Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தமிழ் மக்களுக்கும் அதிகாரம் அவசியம் தேவை’

Featured Replies

‘தமிழ் மக்களுக்கும் அதிகாரம் அவசியம் தேவை’
 

“இன்று தமிழ் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குவது காலத்தின் தேவையாக உள்ளது. அதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை கொண்டு வரவேண்டியது காலத்தின் தேவையாகும்” என, அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

மேலும், தனது ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைப்பதற்காக கடந்த ஆட்சிக் காலங்களில் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றன.

இந்தப்பாவம் அனைத்தும், அன்றைய ஆட்சியாளர்களையும் ஊடகவியலாளர்களையுமே சேரும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், புதிய அரசியலமைப்பை மகாநாயக்க தேரர்கள் நிராகரிப்பது குறித்து வினவப்பட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. 

இது குறித்து அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்துத் தெரிவிக்கையில், 

“இது குறித்து, 64 சதவீதமான மக்கள் எமக்கு ஆதரவு உள்ளது. அந்த மக்கள் விரும்புத்துக்கமையவே புதிய அரசியலமைப்போ அரசியலமைப்பில் திருத்தமோ கொண்டுவரப்படும். இந்த மக்கள் தொகுதியில் சாதாரண மக்களும் மதபோதகர்களும் மதத்தலைவர்களும் உள்ளடங்குவர். இதங்கமைய, 64 இலட்சம் மக்கள் எமக்களித்த மக்கள் ஆணைக்கமைவாகவே அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. 

image_884a1a7bdd.jpg“குறை கூறுபவர்கள், முதலில் என்ன அரசியலமைப்பு என்பதைப் பார்க்க வேண்டும். உலகிலுள்ள அனைத்து அரசியலமைப்பிலும் மாற்றம் கொண்டு வரப்படும். அவ்வாறு மாற்றம் கொண்டுவரப்படும்போது, முதலில் அது குறித்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும். அது நன்மை பயக்கும் என்றால் தக்கவைத்துக்கொள்ளலாம். தீமை என்றால் தூக்கி வீசிவிடலாம். அதற்காகதான் நாடாளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 

“நாடாளுமன்றத்தில் 3இல் 2 பெரும்பான்மை வாக்குப்பலம் பெற்று அதன்பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டதன் பின்னரே இந்த அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படும். நீங்களும் உங்கள் கருத்துகளை தெரிவிக்க முடியும். 

“மேலும், எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன், இந்த விடயத்தில் பெருந்தன்மையுடனேயே நடக்கின்றார். பெரும்பான்மை சிங்களமக்கள் ஏற்றுக்கொள்ளாத தீர்வை அவர் விரும்பவில்லை. பெரும்பான்மை சிங்கள மக்களின் விரும்பத்துடனான அரசியல் தீர்வையே அவர் விரும்புகின்றார். அவரது ஜனாநாயகச் சிறப்பம்சத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்” என்றார். 

இது குறித்து, அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில், 

“இந்த, புதிய அரசியல் திருத்தச்சட்டமூலம் குறித்து இறுதி முடிவொன்றை எடுப்பதற்கான கலந்துரையாடல்களே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். பல்வேறு கட்சி உறுப்பினர்களிடையே மாற்றுக்கருத்துகளையுடைய யோசனைகள் இருக்கின்றன.  

“இவ்வாறான யோசனைகளை விகாரைகளிலும் வேறு இடங்களிலும் பிரசாரம் செய்வதால்தான் பிரச்சினைகள் கிளம்பிவிடுகின்றன. இன்று தமிழ் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குவது காலத்தின் தேவையா உள்ளது. அதேபோல் முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன. கிழக்கு மாகாண சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. எனவே, அனைவருக்கும் சமமான முறையில் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது தேவையாகவுள்ளது. 

“நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு முடிவொன்றை எடுக்கும் அளவுக்கு எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. அனைவரிடையேயும் ஒருமித்த முடிவு இருந்தால் மாத்திரமே முடிவொன்றை எடுக்க முடியும். அதைவிடுத்து, செயற்குழுவில் எல்லோரும் ஆமோதித்துவிட்டு. ஒரு சிலர் வௌியே வந்து எதிர்ப்பு கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். 

“முதலில் அரசமைப்புப் பேரவையில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளை வௌியே வந்து பேசுவதாலேயே பிரச்சினை ஏற்படுகின்றது. குறிப்பாக முடிவொன்றை எடுக்காத விடயம் தொடர்பில் பல்வேறு விதமாக பேசுவது பிரச்சினையை பூதாகரமாக்கிவிடும். செயற்குழுவில் பேசும் விடயங்களை வௌியே வந்து பேசுவது மாபெரும் தவறான செயலாகும். 

“மேலும், கட்சி என்ற ரீதியில் அனைவரிடமும் மாற்று கருத்துகள் இருக்கலாம் ஆனால், அரசாங்கம் என்ற ரீதியில் அனைவரிடமும் அரசமைப்பை வலிமைப்படுத்தி நாட்டில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதே ஒரே கொள்கையாக உள்ளது. 

“எனவே, புதிய அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் உங்கள் விளையாட்டுகளைக் காட்டுங்கள், அதற்கு முகங்கொடுக்க தயாராகவே உள்ளோம்” என்றார்

http://www.tamilmirror.lk/செய்திகள்/தமிழ்-மக்களுக்கும்-அதிகாரம்-அவசியம்-தேவை/175-200035

  • தொடங்கியவர்

அர­சி­ய­ல­மைப்பு வருவது உறுதி

p43-f63510a1accecd57f0452890b138a4a9be2cfa9c.jpg

 

அர­சாங்கம் அதனை கொண்­டு­வரும்; மக்­களின் ஆணையை  மீற முடி­யாது; சங்க பீடங்­க­ளுக்கு அமைச்சர் ராஜித பதில்

(ரொபட் அன்­டனி)

நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை­யென 64 இலட்சம் மக்கள் எமது அர­சாங்­கத்­திற்கு ஆணையை வழங்­கி­யுள்­ளனர். அந்த ஆணைக்கு ஏற்­பவே பாரா­ளு­மன்றம் புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் பணியில் ஈடு­பட்டு வரு­கின்­றது. எனவே மக்கள் வழங்­கி­யுள்ள ஆணை­யின்­படி அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வரும். அதில் எந்த மாற்­றமும் இல்லை என்று இணை அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் அமைச்சர் ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.  

அர­சி­ய­லைப்பை தயா­ரித்து அதனை மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றுவோம். தொடர்ந்து உயர் நீதி­மன்றம் ஆலோ­சனை வழங்­கினால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு செல்வோம். அதில் மக்கள் தமது முடிவை அறி­விப்­பார்கள். அது­மட்­டு­மன்றி இந்த விட­யத்தில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் மிகவும் நேர்­மை­யான முறையில் செயற்­பட்டு வரு­கின்றார் எனவும் ராஜித சேனா­ரட்ன சுட்­டிக்­காட்­டினார்.

தேசிய பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு வர­லாற்றில் முயற்சி மேற்­கொண்ட அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் இவ்­வா­றான எதிர்ப்­புக்கள் வந்­துள்­ளன. ஆனால் அவற்றைத் தாண்டி இம்­முறை நாங்கள் இந்த புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­குவோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சர­மா­ரி­யாக எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அதா­வது புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை­யில்லை என்றும் அதற்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தா­கவும் சங்க பீடங்கள் தெரி­வித்­துள்­ளமை குறித்து அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன என்றே ஊட­க­வி­ல­யா­ளர்­களால் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டன.

அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்;

எமது அர­சாங்­க­மா­னது மக்கள் எங்­க­ளுக்கு வழங்­கிய ஆணைக்கு அமை­யவே செயற்­படும். இந்த நாட்டின் 64 இலட்சம் மக்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை­யென எமக்கு ஆணை வழங்­கி­யுள்­ளனர். அதற்கு ஏற்­பவே நாங்கள் செயற்­ப­டுவோம். அது­மட்­டு­மன்றி மக்­களின் ஆணைக்கு அமை­வாக பாரா­ளு­மன்றம் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. அந்தப் பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்டு புதிய அர­சி­ய­ல­மைப்பை வரையும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இறு­தியில் அர­சியல் அமைப்பு வரைபு தயா­ரிக்­கப்­பட்­டதும் அதனை பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றுவோம். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென உயர் நீதி­மன்றம் கூறு­மாயின் அதற்­கேற்ப சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும். அந்த நேரத்தில் மக்­களின் ஆணை மதிக்­கப்­படும். மக்கள் என்ன கூறு­கி­றார்­களோ அதனை செய்வோம். தற்­போது அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இறுதி வரைபு வெளி­யி­டப்­பட்­டதும் அது தொடர்பில் மக்கள் கருத்­துக்­களை வெளி­யி­டலாம். அதற்கு முன்னர் இவ்­வாறு அவ­ச­ரப்­ப­டு­வது முறை­யல்ல.

ஜே.ஆர். ஜய­வர்த்­தன தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வந்­ததும் அதனை விலக்­கிக்­கொள்­ளு­மாறு வலி­யு­றுத்தி போராட்­டங்கள் நடத்­தப்­பட்­டன. ஆனால் இன்று அந்த அர­சி­ய­ல­மைப்பை மாற்­ற­வேண்­டிய அவ­சியம் இல்லை என கூறு­கின்­றனர். எனக்கு ஒன்­றுமே புரி­ய­வில்லை. முதலில் அர­சியல் அமைப்பு வரைபு வெளி­வ­ரட்டும் அதன் பின்பு பார்ப்போம். எவ்­வா­றான அர­சி­ய­ல­மைப்பு வரும் என்­பதை பாரா­ளு­மன்­றமே தீர்­மா­னிக்கும்.

கேள்வி: எனினும் தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் எதிர்ப்பு வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதே?

பதில்: (இந்தக் கேள்­விக்கு இணை அமைச்­ச­ரவைப் பேச்­சளார் தயா­சிறி ஜய­சே­கர பதி­ல­ளிக்­கிறார்) அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தொடர்பில் தொடர்ந்து சகல கட்­சி­களும் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்­றன. இது இல­கு­வான காரி­ய­மல்ல. பல்­வேறு தடை­களைத் தாண்­டியே அந்த முயற்­சியில் நாங்கள் வெற்­றி­பெற முடியும். கட்சி மட்­டங்­களில் கூட்­டங்கள் நடை­பெற்று வரு­கின்­றன.

இங்கு ஒரு விட­யத்தை நன்­றாகப் புரிந்­து­கொள்­ளுங்கள், அதா­வது தமிழ் மக்கள் அர­சியல் அதி­கா­ரத்­தொ­டர்பில் பாரிய கவ­லையில் இருக்­கின்­றனர். அவர்­க­ளுக்கு பாரிய பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. அவர்­களின் கவ­லைகள் ஆரா­யப்­ப­ட­வேண்டும். அதே­போன்று சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளுக்கும் அர­சியல் ரீதியில் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. அவற்றை ஆரா­ய­வேண்டும். 2000 ஆம் ஆண்டு கொண்­டு­வந்த தீர்­வுப்­பொ­தியே மிகச்­சி­றந்த பொதி என நான் கூறுவேன். ஆனால் அதனை கிழித்து எரித்­தனர். அது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

தற்­போது யுத்தம் முடி­வ­டைந்­துள்­ளது. எனவே இனி­வரும் காலத்தில் அதி­கா­ரத்தைப் பகிர்ந்து மக்­க­ளுக்கு தீர்­வுத்­திட்­டத்தை வழங்­க­வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது. ஆனால் இன்னும் இறுதி வரைபு வெளி­வ­ர­வில்லை. அவ்­வாறு இறுதி வரைபு வெளி­வர முன்னர் கூட்­டங்­களில் பங்­கேற்கும் மக்கள் பிர­தி­நி­திகள் வெளியே சென்று பாத­க­மான விட­யங்­களை கூறு­வது அவ்­வ­ளவு நல்­ல­தல்ல. ஆனால் எமது பாரா­ளு­மன்றம் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வரும். அவ்­வாறு கொண்டு வந்­ததும் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

பதில் (ராஜித சேனா­ரட்ன ); இங்கு ஒரு விட­யத்தை புரிந்­து­கொள்­ளுங்கள், நாங்கள் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கி அதனை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் ஊடாக நிறை­வேற்­றவே முயற்­சிக்­கின்றோம். இந்த விட­யத்தில் தமிழ் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் மிகவும் உறு­தி­யாக இருக்­கின்றார். அதா­வது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டு சிங்­கள மக்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் தீர்­வுத்­திட்­டமே தமக்கு தேவை­யென எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் கூறி­யி­ருக்­கின்றார். இதன் மூலம் அவர் எந்­த­ளவு தூரம் இத­ய­சுத்­தி­யுடன் செயற்­ப­டு­கின்றார் என்­பதை புரிந்­து­கொள்­ளுங்கள்.

கேள்வி: சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­வது தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்­சியின் நிலைப்­பாடு என்ன?

பதில்: (தயா­சிறி) அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்சி மிகத் தீவி­ர­மாக ஆராய்ந்து வரு­கி­றது. அதா­வது இத­னூ­டாக அர­சியல் தீர்வு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். எனினும் முதலில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஊடாக மட்டும் ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வரலாம் என சுதந்­தி­ரக்­கட்சி கரு­து­கி­றது. அதன் பின்னர் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு தேவை­யாயின் சிந்­திக்­கலாம். எவ்­வா­றெ­னினும் எமது கட்­சி­யா­னது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பு­டனும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கி­றது. அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வது என்­பது ஒரு இல­கு­வான விட­ய­மாக கருத முடி­யாது. அதில் பாரிய சிக்­கல்கள் இருக்­கின்­றன.

கேள்வி: வர­லாறு முழு­வதும் இவ்­வாறு தீர்­வுத்­திட்­டங்கள் வரும்­போது எதிர்ப்­புக்கள் வெளி­யி­டப்­ப­டு­வதும் சிறு­பான்மை மக்கள் ஏமாற்­றப்­ப­டு­வதும் வழ­மை­யா­கி­விட்­டது. இம்­மு­றையும் எழுந்­துள்ள எதிர்ப்­பா­னது வர­லாற்றில் இடம்­பெற்­றதைப் போன்று தீர்வை மழுங்­க­டிக்கச் செய்­வ­தற்­கான ஒரு முயற்­சி­யாக இருக்­கலாம் என கரு­து­கி­றீர்­களா?

பதில்: ( ராஜித்த) எமது அர­சாங்கம் ஜன­நா­யக ரீதியில் செயற்­பட்டு வரு­கி­றது. சட்­ட­ரீ­தி­யாக நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றறோம். 1972 ஆம் ஆண்டு சிறி­மாவோ பண்­ட­ரா­நா­யக்க தனது பலத்தை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்­காக புதிய அர­சி­ல­ய­மைப்பை கொண்­டு­வந்தார். 1978 ஆம் ஆண்டு ஜே. ஆர். ஜய­வர்த்­தன தனது பலத்தை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்­காக புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வந்தார். மஹிந்த ராஜ­பக்ஷ தனது பலத்தை அதி­க­ரிப்­ப­தற்­காக 18 ஆவது திருத்த சட்­டத்தை கொண்­டு­வந்தார்.

ஆனால் எமது தற்­போ­தைய ஜனா­தி­பதி தான் தனது அதி­கா­ரங்­களை குறைத்­துக்­கொண்டு செயற்­ப­ட­வேண்­டு­மென நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறார். தற்­போது ஒரு சிலர் புதிய அர­சி­ய­ல­மைப்பு வேண்டாம் எனக் கூறி­னாலும் இந்த நாட்டு மக்கள் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­காக தமது ஆணையை வழங்­கி­யுள்­ளனர். எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பு வேண்­டுமா வேண்­டாமா என்­பதை நாட்­டு­மக்­களே தீர்­மா­னிக்­க­வேண்டும். அதற்­கா­கத்தான் நாங்கள் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­துவோம் எனக் கூறு­கின்றோம். ஆனால் நீங்கள் கூறு­வது போன்று ஒரு சிலர் இவ்­வாறு வர­லாறு முழு­வதும் குழப்­பிக்­கொண்டே இருப்­பார்கள்.

1959 ஆம் ஆண்டு தனிச்­சிங்­கள சட்­ட­மூ­லத்தை பண்­டா­ர­நா­யக்க கொண்டு வந்தார். அதன்­பின்னர் 1998 ஆம் ஆண்டு சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க தமிழ் மொழியை அர­ச­க­ரும மொழி­யாக்­கினார். தந்தை 50 வரு­டங்­க­ளுக்கு முதல் செய்த தவறை மகள் திருத்தி அமைத்தார். இதனை அன்றே செய்­தி­ருந்தால் இந்தப் பிரச்­சினை வந்­தி­ருக்­காது.

கோர யுத்தம், தலை­வர்கள் கொலை எனப் பல்­வேறு பிரச்­சி­னைகள் எழுந்­தன. மாகா­ண­சபை முறை வந்­த­போது பல தலை­வர்கள் கொல்­லப்­பட்­டனர். அவ்­வாறு தலை­வர்­களை கொலை செய்­த­வர்கள் பின்னர் வெட்­க­மில்­லாமல் மாகா­ண­ச­பையில் போய் அமர்ந்­து­கொண்­டனர். அமர்ந்து கொண்­டது மட்­டு­மன்றி தாங்­களே மாகாண சபையின் தானி­யக்க கருவி எனக் கூறிக்­கொண்­டனர். ஆனால் எமது அர­சாங்கம் இந்தப் பிரச்­சி­னையைத் தீர்க்க உரிய நட­வ­டிக்கை எடுக்கும். எவ்­வா­றெ­னினும் அர­சி­ய­ல­மைப்பு வரை­பா­னது பாரா­ளு­மன்­றத்­தினால் உரிய நடை­மு­றை­களைப் பின்­பற்றி உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஆறு குழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு அறிக்­கை­களும் பெறப்­பட்­டன. இதற்­காக பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ண­ய­ச­பை­யாக மாற்­றப்­பட்­டது.

கேள்வி: எவ்­வா­றெ­னினும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை­யில்­லை­யென சங்கப் பீடங்கள் தெரி­வித்­துள்­ள­னவே?

பதில்: அப்­ப­டி­யாயின் காலம் முழுக்க புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ராமல் இருக்க முடி­யுமா? உலக நாடு­களில் அர­சி­ய­ல­மைப்பு என்­பது மாற்­றப்­பட்டே வரு­கி­றது.

கேள்வி: ஆனால் தற்­போது முரண்­பா­டுகள் எழுந்­துள்­ள­னவே?

பதில்: யாருக்கும் பேசும் உரிமை இருக்­கி­றது. இறுதி வரைபு வந்­ததும் அவர்கள் தமது கருத்தை வெளி­யி­டட்டும். 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பை வேண்­டா­மென ஊர்­வலம் சென்­ற­வர்கள் அதனை வேண்­டு­மென கூறு­கின்­றமை வேடிக்கையாக இருக்கின்றது.

கேள்வி: ஆனால் சங்க பீடங்கள் வரலாற்றில் ஒருசில சந்தர்ப்பங்களில் மட்டுமே இவ்வாறு கூடி அறிக்கை வெளியிட்டுள்ளன என்பது தானே உண்மை?

பதில்: ( ராஜித்த) அப்படி இல்லை அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஒன்று கூடினார்கள்.

(அமைச்சர் தயாசிறி) இந்தப் பிரச்சினைகள் இவ்வாறு விஸ்வரூபம் எடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதாவது இங்கே கூட்டங்களில் பேசி இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத விடயங்களை மக்கள் பிரதிநிதிகள் வெளியில் சென்று கூறிவிடுகின்றனர். இதுவே சர்ச்சைகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது. ஆனால் தீர்வுத்திட்ட வரைபு வெளியில் வரும் வரை அமைதியாக இருப்பது அவசியமாகின்றது.

கேள்வி: பிரதான வழிநடத்தல் குழுவிலிருந்து விலகப்போவதாக ஒன்றிணைந்த எதிரணி கூறுகின்றதே?

பதில்: அவ்வாறு இல்லை. உள்ளூராட்சி தேர்தலை தாமதப்படுத்தினால்தான் அதிலிருந்து விலகுவதாக கூட்டு எதிரணி கூறியுள்ளது. இதுதொடர்பில் பேச்சு நடத்தி அரசாங்கம் ஒரு தீர்மானத்திற்கு வரலாம்.

(ராஜித) அரசியலமைப்பை உருவாக்குவது என்பது இலகுவான விடயமல்ல. அதுநீண்டகாலம் ஆராய்ந்து முன்னெடுக்கப்படவேண்டிய விடயமாகும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.