Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆகஸ்ட்-15 - “கொடியேற்ற விடுவேனா?” - சவால் தினகரன்

Featured Replies

மிஸ்டர் கழுகு: ஆகஸ்ட்-15 - “கொடியேற்ற விடுவேனா?” - சவால் தினகரன்

 
 

 

‘‘ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தில் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றுவாரா?’’ என்றபடியே வந்து அமர்ந்தார் கழுகார். எடப்பாடி - தினகரன் மோதல் செய்தியைத்தான் கழுகார் சொல்ல வருகிறார் எனப் புரிந்து கொண்டு கழுகாரைப் பார்த்தோம்.

p2c.jpg

‘‘எடப்பாடி அணியும் டி.டி.வி.தினகரன் அணியும் வெளிப்படையாக மோதி வருகிறார்கள். டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் என்ன பேசினாலும் அதற்கு அமைதி காத்து வந்தார் எடப்பாடி. ஆனால், நடவடிக்கைகளில் தினகரனுக்கு மௌனமாக ‘செக்’ வைத்துக் கொண்டே இருந்தவர், இப்போது அந்தக் கட்டத்தைத் தாண்டிவிட்டார். எடப்பாடி அணியைச் சேர்ந்த கோ.அரி எம்.பி, ‘குற்றவாளியான சசிகலாவுக்குக் கட்சியை வழிநடத்த அதிகாரம் இல்லை. சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் கட்சியை விட்டு நிரந்தரமாக விலக வேண்டும்’ எனப் பேட்டி கொடுத்தது எதிர்பாராத திருப்பம்.

கோ.அரியைப் பேச வைத்ததன் மூலம் தினகரனோடு  மோத எடப்பாடி  தயாராகிவிட்டார். இது தினகரன் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்தது. கோ.அரியின் பேட்டிக்குத் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் ரியாக்‌ஷன் காட்டினார்’’

‘‘எடப்பாடியிடம் இருந்து ரியாக்‌ஷன் வரவில்லையே?’’

p2e.jpg

‘‘கோ.அரி பேட்டிக்கு எடப்பாடி தரப்பில் இருந்து எந்தக் கண்டனமும் வரவில்லை என்பதுதான் தினகரன் தரப்பைக் கொதிக்க வைத்திருக்கிறது. கோ.அரியை அழைத்து தனிப்பட்ட முறையிலும் எடப்பாடி கண்டிக்கவில்லை என்ற தகவலையும் தினகரன் ஆதரவாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் தினகரன் காய்களை நகர்த்த ஆரம்பித்திருக்கிறார். கோ.அரி பேட்டிக்கு உடனடியாக, வெற்றிவேல் எம்.எல்.ஏ-வை வைத்துப் பதிலடி கொடுக்க வைத்தார் தினகரன். ‘சசிகலாவும் தினகரனும் இல்லையென்றால் கட்சி நடு ரோட்டுக்கு வந்திருக்கும். நன்றி மறந்து பேசக்கூடாது. எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. சசிகலா குடும்பத்தை வெளியே போகச்சொல்ல இவர்கள் யார்? கட்சிக்கு பொதுச்செயலாளர் யார், துணைப் பொதுச்செயலாளர் யார் என்பதை எடப்பாடி விளக்க வேண்டும். அப்போதுதான் கட்சியும் ஆட்சியும் குழப்பம் இல்லாமல் செல்லும்’ எனக் காட்டமாகக் கேட்டார் வெற்றிவேல். அது வெற்றிவேலின் குரலாக இருந்தது என்பதைவிட, எடப்பாடி அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் தினகரனின் குரலாகவே ஒலித்தது.’’

p2d.jpg

‘‘ஓஹோ’’

‘‘ஆட்சிக்கு எடப்பாடி... கட்சிக்குத் தினகரன் என்பதுதான் தினகரன் ஆதரவாளர்களின் கோஷம். அதையே வெற்றிவேலும் பேட்டியில் வலியுறுத்தினார். இதை வெளிப்படையாக அறிவிக்கும் வகையில் கட்சி மற்றும் ஆட்சி நடவடிக்கைகளை அமைக்க வேண்டும் என்று தினகரன் விரும்புகிறார். ‘எட்டு அமைச்சர்களின் இலாகாக்களை மாற்ற வேண்டும்; புதியவர்கள் சிலருக்கு அமைச்சரவையில் வாய்ப்புத் தர வேண்டும்’ என்ற கோரிக்கையில் தினகரன் உறுதியாக இருக்கிறார். கோ.அரி பேட்டிக்குப் பிறகு தினகரன் மீடியாவிடம் பேசியபோது ‘இரண்டு மாதங்கள் அமைதியாக இரு எனப் பொதுச்செயலாளர் சசிகலா சொல்லியிருக்கிறார். அதன்படி நான் செயல்பட்டு வருகிறேன். அந்த இரண்டு மாத காலக்கெடு ஆகஸ்ட் 5-ம் தேதி முடிகிறது. அதன்பிறகு என் செயல்பாடுகள் தீவிரமாக இருக்கும்’ எனச் சொல்லியிருக்கிறார். இந்தக் கெடு நாளை வைத்துதான் தினகரன் ஏதோ ஒரு திட்டத்தோடு இருக்கிறார்கள் எனப் பேச்சுகள் கிளம்பியிருக்கின்றன’’

‘‘சுதந்திர தினத்தில் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றுவாரா? என முன்னோட்டம் கொடுத்தீரே. அதற்கு விளக்கம் ப்ளீஸ்...’’

p2a.jpg

‘‘அவசரப்படாதீர். அதைத்தான் சொல்ல வந்தேன். இரண்டு மாதம். அதாவது 60 நாள்கள் என்பதைத் தினகரன் அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார். அரசியலில் அமைதியாக இருக்க வேண்டும் என்கிற அந்த 60 நாட்களை எடப்பாடிக்கு விடப்பட்ட கெடுவாகத்தான் பலரும் பார்க்கிறார்கள். அதற்குள் தெளிவான முடிவை எடப்பாடியே அறிவித்துவிட வேண்டும் எனத் தினகரன் எதிர்பார்க்கிறார். ‘கட்சியா... ஆட்சியா?’ என்றால் கட்சிதான் முக்கியம் எனத் தினகரன் நினைக்கிறார். ‘எடப்பாடி பழனிசாமியின் மவுனம் கலைய வேண்டும். இல்லையென்றால் ஆகஸ்ட் 15-ம் தேதி கோட்டை கொத்தளத்தில் அவர் கொடியேற்றுவதைப் பார்த்துவிடலாம். ஆட்சி அதிகாரம் இருப்பதால்தானே எடப்பாடி அணியினர் ஆட்டம் போடுகிறார்கள்’ எனக் கொந்தளிக்கிறார் தினகரன்’’ 

‘‘எடப்பாடி எப்படி சமாளிக்கப் போகிறார்?’’

‘‘தினகரனின் திட்டங்களைத் தெரிந்துகொண்ட எடப்பாடி, அவசரமாக திவாகரனுக்கு ஓலை அனுப்பினார். ஆட்சிக்கும் கட்சிக்கும் இப்போது அவர்தான் இணைப்புப் பாலமாக இருக்கிறார். ஜூலை 3-ம் தேதி பெங்களூரு சென்று சசிகலாவைச் சந்திக்க திவாகரன் திட்டமிட்டு இருக்கிறார்.அதன்பிறகு சசிகலாவைத்  தினகரனும் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின் போது திவாகரன் சில சமரச திட்டங்களைச் சசிகலாவிடம் சொல்ல இருக்கிறார். தினகரன் தரப்பில், எடப்பாடி அணி போடும் ஆட்டங்களைப் பட்டியலிட இருக்கிறார்கள். பெங்களூருவில் நடக்கும் சந்திப்பில் சசிகலாவை யார் சமரசப்படுத்துகிறார்களோ அவர்களது தரப்பின் கை ஓங்கும். தினகரனுக்கும் திவாகரனுக்கு இடையே இருந்து வந்த பனிப்போர் முடிவுக்கு வந்த நிலையில் இந்தச் சமரசம் பலன் அளிக்குமா என்பது பிறகுதான் தெரியும்.’’

p2.jpg

‘‘பால் கலப்படம் விவகாரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இப்போது பின்வாங்குவது போலப் பேசுகிறாரே?’’

‘‘ராஜேந்திர பாலாஜியின் அதிரடி, சுகாதாரத் துறைக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி பால் கலப்படம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய துறை, சுகாதாரத் துறைதான். ‘நடவடிக்கை எடுக்கிறோம். ஆதாரங்கள் கொடுங்கள்’ எனச் சுகாதாரத் துறை சார்பில் கேட்டபோதும், ‘என்கிட்ட ஆதாரம் இல்லை’ எனப் பொத்தாம்பொதுவாக ராஜேந்திர பாலாஜி பதில் சொன்னாராம்.அண்மையில், உணவுக் கலப்படம் குறித்து சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நடந்த கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜியின் அதிரடிகள் பற்றி சுகாதாரத் துறை அதிகாரிகள் நொந்து போய் பேசினார்களாம்’’ என்ற கழுகார், சட்டசபை மேட்டருக்குத் தாவினார்.

‘‘சட்டமன்றக் கூட்டத்தொடர், அறிவித்தபடி 19-ம் தேதிவரை நடக்குமா எனச் சந்தேகம் கிளம்பியிருக் கிறது. ஜூலை மாதம் 19 -ம் தேதி வரை சட்டசபையை நடத்த திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் இன்னும் சில நாட்களில் முடித்துக் கொள்ளுமாறு கவர்னர் மாளிகையில் இருந்து கட்டளை வந்ததாம். ‘ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் வேளையில் கூட்டத்தொடரைத் தொடர்ந்து நடத்தி தேவையில்லாமல் அரசியல் பிரச்னைகளை ஏற்படுத்திவிட வேண்டாம்’ என மேலிடம் கேட்டுக் கொண்டதாம். மத்திய அரசுக்குப் போட்டி போட்டு ஆதரவு அளித்துவரும் எடப்பாடி பழனிசாமியே நொந்துபோய் ‘தமிழகத்தில் நடப்பது கவர்னர் ஆட்சி தானோ’ எனப் புலம்புகிறாராம்.

‘‘ம்’’

‘‘பான் பராக், குட்கா விவகாரத்தில் சிக்கிய டி.கே.ராஜேந்திரனுக்கும், ஜார்ஜுக்கும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவி கிடைக்கும் என்ற பேச்சு இருந்த நிலையில், பொறுப்பு டி.ஜி.பி-யாக இருந்த ராஜேந்திரனுக்குச் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி  இருக்கிறது. அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு, அவரை டி.ஜி.பி பதவிக்குக் கொண்டு வந்துவிட்டால், அதன்பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு அவர்தான் நீடிப்பார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதற்கேற்ப இருக்கிறது. பான் குட்கா தயாரிப்பாளர்களிடம் லஞ்சம் வாங்கியதாகப் புகார் எழுந்திருக்கும் ராஜேந்திரனுக்குப் பதவி நீட்டிப்புத் தரப்பட்டிருப்பது மேலும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜேந்திரன், ஜார்ஜ் பெயர்களைச் சட்டசபை வளாகத்தில் மீடியாவிடம் சொல்லி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் சொல்லியிருந்தார். இந்த நிலையில்தான் ராஜேந்திரனுக்குப் பதவி தரப்பட்டுள்ளது. டி.கே.ராஜேந்திரனுக்கு இரண்டாண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதால் சீனியாரிட்டியுடன் காத்திருக்கும் ஜார்ஜ், அர்ச்சனா ராமசுந்தரம் உள்ளிட்ட சில ஐ.பி.எஸ்-கள் இதன்பின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி ஆக முடியாது’’ என்றபடியே பறந்தார் கழுகார்.


p2b.jpg

கோட்டையில் மூக்கை நுழைக்கும் மிலிட்டரி!

மிழக அரசின் ஸ்திரமற்ற சூழலைப் பயன்படுத்தி மத்திய அரசு எல்லை மீறிவருவதாகப் புலம்பல்கள் கேட்டு வந்த நிலையில், தலைமைச் செயலக ஊழியர்கள் வட்டாரத்திலும் இப்போது எதிரொலிக்க ஆரம்பித்திருக்கின்றன. தமிழக அரசுக்கும்  தலைமைச் செயலக ஊழியர்களுக்கும் புதுப்பிரச்னை கிளம்பியுள்ளது. தலைமைச்செயலகத்துக்கு நுழைய கடற்கரை சாலை மற்றும் கோட்டை ரயில் நிலையம் என இரண்டு வழிகள் இருக்கின்றன. கோட்டை ரயில் நிலைய வாயில் வழியாக கார், ஆட்டோ போன்ற வாகனங்களுக்கு ஒரு மாதங்களுக்கு முன்பு தடை விதித்தது கோட்டையின் ராணுவ அலுவலகம். இந்நிலையில் இருசக்கர வாகனங்களுக்கும் தடைப் போட்டுவிட்டார்கள். இதனால் அந்த வழியைப் பயன்படுத்திவந்த ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் திண்டாட்டத்துக்கு ஆளாகியுள்ளனர். ராணுவக் கட்டுப்பாட்டில் தலைமைச் செயலகம் இருப்பதால், உள்ளே இருசக்கர வாகனங்கள் விட ஏக கெடுபிடிகளை விதித்து தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதுபோல் நடந்துகொள்கிறார்களாம். தலைமைச்செயலக ஊழியர்கள் சங்கம் உள்துறைக்கு இதுபற்றி மனு அளித்திருக்கிறது.

http://www.vikatan.com/juniorvikatan/

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.