது. ஏன் திமுக வினர் நடத்தும் மது ஆலைகளை முதலில் மூடட்டும் இன்றைக்கு தெருவுக்கு தெரு போராடும் தமிழ் தாய் குலங்கள் மீது உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருந்தால்.

தேர்தல் வாக்குறுதி எதையுமே நிறைவேற்றவில்லையாம்!மக்கள்பணம் மக்களுக்கே என்று 3 ஆண்டு காலமாக ஊழலற்ற ஆட்சி நடத்தும் திரு. மோடி அவர்களை, 2ஜி ஊழல் பங்காளிகளின் அரசியல் வாரிசுகள் விமர்சிப்பதா?

வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தான் இந்திய முழுவதும் மற்ற மாநிலங்களில் மக்கள் வாக்குகளை எங்களுக்கு வாரி வழங்குகிறார்கள், இதுவே இங்கு தமிழகத்திலும் வரும் காலத்தில் தமிழக மக்களும் தாமரைக்கு வாக்களிப்பார்கள். தமிழகத்திற்கான அத்தனை வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றும்.

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியர்கள் வெளிநாட்டில் பதுக்கிவைத்த கருப்பு பணம் ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 லட்சம் கொடுக்கும் அளவிற்கு பதுக்கப்பட்டுள்ளது என்று தான் மோடி அவர்கள் சொன்னார்கள். இதன் ஒரு நடவடிக்கையே ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு.

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு பயந்தே இன்றும் பலர் லண்டனுக்கு ஓடி ஒளிகிறார்கள் என்பது வெளிச்சம். இந்த தொடர் நடவடிக்கை வரும் காலத்தில் பலன் தரும்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுரை எழுதிய திமுக வும், வங்காளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முடிவு கட்டிய திருனாமுல் காங்கிரஸ் வும் , தமிழகத்தில் மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் சுயநல கூட்டணி அமைத்து சென்ற முறை திமுக வை ஆட்சிக்கு வர விடாமல் செய்த கம்யூனிஸ்டுகள் மற்றும் சிலர் மோடி அரசுக்கு எதிராக அணி திரண்டு நின்றாலும் அவர்கள் சவாலை பாஜக எதிர்கொள்ளும், வரும் தேர்தலில் சாதனை புரியும் என்று தமிழிசை சவுந்தர ராஜன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

 

http://tamil.thehindu.com/tamilnadu/மீண்டும்-சுதந்திர-போராட்டம்-திமுக-சவாலை-ஏற்பதாக-தமிழிசை-அறிவிப்பு/article9719564.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.