Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமை வேகத்தில் அரைசதம்: 108 பந்தில் அடித்து மோசமான சாதனையை பதிவு செய்தார் டோனி

Featured Replies

ஆமை வேகத்தில் அரைசதம்: 108 பந்தில் அடித்து மோசமான சாதனையை பதிவு செய்தார் டோனி

டோனி 108 பந்தில் அரைசதம் அடித்ததன் மூலம் அதிக பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை பெற்றுள்ளார்.

 
ஆமை வேகத்தில் அரைசதம்: 108 பந்தில் அடித்து மோசமான சாதனையை பதிவு செய்தார் டோனி
 
ஆன்டிகுவா,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே முடிந்த மூன்று போட்டிகளில் (மழையால் ஒரு ஆட்டம் ரத்து) இந்தியா இரண்டில் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகித்த நிலையில், நேற்று 4-வது போட்டியில் களமிறங்கியது. இதில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் இந்திய வீரர்கள் களம் இறங்கினார்கள்.

முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்திய அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க வீரர்களாக ரகானே, தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். தவான் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 3 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 2 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

இதனால் இந்தியா 12.4 ஓவரில் 47 ரன்கள் எடுத்த நிலையில் மூன்று விக்கெட்டுக்களை இழந்திருந்தது. அடுத்து ரகானேவுடன், டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் மந்தமாக விளையாடியது. ரகானே 72 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 91 பந்தில் 60 ரன்கள் சேர்த்தார்.

மறுமுனையில டோனி ஆமை வேகத்தில் விளையாடினார். இதனால் அவர் அரைசம் அடிக்க 108 பந்துகள் எடுத்துக் கொண்டார். இதில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடங்கும். 49-வது ஓவரின் கடைசி பந்தில் டோனி அவுட்டானதும், இந்தியா 49.4 ஓவரில் 178 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ரகானே - டோனி ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 109 பந்தில் 54 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இந்தியாவின் தோல்விக்கு டோனியின் மந்தமான ஆட்டமும் முக்கிய காரணமாக அமைந்து விட்டது. அத்துடன் அரைசதம் அடிக்க அதிக பந்துகளை எடுத்துக்கொண்ட 2-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையையும் தன்வசமாக்கியுள்ளார். சடகோபன் ரமேஷ் கடந்த 1999-ம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக 117  பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் அடித்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

201707031750083429_Dhoni001-s._L_styvpf.

கங்குலி 2001-ம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக 105 பந்தில் அரைசதம் அடித்து இந்திய வீரர் ஒருவர் அதிக பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்த 2-வது வீரர் என்ற மோசமான சாதனையாக இருந்து. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மோசமான சாதனைக்கு டோனி சொந்தக்காரராகியுள்ளார்.

கங்குலி 2007-ம் ஆண்டு வங்காள தேசத்திற்கு எதிராக 104 பந்தில் அரைசதம் அடித்து 3-வது இடத்தையும் பிடித்திருந்தார். தற்போது, 3-வது மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/03175005/1094341/MS-Dhoni-Beats-Sourav-Ganguly-to-Top-List-of-Slowest.vpf

  • தொடங்கியவர்

'தோல்விக்கு காரணம் தோனி இல்லை...' கவாஸ்கர் காட்டம்!

 

இந்திய கிரிக்கெட் அணி பிரமாதமாக விளையாடி வந்த நிலையில், சாம்பியன்ஸ் ட்ராபி, இந்தியாவிற்குதான் என பல முன்னணி வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் சொல்லி வந்தனர். அதற்கு ஏற்றவாறு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது. இதனால், ரசிகர்கள் மிகுந்த கோபத்துக்கு ஆளானார்கள். இதனைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி-20 போட்டிக்கான தொடரை விளையாடி வருகிறது.

Dhoni

 

முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. இரண்டாம் போட்டியிலும், மூன்றாம் போட்டியிலும், மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்தியா  தோல்வியுற்றது. இதனால், சமூக வலைதளங்களிலும், பேட்டிகளிலும் இந்த தோல்விக்கு காரணம் தோனிதான் என குற்றம்சாட்டப்பட்டது. இவர் அடித்து ஆடியிருந்தால் வென்றிருக்கலாம் என்றெல்லாம் பேசப்பட்டது.


Gavaskar

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுனில் கவாஸ்கர், "தோனி இந்திய அணிக்காக பல போட்டிகளில், கடைசி வரை நின்று அடித்து வெற்றி பெற செய்திருக்கிறார். அதனை யாராலும் மறுக்க முடியாது. 4-வது போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததும், அனைவரும் தோனியை சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். அது மிகவும் தவறு. தோனியை குறை கூறினால் அப்போது நீங்கள் மற்ற வீரர்களையும் குறை கூற வேண்டும். ஏனென்றால், அந்தப் போட்டியில் தோனியும் மற்ற வீரர்களைப்போல விளையாடி இருந்தால், 110 ரன்களுக்கு அணி சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்திருக்கும். எனவே, தோனியை குறைகூறுவதை நிறுத்த வேண்டும்" என்றார். 

இதையடுத்து, நாளை 5-வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே, இந்திய அணி தொடரைக் கைப்பற்ற முடியும் என்று குறிப்பிடத்தக்கது. 

http://www.vikatan.com/news/sports/94498-dhoni-is-not-reason-for-loss-says-gavaskar.html

  • தொடங்கியவர்

டோனியின் ஆட்டம் குறித்த கேள்விக்கு கோலியின் நறுக் பதில்

டோனியின் ஆட்டம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி நறுக் என பதில் அளித்துள்ளார்.

 
டோனியின் ஆட்டம் குறித்த கேள்விக்கு கோலியின் நறுக் பதில்
 
சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த பின்னர், இந்தியா வெஸ்ட் இண்டீஸ் உடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

இதில் இந்தியா 3-1 என வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது மற்றும் 3-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 4-வது போட்டியில் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் டோனி மிகவும் மந்தமாக விளையாடினார். அவர் 114 பந்தில் 54 ரன்கள் சேர்த்தார். இதனால் அவர் மீது விமர்சனம் எழுந்தது. மேலும் விராட் கோலி, தவான், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் சொதப்பினார்கள்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 எனக் கைப்பற்றியது. இந்த போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.

தொடரை கைப்பற்றிய பின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது டோனியின் ஆட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

டோனி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து விராட் கோலி பேசுகையில் ‘‘டோனி சிறப்பாக பந்தை எதிர்கொண்டு வருகிறார். கடினமான சூழ்நிலையில் எப்படி விளையாட வேண்டும், இன்னிங்சை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து அவருக்கு நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

201707071923163974_dhoni02-s._L_styvpf.g

டோனி வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை என்று கூறக்கூடாது. விளையாடுவதற்கு எப்படிபட்ட ஆடுகளம் தருகிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும். வலைப்பயிற்சியின்போது இரண்டு நாட்களாக நான் சுழற்பந்தில் பயிற்சி எடுத்தேன். ஆனால், போட்டியில் என்னால் சிறப்பாக விளையாட முடியவிலலை. ஏனென்றால், ஆடுகளம் ஸ்ட்ரோக் வைத்து விளையாடுவதற்கு ஏற்ற வகையில் இல்லை. பயிற்சியை வைத்து ஒருவரும் பேட்டிங் பார்ஃம் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது. ஏனென்றால், போட்டியில் விளையாடுவதற்கு எப்படிபட்ட ஆடுகளம் கொடுக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.

பவுன்சர் பந்து நமக்கு சரியாக வரவில்லை என்றால், பந்தை தடுத்து விளையாடுவதிலும், ஸ்ட்ரைக்கை மாற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். 4-வது போட்டியில் மட்டும் டோனி அவ்வாறு செய்யவில்லை என்று நினைக்கிறேன். அதற்கு முன் 70 மற்றும் 80 ரன்கள் அடித்துள்ளார்.

ஒரு போட்டியில் விளையாடாவிட்டால் உடனே நாம் பொறுமை இழக்கிறோம். ஆடுகளத்தில் விளையாடும் எந்தவொரு பேட்ஸ்மேனும் தடுமாறுவது நடக்கக்கூடிய விஷயம்தான். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இருந்தாலும் கூட அது நடக்கும். டோனியை பற்றி நான் எந்த கவலையும் அடையவில்லை. அவர் பந்தை சிறப்பாக எதிர்கொள்கிறார். ஸ்ட்ரைக் ரேட்டும் 100 அருகில் உள்ளது. அதனால் எதையும் பற்றி கவலையடைய வேண்டாம்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/07192310/1095186/How-Kohli-Responded-To-Uncomfortable-Questions-About.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.